என் மலர்
நீங்கள் தேடியது "Family"
1. கருத்து: ஒரு சில விஷயங்களில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அந்த சமயத்தில் ஒருவரின் கருத்துக்கு மற்றொருவர் மதிப்பு கொடுக்க வேண்டும். அதில் இருக்கும் நல்ல விஷயத்தை பின்பற்றுவதற்கு தயங்க கூடாது. ஈகோவுக்கு இடம் கொடுக்காமல் நல்ல கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இருவரில் ஒருவரின் கருத்து ஆட்சேபனைக்குரியதாக இருந்தாலும் சகிப்பு தன்மையுடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். பின்பு அதில் இருக்கும் சாதக, பாதகங்களை பக்குவமாக சொல்லி புரிய வைக்க வேண்டும்.
2. கர்வம்: கணவர் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருக்கும் பட்சத்தில் ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்தக்கூடாது. குடும்ப நிதி நிலைமை, வரவு-செலவு விஷயத்தில் மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தன் வருமானத்தை எப்படி வேண்டுமானாலும் செலவிடுவேன் என்ற கர்வம் மனதில் எழுந்துவிடக்கூடாது. குடும்பத்தை வழிநடத்தும் மனைவிக்கு குடும்ப பொருளாதாரம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். மனைவியும் வேலைக்கு செல்லும் பட்சத்தில் தனது வரவு-செலவு கணக்குகளை கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் தனக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்ற எண்ணம் மனைவியிடத்தில் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகரும்.
3. புரிதல்: சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது. கணவரின் பார்வையில் சாதாரணமாக தெரியும் ஒரு விஷயம் மனைவிக்கு பெரியதாக தெரியலாம். அதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்த விஷயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து ‘சின்ன சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்கிறாள்’ என்று கூறினால் பிரச்சினைதான் அதிகரிக்கும். உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.
4. மரியாதை: கணவன் - மனைவி இடையே வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்படும் சமயத்தில் ஒருவர் அமைதி காக்க வேண்டும். இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபடும்போது குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர்களை திட்டுதல், அவதூறாக பேசுதல் போன்றவை பிரச்சினையை பல மடங்கு அதிகரிக்க செய்துவிடும்.
5. அணுகுமுறை: கணவர் தனது குடும்ப உறுப்பினர்களை போலவே மனைவியின் வீட்டினரையும் மதிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும். அதை விடுத்து தன் வீட்டினருக்கு மட்டும் மதிப்பளித்துவிட்டு மனைவியிடம் அதே மரியாதையை கொடுக்கும்படி எதிர்பார்க்கக் கூடாது.
6. சுதந்திரம்: கணவன் - மனைவி இருவரிடத்திலும் கருத்து சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவர், மற்றொருவர் சுதந்திரத்திற்கு தடையாக இருக்க கூடாது. ‘நான் மட்டும் எப்போது வேண்டுமானாலும் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு வருவேன். ஆனால், நீ கூண்டுக்கிளியாக மட்டுமே இருக்க வேண்டும்’ என்று கூறுவது தவறானது.
7. நேர மேலாண்மை: கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் காலை வேளையில் அலுவலகத்திற்கு பரபரப்பாக கிளம்ப வேண்டியிருக்கும். அப்போது நேர மேலாண்மையை கடைப்பிடித்தால் மட்டுமே டென்ஷன் இல்லாமல் புறப்பட முடியும். எல்லா வேலைகளையும் மனைவி பார்த்துக்கொள்வார் என்று கருதக்கூடாது. கணவரும் சின்ன சின்ன உதவிகளை செய்வது மனைவிக்கு ஆறுதல் அளிக்கும். வேலைகளை விரைவாக முடிக்க ஏதுவாகும்.
திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு முனைப்பு காட்டுவார்கள். தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை துணையிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள். குடும்ப விஷயங்களை போலவே நாட்டு நடப்புகளையும் பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
அன்றைய நாளில் காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் தான் பேசுவதை துணை காது கொடுத்து கேட்கிறாரா? என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் பேச்சை ரசித்து கேட்க முடியாமல் அவஸ்தைபடுவதை உடல் மொழியால் வெளிப்படுத்தினாலும் கூட அதை பற்றி கவலை கொள்ளாமல் சொல்ல விரும்பிய விஷயத்தை கூறி விடுவதிலேயே குறியாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
எந்தெந்த விஷயங்களையெல்லாம் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற வரைமுறை இருக்கிறது. தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி துணையிடம் கூறியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வெளிப்படையாக பேசும் விஷயங்களே சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.
குடும்ப நிம்மதியை குலைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. காதல் விஷயங்களை துணையிடம் பேச வேண்டியதில்லை என்ற கருத்தை மன நல ஆலோசகர்கள் முன்வைக்கிறார்கள். அதுவே பெரும்பாலானவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு பெண் தன் பழைய காதல் கதையை கணவரிடம் கூற வேண்டியதில்லை என்பது போலவே, கணவரும் தன் காதல் அனுபவத்தை பகிரக்கூடாது.
