என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government School Students"

    • புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
    • அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே உள்ள மீனாட்சி பேட்டை மற்றும் சொக்கநாதன் பேட்டை பள்ளி மாணவர்கள் இணைந்து, நெய்வேலி எல்.எல்.சி.க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

    புதுவை சுற்றுலா வளர்ச்சி கழகம், நெய்வேலி சுரங்க சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எல்.எல்.எல்யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி பள்ளி துணை ஆய்வாளர் குமார் வழிகாட்டுதலுடன், பள்ளி தலைமையாசிரியர் அபர்னா தேவி, 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 150-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.

    அங்கு சுரங்கத்தில் மின்சாரம் தயாரிப்பது, சோலார் மூலம் மின்சாரம் தயாரிப்பது, விளையாட்டு மண்டலங்கள், சுரங்கங்க ளின் பாதுகாப்பான பகுதிகள் என அனைத்தையும் பார்வையிட்டனர்.

    • பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது.
    • சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஏழை மாணவர்கள் தனியார் மையங்களில் பயில, போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை.இவர்களுக்கு உதவும் வகையில், கல்வித்துறையும், பயிற்சிகள் அளிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் போட்டித்தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு, வாரத்தில் சனிக்கிழமைகளில் பயிற்சி வழங்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றியத்திற்கு ஒரு மையம் வீதம் 412 பயற்சி மையங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், பிளஸ் 1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், (அதிகபட்சம் 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்துக்கு), பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 10-ம்வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்துக்கு அதிகபட்சம், 20 மாணவர்கள்) தேர்வு செய்யப்படவுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது :- மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களாக கொண்டு, பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், பிளஸ் 1 வகுப்பில், 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

    2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற பாட ஆசிரியர்கள் மைய ஒருங்கிணைப்பாளராக இருப்பர். இந்த வாய்ப்பை பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த பயிற்சியின் வாயிலாக போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றனர்.  

    • மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்
    • மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

    பெருந்துறை,

    இந்திய அரசியலமைப்பு நாள் மற்றும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு பெருந்துறை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.

    அங்கு பெருந்துறை சார்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, அரசு வக்கீல் திருமலை மற்றும் பெருந்துறை நீதிமன்ற சிராஸ்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் கோபிநாத், வெங்கடாஜலபதி, சுமதி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தீபக்ராஜ் மற்றும் தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.
    • தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் பள்ளிக்கு திடீரென வந்திருந்தார்.

    அவரை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆசிரி யர்கள் வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்குள் சென்ற சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.

    தான் படித்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நன்றாக படித்து தன்னை போல் ஒரு உயரிய பதவிக்கு வர வேண்டும் என மாணவர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    பின்னர் அவர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் பள்ளியின் நலன் கருதி பள்ளிக்கு தேவையான வசதிகள். அதனை இந்த பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பள்ளிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செய்ய லாம் என்பது குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    பின்னர் பள்ளி வளாக த்திற்குள் சென்று பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்ட காய்கறி செடிகள் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அதே போல் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மின் கம்பங்களால் மாணவர்க ளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகே ந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பா.ஜனதா வலியுறுத்தல்
    • கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்து அதில் தோல்வியடைந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மறு தேர்வு எழுதி வெற்றியடைய கல்வித் துறை மீண்டும் தேர்வுகள் நடத்துகிறது.

    ஆனால் ஆசிரியர்கள் வழிகாட்டு தலின்றி மாணவர்களால் தேர்வு எழுதி வெற்றி அடைவது என்பது மிகவும் கடினம். எனவே அரசு பள்ளியில் ேதால்வி அடைந்த மாணவர்கள் தேர்வு எழுத தயாராக தனியார் கல்வி மையங்களில் பல ஆயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய கட்டாய த்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இந்த கட்டணத்தை செலுத்த முடியாத பல மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் கூலி வேலைக்கு செல்லும் அவலம் ஏற்படுகிறது. எனவே புதுவை அரசு தோல்வி அடைந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு அதே பள்ளியில் ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
    • ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 1978-1982 ம் ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் ரமேஷ், முன்னிலை வகுத்தார். முன்னால் தலைமையாசியர். அரிகரன், தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்செல்வி வரவேற்றார். இப்பள்ளியில் பணிபுரிந்து இறந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான குறும்படத்துடன் கூடிய நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    அதில் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைத்து அனைவரும் கண்கலங்கினர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் தமிழகம் மற்றும் புதுவையின் பல பகுதிகளில் இருந்து, குடும்பத்தோடு கலந்து கொண்டு தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பண்ருட்டியிலிருந்த வந்த முன்னாள் மாணவர் வெங்கடேசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் 100 பலாபழங்களை பரிசாக வழங்கினார். தொடந்து ஆசிரியர்களுக்கு மரியாதை செய்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    அனைவருக்கும் அருசுவை உணவு அளிக்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் சார்பாக இப்பள்ளியில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியினை பி.எஸ்.என்.எல் உதவி பொறியாளர் அரிதாஸ் தொகுத்து வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள், காமராஜ், தேவநாதன். சவுந்தராஜன், ரவி, இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.

    • புதுவை சலூன் கடைக்காரருக்கு குவியும் பாராட்டு
    • புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    கால மாற்றத்திற்கேற்ப தொழில்களிலும் நவீன மாற்றங்கள் உருவாகி வருகிறது.

