என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Committee Meeting"

    • தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.
    • உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்-ஆண்டு விழா மதுரையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராமபாண்டியன், மாவட்ட சிறுதொழில் முகமை உதவி கமிஷனர் சுரேஷ் பாபுஜி, மாநில தலைவர் திருமுருகன், துணைத் தலைவர் பால்கனி, செயலாளர் விஜிஸ், இணை செயலாளர்கள் மணிகண்டன், மாரிமுத்து, பொருளாளர் விஜயன், செயற்குழு உறுப்பினர்கள் காஞ்சனா, ஊர்மிளா, செல்வம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், உணவு பொருள் வியாபாரி சங்க கவுரவ தலைவர் ஜெயபிரகாசம், மடீட்சியா தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்பள தொழிலுக்கு உணவு பாதுகாப்பு துறையால் ஏற்படும் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், ஆண்டு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், அபராதம் தொகையை ரத்து செய்ய வேண்டும், அப்பளம், வடகம், மோர் வத்தல் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீதான உணவு பாதுகாப்பு துறையின் வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது.
    • ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மேற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சியன் பொதுக்குழு கூட்டம் தலைவர் அப்துல் வஹாப் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஷி, கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் ஆகியோர் பங்கேற்று பேசினர். தொகுதி தலைவர் அப்துல் வஹாப் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சோமு மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி பொக்கனாரேந்தல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் சேருவதற்கான படிவத்தை மாவட்ட துணை தலைவர் சோமு வழங்கினார். அதனை தொடர்ந்து அனைத்து நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது. வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் கீழக்கரை, திருப்புல்லாணி,பெரியபட்டினம் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் நன்றி கூறினார்.

    • வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
    • அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைப்பது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்று இப்போதே முடிவு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    அந்த வைகயில் டி.டி.வி.தினகரன் தலைமை யிலான அ.ம.மு.க. தற்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்குள் கூட்டணி உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

    தேவர் சமுதாய வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு இவர்களது வியூகம் அமையும் என தெரிகிறது.

    இந்த நிலையில் அ.ம.மு.க. பொதுக் குழுக்கூட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி கூடுகிறது.

    இது தொடர்பாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் எஸ்.அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடா சலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    அனைத்து கழக பொதுக் குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    • அக்டோபர் 5-ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களவைத் தேர்தல்களை எதிர் கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின் படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அட்டவணைப்படி பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.

    அக்டோபர் 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கான நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

    அக்டோபர் 2-ந் தேதி திங்கள்கிழமை அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன் தொடர்ச்சியாக வருகிற 3-ந் தேதி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் 4-ந் தேதி நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவரவர் கிராமங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். அக்டோபர் 5-ம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள் நடத்தப்பட வேண்டும்.

    அக்டோபர் 8-ம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான செயல்திட்டங்கள், குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு.
    • இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக அறிவிப்பு.

    கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கில்," பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு" தெரிவித்திருந்தார்.

    மேலும், "அப்போது, ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவை எதிர்த்த இந்த மனு காலாவதி ஆகிவிட்டதாக" தெரிவித்த நீதிபதி, சண்முகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை.
    • அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை தமிழகத்தில், காங்கிரசின் தற்போதைய நிலை பற்றிய தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

    தமிழகத்தில் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் எந்த திசையில் பயணிக்கப் போகிறோம் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்திற்கு தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 1500 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    காங்கிரஸ் கட்சிக்கென்று தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதை விரிவுபடுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலையிலும் செயல்படுகிற அமைப்பாக முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். செயல்படாத கட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி 1989-ல் தனித்து போட்டியிட்ட போது பெற்ற 20 சதவிகித வாக்குகளை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத எந்த கட்சியும் பெற்றதி ல்லை, பெறவும் முடியாது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி உறுதிபடுத்த வேண்டும்.

    ராகுல்காந்தியின் தமிழக கனவு மெய்ப்படுகிற வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலிமை படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவரது முயற்சிகள் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்வது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதற்கிடையே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை மீண்டும் கேட்டார்.

    ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் வேறு தொகுதிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்ப டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வரும் திருநாவுக்கரசர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்து.

    • அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
    • அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19 (vii) மற்றும் 25 (ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்திட கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்டசபை தேர் தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளையும் போல அ.தி.மு.க.வும் தயாராகி வருகிறது.

