என் மலர்
நீங்கள் தேடியது "Girl child"
- 5 பெண் குழந்தைகளின் தாய் ஓடும் பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கலெக்டருக்கு எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது.

தற்கொலை செய்து கொண்ட நாகலட்சுமியையும், தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள் சண்முகபிரியா, பாண்டி சிவானி.
திருமங்கலம்
மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி(வயது31). இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்சினி, தேன்மொழி, சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணேசன் கோவையில் பிட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் நாகலட்சுமி தனது 5 குழந்தைகளுடன் மையிட்டான்பட்டியில் வசித்து வந்தார். 5 பெண் குழந்தைகள் இருப்பதால் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
அதன்பேரில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் வழங்கினார். இதையடுத்து அந்த பணிக்கு நாகலட்சுமி சென்று வந்தார்.
அப்போது மையிட்டான் பட்டி கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகிய 3 பேரும் நாகலட்சுமியை தரக்குறைவாக பேசி, அவருக்கு வேலை தரமுடியாது என கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த நாக லட்சுமி தன்னை தரக்குறைவாக பேசியது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஆனால் அதன்பிறகும் அவர்கள் மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 3 பேர் மீதும் நாகலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவர் இன்று தனது கைக்குழந்தைகளான சண்முகபிரியா, பாண்டி சிவானி ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு மையிட்டான்பட்டியில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சில் சென்றார்.
அந்த பஸ் சிவரக்கோட்டை அருகே வந்தபோது, நாகலட்சுமி தனது 2 குழந்தைகளையும் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு திடீரென ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். கண்ணை மூடி திறப்பத்திற்குள் நடந்த இந்த சம்பத்தை பார்தது பஸ்சில் இருந்தவர்கள் அதிச்சியடைந்து அலறினர்.
இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பஸ்சின் டிரைவர், கண்டக்டர் மற்றும் சக பயணிகள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர். பஸ்சில் இருந்து குதித்த நாகலட்சுமி படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
தங்களுடன் பயணித்து வந்த பெண் பஸ்சில் இருந்து குதித்து படுகாயமடைந்து கிடப்பதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். படுகாய மடைந்து சாலையில் கிடந்த நாகலட்சுமியை பார்த்து அவரது 2 குழந்தைகளும் கதறி அழுதன. இதனை தொடர்ந்து நாகலட்சுமி அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே நாகலட்சுமி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் கொடுப்பதற்காக நாகலட்சுமி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிளார்க் தன்னை அவதூறாக பேசி மன வருத்தத்தை ஏற்படுத்தி யதாகவும், மேலும் வேலை தரமுடியாது என மிரட்டியதாகவும் எழுதி இருந்தார்.
இந்த காரணத்தாலேயே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடிதத்தை கைப்பற்றி, அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலம் அருகே பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன.
- பெற்றோர் பயிற்சி முகாம் பற்றி முழுமையாக விசாரியுங்கள்.
தற்போதுள்ள காலகட்டத்தில் பெற்றோர் குழந்தைகளை 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. "கோடை காலம் எப்போது வரும் என்று முன்பெல்லாம் குழந்தைகள் காத்திருப்பார்கள். நண்பர்கள், தோழிகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்று மரம் ஏறி மாங்காய் பறிப்பார்கள். ஆறுகளுக்கு சென்று நீச்சலடித்து குளித்து மகிழ்வார்கள். கூட்டமாக சேர்ந்து விளையாடுவார்கள்.
தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நகரத்து குழந்தைகளால் இன்று, அதை கற்பனைசெய்துகூட பார்க்க முடிவதில்லை. அதனால் அவர்களை பெற்றோர் 'சம்மர் கேம்ப்' எனப்படும் கோடை பயிற்சி முகாம்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த முகாம்களில் தற்காப்பு, நீச்சல், மேற்கத்திய நடனங்கள், ஓவியம் வரைதல், இசைக் கருவிகள் மீட்டுதல் போன்ற பலவிதமான பயிற்சிகளை சிறுவர்-சிறுமியர்களுக்கு வழங்குகிறார்கள். அங்கு ஒருசில இடங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் மனக்குழப்பம், மனஅழுத்தம் போன்றவைகளுக்கு உள்ளாகிறார்கள்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பத்து பதினைந்து நாட்களில் அந்த முகாம்கள் முடிந்துவிடுகின்றன. பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அதுவரை அமைதிகாத்துவிட்டு பெரும்பாலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் காலகட்டத்தில்தான் பெற்றோரிடம் சொல்கிறார்கள். அப்போது நிறைய குழந்தைகள் கவுன்சலிங்குக்கு அழைத்துவரப்படுகிறார்கள். பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் குழந்தைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுகிறது. அவர்களுக்கு சமூகத்தை பற்றிய பயமும் அதிகரிப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த உண்மையை உணர்ந்து, பெற்றோர் இந்த கோடைகாலத்தில் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்" என்கிறார், பாலியல் பாதிப்புகளுக்கு உள்ளான குழந்தைகளின் மனநல ஆலோசகர் வித்யாரெட்டி.
"முதலில் அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் சார்ந்த அடிப்படை விஷயங்களை கற்றுக் கொடுக்கவேண்டும். முக்கியமான உடல்உறுப்புகளை பற்றி எடுத்துக் கூறவேண்டும். அதோடு 'உடல் உறுப்புகளில் எவை எல்லாம் உள் ளாடைகளால் மறைக்கப்படுகிறதோ அவை உனது தனிப்பட்ட உறுப்புகள். அவைகளை உன் உடல் ஆரோக்கிய காரணங்களை தவிர்த்து, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் அவற்றை தொடுவதோ, பார்ப்பதோ, அவைகளை பற்றி பேசுவதோ சரியானதல்ல' என்பதை புரியவைக்கவேண்டும். தவறான தொடுதல் எது, சரியான தொடுதல் எது என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைக்கவேண்டும்.
உங்கள் குழந்தை கோடைகால பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பினால், 'எங்கேயாவது போ.. எதையாவது கற்றுக்கொள்..' என்று அனுப்பிவிடாமல், பயிற்சி கொடுக்கும் அந்த அமைப்பு பற்றி முழுமையாக விசாரியுங்கள். அவர்களது பின்னணி, அனுபவம், இடம், சூழல், பயிற்சியாளர்கள் பற்றி எல்லாம் விசாரித்து திருப்தியடைந்தால் மட்டும் அங்கு கொண்டுபோய் சேருங்கள்.
பயிற்சி முடிந்து வீடு திரும்பியதும் அங்கு என்ன நடந்தது என்று கேளுங்கள். பயிற்சிக்கு தொடர்பில்லாத நிலையில் தொடுதல்களை உருவாக்கினால், தங்களிடம் சொல்லும்படி கூறுங்கள். பொதுவாக குழந்தைகளுக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு தர விரும்புகிறவர்கள், முதலில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதத்திலோ அல்லது அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன்வசப்படுத்தும் விதத்திலோ நடந்துகொள்வார்கள்.."
"பெற்றோர் தங்கள் குழந்தைகளை நம்பவேண்டும். 'நீ சொன்னால் சரியாக இருக்கும். நான் உன்னை நம்புகிறேன்' என்று கூறவேண்டும். ஆனால் 99 சதவீத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நம்புவதில்லை. 'நீ பயிற்சி முகாமுக்கு செல்ல விரும்பாமல் அவ்வாறு கூறுகிறாய்' என்று பதில்சொல்வார்கள். சிலரோ ஒருபடி மேலே போய், 'அந்த நபர் ரொம்ப நல்லவர். அவரை சந்தேகப்படக்கூடாது' என்று அவருக்கு பாராட்டுரை வழங்கிவிட்டு, தங்கள் குழந்தையை மட்டம் தட்டிவிடுவார்கள். அவ்வாறு பெற்றோர் நடந்துகொள்ளக்கூடாது. குழந்தைகளை முழுமையாக நம்பவேண்டும். குழந்தை சொன்ன உடன் அந்த சம்பவம் பற்றி ஆராயவும் முன்வரவேண்டும்"
கோடை பயிற்சி வகுப்புகளில் நீங்கள் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள்?
