என் மலர்
நீங்கள் தேடியது "Government"
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது.
- இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா என எதிர்பார்த்து காத்திருக்கும் கிராம மக்கள்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சி சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., துாரத்தில், புத்திர கவுண்டன்பாளையம் கல்வராயன்மலை கருமந்துறை சாலையில் அமைந்துள்ளது.
அக்ரஹாரம், அபிநவம், கணேசாபுரம், வடக்குக்காடு, காரைக்களம், கல்லேரிப்பட்டி, படையாச்சூர், கல்யாணகிரி, எம்.சி.ராஜா நகர், புத்திரகவுண்டன்பாளையம், வைத்தியகவுண்டன்புதுார் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு ஏத்தாப்பூர் முக்கிய மையமாக விளங்கிறது.
இப்பகுதிமக்களின் நலன்கருதி, பழமையான ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு எதிரே வசிஷ்டநதி கரை யோரத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1929 நவ ம்பர் மாதம் 25-ந் தேதி, சேலம் மாவட்ட கமிட்டி வாயிலாக அரசு மருந்தகம் என்ற பெயரில் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மாவட்ட கமிட்டித் தலைவரான அப்போதைய எம்.எல்.சி ராவ்பகதுார் எல்லப் பச் செட்டியார் இந்த மருந்தகத்தை திறந்து வைத்துள்ளார். 1958 அக்டோபர் 7-ந் தேதி, அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர், பிரசவ விடுதி கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த அரசு மருந்தகம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அறுவை சிகிச்சை அரங்கு, உள் நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், பிரேத பரிசோதனை க்கூடம் உள்ளிட்ட வசதிகளும், 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வந்தது. இதற்குபிறகு பணிபுரிந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் கவனமின்மையால், இந்த அரசு மருத்துவமனை, 25 ஆண்டுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் குறைக்கப்பட்டது.
தற்போது, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் மருத்துவர்கள், செவிலியர், மருத்துவப்பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சை பெறுவதற்கு வழியும் வசதிகளும் இல்லை.
இதனால், ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு கூட, ஆத்துார், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இதுமட்டுமின்றி பழைய கட்டடங்கள் வழுவிழந்து காணப்படுகிறது.
எனவே, 93 ஆண்டுக்கு முன் தொடங்கப்பட் ஏத்தாப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நுாற்றாண்டு விழா காண்பதற்குள், விசாலமான புதிய கட்டடம் அமைத்து, நவீன அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் படுக்கைப்பிரிவு, ஸ்கேனிங், எக்ஸ்ரே,ஆய்வகம் மற்றும் மருத்துவர், பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
கூடுதல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை நியமித்து, 24 மணிநேரமும் செயல்படும் வகையில் மேம்படுத்தவும், சேலம் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
- சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட வேண்டும்.
திருப்பூர் :
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து அரையாண்டு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். பொது வினாத்தாள் பாணியில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் பாடங்களை முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியிருந்தால், உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியை தழுவியோருக்கு பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து, சிறு சிறு தேர்வுகள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையில் பாடத்திட்ட அழுத்தம் காரணமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், படிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். புளூ பிரின்ட் வெளியிடாததால் முக்கிய பகுதிகளை மட்டும் படிக்க வைக்க முடிவதில்லை. குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
- பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது.
- சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை.
திருப்பூர் :
சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, பழனியில் இருந்து பம்பை, குமுளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தற்போது வரை ஈரோடு, கோவை, திருப்பூரில் இருந்து சபரிமலைக்கு எஸ்.இ.டி.சி., பஸ்கள் இயக்குவதில்லை. மாறாக கேரள மாநில விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன.
இது குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தங்கள் இருப்பிடத்தில் இருந்து சபரிமலைக்கு குழுவாக சென்று திரும்ப பக்தர்கள் விரும்பினால், பஸ் இயக்க விரைவு போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. வழக்கமாக கி.மீ., க்கு பெறப்படும் கட்டணங்களே பெறப்படும். பஸ்களை முன்பதிவு செய்ய, 94450 14435 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.
- வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது.
- இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடை பெற்றது. இதில் பள்ளித் தலைமையாசிரியை ரமா தலைமை வகித்தார். ஆசிரியை சுமதி வரவேற்றார். முத்தம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ரம்யா செந்தில்குமார் கலைத்திருவிழா மற்றும் மாணவ–-மாணவியரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.
இதில், 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ–-மாண வியருக்கு இடையே பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ரேவதி சசிகுமார், உறுப்பினர்கள் பிரபாகரன், மாதேஸ்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். நிறைவாக, ஆசிரியை மலர்கொடி நன்றி கூறினார்.
இதேபோல் பொன்னா ரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திரு விழாவிற்கு, பள்ளித் தலைமையாசிரியை புனித ஞானதிலகம் தலைமை வகித்தார். பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ–மாணவியருக்கு, ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பிரபாகரன், முன்னாள் தலைவர் வசந்தா காசிவிஸ்வநாதன், துணைத் தலைவர் கலா வதி பூவராகவன், ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனி சாமி, ஆசிரியர் சங்க நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
- சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது.
- 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை விழா தொடங்கியது. சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் தங்கவேல் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல், மேலாண்மை குழு தலைவர் ரமேஷ் குமார், மேலாண்மை குழு கல்வியாளர் பால கிருஷ்ணன் மற்றும் உறுப்பி னர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் தனித்தி றனை ஊக்குவித்தனர்.
