என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest Department"

    • ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர்.
    • வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    மதுரை:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேச்சிப்பறை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் தாஸ். இவருக்கு களியல் வனச்சரகம் தொடலிக்காடு வனப்பகுதியை ஒட்டி கடையல் கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலத்திற்கு அரசு உரிமை கோரியதால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதை தள்ளுபடி செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுடன் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்த ரப்பர் மரங்களை, டேவிட் தாஸ் வெட்டியபோது, வனத்துறையினர் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்துள்ளனர். இதனால் வனத்துறையினரை சிவில் சிறையில் அடைக்க வேண்டும் அல்லது வனத்துறைக்கு சொந்தமான வாகனம், களியல் வனச்சரக அலுவலகத்தின் கம்ப்யூட்டர், அலமாரி, மேசை உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட வேண்டும் என குழித்துறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் டேவிட் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் அதனை எதிர்த்து வனத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை அமர்வு நீதிபதி விஜயகுமார், வனத்துறையினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், அந்த பணத்தை 12 வாரங்களுக்குள் டேவிட்தாஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.

    • குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
    • வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.

    அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

    அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.

    அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.

    அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந் தேதி புகுந்த கரடி 3 பேரை பயங்கரமாக கடித்து தாக்கியது.
    • இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந் தேதி புகுந்த கரடி 3 பேரை பயங்கரமாக கடித்து தாக்கியது.இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    அதன் பின்னர் அந்த கரடி வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது.

    மீண்டும் கரடி நடமாட்டம்

    இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பொது மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நெல்லை கள இயக்குனர் பத்மாவதி உத்தரவின் பேரில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா அறிவுறுத்தலின்படி, கடையம் வனச்சரகர் கருணா மூர்த்தி தலைமை யில் 48 பேர் கொண்ட குழு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வனத்துறையினர் நடவடிக்கை

    அவர்கள் கரடி ஊருக்குள் வருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனத்துறையினர் மண்எண்ணை நிரப்பிய தீப்பந்தம் கொண்டும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய பிளாஸ்டிக் துப்பாக்கி மற்றும் ஒலி எழுப்பான் மூலமாகவும் சத்தத்தை எழுப்பி வருகின்றனர். மேலும் சைக்கிள் டயர்களில் தீ வைத்தும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    எனினும் கரடி நடமாட்டம் குறித்து தடயங்கள் சிக்கவில்லை. இதுதொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் கூறியதாவது:-

    48 பேர் குழு

    வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவல் குழுவினர் அடங்கிய 48 பேர் கொண்ட குழுவினர் இரவு, பகலாக கரடி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்.

    சம்பந்தப்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கரடி வரும் வழித்தடங்களும் கண்கா ணித்து வருகிறோம். இதுவரை கரடி வந்ததற்கான கால் தடங்கள் கிடைக்கவில்லை. காமிரா காட்சிகளிலும் கரடியின் உருவம் பதிவாகவில்லை.

    எனினும் முன் எச்சரிக்கை காரணமாக பொது மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். கரடி நடமாட்டம் கண்டறியப் பட்டால் அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். பொது மக்கள் கரடி குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையாளராக இருந்து வருபவர் ஜெயக்குமார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் புதுவை ஏ.எப்.டி.மில் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
    • அதன்பின்னர் வனத்துறை ஊழியர் சம்பவ டத்துக்கு விரைந்து வந்து ஆமையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையாளராக இருந்து வருபவர் ஜெயக்குமார். இவர் தனது மகனுடன் புதுவை ஏ.எப்.டி.மில் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஒரு ஆமை சாலையை கடக்க முயன்றது இதனை பார்த்த கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் வாகனம் மோதி ஆமை உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அதனை காப்பாற்றினர். பின்னர் வனத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    அதற்கு நட்சத்திர ஆமையாக இருந்தால் மட்டுமே காப்பாற்றப்படும் என பதில் வந்தது.

    இதை தொடர்ந்து வனத்துறை துணை இயக்குனர் குமாரவேலுவை கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு ஆமையை காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டார்.

