என் மலர்
நீங்கள் தேடியது "firecrackers"
- பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் வெடி விபத்து.
- 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில், ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (பெய்து 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
- அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
நாடு முழுவதும் வரும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொது மக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அரசு தரப்பில் கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை அன்று இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, காலை 6- 7 மணி மற்றும் இரவு 7 - 8 மணி வரை, குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம்/ உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசை பதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களு்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பைக்கில் சென்ற இளைஞர்கள் மதுபோதையில் பட்டாசை கொளுத்தி சாலையில் வீசியபடி சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். ஆதித்யாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காகவும் போக்குவரத்து போலீசார் ஆதித்யாவுக்கு அபராதம் விதித்தனர்.
- பட்டாசு மீது அமர்ந்து இருப்பவருக்கு ஆட்டோ வாங்கி தருவதாக பந்தயம் காட்டியுள்ளனர்.
- மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் சபரீஷ் (32) மற்றும் அவரது நண்பர்கள் அக்டோபர் 31ம் தேதி தீபாவளியை மதுபோதையில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
அப்போது சக்திவாய்ந்த பட்டாசு மீது வெடிக்கும்வரை யார் அமர்ந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆட்டோ ரிக்சா வாங்கி தருவதாக சபரீஷீன் நண்பர்கள் பந்தயம் கட்டியுள்ளனர்.
எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்த சபரீஷ், ஆட்டோ ரிக்சா கிடைக்கும் என்ற ஆசையில் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பெரிய பட்டாசு பெட்டியில் சபரீஷ் அமர்ந்துள்ளார். அவரது நண்பர்கள் பட்டாசை பற்றவைத்து விட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர். பின்னர் அதீத சத்தத்துடன் பட்டாசு வெடித்துள்ளது. இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த சபரீஷை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சபரீஷ் நவம்பர் 2ம் தேதி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம்.
- நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்
இந்தாண்டு அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் பெரும்பாலான நகரில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.
தீபாவளி அன்று தடையை மீறி டெல்லியில் பட்டாசு வெடித்ததே காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆதலால் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த தவறிய மாநில அரசு மற்றும் காவல்துறை இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியது.
இந்நிலையில், பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டெல்லி போலீஸ் சார்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லியில் பட்டாசு வெடிப்பதையும் விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை டெல்லி போலீஸ் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், "எந்த மதமும் மாசுபடுத்தும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை. பேஷனுக்காக பட்டாசு வெடிப்பதாக கூறினால்.. அது பொதுமக்களின் அடிப்படை உரிமையான ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஆகவே நவம்பர் 25-ம் தேதிக்குள் டெல்லிக்குள் பட்டாசுகளுக்கு நிரந்தரத் தடை விதிக்கும் முடிவை மாநில அரசு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
- 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
- நீர், நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ஆறாக்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஆறாக்குளம் கிராம மக்கள் கூறியதாவது :-
பட்டாசு வெடிப்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பட்டாசு வெடிப்பால் ஜீவராசிகள் மக்களிடமிருந்து விலகி சென்று விடும். நீர்,நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. பறவை இனங்கள் இல்லாவிட்டால் வேளாண்மை பாதிக்கும். இதனால் கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி வீடு தோறும் தீபங்களை ஏற்றி வீட்டிலும்,கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி உற்றார்,உறவினர் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்கி மனம் விட்டு பேசி மகிழ்ந்து மதியம் குடும்பத்தினர்,நண்பர்களுடன் விருந்து உண்போம். ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த தான,தர்மங்கள் செய்திடுவோம்.குழந்தைகள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
- ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.
சென்னை:
தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருமே ராக்கெட் பட்டாசுகளையும் வெடிக்க செய்தனர்.
நேற்று சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.
இந்த தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.
தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டது. அங்கு சென்றும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் தீபாவளி பட்டாசு தீவிபத்தில் பெரிய அளவில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
- அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
ஊட்டி,
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: -
ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை அனைவரும் கொண்டாடி மகிழும் முக்கிய திருநாளாகும். இந்த நாளில் வண்ணவண்ண மத்தாப்புகளை கொளுத்தி மகிழும் வழக்கம் உள்ளது. நாம் கொளுத்தி மகிழும் மத்தாப்புகளுடன், ஒலி எழுப்பும் பட்டாசுகளால் ஒலி மாசு ஏற்படவும், நம் காதுகளின் கேட்கும் திறன் குறையவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல, பட்டாசுகளை வெடிக்கும்போது வெளியாகும் புகையால், காற்று மாசு ஏற்படவும், விபத்துகள் நேரவும் வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, மொத்த மாவட்டமும் உயிா்கோளப் பகுதி என வரையறுக்கப்பட்ட மிக மென்மையான சூழலை கொண்டப் பகுதியாகும். பல்வேறு வகையான வனவிலங்குகளுக்கும், அரியவகை தாவரங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.