இப்படித்தான் திருமணமான புதிதில் ஒருவர் தன் மனைவியிடம் கல்லூரி காலத்தில் தொடர்ந்த நட்பு காதலாக மாறிய கதையை சொல்லி இருக்கிறார். தனக்கு அந்த பெண் எழுதிய கடிதங்களையும் மனைவியிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்ததும் மனைவிக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அந்த கடிதங்களை கிழித்து எறிந்தவர் கணவருடன் கடுமையாக சண்டை போட்டுவிட்டார். இப்போதும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பாரோ என்ற சந்தேகம் மனைவிக்கு தலைதூக்க, பிரச்சினை பெரிதானது. கணவரிடம் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கணவர் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.
எனவே யாரிடம் எந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை அறிந்து அதற்குத் தக்கபடி பேச வேண்டும். எந்த விஷயத்தை எந்த நேரத்தில் பேச வேண்டும் என்ற வரைமுறையும் இருக்கிறது. அந்த சமயத்தில் பேசினால்தான் அதற்கு மதிப்பு கூடும். துணையின் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். கோபத்தில் ஒருபோதும் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது.
சிலர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை வீசிவிடுவார்கள். கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதை நினைத்து வருந்து வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், கோபமாக இருக்கும் சமயத்தில் வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டும். சிலரோ, எதை பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே அருவி போல் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இதனால் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு காலாகாலத்துக்கும் அவர்கள் உறவில் விரிசல் விழுந்து விடும்.
பெண்களை கற்பூர புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதுண்டு. எதையும் ‘கப்’பெனப் பிடித்துக் கொள்வார்கள். கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.
துணை கோபமாக இருக்கும்போது, உங்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் பொறுமையாக அவரிடம் எடுத்து சொல்லுங்கள். அவரை போலவே நீங்களும் கோபப்பட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான். எனவே துணையிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.
- பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.
- எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது.
மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசாத காரணத்தால் பல உறவுகள் பிரிவுகளை சந்திக்கின்றன. மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ என்ற பயத்தாலும், தயக்கத் தாலுமே பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.
எந்த உறவிலும் கருத்து பரிமாற்றம் அவசியமான ஒன்று. இதன் மூலம் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். சரியான நேரத்தில் வார்த்தைகள் மூலம் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்கும். உறவுகளுக்குள் கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில காரணங்கள் இங்கே:
ஒருவருடன் மனம் திறந்து பேசுவது மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மூலமாக அவருடைய ஒழுக்கம், மதிப்பு, விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அந்த நபருடனான உறவை மேலும் இணக்கமாக்கலாம். கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதால், தவறான புரிதல்களைத் தவிர்க்க முடியும். எனவே உங்கள் மனதில் தோன்றும் நியாயமான எண்ணங்களை வெளிப்படையாக சொல்லுங்கள்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை மற்றவர் உணராமல், வருத்தப்படும் படி நடந்து கொள்ளலாம். வெளிப்படையான கருத்து பரிமாற்றத்தால், இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான, நேர்மறையான மற்றும் திருப்திகரமான உறவை உருவாக்க முடியும். எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது. குறுஞ்செய்தி மூலம் விவாதிப்பதையும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.
சரியான நேரத்தைக் கண்டறிந்து பேசுவது முக்கியமானது. அன்பு, பாராட்டு மற்றும் மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகளை அனைவரும் விரும்புவார்கள். எந்த உறவிலும் இத்தகைய உணர்வுகளை வெளிப்படையாக பகிர்தல் முக்கியமானது. அவ்வாறு இல்லாமல் உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்கள் அவர்களாகவே புரிந்துகொள்வார்கள் என்று சொல்லாமல் இருப்பது கூடாது. குறிப்பாக கணவன்-மனைவி உறவில் இது போன்ற உணர்வுகளை துணையுடன் பகிர்ந்துகொள்வது உறவை மேலும் வலுப்படுத்தும்.
அன்பையும், விசுவாசத்தையும் அதிகரிக்கும். இந்த வகையான உணர்வுகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறையான உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கும். பிரச்சினைகளை சேர்ந்து எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.
- ஜெகதீஷ் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.
- குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை அடுத்த வேப்பன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
உடல்நலக்குறைவு
சென்னையில் லாரி டிரைவராக அவர் வேலை பார்த்து வந்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு 2 கால்களும் பாதிக்கப்பட்டது.
இதனால் சென்னை தனியார் மருத்துவமனை மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடுப்புக்கு கீழ் செல்லக்கூடிய ரத்த நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இதனை சரி செய்வது கடினம் என கைவிரித்தனர்.