    அந்த வகையில் டிசம்பர் 15-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

    கட்சியின் வளர்ச்சிப் பணிகள் பற்றியும் தீர்மானங்கள் இயற்றப்பட உள்ளது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்ற பிறகு அவரது புகைப்படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த அட்டைகள் முறையாக கட்சியினருக்கு சென்று சேரவில்லை என்று எழுந்த புகாரின் பேரில் அதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவினரும் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக அவர்கள் தங்களது அறிக்கையை கட்சி தலைமையிடம் அளிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க.
    • 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக் குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசிய தாவது:-

    புரட்சித் தலைவி அம்மா மறைவுக்கு பிறகு இந்த இயக்கம், அம்மா அரசு இருக்குமா? இருக்காதா? என்ற நிலையிலே, அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு சோதனையான காலக் கட்டத்திலே இந்த இயக்கத்தை வழிநடத்துகின்ற ஒரு தொண்டனாக இருந்து தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அம்மா ஆட்சியில் முதலமைச்சராக பொறுப்பேற்று 4½ ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசு எடப்பாடியார் அரசாகும்.

    அதற்கு பிறகு இந்த இயக்கத்திலே எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளால், பல்வேறு சோதனைகள் வந்தது, பிளவுபட்டது. சின்னம் முடக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் அதை எதிர் கொண்டு எந்தவித சேதாரமும் இல்லாமல் எக்கு கோட்டையாக அ.தி.மு.க. கழகம் இன்று இருப்பதற்கு முழு காரணம் ஆளுமை மிக்க நம்முடைய பொதுச்செயலாளர் எடப்பாடியார்.

    ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நம்மை தோற்கடிப்பதற்கு எவனும் இல்லை. தோற்கடிக்க முடியாது. நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். நம்பிக்கைத்தான் நம் வெற்றிக்கு முதல்படி.

    அந்த நம்பிக்கையை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு நம் மீது மறைமுகமாக, நேரடியாக தாக்குதல்கள் நடத்தி கொண்டி ருக்கிறார்கள். 2 கோடி தொண்டர்களை நம்பி இருக்கிற இயக்கம் அ.தி.மு.க.

    அன்றைக்கு இந்த எடப்பாடியார் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ அதே எழுச்சி அதே ஆரவாரத்தோடு இன்றைக்கும் இருக்கிறது.

    காது இருந்தும் கேட்காத செவிடர்களுக்கும், கண் இருந்தும் பார்க்காத குருடர்களுக்கும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    இந்த மண்டபத்தில் நிரம்பி இருக்கிற இந்த தொண்டர்களை பாருங்கள். எங்கடா இருக்கிறது இங்கே கருத்து வேறுபாடு? எங்கிருக்கிறது சலசலப்பு?

    சலசலப்பு வராதா? கருத்து வேறுபாடு வராதா? என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இங்கே பாருங்கள். இந்த எழுச்சியை பாருங்கள்... இதுதான் 2026-ல் நம்முடைய அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும்... அமையும்.

    நம்முடைய பலம் நமக்கு தெரிகிறதோ இல்லையோ தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க. தொண்டனுடைய பலம் தி.மு.க.வுக்கு தெரியும். அ.தி.மு.க.வில் கடைசி தொண்டன் இருக்கிற வரை அ.தி.மு.க.வை எந்த கொம்பன் மட்டுமல்ல 100 கருணாநிதி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

    அதனால்தான் இந்த தொண்டனுடைய மனதை சோர்வடைய வைக்க வேண்டும் என்பதற்காக பல் வேறு பொய்யான தகவலை பரப்புகிறார்கள்.

    இதையெல்லாம் நாம் தலைவர் காலத்தில் இருந்து பார்த்து கொண்டிருக்கிறோம். ஆகவே அ.தி.மு.க. மக்களை நம்பி மக்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிற இயக்கம்.

    இன்றைக்கு ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வை அழித்து விடலாம். வழக்குகளை போடலாம். கைது செய்யலாம். அ.தி.மு.க.வினரை அடக்கிவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சி நடந்ததே அங்கு என்ன நிலைமை ஏற்பட்டது. குடும்ப ஆட்சி அகற்றப்பட்டது. மக்கள் பொங்கிவிட்டார்கள். இங்கு ஒருவர் மீது சேறு வீசப்பட்டதே. மக்கள் எழுச்சி அடைந்துவிட்டார்கள்.

    வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அம்மா அரசு எடப்பாடியார் தலைமையில் அமைய வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

    கூட்டணி... எல்லோரும் கேட்பது கூட்டணி. நான் கேட்கிறேன். 2001-ல் தேர்தலுக்கு 3 மாதம் முன்பு வரை கூட்டணி வந்ததா? எப்போது வந்தது? தேர்தலுக்கு 10 நாளுக்கு முன்பு தான் கூட்டணி அமைந்தது. மிகப்பெரிய கூட்டணி அமைந்தது. மிகப் பெரிய வெற்றியை அம்மாபெற்று தந்தார்.

    2011-ல் கூட்டணி வந்ததா? எப்போது அமைந்தது? தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்புதான் கூட்டணி அமைந்தது.

    ஆகவே கூட்டணி வரும். அதை பொதுச்செயலாளர் பார்த்துக்கொள்வார். கவலையே படாதீர்கள். நாம் அமைக்கிறோமோ இல்லையோ ஸ்டாலினே கூட்டணியை அமைத்து கொடுத்து விடுவார்.

