என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Germany"

    • உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை வழங்குகின்றன.
    • ஜெர்மனி நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    பெர்லின்:

    நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷியா 2022-ல் போர் தொடுத்தது. 3 ஆண்டுகளைத் தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவியை வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

    அந்தவகையில் சுமார் ரூ.28 ஆயிரம் கோடி ராணுவ உதவியை வழங்குவதாக ஜெர்மனி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதில் டிரோன்கள், கவச உடைகள் போன்றவை அடங்கும். ஆனால் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த உதவி பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது ஜெர்மனி நாடாளுமன்றம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே உக்ரைனின் சபோரிஜியா பிராந்தியம் மீது ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் பலியாகினர். 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    • இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • தேர்தல் ஆணையத்தன் செயல்பாட்டிற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரை சந்தித்த அன்னாலெனா தலைமையிலான ஜெர்மன் பிரதிநிதிகள் குழு, இந்திய தேர்தல் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தது.

    பாராளுமன்ற தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் எளிதில் வாக்களிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்படும் விரிவான பயிற்சி முறை உள்ளிட்டவை குறித்து ராஜீவ் குமார் அப்போது விளக்கம் அளித்தார். தேர்தல் நடைமுறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பங்கேற்பையும் இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    போலியான சமூக ஊடக தாக்கம், பெரும்பாலான தேர்தல் மேலாண்மை அமைப்புகளுக்கு ஒரு சவாலாக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக செயல்பாட்டை ஜெர்மனி வெளியுறவு மந்திரி பாராட்டினார். டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் போர் முடியும் தறுவாயில் தரைமட்டமானது
    • வெளியெறிய மக்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர்

    19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது.

    இப்போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து 2.7 மில்லியன் டன் வெடிகுண்டுகளை ஜெர்மனி கூட்டணி நாடுகள் மீது வீசின. அதில் பெரும்பகுதி ஜெர்மனி மீது வீசப்பட்டது. இவற்றில் பல வெடித்தாலும் ஒரு சில வெடிக்காமல் பூமியில் புதைந்தன.

    போர் முடியும் நேரத்தில் ஜெர்மனியின் பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. அந்நாட்டில் இதனால் பல வெடிகுண்டுகள் பூமிக்கு அடியில் வெடிக்காமல் புதையுண்டு போனது. பல தசாப்தங்கள் ஆன பிறகும் ஆங்காங்கே அவற்றில் சில கண்டெடுக்கப்பட்டதாக அவ்வப்போது தகவல்கள் வருவதுண்டு.

    ஜெர்மனியின் மேற்கு பகுதி நகரமான டஸ்ஸல்டார்ஃப் (Dusseldorf) பகுதியில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் இம்மாதம் முதல் வாரத்தில் 1 டன் எடையுள்ள ஒரு வெடிகுண்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து காவல்துறையும், வெடிகுண்டு நிபுணர்களும் இணைந்து அதனை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

    இதன் ஒரு பகுதியாக, அந்த குண்டு கிடப்பதாக சொல்லப்படும் இடத்திற்கருகே சுமார் 1640 சதுர அடி சுற்றளவில் (500 meter radius) உள்ள இடங்களில் உள்ள அனைத்து மக்களையும் வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் சுமார் 13 ஆயிரம் பேர் தற்காலிகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினர். வெளியெறியவர்களில் ஒரு சிலர் தங்கள் வளர்ப்பு பிராணிகளையும் கொண்டு சென்றனர். இந்த நடவடிக்கையின்போது அந்த இடத்தை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டது.

    தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை எப்போது முடிவடையும் என்பதும் தற்காலிக தடை நீக்கப்பட்டதா? என்பது குறித்தும் தற்போது வரை தகவல்கள் இல்லை.

    • சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ. ஆகியவைதான் ஜெர்மனிக்கு பாகங்களை வழங்கி வருகிறது
    • பல்வேறு நாடுகள் சீனாவை சார்ந்திருப்பதை குறைத்து கொள்ள முடிவு செய்திருக்கின்றன

    மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது.

    5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும் சீனாவின் முக்கிய நிறுவனங்களான ஹுவாய் (Huawei) மற்றும் இசட்.டி.ஈ. (ZTE) ஆகியவைதான் வழங்கி வருகிறது.

    தற்போது ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம், சீனாவின் தயாரிப்புகளால் தேசிய பாதுகாப்புக்கான ஆபத்துக்கள் வரக்கூடும் எனவும் அதனால் அதனை தடுக்கும் விதமாக 5ஜி தொழில்நுட்பத்தில் சீனாவின் ஹுவாய் மற்றும் இசட்.டி.ஈ., ஆகியவற்றின் தயாரிப்புகளை முற்றிலும் தங்கள் நாட்டிலிருந்தே நீக்கிவிட முடிவு செய்திருக்கிறது.