வருமானம் பாதிப்பு
இதனல் உடல் உபாதைகளை கூட படுத்த படுக்கையிலேயே பல மாதங்களாக அவர் கழித்து வந்துள்ளார். படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு தற்போது எழுந்து உட்காரும் அளவிற்கு உடல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அவரது வருமானத்தில் தான் அவர்களது குடும்பம் ஓடி வந்துள்ளது. தற்போது அவரது முடக்கத்தால் மொத்த குடும்பமும் நிலை தடுமாறி உள்ளது. அவரது 2 மகள்களின் படிப்பு, குடும்பத்தின் அன்றாட செலவு உள்ளிட்ட எதற்கும் போதிய வருவாய் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
அன்றாட தேவை
கவிதா வைத்துள்ள தையல் எந்திரம் மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள நபர்களிடமிருந்து பெறக்கூடிய சிறிய சிறிய துணிகளை தைத்து கொடுத்து குடும்பத்தின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அவர்களது மூத்த மகள் 7-ம் வகுப்பும், 2-வது மகள் 3-ம் வகுப்பும் படித்து வரும் நிலையில் அந்த குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய முடியாத நிலைக்கு குடும்பம் தள்ளப்பட்டுள்ளது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மருத்துவ உதவிக்கு கோரிக்கை
தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் இது போன்ற பல்வேறு மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்களுக்கும் தகுந்த மருத்துவம் வழங்கி அவர்களையும் சாதாரண மனிதர்களை போல செயல்பட வைக்கும் நிலையில் தனது கணவருக்கும் நவீன சிகிச்சை அளிக்க தமிழக அரசும், நெல்லை மாவட்ட நிர்வாகமும் உரிய உதவியை செய்து தர வேண்டும் என்று கவிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கவனிக்கும் வகையில் தான் படித்த படிப்பிற்கு ஏற்றவாறு சிறிய அளவிலான கைத்தொழில் செய்வதற்கும் உதவி செய்திட வேண்டும் எனவும் கவிதா கோரிக்கை வைத்துள்ளார்.
- முத்துநகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திளர்கள் வசித்து வருகின்றனர்.
- பூங்கா அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
சீர்காழி:
சீர்காழியில் முத்துநகர் உள்ளது.
இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்திர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட வருடமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பூங்கா அமைக்க வலியுறுத்தி சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, நகராட்சி ஆணையர் (பொ) செல்வபாலாஜி ஆகியோரை நேரில் சந்தித்து முத்துநகர் தலைவர் சி.அமுதராஜன், செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சுரேஷ், 1வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் நகர் நிர்வாகிகள் மனுக்கள் அளித்தனர்.
- புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
- துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது.
ஆண்-பெண் இருவருக்குமே தனது வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இனிமையான உறவை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமானது. இதனால் கணவன்-மனைவி உறவில் ஆனந்தம் நிலைக்கும். அதற்கான சில ஆலோசனைகள் இங்கே…
முதல் சந்திப்பை இனிமையாக்குங்கள்: யாராக இருந்தாலும், முதல் சந்திப்பு நல்ல முறையில் இருந்தால், நம் மீதான அபிப்ராயமும் சரியாக அமையும். துணையின் பெற்றோரை சந்திக்கும்போது, புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். உங்கள் மீது ஈர்ப்பு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுங்கள். உங்களை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு, இயல்பாக உரையாடுங்கள். அவர்களைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள முயலுங்கள். அவர்களின் குடும்பம், விருப்பு - வெறுப்பு, பழக்கவழக்கங்கள், பொழுதுபோக்குகள் போன்ற பொதுவான விஷயங்களைப் பற்றிப் பேசுங்கள். இது இரண்டு தரப்பிலும், இறுக்கமான மனநிலையை மாற்றும்.
உங்களது பெற்றோராக அணுகுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோரை மூன்றாம் நபராகப் பார்க்காமல், உங்களது பெற்றோர்போல் அணுகுவது முக்கியம். குறிப்பாக, துணையின் தாயை, உங்களது தாயைப் போல் நினைத்து பழக வேண்டும். உங்கள் தாயிடம் பேசுவது போல் இயல்பாகவும், நேர்மையான மற்றும் கண்ணியமான அணுகுமுறையுடனும் இருப்பது அவசியம். அவர்களின் இளமைப் பருவம், வாழ்க்கையின் இனிமையான சம்பவங்கள் போன்றவற்றை ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்த இத்தகைய உரையாடல்கள் உதவும். இதுபோன்று பேசுவதால், எதிர்பார்த்ததைவிட அதிக பிணைப்பை ஏற்படுத்த முடியும்.
மதிப்பளியுங்கள்: வாழ்க்கைத் துணையின் பெற்றோருடன் இருக்கும் சமயங்களில், அவர்களின் குடும்ப வழக்கங்களை மதிக்க வேண்டும். அவர்களது கலாசாரம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுங்கள். அவை புதிதாக இருந்தாலும், அதைக் குறை கூறாமல் ஏற்றுக்கொள்வது அவசியம். புரியாத விஷயங்களை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இது அவர்கள் மீதான உங்கள் மரியாதையை வெளிப்படுத்தும். மேலும், அவர்களின் அன்பைப் பெறவும் வழிவகுக்கும். துணையின் பெற்றோருக்கு எந்த இடத்திலும், மரியாதை கொடுக்கத் தவறக்கூடாது. குறிப்பாகப் பிறர் முன்னிலையில் வாழ்க்கைத் துணையின் பெற்றோருக்குத் தகுந்த மரியாதை அளித்தால், அவர்களுக்கு உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும்.