    அதன்பின்னர் வனத்துறை ஊழியர் சம்பவ டத்துக்கு விரைந்து வந்து ஆமையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றார்.

    இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆணையர் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    • உசிலம்பட்டி பகுதியில் முள்ளம்பன்றியை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பேரையூர் ரோட்டில் கடந்த சில நாட்களாக முள்ளம்பன்றி சுற்றித் திரிந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு குடியிருப்பு பகுதிகளுக்குள் முள்ளம்பன்றி புகுந்தது. இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

    உடனே இதுகுறித் து உசிலம்பட்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் திருவள்ளுவர் நகரில் முள்ளம்பன்றியை பார்க்க கூட்டம் கூடியது. இதனால் முள்ளம்பன்றி அங்கிருந்து கால்வாய்க்குள் இறங்கி மாயமானது.

    சிறிது நேரத்தில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி பென்சியோ தலைமை யிலான வன குழுவினர் முள்ளம்பன்றியை தேடி பார்த்தனர். ஆனால் பிடிபடவில்லை. இன்று காலையும் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் இதுவரை சிக்கவில்லை.

    முள்ளம்பன்றியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி, மேலக் கோட்டை, ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள், மயில்கள் காட்டுப்பன்றிகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான்கள் குடிநீருக்காக அடிக்கடி கிராமங்களுக்கு வருவதுண்டு. அவ்வாறு வரும் விலங்குகள் ரோட்டை கடக்கும்போது வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் வனவிலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கரிசல்பட்டி விலக்கு அருகே தனியார் நிறுவனத்தின் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 3 வயதுடைய காட்டுப்பன்றி இறந்து கிடந்தது.

    இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜனிடம் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்குள் வருவதற்குள் இறந்த கிடந்த காட்டுப்பன்றியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் உசிலம்பட்டி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உசிலம்பட்டி வனவர் ஜெய்சங்கர் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றி இறைச்சிக்காக மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமையில், வனவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட தனிக்குழுவினர் சிவகிரி உள்ளார் கிராமத்தில் மேற்கே உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை செய்தனர்.
    • மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி கைது செய்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து கடந்த 17 -ந்தேதியன்று தென்காசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி வனச்சரக அலுவலர் மவுனிகா தலைமை யில், சிவகிரி தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வடக்குப் பிரிவு வனவர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட தனிக்குழுவினர் சிவகிரி உள்ளார் கிராமத்தில் மேற்கே உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை செய்தனர்.

    அப்போது சிவகிரி தாலுகா உள்ளார் கிராமத்தை சேர்ந்த பொன்னுத்துரை (வயது39), சுப்பிரமணிய புரம் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் (39), கனிராஜ் (25), விக்னேஷ் (27), அசோக்குமார் (20) ஆகியோர் கடமான் மற்றும் புள்ளிமானின் இறைச்சியுடன் இருந்தனர்.

    அவர்களை மாவட்ட வன அலுவலர் உத்தரவுப்படி கைது செய்து வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து கடந்த 17 -ந்தேதியன்று தென்காசி கிளைச்சிறையில் அடைத்தனர்.

    அதனை தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளி களை பிடிக்க சிவகிரி வனச்சரக அலுவலர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று ராஜபாளையம் தாலுகா சுந்தரராஜபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் என்ற மன்னார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சதீஸ்குமார் ஆகிய முக்கிய குற்றவாளிகள் 2 பேரை கைது செய்தனர்.

    • திடீரென இவ்வளவு யானை கூட்டம் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
    • யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    கோவை:

    கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி தண்ணீர் மற்றும் குடிநீரை தேடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. அப்போது குடியிருப்பையொட்டி விளைநிலங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களையும் சேதம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மதுக்கரை வனத்தை விட்டு 6 காட்டு யானைகள் குட்டியுடன் வெளியேறின. அந்த காட்டு யானைகள் நேராக மதுக்கரை வனத்தில் இருந்து பச்சாபாளையம் நோக்கி வந்தன.

    அதிகாலையில் வழக்கமான வழித்தடத்தில் செல்லாமல் கோவைப்புதூர் அருகே உள்ள பச்சாபள்ளியில் குடியிருப்பு பகுதிக்குள் 6 யானைகளும் குட்டியுடன் நுழைந்தது.

    ஊருக்குள் குட்டியுடன் யானை புகுந்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள் இருந்தபடியே தெருவில் நடந்து சென்ற யானை கூட்டத்தை பார்த்தனர்.

    திடீரென இவ்வளவு யானை கூட்டம் வந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் ஊருக்குள் நுழைந்த யானை கூட்டம் அதிகாலை 3 மணி வரை அங்கேயே சுற்றியது. அதன் பிறகு யானையை வனத்துறையினர் எட்டிமடை பீட்டிற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    கோவைப்புதூர் பகுதியில் யானை கூட்டம் நுழைந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
    • இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும்.

    திருப்பூர் :

    திருப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார நகர, கிராமப்புறங்களில், புதிது, புதிதாய் பறவையினங்கள் தென்படுகின்றன' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தமிழகத்தில், ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. காடுகள், காடுகளை ஒட்டிய நகர, கிராமப்புறங்களில், அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினர் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தொழில் நகரான திருப்பூரில், திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில், வனக்காப்பாளர் கணபதி செல்வம், மான் காப்பாளர்கள் சிவமணி, வெங்கேடஸ்வரன், திருப்பூர் இயற்கை கழகத்தினர், கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.திருப்பூர் நஞ்சராயன் குளத்தில், வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் மற்றும் நம் நாட்டை தாயகமாக கொண்ட பறவைகள் என, 182 வகை பறவையினங்கள் இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

    அதே போன்று, ஊத்துக்குளி கைத்தமலை கிராமப்புறங்கள், அவிநாசி நகர்ப்புறம், கலெக்டர் அலுவலக வளாகம், கூலிப்பாளையம் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ரேஞ்சர் சுரேஷ் கிருஷ்ணா கூறியதாவது:-நஞ்சராயன் குளத்தில், பறவை வலசை வருவது, அதிகரித்து வருகிறது. இதுவரை காணக்கிடைக்காத பறவைகளை கூட, கணக்கெடுப்பில் பார்க்க முடிந்தது. ஆண்டுக்காண்டு பறவைகளின் வருகை, எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது, இயற்கை, இயல்பு மாறாமல் இருக்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி தான். எனவே, நீர்நிலைகளில் ரசாயன கலப்பு தவிர்ப்பது, மரம், செடி, கொடிகளை பாதுகாத்து வளர்ப்பது என, இயற்கையை பாதுகாக்கும் விஷயங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில், பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும். இது, இயற்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார். 

    • யானை தந்த பொம்மைைய கேரளாவில் இருந்து கடத்தி வந்த 2 பேருக்கு வனத்துறை வலைவீசி வருகின்றனர்.
    • யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மதுரை

    மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது மதுரை ஜெ.ஜெ. நகர் பகுதியில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அங்கு யாைன தந்த பொம்மைகளை விற்பனை செய்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ஜெ.ஜெ. நகரை சேர்ந்த இருளன் என்ற முத்து, பாண்டியன் நகரை சேர்ந்த பீட்டர் சகாயராஜ் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாங்கள் இந்த பொம்மைகளை செய்யவில்லை. சாத்தூரை சேர்ந்த ரஞ்சித்ராஜா என்பவரிடம் வாங்கி வந்து கமிஷன் அடிப்படையில் விற்பனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மதுரை சரக வனத்துறை அதிகாரிகள் சாத்தூருக்கு சென்று ரஞ்சித்ராஜாவை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், யானை தந்த பொம்மைகள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டு மதுரை மற்றும் விருதுநகரில் விற்பனை செய்து வருவது தெரி வந்தது.

    இந்த சிலைகளை கடத்திவரும் 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    யானை தந்த பொம்ைம விற்பனை தொடர்பாக பிடிபட்ட பொன்இருளன், பீட்டர்சகாயராஜ், ரஞ்சித்ராஜா ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்து மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபாலா கூறுகையில், மதுரை வன குற்றங்களின் மையமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். வன உயிரினங்களை வேட்டையாடுவோர், மயில் இறகு, யானை தந்தத்தில் கலைப்பொருட்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.
    • சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊதியூர் அருகே மலையடிவாரத்தில் உள்ள தாயம்பாளையத்தை சேர்ந்த ரத்தினசாமி என்ற விவசாயின் தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் கடந்த 3ந்தேதி இரவு ஒரு செம்மறியாடு காணாமல் போனது.