"புற்றீசல்கள் போல் யார் வேண்டுமானாலும் சம்மர் கேம்ப் நடத்தலாம் என்ற நிலை இருக்கக்கூடாது. தகுதியானவர்கள், தகுதியான பயிற்சியாளர்களை வைத்தே இதை தொடங்கவேண்டும். அவர் களுக்கான நிபந்தனைகளை அரசு வகுத்து, நடத்தை விதிகளை பின்பற்றச்செய்யவேண்டும். மத்திய அரசு 2012-ம் ஆண்டில், குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாவதை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றியுள்ளது. அதில் 'ஒரு நிறுவனத்தில் குழந்தைகள் பாலியல் பாதிப்புக்கு உள்ளானால், அதற்கு நிர்வாகம்தான் பொறுப்பு' என்று கூறப்பட்டுள்ளது. இது பள்ளிகள், கோடைகால பயிற்சி முகாம்கள் அனைத்துக்கும் பொருந்தும். அதனால் அத் தகைய நிறுவனங்களை நடத்தும் நிர்வாகிகள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும். பிரச்சினைக்குரியவர்களை பயிற்சியாளர் களாக சேர்த்துவிடக்கூடாது. நாம் எல்லா மையங்களையும் குறைசொல்லவில்லை. பிரச்சினைக்குரியவைகள் மட்டும் சமூக நலன் கருதி சரிசெய்யப்படவேண்டும்"
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உசிலம்பட்டி அருகே பெண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
- அந்த குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் எழுமலை போலீஸ் சரகம் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதில்நாயக்கனூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி வாசுகி (வயது21). இவர்கள் சென்னை படப்பையில் முறுக்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் மீண்டும் வாசுகி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாகிய வாசுகியை பிரசவத்திற்காக கடந்த 26-ந்தேதி உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அங்கு அவருக்கு கப்பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தையே பிறந்தது. தாயும்-சேயும் உடல் நலத்துடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று பகலில் அந்த பெண் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என தெரிவித்தனர். மேலும் அந்த குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பிறந்த சில நாட்களிலேயே பச்சிளம் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக எழுமலை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தை இறந்தது எப்படி? என்பது தொடர்பாக பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரம் பெற்றுள்ள பயனா ளிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் முதலீட்டு பத்திரம்,
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ் நகல், பயனாளிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பயனாளி மற்றும் அவரின் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் 1 ரூபாய் வருவாய் அஞ்சல் வில்லை ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியா ளர்களை அணுகுமாறு தெரிவிக்க ப்படுகிறது.
மேலும் பிரதிமாதம் 2-வது செவ்வாய்க் கிழமை "பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனா ளிகள் தினமாக" அனுசரித்து இத்திட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள் மேற்கு றிப்பி ட்ட விவரங்க ளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளார்.
- பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
- கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.
பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.
இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.
பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:
"மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:
"ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.
- செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
- மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மகள் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
செல்வ மகள் சேமிப்பு திட்டம் உங்கள் மகளை லட்சாதிபதியாக்கும். இதற்கு, உங்கள் மகள் பிறப்பிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டித் திருத்தம் செய்யப்படுகிறது. ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இப்போது இந்த ஆண்டு வட்டி 8 சதவீதமாக உள்ளது. முன்னதாக இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஆண்டுதோறும் 7.60 சதவீத வட்டியை வழங்கியது. அதாவது, 2024 நிதியாண்டின் முதல் காலாண்டில், வட்டி 40 bps அதிகரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், தபால் அலுவலகத்தில் கணக்கு துவங்கலாம்.
சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, 12 தவணைகளில் ரூ. 12,500 முதலீடு செய்திருந்தால், இந்தக் கணக்கின் முதிர்ச்சியில் 8% வட்டி வருமானம் கிடைக்கும். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தொடர்ச்சியான முதலீட்டிற்குப் பிறகு, மகளுக்கு 21 வயதாகும்போது, முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறலாம். SSY திட்டத்தில் முதிர்ச்சியில் சுமார் 60 லட்சம் பெறலாம்.