அன்பை வெளிப்படுத்துங்கள்: தங்கள் மகன் அல்லது மகளை அவர்களின் வாழ்க்கைத்துணை அதிகம் நேசிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர்கள் விரும்புவார்கள். பிள்ளைகள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை அறிய பெற்றோர் விரும்புவது இயல்பு. எனவே, அவர்கள் முன்னிலையில், வாழ்க்கைத் துணையுடன் வாதிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உறவுக்கு மனம் திறந்த பேச்சு, பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை ஆகியவை அவசியம். தங்கள் பிள்ளைகளின் நலனில் வாழ்க்கைத்துணை அக்கறை செலுத்துவது பெற்றோருக்குப் புரிந்தால், கட்டாயம் உங்கள் மீதான மதிப்பும், அன்பும் அதிகரிக்கும்.
- இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
- மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
திருமண பந்தத்தில் கணவரின் ஆதிக்கமே தலை தூக்கி நிற்கிறது. அப்படி ஆதிக்கம் செலுத்துவது தம்பதியர் இடையே அன்பை குறைத்துவிடும். மனைவிக்கு போன் செய்யும்போது இணைப்பு பிசியாக இருந்தால் வேறொருவருடன் பேசுவதாக சந்தேகிப்பது, சமூகவலைத்தளங்களில் வேறொருவருடன் அரட்டை அடிப்பதாக சந்தேகிப்பது, நடத்தையில் குறை கூறுவது போன்றவை குடும்பத்தின் நிம்மதியை கெடுத்து விடும்.
எந்தவொரு சூழலிலும் மனைவி மீது கணவர் சந்தேகம் கொள்ளக்கூடாது. அந்த அளவிற்கு துணை மீது கணவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். இருவருக்குமிடையேயான நம்பிக்கைத்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும்.
கணவன்-மனைவி இருவருக்குள் சந்தேக எண்ணம் தலைதூக்கினால் உடனடியாக பேசி தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள், அபிலாஷைகள் இருக்கும். அவர்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு உரிய மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருவர்மீது ஒருவர் ஆணித்தரமான நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை எந்தவொரு சூழலிலும் சிதைப்பதற்கு இடம் கொடுத்துவிடவும் கூடாது.
குடும்ப நலன் குறித்து எந்தவொரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இருவரும் கலந்து பேச வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வது, ஆடை அணி வது, விருப்பமான உணவு சாப்பிடுவது, செலவு செய்வது எதுவாக இருந்தாலும் கணவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. தன் விருப்பத்தின்படிதான் மனைவி செயல்பட வேண்டும் என்று பிடிவாதம் கொள்ளக்கூடாது.
வீட்டில் கணவர் மட்டுமே ஆதிக்கம் செலுத்துபவராக இருந்தால் அந்த உறவில் நேசமும், பாசமும் குறைவாகத்தான் இருக்கும். அந்த சமயத்தில் மனைவி தன் உணர்வுகளை கணவர் புரிந்துகொள்ளும் படி பக்குவமாக பேச வேண்டியது அவசியம். அதனை கேட்கும் மனநிலையில் கணவர் இல்லாமல் இருந்தால் மன நல நிபுணரின் ஆலோசனையை நாடலாம்.
கணவர் தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டாலோ, அதிகாரம் செலுத்தினாலோ, உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினாலோ அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதேவேளையில் மூன்றாம் நபரின் தலையீடு உருவாகுவதற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.
தம்பதியர் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு புரிந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் தாம்பத்ய பந்தம் வலுவாக இருக்கும். இருவருக்குமிடையே சந்தேக குணமோ, ஈகோ பிரச்சினையோ, சர்வாதிகார மனபாவமோ தோன்றுவதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அது தாம்பத்ய வாழ்க்கையை சிதைத்துவிடும்.
- ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும்.
- வெளி இடங்களுக்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அன்றாடம் சில நிமிடங்களை கூட குழந்தைகளுடன் செலவிடாமல் தங்கள் வேலைகளில் மூழ்கி கிடக்கும் சுபாவம் அதிகரித்து வருவதுதான் அதற்கு காரணம். அப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் அவசியம் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டாக வேண்டும்.
குழந்தைகளிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடனும் மனம் விட்டு பேச வேண்டும். அதற்கு குடும்ப சுற்றுலா உறுதுணையாக இருக்கும். அதற்காக வாரந்தோறும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ கூட பயண திட்டத்தை வகுக்கலாம். தொலைதூர இடங்களுக்குத்தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை.
அருகில் உள்ள இடங்களுக்கு சென்று அங்கு குடும்பத்தினருடன் சில மணி நேரங்களை செலவிட்டாலே போதுமானது. குடும்பத்தினருடன் வெளி இடங்களுக்கு செல்லும் வழக்கத்தை பின் தொடர்ந்து வருவது இல்லற வாழ்க்கையை இனிமையாக்கும். குடும்ப சுற்றுலா மூலம் மேலும் சில நன்மைகளை அனுபவிக்கலாம்.