    இதில் சலூன் கடைகளும் தப்பவில்லை. கிராமங்களில் மரத்தடியிலும், புறநகர் பகுதிகளில் சிறிய கடைகளிலும் இருந்த முடி திருத்தகங்கள் இன்று நவீனமயமாகியுள்ளது. நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றன.

    இந்த கடைகளில் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை முடி திருத்தம், முகம் அழகுபடுத்துதல், தாடியை அழகுபடுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது.

    தற்போதைய இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தோடு உலா வருகின்றனர். இந்த நிலையில் புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் முடி திருத்தம் செய்ய ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கிறார். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் ரூ.10 கட்டணத்தில் முடி திருத்தம் செய்கிறார்.

    தினமும் காலையில் 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் இந்த சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார். அதன்பிறகு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான பணியை தொடங்குகிறார். புதுவையில் ஒரு சில தினங்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் இந்த கடையை பற்றி தெரிந்த பெற்றோர், மாணவர்களோடு காலையிலேயே இங்கு வந்து விடுகின்றனர்.

    ரூ.10-க்கு டீ குடிக்கக்கூட முடியாத நிலையில் ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்காக முடிதிருத்தம் செய்யும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது, ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்வது தனக்கு திருப்தியளிக்கிறது. தானும் அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த சலுகையை அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

    • கவர்னரிடம் அ.தி.மு.க. மனு
    • அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் கவர்னர் தமிழிசையை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெறுவதால் விரல் விட்டு எண்ணக்கூடிய மாணவர்கள் மட்டுமே தகுதி அடிப்படையில் மருத்துவ கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆண்டும் நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றிருந்தும் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வியில் சேரும் சூழ்நிலை உள்ளது.

    சென்டாக் மருத்துவக் கவுன்சிலில் மொத்தமுள்ள 389 அரசின் மருத்துவ இடங்களில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினால், அரசு பள்ளியில் படித்த சுமார் 28 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

    எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் சென்டாக்கில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி உள்ஒதுக்கீட்டை வழங்க உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சந்திப்பின் போது மாநில அவை தலைவர் அன்பானந்தம்,மாநில இணைச் செயலாளரும் . முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார் , மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    • இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து பனையம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    இந்த ஊர்வலம் பவானிசாகர் சாலை வழியாக சென்றது. இதில் மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    தமிழ்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கு மற்றும் தாய்மார்களின் நல் வாழ்வி ற்கும் குழந்தைகளின் ஒளி மயமான எதிர்கா லத்திற்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது முதல் குழந்தையை தாம தப்படுத்தி மேற்கொள்ள வேண்டிய குடும்ப நல முறைகள் எடுத்துரைக்கப் பட்டன.

    மக்கள் தொகை பெருக்க த்தினால் ஏற்படும் தாக்க த்தை குறைத்தல், சுற்று ச்சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்கு வித்தல், வறுமை ஒழிப்பு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து கூறப்பட்டது.

    குடும்பத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்ப்பணி த்துக் கொள்வேன் என உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவ- மாணவிகள் ஏற்றனர்.

    மேலும் என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றி யடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும் என சுதந்திர அமுத பெரு விழாவினை கொண்டாடி மகிழ்வோம் மற்றும் குடும்ப நல உறுதிமொழி ஏற்று வளம் பெறுவோம் என பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி ஊர்வ லமாக சென்று பள்ளியை வந்து அடைந்தனர்.

    • வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
    • மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டுக்காண ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. ஜாதி, மதம், மொழி, இன பாகுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகையாக ஓணம் பண்டிகை உள்ளது. வருகிற 29-ந்தேதி திருவோணம் பண்டிகை வருகிறது. அன்றைய தினம் மன்னர் மகாபலியை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, விருந்து படைத்து, புத்தாடை உடுத்தி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    இதற்காக வெளியூர்களில் உள்ள கேரள மாநிலத்தினர் தங்களது ஊருக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.

    மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயன்றுபெறும் மாணவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 29.5 லட்சம் மாணவர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கான அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறை, அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கும் எனவும், வருகிற 24-ந்தேதிக்குள் மாணவர்களுக்கு அரிசி வழங்கும் பணியை முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

    ஓணம் பண்டிகைக்காக கேரள மாநிலத்தில் பள்ளி கள் வருகிற 25-ந்தேதி மூடப்பட்டு, செப்டம்பர் 4-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே. வீ. கலைச்செல்வன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், பள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், அரசு ஒப்பந்ததாரர் சண் சரவணன், மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.
    • இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வாழப்பாடியில் நடைபெற்ற வட்டார அளவிலான 14 வயதோருக்கான வட்டெறிதல் போட்டியில் துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் மு. சந்தோஷ்குமார் முதலிடம் பெற்றார்.

    எட்டாம் வகுப்பு மாணவர் இ. தோர்னேஷ் மூன்றாமிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு செ. சூரியா மூன்றாமிடமும், 14-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மு.தீபிகா முதலிடமும், வட்டெறிதல் போட்டியில் இரண்டாமிடமும் பிடித்தார். இந்த மாணவர்கள் அனைவரும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றனர்.

    வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்பயிற்சி ஆசிரியர் பெ.மணிகண்டனையும், பள்ளி தலைமையாசிரியர் கு. வெங்கடாசலம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    ×