    "டீ ரிஸ்கிங்" (de-risking) எனப்படும் அபாயங்களிலிருந்து விலகி இருத்தலுக்கான இந்த முடிவின்படி ஜெர்மனியின் மென்பொருள் மற்றும் இணைய கட்டமைப்பில் ஏற்கெனவே இடம்பெற்றிருந்த தளங்களிலிருந்தும் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை நீக்க வேண்டும் என ஜெர்மனி முடிவெடுத்திருக்கிறது. மேலும், இனியும் அவற்றை இறக்குமதி செய்யவோ பயன்படுத்தவோ வேண்டாம் என உறுதியாக உள்ளது. அந்நாட்டிலேயே உள்ள சில முன்னணி அலைபேசி சேவை நிறுவனங்கள் இவற்றை எதிர்த்தாலும், அரசங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களையும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகளிலிருந்து விலகியிருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது.

    பல்வேறு தொழில்நுட்பங்களிலும் உயர் தொழில்நுட்பங்களிலும் சீனா எனும் ஒரே நாட்டை சார்ந்திருப்பதை அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் படிப்படியாக குறைத்து கொள்ள முடிவு செய்திருப்பதை தொடர்ந்து ஜெர்மனியும் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.

    "ஜெர்மனி உண்மையிலேயே எங்கள் நாட்டு தயாரிப்புகளால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து உள்ளதை நிரூபிக்காமல் இத்தகைய முடிவை எடுத்தால் நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்" என இத்தகவல் வெளியானதும் சீனா காட்டமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    இந்தியாவில் கோவிட்-19 காலகட்டத்திலிருந்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக எடுக்கப்படும் முடிவுகள், தற்போது சீனாவை சார்ந்திருப்பதை உலகம் குறைத்து கொள்ள முன்வரும் வேளையில், இந்திய பொருளாதாரத்திற்கு பலனளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்ப்பு.
    • ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

    உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் குறைந்த நேரம் மட்டுமே வேலை செய்யப்படுகின்றன.

    இந்தப் பட்டியலில் தற்போது ஜெர்மனி நாடும் இணைந்து உள்ளது. 

    ஜெர்மனி நாட்டில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

    நாளை 1ம் தேதி முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டம் நடைமுறைக்கு வருகிறது. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 4 நாட்கள் வேலை செய்வதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.

    தொழிற்சங்கங்கள் 4 நாள் வேலையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன. இந்தநிலையில் சோதனை நடைமுறையாக நாளை முதல் இது அமல்படுத்தப்படுகிறது.

    இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இந்த சோதனையில் ஜெர்மனி நாட்டில் உள்ள முக்கிய 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 

    வாரத்தில் 4 நாள் வேலை செய்வது ஒருநிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. இந்த சோதனை அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜெர்மனியில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

    உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

    பெல்ஜியத்தில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் 40 மணி நேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

    ஜெர்மனியில் நாளை 1ம் தேதி (பிப்ரவரி) முதல் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் நடைமுறை படுத்தப்படுகிறது.

    • கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.
    • விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் பாஜக கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் கட்சி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் சுமார் 2000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கினர். இதனால் கைதில் இருந்து தப்பிக்க பிரஜ்வால் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பிச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களுள் ஒருவரை கடத்திய குற்றத்திற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும் பிரஜ்வாலின் தந்தையுமாகிய ஹச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தார்.

    இந்த விவகாரத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் பிரஜ்வாலை நாடு திரும்புமாறு அவரது தாத்தா தேவகௌடா எச்சரித்தார்.

    இந்நிலையில் நாளை மறுநாள் (மே 31) நாடு திரும்புவதாக பிரஜ்வால் ரேவண்ணா வீடியோ வெளியிட்டு தெரிவித்தார். அதன்படி நாளை (மே 30)  ஜெர்மனி தலைநகர் 'முனிக்'கிலுருந்து பெங்களூருவுக்கு விமானம் முன்பதிவு செய்துள்ள ரேவண்ணா, நாளை மறுநாள் பெங்களூரு கேம்பகௌடா விமான நிலையத்தில் தரையிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வந்திறங்கியதும் ரேவண்ணாவை கைது செய்ய போலீஸார் தயார் நிலையில் உள்ளனர். 