மாணவர்கள் கிராமிய பாடல்கள், ஓவியம், நாடகம், நாட்டியம், பறையடித்தல், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். 2 நாட்கள் நடைபெறும் இந்த தனித்திறன் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் திறமைகள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட கல்வித்துறை மூலம் முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது.
- மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
- கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்’ என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை
மதுரை கே.கே. நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதில் 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம், செராமிக் பற்கள் கட்டுதல், காக்ளியர் இம்பிளான்ட் ஆகிய சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளதா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.
அதற்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் கொடுத்து உள்ள உள்ள பதிலில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை. இருந்த போதிலும் அங்கு விரைவில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது.
இது தவிர மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செராமிக் பற்கள் கட்டுதல், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை பிரிவில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் குழந்தை இல்லா தம்பதி யர் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதனால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதி யாகவும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சில குடும்பத்தை விவகாரத்து வரை கொண்டு சென்று விடுகிறது.
எனவே 'எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்' என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நன்கு புரிந்து கொண்ட தனியார் மையங்கள், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றன. எனவே அங்கு பணக்காரர்களுக்கு மட்டுமே குழந்தையை பாக்கியம் கிட்டும் என்ற நிலை உள்ளது.
தமிழகத்தில் 155 தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மதுரையில் மட்டும் 11 மையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இல்லை.
எனவே மதுரை அரசினர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் குழந்தை இல்லாத ஏழை- எளிய தம்பதிகளும் இங்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற இயலும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது. கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
- இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 30-தேதி வீட்டில்தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவரது மூத்த மகள் வசுமதி (23). என்ஜினீயர்.
இவருக்கும், நாமக்கல் நள்ளிபாளையம் பகுதிைய சேர்ந்த பொறியாளர் வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி திருமணம் நடை பெற்றது.இந்த நிலையில் வசுமதியிடம் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு ெகாடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த வசுமதி திருச்செங்கோட்டில் உள்ள
பெற்றோர் வீட்டில் கடந்த
30-தேதி வீட்டில்தூ க்குப்போட்டு தற்கொ லைக்கு முயன்றார்.
சேலம் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 9-ந்தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாப மாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி, கணவர் வினோத் ,மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா உள்பட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை , தற்ெகாலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர்.
உடலை வாங்க மறுப்பு
இதனிடையே அவர்கள் 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே வசுமதியின் உடலை வாங்குவோம் என கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு உடலை வாங்க மறுத்து கடந்த 9-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து திருச்செங்கோடு டவுன் போலீசார் நேற்று மல்ல சமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வசுமதியின் கணவர் வினோத்தை அதிரடியாக கைது ெசய்தனர். அவரிடம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இருப்பி
னும் இன்று 4-வது நாளாக
உடலை வாங்க மறுத்து வசுமதியில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள
னர். மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோ தரி காவியா ஆகியோரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என கூறி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.இதனால் 4-வது நாளாக வசுமதியின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது .
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
- மதுரையில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகம் முழுவதும் வசித்துவரும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
எனவே பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்தும் சிறப்பு பஸ்கள் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
சென்னையில் மதுரைக்கு 280 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இது தவிர திருச்சிக்கு 135, திருப்பூ ருக்கு 80, கோவைக்கு 120, நெல்லைக்கு 35, நாகர்கோவி லுக்கு 35, திருச்செந்தூருக்கு 30, மற்றவை 175 உள்பட 610 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பொது உள்ளது.
இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதனை பொது மக்கள் பயன்படுத்தி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.
பயணிகளுக்கு வழிகாட்ட வும், சிறப்பு பஸ்களை கண்காணிக்கவும், முக்கிய பஸ் நிலையங்களில் போக்குவரத்து கழக அலு வலர்கள், பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பயண சீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார். மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
- மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள வங்கி அருகே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த 13-ந் தேதி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசிலும் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மூதாட்டி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் நேற்று காலை சேலம் கோட்டை மைதானம் அருகே உள்ள பகுதியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து போன மூதாட்டி மற்றும் முதியவர் இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்திவேலுார்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள படமுடிபாளை யம் குழந்தைகள் மையத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவு , மற்றும் இணை உணவின் தரம் ஆகியவை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து பரமத்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சத்துணவு மையத்தில் நேரில் பார்வையிட்டு சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாணவிகளுக்கு தினசரி வழங்கப்பட வேண்டிய உணவுப் பட்டியல் படி வழங்கப்படுகிறதா, சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மாணவிகளுக்கு மதிய உணவினை அமைச்சர் கீதா ஜீவன் பரிமாறினார். பின்னர் அமைச்சருடன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் ஸ்ரேயாசிங், சமூகநல அலுவலர் கீதா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ், குழந்தைகள் நலக்குழு தலைவர் சதீஷ்பாபு, வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்களும், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர்கள் தன்ராசு, சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் அன்பழ கன், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பேரூர் கழக செயலாளர்கள் ரமேஷ் பாபு, முருகன், கருணாநிதி, பெருமாள் என்கிற முருகவேல், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
- சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1900 பஸ்கள் இயக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகையொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மதுரை, கோவை, கடலூர், வேலூர், திருச்சி உள்பட பல இடங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் கடந்த 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இயக்கப்பட்டது.
சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட தில் 8 நாட்களில் 1.11 கோடி
பேர் பயணம் செய்துள்ள தாகவும், 2 கோடி கூடுதல் வருமானம் கிடைத்து உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
- இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
சேலம்:
சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.
இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.
இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
கவுன்சிலர் மீது வழக்கு
இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.