குடும்பத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும்:
குடும்பத்தினருடன் நாம் எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறோம் என்பதை விடுமுறைகள் உணர வைக்கும். மற்ற நாட்களில் அவசரமாக வெளியே செல்லும்போது குடும்பத்தினருடன் பேசுவதற்கு போதிய நேரம் கிடைக்காமல் போகலாம். அந்த குறையை விடுமுறை நாட்களில் போக்கிவிடலாம். வீட்டிற்கு அருகில் உள்ள சுற்றுலா தலத்திற்கோ, கோவிலுக்கோ செல்லலாம்.
அங்கு குழுவாக அமர்ந்து மனம் விட்டு பேசலாம். வீட்டில் விடுமுறை நாளை செலவிட நேரிட்டால் குடும்பத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றை வாரம்தோறும் பகிரும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம். அது கடந்த கால நினைவுகளை மீட்டெடுக்க வழிவகுக்கும். குடும்பத்தினருடனான பிணைப்பை அதிகப்படுத்தும்.
மன அழுத்தத்தை குறைக்கும்:
பொதுவாக பணி நெருக்கடிதான் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை குறைத்து விடுகிறது. பணியின்போது ஏற்படும் மன அழுத்தம் குடும்பத்தினருடன் கலகலப்பாக பேச முடியாத நிலைக்கு தள்ளிவிடுகிறது. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதன் மூலம் பணி சூழலில் இருந்தும், மன நெருக்கடியில் இருந்தும் விடுபட்டு விடலாம்.
குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பது என நேரத்தை மகிழ்ச்சியாக கழிக்கலாம். மன நெருக்கடியில் இருக்கும் சமயத்தில் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவதன் மூலமே மன அழுத்தத்தில் இருந்து ஓரளவுக்கு விடுபட்டு விடலாம்.
உற்சாகத்தை தூண்டும்:
குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போது அங்குள்ள திறந்தவெளி பகுதியில் குழுவாக அமர்ந்து ஓய்வு நேரத்தை செலவிடலாம். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை பகிர்வதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வரவழைக்கும் சுவாரசியமான கதைகளை பகிர வேண்டும்.
தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவத்தை ஒவ்வொருவரும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும். அது ஒவ்வொருவரின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு உதவும்.
- ஒவ்வொரு நிலையிலும் தம்பதிகள் ஒற்றுமையோடு பயணித்தால் வாழ்க்கை இனிக்கும்.
- எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும்.
திருமண பந்தத்தில், கணவன்-மனைவி இருவரில் யார் எந்த முடிவை எடுத்தாலும், அதன் விளைவுகள் இருவரையுமே பாதிக்கும். எதையும் செய்வதற்கு முன்பு வாழ்க்கைத் துணையுடன் கட்டாயம் விவாதிக்க வேண்டும். அதற்கான ஆலோசனைக் குறிப்புகள் இதோ:
நிதி சார்ந்தது:
குடும்பத்தில், பெரும்பாலான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைவது நிதி சார்ந்த விஷயங்களே. ஒருவர் மட்டுமே சம்பாதித்தாலும் அல்லது இருவரும் வருமானம் ஈட்டினாலும், குடும்பத்திற்கான நிதி சார்ந்தவற்றில் ஒருவரது முடிவு மட்டும் போதாது. கணவன், மனைவி இருவர் சார்ந்த முடிவு கட்டாயம் இருக்க வேண்டும்.
குழந்தை சார்ந்தது:
குழந்தைப் பெற்றுக்கொள்வதில் கணவன்-மனைவி இருவருக்கும் பங்குண்டு என்றாலும், அவரவருக்கு தனித்தனி விருப்பங்களும் இருக்கும். இதில், ஒருவர் சிறிது காலம் திருமண வாழ்க்கையை அனுபவித்து விட்டு, பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கலாம். மற்றொருவர் உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பலாம். இது குறித்து, இருவரும் விவாதித்து அதற்கேற்ப முடிவு செய்து கொள்ள வேண்டும்.
அந்தரங்கம் சார்ந்தது:
தம்பதிக்குள் மகிழ்ச்சியைக் கொடுப்பதும், பிரச்சினையை ஏற்படுத்துவதும் அந்தரங்கம் சார்ந்ததாகவே இருக்கும். இதில் ஒருவர் மற்றொருவரின் விருப்பத்தையும், உணர்வுகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் கட்டாயத்திற்கோ, ஒருவரின் தனிப்பட்ட முடிவுக்கோ இடம் கொடுக்கக்கூடாது. அந்தரங்கத்தைப் பற்றி வெளிப்படையாக பேச முடியாவிட்டால், அந்த உறவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதைப் பற்றி இருவரும் தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம்.
