என் மலர்
நீங்கள் தேடியது "Government employees"
- வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை ஏற்று 75,000 அரசு ஊழியர்கள் வெளியேற சம்மதித்துள்ளனர்.
- அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அரசு நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.
அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டும் வேலையை DODGE செய்து வருகிறது. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் அதிரடியாக முடக்கினார் டிரம்ப்.
இந்த நிலையில்தான் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.

அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்களில் உள்ள Probation ஊழியர்களில் பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.
அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை டிரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரசு ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது.
- தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 54 பயனாளிகளுக்கு, ரூ. 54 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக ஸ்கூட்டர்களை அமைச்சர் இ.பெரியசாமி இன்று வழங்கினார். இதில் கலெக்டர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நகர் ஊரமைப்பு துறை சார்பில் ரூ. 4.75 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை அமைச்சர் இ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை உள்பட ஆறு துறைகள் சார்பில் 257 நபர்களுக்கு ரூ. 1 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரத்து 885 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதன்பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு சேம நிதியிலிருந்து முதலமைச்சரால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 400 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் 100 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 2023ல் ஏற்பட்ட பயிர் இழப்பிற்கு இப்போது இழப்பீடு வழங்கப்படுகிறது. எந்த காலத்திலும் இப்படி வழங்கப்படவில்லை. இந்த அரசுதான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குகிறது. விவசாயிகள் நம்பிக்கையோடு இருக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் கேட்டதெல்லாம் வழங்கக்கூடிய முதலமைச்சராக உள்ளார். மிகச் சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 4 ஆண்டுகளாக பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்றப்படாததால் வருகிற தேர்தலில் இப்பிரச்சினை எதிரொலிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எந்த எதிரொலியும் வராது. காரணம் அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நம் முதல்வர் மீதும். ஆட்சி மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ள கூடிய ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு என்றுமே தி.மு.க. பாதகமான முடிவை எடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை.
- ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம்.
மதுரை:
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக 2018-ம் ஆண்டில் சேர்ந்தார். இவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தவர். இதனால் பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் இந்த நிபந்தனையை நிறைவேற்றாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ். அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெறுகின்றன. மின்வாரியத்திலும் இந்த நடைமுறை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊழியருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற மின்வாரியத்தின் நிலைப்பாட்டில் தவறு கிடையாது.
இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி மீண்டும் நடந்த தேர்விலும் ஜெய்குமார் வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின்வாரிய பொறியாளர் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் ஜெய்குமார் வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் மனுதாரர் தமிழகத்தை சேர்ந்த பச்சை தமிழன் என்று கூறி இவருக்கு பணி வழங்க வேண்டும் என 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு, அரசு ஊழியர்களின் பணி வரன்முறை விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை. தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில் மனுதாரர் தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசு பணியில் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்துவிட்டு தமிழக அரசு வேலைக்கு வருவது ஏன்? தமிழக அரசு துறைகளில் தமிழ்மொழி தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.
மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருக்கவும் வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார்.
2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இந்த முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன் காரணமாக 2020-ம் ஆண்டின் போது 58 வயது பூர்த்தியானவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 2 வருடத்துக்கு முன்பு 58 வயது பூர்த்தியாகி பணி நீட்டிப்பு வழங்கப்பட்டவர்களுக்கு தற்போது 60 வயது நிறைவு பெறுகிறது. எனவே அவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதன்காரணமாக ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் இன்று ஒரே நாளில் பணி ஓய்வு பெறுகிறார்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக 25 ஆயிரம் பேர் பணியை நிறைவு செய்கிறார்கள்.
புதிய நடைமுறையின்படி கல்வியாண்டின் நடுவில் பணிக்காலத்தை நிறைவு செய்யும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இறுதி வரை பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளனர். பணி ஓய்வு பெற்ற 25 ஆயிரம் பேருக்கும் ஓய்வூதிய பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் ஏற்கனவே 1.50 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது மேலும் 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாகிறது. இந்த காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
- தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.
- தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தாராபுரம் :
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தாராபுரத்தில் அரசு ஊழியா்கள் சங்கங்களின் கூட்டியக்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சிபிஎஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.நவீன் தலைமை வகித்தாா்.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன் பேசியதாவது:- இந்தியாவில் ராஜஸ்தான், சட்டீஸ்கா் பிகாா், ஜாா்கண்ட் மாநிலங்களிலும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தமிழகத்தில் மட்டும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மௌனம் காக்கிறாா்.திமுக கட்சிஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்ததால்தான் கடந்த தோ்தலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளித்தனா்.இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற எதிா்பாா்ப்பில் இருந்த ஊழியா்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஆகவே, தோ்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றாா்.இந்த போராட்டத்தில் பல்வேறு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
- அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 27-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காரைக்குடி அப்ப ல்லோ மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாமினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட முகாமில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர் சார்ந்த குடும்பத்தினர் அனைவரும் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தின உரையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
- கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 01.07.2022 முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி தலைமைச் செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி 01.07.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோப்புகள் பராமரிப்பில் எளிய நடைமுறை ஆகியன இதன் நோக்கங்கள்.
- வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழக அரசு துறைகளில் மின் ஆளுமை செயல்பாடு மூலம் அலுவலகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அலுவலகப் பணிகளில் காகிதப் பயன்பாடு குறைத்தல், நேர விரயம் தவிர்த்தல், அவசர மற்றும் முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பரிமாறுதல், கோப்புகள் பராமரிப்பில் எளிய நடைமுறை ஆகியன இதன் நோக்கங்கள்.
இதற்கான பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்டத்தில் உரிய துறை ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது.அவ்வகையில் அரசு துறைகளில் வருவாய் துறை, கனிம வள துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பேரூராட்சிகள் துறை ஊழியர்களுக்கு இதற்கான பயிற்சி முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மற்றும்9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இ - ஆபீஸ் நடைமுறை குறித்த பயிற்சி, மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது.இ-சிஸ்டம்ஸ் அலுவலர்கள் முத்துக்குமார், சம்பத்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அடுத்த கட்டமாக ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சி துறை ஊழியர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் சாந்தகுமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் 6 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதால், ஆளும் கட்சிக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என்பதற்காக 1¼ லட்சம் ஊழியர்கள் தபால் மூலம் ஓட்டுபோடுவதற்கான படிவங்கள் வழங்கப்படவில்லை. எனவே, விடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் மூலம் ஓட்டுபோட அனுமதிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் கமிஷன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “தேர்தல் பணியில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 3 அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் படிவம் வழங்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பித்தனர். 3 லட்சத்து 97 ஆயிரத்து 391 பேரின் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரத்து 915 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், “அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷன் 2 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி - அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா தலைமையில் நிர்வாகிகள் ஞான திருப்பதி, அன்பழகன், உடையாளி, பாலமுருகன், கிருஷ்ணசாமி உள்பட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் அனுமதி இல்லாமல் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வி.ஏ.ஓ. குமரேசன் தேனி போலீசில் புகார் அளித்தார். அதன்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #PollachiAbuseCase
புதுச்சேரி:
புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 10-03-2019 அன்று இந்திய லோக்சபா தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளி வந்த தினத்திலிருந்து தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
தேர்தல் நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்தவும், எதிர்வரும் தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்திட அனைத்து முயற்சிகளும் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த தேர்தலின் போது மாநில மத்திய அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தேர்தல் வேலைகளில் ஈடுபடுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திற்கு வந்துள்ளது.
எனவே அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும் பொழுது நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் நடக்கும் காலத்தில் ஊழியர்கள் நடுநிலையோடு செயல்படுவது மக்களுக்கு தெரிய வேண்டும். அவ்வாறு தெரிந்தால் தான் தேர்தல் நியாயமான, சுதந்திரமான ஒரு நல்ல சூழலில் நடக்கிறது என்று பொதுமக்களுக்கு உணரப்படும்.
எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்படக்கூடாது. மீறுவோர் மீது மத்திய அரசு பணிநடத்தை விதிகள் 1961-ல் உள்ள விதிகள் கீழ் மற்றும் அனைத்திந்திய பணியில் இருப்போருக்கான விதிகளின் கீழும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊழியர்கள், வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் மற்றும் ஓட்டு பதிவின் போது தங்கள் செல்வாக்கை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்கள் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தான் தண்டிக்கப்படுவார்கள்.
இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 234-ன் கீழ் அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலக கடமைகளை மீறி செயல்படக்கூடாது.
அவ்வாறு மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள். தேர்தலின் போது தேர்தல் முகவர்களாக, வாக்குச்சாவடி முகவர்களாக மற்றும் எண்ணுகை முகவர்களாக செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மேற்கூறிய நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுத்து தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 95 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் தீர்வாகாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதி நிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் தேர்தலும் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் தேவை இல்லாதது. உயர்நீதிமன்ற வழிகாட்டலை மதித்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறோம். கோரிக்கைகளை முன்வைக்கட்டும், போராடட்டும். ஆனால் வேலை நிறுத்தம் தேவையில்லை. மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுக்கவே அ.தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி அ.தி.மு.க. என எந்த இடத்திலும் அவர்களும் சொல்லவில்லை. அ.தி.மு.க.வும் கூறியதில்லை. நட்பின் அடிப்படையில் பல கோரிக்கைகளை பா.ஜ.க. அரசிடம் முன் வைத்தோம்.
குறிப்பாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டோம். தரவில்லை. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். அதுவும் வந்தபாடில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி என முதல்வர் கூறியுள்ளார். பா.ஜ.க. ஏதாவது நல்லது செய்துள்ளதா?. இதுவரை செய்யவில்லை.
ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்குமா?. பா.ஜ.க. தமிழகத்தில் கட்சியை வளர்க்க திட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் திராவிடர்களின் கலாச்சாரத்தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்காகவே மாணவர்கள் என்று வந்து விட்டால் கல்வி சீரழிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK