என் மலர்
நீங்கள் தேடியது "foundation stone ceremony"
- தொண்டி அருகே அரசுப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டினார்.
- இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட அரும்பூர் கிராமத்தில் உள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா யூனியன் சேர்மன் முகமது முக்தார் தலைமையில் நடந்தது.
கவுன்சிலர் கதிரவன், வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சசிகுமார் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம், பூதலூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினாா். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர் ஒன்றியங்களைச் சார்ந்த 214 ஊரக குடியிருப்புகளுக்கு அதில் வசிக்கும்
2 லட்சத்து 25 ஆயிரத்து 453 மக்கள் பயன்பெறும்வகையில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூ. 248.67 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, மேல திருப்பந்துருத்தி ஆகிய பேரூராட்சிகளில் நூல் நிலைய புதிய கட்டிட பணிகள், திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறு புதிய நவீன பஸ் நிலையங்கள் கட்டும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, மேலதிருப்பந்துருத்தி, நூலக கட்டுமான பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இடம் தேர்வு செய்து கொடுத்த உடன் பணிகள் தொடங்கும்.
திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்து கொடுத்தவுடன் பணிகள் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடந்த 20 மாதத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 801 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
கோவை, சேலம், திருநெல்வேலி, சங்கரன்கோ வில், புளியங்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று அடிக்கல் நாட்டப்படும் குடிநீர் திட்டப்பணிகள் 2024 ஆகஸ்டு மாதத்தில் முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் இருந்து எந்த கோரிக்கை வந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எதுவும் தடையாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- மகாத்மா காந்தி தினசரி சந்தை, வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்து, விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அரசினர் சுற்றுலா மாளிகை செல்கிறார்.
பின்னர் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
அவர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கிறார்.
மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் ரூ.11.03 கோடி மதிப்பீட்டிலான மேம்படுத்தப்பட்ட பணி களையும் திறந்து வைக்கிறார்.
அதன்பின்னர் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே நேருஜி கலையரங்கில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது நெல்லை மத்திய மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர், நகர செயலாளர்கள், மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வட்ட செயலாளர்கள் என மொத்தம் 155 நிர்வாகிகளை அவர் சந்தித்து கலந்துரையாடுகிறார்.
அப்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்த லில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசுகிறார்.
கலந்துரையாடலின்போது நிர்வாகிகளின் கருத்துகளையும் அவர் கேட்கிறார். இதில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை தி.மு.க. தலைமையில் இருந்து வழங்கப்பட்டு விட்டது.
இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர் நேருஜி கலையரங்கம் அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இணைகின்றனர்.
தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை சுற்றுலா மாளிகையில் வைத்து மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காலை 9.30 மணி அளவில் புறப்பட்டு பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்கு செல்கிறார். அங்கு புதிதாக ரூ.78 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 6 மாடி கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கனவு திட்டமான ரூ.1,060 கோடியில் முடிவுற்றுள்ள தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
மேலும் நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஏற்கனவே முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட மேற்கு புறவழிச்சாலை திட்டத்தின் பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் விழா மேடையில் எழுச்சியுரை ஆற்றும் அவர், 75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
2 நாட்கள் சுற்றுப் பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப் பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் போது வழி நெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி, விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு-ஷோ' சென்று பொதுமக்களை சந்திக்கிறார்.
அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தப் பட்டுள்ளது. மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடை களும் அமைக்கப்பட்டுள்ளது.
- புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
- 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள் புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம், ராஜாக்க மங்கலம் ஒன்றியத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாம் பகுதிகளில் ரூ.11 கோடியே 54 லட்சத்து 44 ஆயிரம் செலவில் புதிதாக 172 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் திறப்பு விழாவும், ரூ.7.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக 90 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
விழாவுக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு விழாவில் கலந்து கொண்டு முடிவுற்ற குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் நாசர் விழாவில் பங்கேற்று, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு திட்டப் பணிகளை வழங்கினார்.

பெருமாள்புரம் இலங்கை தமிழர் முகாம் மற்றும் ராஜாக்கமங்கலம் பழவிளை முகாமில் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் 172 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.1.23 கோடி கூடுதலாக நிதி ஓதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் முடிவு பெற்றுள்ளன.
ரூ.7 கோடியே 55 லட்சத்து 37ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள 90 வீடு களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
விழாவில் விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாபு, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், அகஸ்தீசு வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, ஆர்.எஸ். பார்த்த சாரதி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூ ராட்சி தலைவர் செல்வகனி, கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தி.மு.க. நிர்வாகி கள் தாமரை பிரதாப் தமிழன் ஜானி, பொன்ஜா ன்சன், வினோத், இலங்கை தமிழர் முகாம் நிர்வாகி ஞானமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.