குடும்பம் சார்ந்தது:
சிலருக்கு கூட்டுக் குடும்பமாக வாழ்வது பிடித்திருக்கலாம். சிலர் தனிக்குடும்ப வாழ்க்கையை விரும்பலாம். இதில் எதுவாக இருந்தாலும், திருமணத்துக்கு முன்பே தெளிவாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இருவரும் தனிப்பட்ட கருத்துகளை வைத்துக் கொண்டு முடிவு எடுப்பதால், திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும். முன்னரே தெளிவாக முடிவெடுத்து செயல்படுவது, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
எதிர்கால இலக்கு சார்ந்தது:
தம்பதிக்குள் பிரிவு வர முக்கியக் காரணமாக இருப்பது, நீண்ட கால இலக்கு குறித்து முன்னரே சரிவர விவாதிக்காமல் இருப்பதுதான். கணவன்-மனைவி இருவருக்கும், சிறு வயது முதலே எதிர்கால இலக்கு இருக்கும். திருமணத்திற்கு முன் அந்த இலக்கை நோக்கி எளிதில் நடைபோட முடியும். திருமணத்திற்குப் பின்பு அதை நிறைவேற்றுவதற்கு ஒருவரின் துணை மற்றவருக்கு வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும், ஒருவர் மட்டுமே முடிவு எடுத்துச் செயல்படாமல், இலக்கை நோக்கிப் பயணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருவரும் கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.
இதுபோன்று, ஒவ்வொரு நிலையிலும் தம்பதிகள் ஒற்றுமையோடு பயணித்தால் வாழ்க்கை இனிக்கும்.
- தூத்துக்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார்.
- இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு கடந்த மாதம் இறந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் பணி ஓய்வு பெற்ற பிறகு கடந்த மாதம் இறந்தார். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் 1988-ம் ஆண்டு போலீசாக பணியில் சேர்ந்த அனைவரும் நிதி திரட்டி உள்ளனர். அவ்வாறு திரட்டிய ரூ.1 லட்சம் நிதியை தூத்துக்குடியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பாட்ஷா, ராஜேந்திரன், முத்துராமலிங்கம், முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் இறந்த வெங்கட்ராமனின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.
- காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
- கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள்.
- தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்று சொல்கிறார்கள்.
மக்களுடைய வாழ்க்கையில் பத்து வருடங்களில் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இன்று போல் அன்று அத்தனை பேரும் வீட்டிற்குள் ஆளுக்கொரு செல்போனுடன் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கவில்லை. `ஆப்'பில் ஆர்டர் செய்து ஆப்பிளை வரவழைக்கவும் இல்லை. அன்று ஓட்டலுக்கு சென்று உணவு சாப்பிடுவது என்பது தித்திப்பான மனநிலையை தந்தது. இன்று நினைத்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று புசிப்பது வழக்கமாகிவிட்டது. டவுனில் இருக்கும் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதுகூட அப்போது ஒரு திருவிழா போன்றுதான் இருந்தது. இப்போது அந்த ஆர்வத்தையும் காலம் அடித்துச்சென்றுவிட்டது. இப்படி பொதுவான விஷயங்களில் ஏற்பட்ட தலைகீழான மாற்றங்கள் தென்னிந்தியர்களின் குடும்ப கட்டமைப்புகளிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியம்
படம் மாடல்
`தனிக்குடித்தனத்திற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். மருமகள்களுக்கு, மாமியாரை பிடிக்காது' என்றுதான் பொதுவாக பெண்களை பற்றி சொல்வார்கள். ஆனால் இன்றைய பெண்களின் மனநிலை அதற்கு நேர்மாறாக இருந்துகொண்டிருக்கிறது. கூட்டுக்குடும்பத்தின் நிழலை பெண்கள் அனுபவிக்க விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைகளை வளர்க்க பாட்டியும், தாத்தாவும் தேவை என்றும் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக தென்னிந்திய பெருநகரங்களில் வசிக்கும் தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில், 51 சதவீத பெண்கள் மட்டுமே கணவருடன் ஒன்றாக வசிப்பது தெரியவந்திருக்கிறது. கணவர் இன்னொரு இடத்தில் வேலைபார்ப்பது அதிகரித்துவருகிறது. 40 சதவீதம் பெண்கள், மாமியார் வீட்டில் அல்லது தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் வாழும் இளம் தாய்மார்கள் `மாமியார் அல்லது அம்மாவுடன் சேர்ந்து வசிப்பது தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கியிருக்கிறது' என்று சொல்கிறார்கள்.
இந்த சர்வேயில் பங்குபெற்ற இளந்தாய்மார்களில் ஒருவர் ''எங்கள் குழந்தைகள் அவர்களது தாத்தா, பாட்டியுடன் வளர்வது மிக நல்லது என்பதை எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். என் கணவர் மும்பையில் வேலைபார்க்கிறார். நான் டெல்லியில் வேலைபார்த்தபடி இரட்டைக் குழந்தைகளுடன் வசித்தேன். எங்கள் குழந்தைகளை `டே கேர்' ஒன்றில் தினமும் விட்டுவிட்டு செல்வேன். பின்பு நான் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகரீதியான பயணங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தது. அந்த நாட்களில் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் டே கேர் சென்று குழந்தைகளை அழைத்துவர என்னால் முடியவில்லை.