- குழந்தைகளுக்கு இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.
- பெண் குழந்தைகளை பாதுகாப்பது மிகவும் கடினமாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதும் பாதுகாப்பதும் மிகவும் கடினமாக உள்ளது. பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
செல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள்!
* தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
* நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.
* பலதரப்பட்ட சூழல்களையும் சந்திக்க வேண்டிய இந்த உலகில், புதிய மனிதர்களிடம் எளிதாகப் பழகுவது, அதே சமயம் தன் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வழிமுறைகளை ஏற்படுத்திக்கொள்வது பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பள்ளி, கல்லூரி, வேலை, திருமணம் என பல புதிய சூழல்களை அடுத்தடுத்து சந்திக்கும் பெண்கள், அவற்றை தயக்கமின்றி எதிர்கொள்வதுடன், தங்கள் திறமைகளை பலரும் பாராட்டும் வகையில் வெளிப்படுத்துவார்கள்.
* பெற்றோர், சகோதர-சகோதரிகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் என அனைத்து உறவுகளிடமும், நட்பிடமும் அன்பாக, எதிர்பார்ப்பு இல்லாத சிநேகத்தை ஏற்படுத்திக் கொள்ள ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும். மேலும் பெற்றோரிடம், குறிப்பாக தன் தாயிடம் எந்த விஷயத்தையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். அதற்கான இணக்கமான, புரிதலுடன் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.
- அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
- பெண் குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.
பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலகட்டத்தில் தவறாது சொல்லிக்கொடுக்க வேண்டிய, சொல்லிக்கொடுக்கக் கூடாத விஷயங்கள் உள்ளன. அதில் சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* பெண் குழந்தைகளுக்கு அச்சம் தரும், அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் வகையிலான செயல்களை சொல்வதோ, செய்வதோ கூடாது.
* ஆண் குழந்தைக்கு, பெண் குழந்தையைவிட அதிக முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண் குழந்தை பிறந்த உடன், மூத்த பெண் குழந்தை மீது கவனம் குறைந்துபோகும் சூழலுக்கு இடம் தரக் கூடாது. ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை வாய் வார்த்தையாகச் சொல்லாமல், அதனை அவர்களே உணரும் வகையில் பெற்றோர்களின் வளர்ப்பு இருக்க வேண்டும். மேலும், மூத்த பெண் குழந்தை அதிக பொறுப்புடன், விட்டுக்கொடுத்து போகவேண்டும், வீட்டில் வேலைகள் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி, அந்தச் சிறுமிக்கு அழுத்தம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* 'எதிர்த்துப் பேசாம நான் சொல்றதை மட்டும் கேளு' என்று பெண் குழந்தைகளிடம் அதிகாரம் செலுத்தாமல், ஒரு செயலால் விளையும் நன்மை, தீமைகளை அவர்களுக்கு அன்புடன் புரியும்படியாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும், எப்போதும் பெண் குழந்தைகளை கண்காணித்தபடியே இருந்தால், அவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டார்கள். இதனால் அவர்களின் தனித்திறமைகள் வெளியே தெரியாமலும், சுய சிந்தனை வளராமலும் போகலாம். எனவே, அவர்களை சுதந்திரமாகச் சிந்திக்க, செயல்படவிடவேண்டும்.
* கிரிக்கெட், ரோபாட்டிக்ஸ், கராத்தே என்று தனக்கு ஆர்வமுள்ள ஒரு விஷயத்தை பெண் குழந்தை கற்றுக்கொள்ள விரும்பும்போது, 'அதெல்லாம் பொண்ணுங்களுக்கு சரிப்பட்டு வராது' என்று கூறி மறுப்பது நியாயம் அன்று. இன்றைய உலகில் ஆண்களுக்கானது என்று எந்தத் துறையும் இல்லை. அவர்கள் விரும்பும் துறை எதுவாக இருந்தாலும், அதில் அவர்கள் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டியது பெற்றோர் பொறுப்பு. 'ஆண், பெண் பாகுபாடற்ற சமுதாயத்தில் உன் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம்' என ஊக்கம் கொடுக்க வேண்டும்.
