என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forgery"

    • கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
    • தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலை யார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அவருக்கும், அதே மில்லில் வேைல பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு செல்வத்திடம் வாங்கிய பணத்தை கொடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு, பாண்டியம்மாள் தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நள்ளிரவு ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் மகன் கண்ணன் அவரை தேடி செல்வத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்துள்ளது. வீட்டி னுள் பார்த்தபோது பாண்டியம்மாள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கீரைத்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கழுத்ைத அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பிணமாக கிடந்த வீட்டில் வசித்து வந்த செல்வத்தை காணவில்லை.

    அவர் தான் பாண்டி யம்மாளை கொன்றுவிட்டு தப்பி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் ஆகியோரின் உத்தரவின்பேரில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தலைமறைவாகிய செல்வத்தை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் பாண்டியம்மாளை கொன்ற தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தபபட்டது.

    பாண்டியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், அது தொடர்பாக கேட்டபோது தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், அதில் ஆத்திரம் அடைந்து கத்தியால் கழுத்தை அறுத்து அவரை கொன்று விட்டதாகவும் செல்வம் கூறியிருக்கிறார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் போலி ஆவணம் தயார் செய்து பெண்ணிடம் நிலம் மோசடி செய்தனர்.
    • இதுதொடர்பாக கணவன்-மனைவி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கர்நாடக மாநிலம் பெங்களூரு, சி.வி. ராமன் நகரை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி சாந்தி ஷீலா. இவர் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாகமலை புதுக்கோட்டை யில் எனது கணவர் ராஜசேகரன் மற்றும் சென்னை கொளத்துரை சேர்ந்த அவரது சகோதரர் ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேருக்கும் 11 சென்ட் மனை மற்றும் வீடு உள்ளது.

    இந்த நிலையில் ராதாகிருஷ்ணன், அவரது மகன் ஸ்ரீதர் ஆகியோர் திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன் என்பவர் மூலம், போலி ஆவணம் தயார் செய்துள்ளனர். அதற்கான விற்பனை உரிமை, திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிகுமார் என்பவருக்கு தரப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர்கள் மேலபொ ன்னகரம், சண்முகானந்தா புரத்தை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் இளங்கோ பாக்யராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை விற்றுள்ளனர். இதற்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த சிவபாண்டி என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நிலத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் தயார் செய்து நில மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை கொளத்தூர், காவேரி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சாந்தி, இவர்களது மகன் ஸ்ரீதர், திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பழனிகுமார், நாகமலை புதுக்கோட்டை சிவபாண்டி, திருப்பரங்குன்றம் பத்திர எழுத்தர் மாரியப்பன், நாகமலை புதுக்கோட்டை ஆதிமூலம், இளங்கோ பாக்யராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ். காலனி, நேரு தெருவை சேர்ந்தவர் சிவராஜன் (49). இவர் மதுரை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்து உள்ளார்.

    அந்த மனுவில், மதுரை ஒத்தக்கடை, அரசரடியை சேர்ந்த ஜெயச்சந்திரன், பைபாஸ் ரோடு அந்தோணிராஜ், அரசரடி ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் எனக்கு சொந்தமான இடத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய சகோதரி சங்கீதாவுக்கும் அதே பகுதியில் சேர்ந்தவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவருக்கும் சங்கீதாவுக்கும் 1.1/2 வருடங்களாக நட்பாக பழகி வந்தனர். . இது பற்றி கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோடு கிராமத்தில் தங்கி வசித்து வந்தனர்.

    கடந்த 24- ந் தேதி அன்று சங்கீதாவை பார்க்க மணி சென்றுள்ளார். இது பற்றி கணவனுக்கு தெரிந்ததால் சங்கீதா நேற்று எலிபேஸ்ட் சாப்பிட்டார். பின்னர் அவரை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் கோபமடைந்த சங்கரும் கல்லாநத்தம் சென்று கேட்டார். அப்போது மணி, கண்ணன் ஆகியோர் சங்கரை ஆபாசமாக திட்டி திட்டி தாக்கினர். இதுகுறித்து சங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொட்டியாபாளையத்தில் 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.
    • இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்துள்ள லக்கபுரம் பஞ்சாயத்து தொட்டியா பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 52), விவசாயி. இவருக்கு சொந்தமான 12 சென்ட் விவசாய நிலத்தை, அருகில் வசிக்கும் தேவி, அவரது மகன் சஞ்சித் ஆகிய இருவரும் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில், அந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என புதுச்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திலும், நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலும் மணிவேல் தரப்பில் தடை மனு அளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், புதுச்சத்திரம் போலீசிடமும் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி அந்த நிலம் தொடர்பான தடை ஆணை மீது எவ்வித விசாரணை மேற்கொள்ளாமல் போலி ஆவணங்களை வைத்து அந்த இடத்தை திருநாவுக்கரசு என்பவருக்கு பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மணிவேல், அவரது உறவினர்கள், அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் புது சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

    அப்போது பதிவாளர் அமுதா கூறுகையில், சம்பந்தப்பட்ட இடம் பத்திர பதிவு செய்யப்பட்ட நாளன்று நான் விடுப்பில் இருந்தேன். அன்றைய தினம் கூடுதல் பொறுப்பு வகித்த பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். போலி ஆவணங்களை வைத்து பத்திர பதிவு செய்து இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறினார்.

    இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர். இதற்கு இடையே அந்த பத்திரபதிவு குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்  எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்க டேசனுக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்   அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்தி விட்டார். என்றாலும் ெசல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.இதனால் ஆத்திர மடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்ட மிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கி வர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார். அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்              அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடே சனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது  இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்க ளுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சா வடி போலீஸ் நிலை யத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீ சார் வழக்குபதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்கா தலன் சண்முகம் ஆகி யோரை போலீஸ் நிலை யத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக் காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து ெகால்ல முயன்றதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கியது
    • குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பூங்குளம் மலைப்பகுதியில் ரகசியமாக சிலர் அடுப்புகள் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாகவும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் போலீசார் சோதனைக்கு வருவதற்குள் சாராய காய்சுபவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்து தப்பி விடுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

    இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பரண்டு ராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    இந்த தனிப்படையினர் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சினாலும் விற்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு செல்போன் என்னை கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து பூங்குளம் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சசும் தகவல் தனிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டு அடிக்கடி சாராய ஊறல்களை அளித்தனர்.

    நேற்று மாலையில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தததை தொடர்ந்து குடியாத்தம் போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் பூங்குளம் மலைப்பகுதிக்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது 15 பேரல்கள் கள்ளச்சாராயம் ஊறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதிலிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை உடனடியாக போலீசார் அழித்தனர் மேலும் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச அமைக்கப்பட்டிருந்த 2 அடுப்புகளையும் போலீசார் அடித்து உடைத்தனர். மேலும் லாரி டியூப் களிலிருந்த கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர்

    கள்ளச்சாராய ஊறல்கள் காய்ச்சியது சம்பந்தமாக பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, செம்மட்ட சரவணன் ஆகியோர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த மருதூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.அங்குள்ள கருவேலம் மரத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது போலீசாருக்கு தெரிய வந்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 300-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கு நின்றவரை விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதன் அடிப்படையில் அவரை மருதூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் அவர் புவனகிரி அடுத்த நாலாம் தெத்து கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 43 )என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ராஜபாளையம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம அருகே உள்ள சட்டிக்கிணறு பகுதிைய சேர்ந்தவர் விஜயராகவன்(வயது 38). இவர் ெசாந்தமாக ஆட்ேடா வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும் அவ்வப்போது ஆக்டிங் கார் டிரைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த சத்துணவு கூடத்தில் பணியாற்றும் 35 வயதுடைய பெண் பொறுப்பாளருக்கும், விஜயராகவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது தொடர்பை நீடித்து வந்துள்ளனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம், அந்த பெண்ணின் கணவர் ராஜசேகருக்கு தெரிய வந்தது. விஜயராக வனுடனான கள்ளத்தொ டர்பை கைவிடுமாறு மனைவியை அவர் கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சட்டி கிணறு பகுதியில் விஜய ராகவன் நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் உள்பட 3 பேர் தகராறு செய்து விஜயராகவனை கல்லால் சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவரது மண்டை உடைந்தது. அங்கிருந்த வர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விஜயராகவன் புகாரின் கொடுத்தார். அதன்பேரில் கீழராஜ குலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து ராஜசேகர் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    • கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது
    • தனது தம்பியின் செயலால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கருதினார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தெரியவந்ததும் வெங்கடேசை, அவரது அண்ணன் வினோத்குமார் கண்டித்தார். அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறில் ஈடுபட்ட இருவரையும், அவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர்மீது வினோத்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    தம்பி வெங்கடேசனின் செயலால் தனது குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அவர் கருதினார். இதனால் வினோத்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தம்பியை தேடிச்சென்றார். அப்போது காளவாசல் பகுதியில் வெங்கடேஷ் இருந்தார். அவருடன் வினோத்குமார், தன்னிடம் இருந்த அரிவாளால் வெங்கடேசை வெட்டினார்.

    இதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். படுகாயமடைந்த வெங்கடேசை, அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெங்கடேசை அவரது அண்ணன் வெட்டியது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

    • போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாராயம் பதுக்கல் மற்றும் சாராயம் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்த 30 பேர்மீது வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம்.
    • இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா? அல்லது விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

    மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர், வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். உரிமம் விதிகள் மீறப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டகலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் புகாரை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்தார்.

    ×