இச்சூழலில், பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படின், அது மாவட்டத்தின் மென்மையான சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாக அமையும். எனவே, அவற்றைத் தவிா்த்து, வனங்களில் காணப்படும் விலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாவட்ட மக்களாகிய அனைவருக்கும் உள்ளது.
மேலும், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கும்படியும், அதிக ஓசை எழுப்பக்கூடிய தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதை மீறுவோா் மீது காவல் துறையினா் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வா்.
இதுபோன்றே, பட்டாசு விற்பனையாளா்களும் அனுமதிக்கப்பட்ட பட்டாசு வகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. மீறும் விற்பனையாளா்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி, அபராதமும் விதிக்கப்படும் .
இவ்வாறு அவர் கூறினார்.
- பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு வனத்துறையினர் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
- 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். சுமார் 38 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சரணாலயத்திற்கு அருகில் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு மழைகாலங்களில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து இனப்பெருக்கம் செய்து செல்கின்றன.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பறவைகள் ஒலி எழுப்பினால் அச்சமுற்று வேறு இடத்திற்கு சென்றுவிடும் என்பதால் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராம மக்கள் ஆண்டு முழுவதும் பட்டாசு வெடிப்பதில்லை. திருமணம், திருவிழாக்கள், தீபாவளி மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தலைமுறையாக பறவைகளின் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காமல் சிறு மகிழ்ச்சியை தியாகமாக செய்வதை போற்றும் வகையில் சிவகங்கை வனக்கோட்டம், திருப்பத்தூர் வனச்சரக அதிகாரிகள் ஆண்டு தோறும் தீபாவளிக்கு முன்பு கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி கவுரவிப்பார்கள். அது போல் இந்த ஆண்டும் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடிபட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
- மாணவர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
- பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிப்பு.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி பெயர் பொறித்த சீருடை, தீபாவளி இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டது.
முன்னதாக தலைமை–யாசிரியர் வேதரெத்தினம், உதவிஆசிரியை சுசீலா, ஆட்டோ ஓட்டுநர் அன்புமணி ஆகியோரின் பணிகளை பாராட்டி நினைவுப்பரிசு, பொன்னாடைகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் அண்ணாதுரை, பொருளாளர் கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், அறிவழகன், ரோட்டரி துணை ஆளுநர் சிவக்குமார், ஆதப்பன், இளங்கோவன், திலகமணி, முத்து சாமி, அறிவழகன், உறுப்பினர் அஜித் ராஜா, ஹாஜா அலாவுதீன், தலைமையாசிரியர்கள் சுபாஷ், முருகாdந்தம், ஆசிரியர்கள் வேதரெத்தினம், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்கவேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்றும், ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசு வெடிகளை வெடிக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அறிவுறுத்தல் செய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் வெடிக்கலாம் என்றும், சரவெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
- சிவகாசி அருகே பட்டாசு-திரி வைத்திருந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக திருத்தங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருத்தங்கல் அருகே உள்ள பழைய வெள்ளையாபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (33). எளிதில் தீப்பற்றக்கூடிய திரிகளை வைத்திருந்ததாக திருத்தங்கல் போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி நாராயணபுரம் ரோட்டில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவை வேலப்பர் கவுண்டர் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (39) என்பவர் அனுமதியின்றி 10 பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.
சிவகாசி எம்.மேட்டுப்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு குழாய்களை வைத்திருந்ததாக வீரபாகு, ராஜகோபால் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1,200 பட்டாசு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் பட்டாசு திரி, பட்டாசுகளை வைத்திருந்ததாக கீழகோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த இளையராஜா, கங்காகுளத்தைச் சேர்ந்த கருப்பசாமி, திருத்தங்கல்லைச் சேர்ந்த பவுன்தாய், முனியம்மாள் ஆகிய 4 பேரை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.