இத்தகைய நெருக்கடிகளால் எங்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டது. அவர்களது அன்றாட செயல்பாடுகளிலும், சுபாவங்களிலும் மாற்றங்கள் உருவாகின. அதனால் குழந்தைகளை டே கேருக்கு அனுப்பவில்லை. எனது பெற்றோரும், எனது கணவரின் பெற்றோரும் மாறி மாறி வந்து குழந்தைகளை கவனித்துக்கொண்டார்கள். மாமனார்- மாமியார் ஒரு மாதம் வந்து தங்கியிருந்துவிட்டு சென்றதும், எனது பெற்றோர் வருவார்கள். பெரியவர்கள் வந்து குழந்தைகளை கவனிக்கத் தொடங்கியதும், குழந்தைகளிடம் நல்ல மாற்றம் உருவானது. அவர்களது குணாதிசயங்களும் மாறின. கூட்டுக் குடும்பத்தின் பெருமை இப்போதுதான் எனக்கு புரிகிறது'' என்கிறார். சர்வேயில் பங்குபெற்ற பெரும்பாலான தம்பதிகளின் கருத்து இதுபோல்தான் இருக்கிறது.
குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. 45.3 சதவீத தம்பதிகள், பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளால் தங்களுக்கு பல வருடங்கள் கழித்தே குழந்தை பிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்களில் 40.2 சதவீத தம்பதிகளில் ஆண்- பெண் இருவருமே இனப்பெருக்கத்திறன் குறைபாடு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பகுதியினர் அதற்கான நிபுணர்களிடம் குழந்தையின்மைக்கான சிகிச்சையும் பெற்றிருக்கிறார்கள்.
குழந்தையின்மை சிகிச்சைக்கான செலவு உயர்ந்துவிட்டதாக சர்வேயில் பங்குபெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் குறைபட்டிருக்கிறார்கள். 56.6 சதவீதம் பேர் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். 28 சதவீதம் பேர் 5 முதல்10 லட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். 8.2 சதவீதத்தினர் 10 முதல் 15 லட்சம் ரூபாயும், 7.2 சதவீதத்தினர் 15 லட்சத்திற்கும் மேலாக செலவிட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.
குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் விஷயத்திலும் தென்னிந்தியர்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. `திருமணம் முடிந்த 6 மாதம் வரை தாய்மையை பற்றி சிந்திப்பதே இல்லை' என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. 24.3 சதவீத இளந்தாய்மார்கள் `தங்கள் பொருளாதார நிலை மேம்பட்ட பின்பே குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதால், தற்போதைக்கு தாய்மையை தள்ளிவைத்திருக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்கள்.
இந்த சர்வேயில் இடம்பெற்றிருப்பவர்களில் 49.9 சதவீதத்தினர் ஒரு குழந்தையே போதும் என்ற கருத்தை பதிவுசெய்துள்ளனர். 39.2 சதவீதத்தினர் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். 8.8 சதவீதத்தினர் மூன்று குழந்தைகளின் தாய்மார்கள். 2.1 சதவீதத்தினர் மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்திருக்கிறார்கள்.
ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்ட தாய்மார்களிடம், `இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது, 29.9 சதவீதத்தினர் `பெற்றுக்கொள்ளமாட்டோம்' என்று கூறியிருக்கிறார்கள். `குழந்தைகளே பெற்றுக்கொள்ளமாட்டோம்' என்றும் 3.9 சதவீதம் தம்பதிகள் கூறியிருப்பது இதில் கவனிக்கத்தகுந்த விஷயம்.
செல்போன் குடும்பத்தினரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது சர்வேயில் தெரியவந்திருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதன் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் 59 சதவீதம் பேர் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை செல்போனில் செலவிடுகிறார்கள். 24.6 சதவீதம் பேர் நான்கு மணி நேரத்திற்கு மேல் செல்போனே கதி என்று கிடக்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்குள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக்கொள்கிறவர்கள் 16.4 சதவீதம்தான்.