     

     

    • பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    பெர்லின்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா உடனான நமது ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    இதேபோல், நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரி யூசுப் மைதாமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தில் உலகின் கோட்டையாக விளங்கும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு, 44 நாட்கள் நீடித்த இந்த தேர்தல் வரலாற்றிலேயே மிகப் பெரியது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாங்கள் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். வெற்றிகரமான தேர்தல் காலத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    உலக கோப்பை கால் பந்துக்கு அடுத்து பிரபலம் பெற்றது ஐரோப்பிய கோப்பை (யூரோ) போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி 1960-ம் ஆண்டு பிரான்சில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய கால்பந்து

    4 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவரை 16 தொடர் முடிந்துள்ளன. கடைசியாக 2021-ம் ஆண்டு நடந்த போட்டியில் இத்தாலி கோப்பையை வென்றது.

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நாளை (14-ந் தேதி) தொடங்குகிறது. ஜூலை 14 வரை 1 மாதகாலத்துக்கு இந்த திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

    ஜெர்மனி, ஸ்காட்லாந்து, அங்கேரி, சுவிட்சர்லாந்து (குரூப் ஏ), ஸ்பெயின், குரோஷியா, இத்தாலி, அல்பேனியா (பி), சுலோவேனியா, டென்மார்க், செர்பியா, இங்கிலாந்து (சி), நெதர் லாந்து, பிரான்ஸ், போலந்து, ஆஸ்திரியா ( டி), பெல்ஜியம், சுலோவாக்கியா, ருமேனியா, உக்ரைன் (இ ), போர்ச்சுக்கல், செக் குடியரசு, துருக்கி, ஜார்ஜியா (எப்).

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப் படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு நுழையும். 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். 2-வது ரவுண்டில் 16 அணிகள் விளையாடும்.

    நாளைய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜெர்மனி-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    26-ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 29-ந் தேதி நாக் அவுட் சுற்று தொடங்குகிறது. ஜூலை 9 மற்றும் 10-ந் தேதிகளில் அரைஇறுதி ஆட்டங்களும், இறுதிப் போட்டி ஜூலை 14-ந் தேதியும் நடக்கிறது.

    பெர்லின், முனிச், டார்ட்மன்ட், ஸ்டட்கர்ட், ஹம்பர்க் உள்பட 10 நகரங்களில் மொத்தம் 51 போட்டிகள் நடக்கிறது. இதனால் கால்பந்து ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

    • போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.

    இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனியில் ஃப்ளேரியன், முசைலா 10 மற்றும் 19-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் ஆக்ரோஷமாக விளையாடியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஹவர்ட்ஸ், நிக்லஸ், கேன் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்தார். இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியை பெற்றது.

    • ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது.
    • 11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது.

    டார்ட்மென்ட்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    24 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ('ஏ' பிரிவு) ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.

    நேற்று நடந்த ஒரு ஆடடத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அங்கேரியை ('ஏ') தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்பெயின் -குரோஷியா அணிகள் மோதின.

    இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்பெயின் அணிக்காக மொரட்டா (29-வது நிமிடம்) பேபியன் (32-வது நிமிடம்) கார்வஜல் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த போட்டியில் இத்தாலி- அல்பேனியா ('பி' பிரிவு) அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது. பஜ்ராமி இந்த கோலை அடித்தார்.

    11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது. பஸ்டோனி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.

    16-வது நிமிடத்தில் இத்தாலி 2-வது கோலை அடித்தது. நிக்கோலா பாரெல்லா இந்த கோலை மிகவும் அற்புதமாக அடித்தார். இதன் மூலம் இத்தாலி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இதே நிலை இருந்தது.

    2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை தான் நீடித்தது. இத்தாலி வீரர்கள் 3-வது கோலை அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை தவற விட்டனர். இதேபோல 2-வது கோலை அடித்து சமன் செய்ய அல்பேனியா வீரர்கள் கடைசி வரை போராடி னார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

    இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 20-ந் தேதியும், அல்பேனியா 2-வது போட்டியிலும் குரோஷியாவுடன் 19-ந் தேதியும் மோதுகின்றன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் போலந்து- நெதர்லாந்து (மாலை 6.30 மணி), சுலோவெனியா- டென்மார்க் (இரவு 9.30), இங்கிலாந்து - செர்பியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் டி பிரிவில் ஆஸ்டிரியா மற்றும் ஃப்ரான்ஸ் மோதின. முதல் பாதியில் எந்த அணியும் கோலை அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டம் சூடுப்பிடித்து 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்டிரியாவை வீழ்த்தியது பிரான்ஸ்.

    கோலோ காண்ட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.

    இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ்  ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.

    ×