    கவலையே படாதீர்கள். எப்போதெல்லாம் அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைகிறதோ அதற்கு பிறகு அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

    அந்த நம்பிக்கையோடு அந்த எழுச்சியோடு அந்த உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றி நம் அம்மாவின் ஆட்சியை எடப்பாடியார் தலைமையிலே அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் ஆவேசமாக பேசினார்.

    • எடப்பாடி பழனிசாமி 2 கோடி தொண்டர்களின் உழைப்பை நம்பி இருக்கிறார்.
    • 2,500 நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

    பொதுக்குழு-செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஒரு வாக்காளரை 10 முறையாவது சந்தித்தால் அவர்கள் நமக்கு வாக்களிப்பார்கள்.

    2026-ல் வெற்றி உறுதி. கட்சிக்காக செலவு செய்ய பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கி செலவு செய்யுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நிலைப்பாட்டை கூட முழுமையாக நம்பவில்லை. கூட்டணியைதான் முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

    கூட்டணியினர் எதிர் கருத்து கூறினால் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து ஒற்றுமையாக இருக்கிறோம் என்று தி.மு.க. கூறுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கோடி கழக தொண்டர்களின் உழைப்பை நம்பி இருக்கிறார். அப்படி உழைப்பை நம்பி இருக்கின்ற அ.தி.மு.க. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் 5 முதல் 6 மாதத்துக்குள் தி.மு.க. கூட்டணியில் இருக்கின்ற மற்ற கட்சியை சேர்த்தவர்கள் அ.தி.மு.க. பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள்.

    ஏனென்றால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. உறுதியாக வெற்றிபெறும் வாய்ப்பு வந்து விட்டது, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார் என்ற நம்பிக்கை எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களுக்கு வரவேண்டும்.

    அந்த எண்ணத்தை இங்கு இருக்கும் 2,500 நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி உழைத்தால் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் நோக்கி வருவார்கள். அந்த சூழ்நிலையை உருவாக்க இந்த செயற்குழு-பொதுக்குழுவில் நாம் சூளுரை ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.
    • பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி கடந்த 2-ந்தேதியுடன் முதல் ஆண்டு முடிவடைந்து 2-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. கட்சியின் உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 கட்டங்களாக மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்ததாக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகம் அமைப்பது தொடர்பான பணிகளில் விஜய் ஈடுபட்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் விரைவில் நடைபெற இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெறும் இடம், வாகன நிறுத்தும் இடங்கள், பங்கேற்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்ட அரங்குகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த், தேர்தல் பிரிவு மேலாண்மை குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் வந்து செல்லும் வண்ணம் அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது
    • அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது

    கரூர்:

    கரூரில் நேற்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நிறுவனத் தலைவர் தனியரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அடுத்த ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றப்படுவதற்கு தகுதிப்படுத்தப்படும். தி.மு.க. அரசு பதவியேற்று 15 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றையும் நிறைவேற்றி, சட்டம் ஒழுங்கையும் சிறப்புடன் பாதுகாத்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது,

    மத்திய அரசின் புதிய வணிக கொள்கை சில்லறை வியாபாரத்தை ஒழித்து கார்ப்பரேட் பெருவணிக நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் முறையை கைவிட்டு சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு சலுகையும், ஊக்கமும் தந்து அவர்களை பாதுகாத்திட மத்திய அரசை கேட்டுக்கொள்வது, நாட்டில் பெருகிவரும் மது, கஞ்சா போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே ஒழித்து ஒழுக்கமும், ஆரோக்கியமும் நிலை பெற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அருள் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்."

    • திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் முஸ்லிம் முன்னேற்றக்கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
    • பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்

    திருச்சி:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் கழக அமைப்பு தேர்தல்-2022 திருச்சி மேற்கு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூர் மற்றும் வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவரும், மாமன்ற உறுப்பினருமான அ.பைஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.

    த.மு.மு.க. மாநில செயலாளரும் தலைமை தேர்தல் அதிகாரியான நெல்லை மைதீன் சேட்கான் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவித்தார்.

    3, 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளுக்கு புதிய நிர்வாகிகளும், பொன்னம்பட்டி பேரூர் நிர்வாகத்திற்கு புதிய நிர்வாகிகளும் பொதுக்குழு மூலமாக தேர்வு செய்யபட்டு அறிவிக்கப்பட்டனர்.

    இப்ராஹிம், இம்ரான், மணவை அக்பர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பேரூர் கழகம், வார்டு நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    பொன்னம்பட்டி பேரூர் த.மு.மு.க., ம.ம.க. தலைவராக கோட்டையூர் ரபீக், த.மு.மு.க. செயலாளராக அப்துல் சலாம், ம.ம.க. செயலாளராக கவுன்சிலர் ரபீக் , பொருளாளராக ஆஷிக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    ×