வீட்டில் பல்வேறு விதமான பிரச்சினைகள் எழுவதற்கு 63.9 சதவீதம் அளவுக்கு செல்போன்கள்தான் காரணமாக இருக்கின்றன என்று சர்வேயில் பங்குபெற்றவர்கள் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள். `அதிகமான நேரம் செல்போனை உபயோகிக்கிறார்கள்' என்பதும், `செல்போனில் பொழுதைக் கழிக்கும்போது பூமி அதிர்ச்சி வந்தால்கூட அவர்களுக்கு தெரிவதில்லை. அந்த அளவுக்கு அதில் ஆழ்ந்து போய்விடுகிறார்கள்' என்பதும் அவர்கள் மீது வீசப்படும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது குடும்பத்தினரிடம் அன்பையும், நெருக்கத்தையும் உருவாக்கும். அதனால் அதை கடைப்பிடிக்கவேண்டும் என்பது பெரும்பாலான குடும்பத்தினரின் ஆசையாக இருக்கிறது. ஆனால் அந்த ஆசையை தற்போது 18.5 சதவீதம் வீடுகளில் உள்ளவர்கள்தான் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கான நேரம் கிடைப்பதில்லை என்பது 48 சதவீத குடும்பத்தினரின் ஆதங்கமாக இருக்கிறது. 33.5 சதவீத குடும்பத்தினர் எப்படியாவது, எப்போதாவது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் வெளியே ஓட்டலில் போய் உணவருந்தும் ஆசை ரொம்பவும் அதிகரித்திருக்கிறது. 55 சதவீதம் பேர் மாதத்தில் மூன்று தடவை குடும்பத்தோடு வெளியே சென்று உணவருந்துகிறார்கள். 9 சதவீதத்தினர் மாதந்தோறும் 6 தடவைக்கு மேல் வெளி உணவை சுவைக்கிறார்கள். அதனால்தான் தெருவெங்கும் ஓட்டல்கள் திறந்தபடி இருக்கின்றன. ஆனால் மக்களோ ஒரே ஓட்டலிலே நிரந்தரமாக சாப்பிடுவதில்லை.
பெங்களூருவை சேர்ந்த தீபா சொல்கிறார்...
''வாரத்தில் ஒரு நாள் குடும்பத்தினரோடு வெளியே சென்று சாப்பிடுவோம். நிரந்தரமாக ஒரே ஓட்டலில் சாப்பிடுவதில்லை. நண்பர்கள் எந்த ஓட்டல் பற்றி நல்ல கருத்து சொல்கிறார்களோ அங்கு செல்வோம். சில ஓட்டல்கள் சிறியதாக இருந்தாலும் அங்கு ஹோம்லி பீல் கிடைக்கும். நம் முன்னாலே சமைத்து தரும் ஓட்டல்களும் இருக்கின்றன. சில இடங்களில் கியூவில் நின்று இடம் பிடித்து சாப்பிடவேண்டியதிருக்கும். ஆனாலும் ருசியாக இருந்தால், அங்கும் செல்லத்தான் செய்கிறோம்.
குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து வீட்டில் சாப்பிட வாய்ப்பு குறையும்போது, வெளியே சென்று சாப்பிட்டு அந்த குறையை தீர்த்துக்கொள்கிறோம். ஓட்டலில் சாப்பிடும்போது செல்போனை துழாவிக்கொண்டிருப்பதற்கெல்லாம் இடம்கொடுக்க மாட்டோம்" என்கிறார்.
எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலம் உழைக்கவேண்டும் என்பது முந்தைய தலைமுறையின் கருத்தாக இருந்தது. இளைய தலைமுறையினரோ ஜாலியாக வாழவேண்டும் என்ற ஆசையுடன் இருக்கிறார்கள். அதனால் சர்வேயில் பங்கேற்றவர்கள், "ஐம்பது வயதிலே வேலையில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு மகிழ்ச்சியாக ஓய்வு வாழ்க்கை வாழவேண்டும்" என்கிறார்கள். 60 சதவீதத்தினரின் கருத்து இவ்வாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
"70 சதவீத வேலைவாய்ப்புகள் இப்போது பேங்கிங், இன்சூரன்ஸ் போன்ற துறைகளை சார்ந்தே இருக்கின்றன. அவர்களிடம் டார்கெட்டை எப்பாடுபட்டாவது அடையவேண்டும் என்ற வேகம் உள்ளது. அதற்காக பரபரப்பான உழைப்பில் அவர்கள் இளம்வயதிலேயே களைத்துப்போகிறார்கள். வயது ஏறும்போது அவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்தாலும், அதற்கு ஏற்றபடி பணிச்சுமையும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதனால்தான் ஐம்பது வயதிலேயே அவர்கள் வேலையை விட்டுவிட்டு அமைதியாக வாழ ஆசைப்படுகிறார்கள்'' என்கிறார் நிதித்துறை ஆலோசகர் பிரமோத் சின்கா.
எப்படியோ காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் மனித வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அத்தகைய மாற்றங்களை இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
- கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
- தலா ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரமும் வழங்கினார்.
கும்பகோணம்:
அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள ப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். பாதிக்க ப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி தலைமை அரசு கொறடா கோவி.செழியன் தனது சொந்த நிதியிலிருந்து தலா குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் என மூன்று குடும்பத்திற்கு 3 லட்சமும், உயிருடன் மீட்கப்பட்ட கொளஞ்சிநாதனுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கினார்.
இதில் எம்.பி.க்கள் கல்யா ணசுந்தரம், ராமலிங்கம், திருப்பனந்தாள்ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர்அண்ணா துரை, அவைத் தலைவர் கலியமூர்த்தி, மிசாமனோகர், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் பாலகுரு, இளவரசி, இன்பத்தமிழன், மாவட்ட பிரதிநிதி கஜேந்திரன், ஒன்றிய துணைச் செய லாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொ ண்டனர்.