* ஆண் குழந்தை அழுதால் தவறு எனச் சொல்பவர்கள், பெண் குழந்தைக்கு அதையே அடையாளமாக, அவர்களின் ஆயுதமாக கைகொள்ளும்படி அவர்களை வளர்ப்பது தவறு. 'அழுகையால் எந்தக் காரியமும் முடியாது. திறமையும், தைரியமும், முயற்சியும் மட்டுமே நீ வேண்டுவதை பெற்றுத் தரும்' என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
- ரகசியமாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
- 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் :
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையை சேர்ந்தவர் அகில்தேவ் (வயது25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினீஷா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அகில்தேவும், வினீஷாவும் மதுரைக்கு சென்று விட்டு ரெயிலில் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு அதே ரெயிலில் 13 வயது மகளுடன் திருவனந்தபுரத்திற்கு வந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணும், அகில்தேவும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அகில்தேவ் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, 'உன்னையும், உனது மகளையும் பார்க்க ஆவலாக உள்ளது. எனவே உன் மகளை அழைத்துக்கொண்டு கொச்சிக்கு வா' என கூறியுள்ளார். அதன்படி இளம்பெண்ணும் தனது மகளுடன் கொச்சிக்கு வந்தார்.
அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தயாராக இருந்த அகில்தேவ், தன்னை சந்திக்க ஓட்டலுக்கு வருமாறு கூறினார். இதையடுத்து இளம்பெண்ணும், அவருடைய மகளும் அங்கு சென்றனர். அப்போது 3 பேரும் ஓட்டல் அறையில் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர் திடீரென்று அந்த பெண் தனது மகளை அகில்தேவுடன் தனியாக விட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார். அப்போது சிறுமி என்றும் பாராமல் அகில் தேவ் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை தாயிடம் கூறினார். ஆனால் அவரோ, 'உன்னை அகில் தேவிடம் தனிமையில் இருக்கவே அழைத்து வந்தேன். அதற்காக அவர் ரூ.1,500 -யை என்னிடம் கொடுத்து விட்டார்' எனக்கூறினார். பெற்ற தாயே தன்னை நாசம் செய்ததை அறிந்து அந்த சிறுமி வேதனையடைந்தார்.
தொடர்ந்து அகில்தேவ் அந்த சிறுமியை தன்னுடைய காதலியான வினீஷாவின் வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் இருந்த வினீஷாவின் பெற்றோர் அகில்தேவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர்.
இதனால் ரகசியமாக காட்டாக்கடை போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு வந்த போலீசார் அகில்தேவிடம் விசாரணை நடத்தியபோது சிறுமிக்கு நடந்த கொடூரம் வெட்ட வெளிச்சமானது.
இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த அகில்தேவ், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் மற்றும் அகில்தேவின் காதலியான வினீஷா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.1,500-க்காக பெற்ற மகளையே வாலிபருக்கு தாய் விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது.
- குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.
உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி. கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.
பெரும்பாலும் இத்தகையவன்முறைகள், 90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது.
இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?
குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.
தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர்.
உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது. வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது.
நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை. ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன.
திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.
பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன. மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன.
மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும்.
- உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே உள்ள குப்பைத் தொட்டியை நாய்கள் சுற்றி வந்தபடி இருந்தன. இன்று காலை இவ்வழியாக சென்ற பொதுமக்கள் நாய்களை விரட்டி குப்பைத் தொட்டியை பார்த்தபோது 2 பெண் சிசுக்கள் கிடந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் குப்பைத் தொட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர்.
இது குறித்து நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குப்பைத் தொட்டி அருகே கிடந்ததால் சிசுக்களை நாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் ஒரு சிசுவின் தலையை காணவில்லை. போலீசார் சிசுக்களை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா? அதில் சிசுவை வீசிச் சென்றவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். 2 பெண் சிசுக்களை வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த தாயை தேடி வருகின்றனர்.
முறையற்ற உறவில் பிறந்த குழந்தைகளா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
- குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று வட்டார அளவிலான பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் கதிரவன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, இளம்வயதில் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.