    சற்று தூரத்தில் கழுத்துப்பகுதி கடிக்கப்பட்ட நிலையில் ஆடு இறந்து கிடந்தது. சிறுத்தை, நாய் போன்ற விலங்கினங்கள் தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அப்பகுதியில் காங்கயம் வனத்துறையினர் கேமரா வைத்து கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் செங்கோடம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவரின் தோட்டத்தில் இருந்த கன்றுக்குட்டியை ஒரு விலங்கு கடித்து கொன்றது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிறுத்தை அடித்துக்கொன்றதாக தெரிவித்தனர். எனவே சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் இன்று காலை ஊதியூர் அடுத்த காசிலிங்கம்பாளையத்தில் சாமிநாதன் என்பவரது தோட்டத்தில் இருந்த 2மாத கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று 300 அடி தூரம் இழுத்து சென்றுள்ளது. அங்கு வேலி இருந்ததால் கன்றுக்குட்டியை அங்கேயே போட்டு விட்டு சென்றது. மேலும் ஆடு, மாடுகளை கடித்து கொன்றுள்ளது. இன்று காலை ஆடு, மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.

    இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் ரேஞ்சர் தனபாலன், வனத்துறை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஸ்வரி உள்ளிட்ட குழுவினர் வட்டமலை பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். உடுமலை வனச்சரகத்தில் இருந்து 10 பேர் கொண்ட குழுவினர் வர வழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து பிடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 5 கி.மீ., சுற்றளவுக்கு கண்காணித்து வருகிறோம். கண்டறியப்பட்ட கால்தடத்தின் அடிப்படையில் சிறுத்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். சுற்றுவட்டார விவசாயிகள், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    இதனிடையே வட்டமலைப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மாலை 4மணிக்கு மேல் மலைக்கும், மலை மேல் உள்ள கோவில்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை செய்துள்ளனர்.

    வட்டமலைப்பாளையம் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை கரூர் வனப்பகுதியில் இருந்து இங்குவந்துள்ளது. ஊருக்குள் சிறுத்தை புகுந்துள்ளதால் பொதுமக்கள் பீதியில் தவித்து வருகின்றனர். 

    • கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகைகளையும் வைத்தனர்.

    காங்கயம் :

    காங்கயம்- தாராபுரம் சாலையில் ஊதியூர் மலை உள்ளது. 13 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மலையில் மான், நரி, காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஒன்று, அக்கம்பக்கத்தில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கடித்து இழுத்துச் சென்று விடுகிறது. கடந்த வாரம் தாயம்பாளையம் ரத்தினசாமி என்பவரது ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்து கொன்றது. அதன்பின்னர் ஊதியூர் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபம் அருகிலுள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாட்டையும், காசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வீட்டின் முன்பு கட்டிப் போட்டிருந்த கன்றுக்குட்டியை கடித்து இழுத்துச் சென்று கொன்று போட்டு விட்டு ஓடிவிட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கயம் வனத்துறை அலுவலர் தனபால் தலைமையில் வனத்துறையினர் ஊதியூர் வந்து மலையடிவாரத்தில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் உள்ளது என எச்சரிக்கை பதாகை களையும் வைத்தனர். தொடர்ந்து 3 கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஊதியூர் பகுதியில் வைக்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி வனத்துறை அலுவலர் தனபால் கூறும்போது, கூண்டுகளில் உயிருடன் ஆட்டுக்குட்டியை விட்டு அதன் மூலம் சிறுத்தையை பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக டிரோன் ஆப்ப ரேட்டர் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் சிறுத்தை நடமா ட்டத்தை கண்காணிக்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. 25 பணியாளர்களை கொண்டு 4 குழுக்களாக பிரிந்து இரவு பகல் என தீவிர ரோந்து பணியினை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

    ×