என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GPS"

    • காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார்.
    • திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    தன் மீது கோபமாக இருக்கும் மனைவியை சமாதனப்படுத்த கணவன், தனது முதலாளியின் விலையுயர்ந்த காரை திருடிச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பலாசியா பகுதியில் வசிக்கும் ராகேஷ் அகர்வால், ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கிறார். இந்த சொகுசு காரின் விலை சுமார் ரூ.1 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவரின் வீட்டில் காண்ட்வா மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் ராஜ்புத் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) காலை காரை சுத்தம் செய்வதற்காக காரின் சாவியை ஓட்டுநர் கேட்டார். உரிமையாளரும் ஓட்டுநரை நம்பி சாவியைக் கொடுத்தார். ஆனால் அதன்பின் அவரை காணவில்லை. போன் செய்தும் எடுக்காததால் தனது கார் திருடப்பட்டதை உணர்ந்த ஓனர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீஸ், காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் மூலம் காரை திருடப்பட்ட 6 மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து மீட்டு ஓனரிடம் ஒப்படைத்து, ஓட்டுனரை கைது செய்தது.

    விசாரணையின் போது, தன் மீது கோபமாக இருக்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தக் காரைத் திருடியதாக ஓட்டுநர் கூறியது போலீசை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    • சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர்.
    • உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    சாலை வழியாக பயணம் செய்பவர்களில் பெரும்பாலானோர் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில உத்தர பிரதேசத்தில் இரண்டு சகோதரர்கள் உட்பட மூவருக்கு, அது ஒரு சோகமான முடிவை அளித்துள்ளது.

    நேற்று காலை பரேலியில் இருந்து படாவுன் மாவட்டத்தில் உள்ள டேடாகஞ்ச் நோக்கி சென்றபோது, ஜிபிஎஸ் மூலம் கார், பழுதடைந்த பாலத்தின் மீது ஏறி, ஃபரித்பூரில் 50 அடிக்கு கீழே ஓடும் ஆற்றில் கவிழ்ந்தது.

    சேதமடைந்த காரை பார்த்த கிராம மக்கள், ராமகங்கா ஆற்றில் இருந்து அதனை வெளியே எடுத்தனர். அப்போது காரில் இருந்த மூவரும் (இரண்டு சகோதரர்கள் உள்பட) உயிரிழந்ததை கண்டனர். விபத்து குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளத்தால் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்தது. ஆனால் இந்த மாற்றம் ஜிபிஎஸ்-ல் புதுப்பிக்கப்படவில்லை. இதன் விளைவாக, தவறாக வழி நடத்தலால் இந்த விபத்து நடந்துள்ளதாக அப்பகுதி வட்ட அதிகாரி அசுதோஷ் சிவம் தெரிவித்தார்.

    உயிரிழந்தவர்கள் கூகுள் மேப்பை நம்பியிருந்ததாக உடலை வாங்க குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் பாலம் முழுமையடையாமல் கிடப்பதாலும், வரும் வாகனங்களை எச்சரிக்கும் வகையில் அப்பகுதியில் தடுப்புகள் ஏதும் இல்லாததாலும் துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

    நிர்வாகத்தின் அலட்சியமே விபத்துக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், கட்டுமானத்தில் இருக்கும் பாலத்தில் பாதுகாப்பு தடைகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாதது ஆபத்தை அதிகரிக்கிறது, இது ஆபத்தான விபத்துக்கு வழிவகுத்தது என்று அசுதோஷ் சிவம் கூறினார்.

    • நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன்
    • தனது நாட்டு தூதரகத்தையும் தொடர்புகொண்டதாக அவர் அதில் தெரிவித்தார்.

     இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியை எடுத்துச் சென்றதற்காக ஸ்காட்லாந்தை சேர்ந்த மலையேறுபவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ரிஷிகேஷ் நோக்கிச் சென்ற ஹீதர், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் இருந்து கார்மின் இன்ரீச் ஜிபிஎஸ் ஒன்று மீட்கப்பட்டது. கைது செய்யப்படுவதற்கு முந்தைய தனது இன்ஸ்டாகிராமில் பதிவில், ஹீதர் நடந்ததை விவரித்தார். 

     

    என்ன நடந்தது?

    "நான் ஸ்கேனர் வழியாக சோதனைக்கு என் கார்மின் இன்ரீச்சை ட்ரேயில் வைத்தேன், அந்த நேரத்தில் நான் உடனடியாக அதிகாரிகளால் ஓரமாக காத்திருக்க வைக்கப்பட்டேன்.

    என்ன நடக்கிறது என்று யோசித்துக்கொண்டு காத்திருந்தேன். கார்மின்[ஜிபிஎஸ்] இங்கே சட்டவிரோதமானது என்றும் அவர்கள் என்னை காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்றும் எனக்கு இறுதியில் சொல்லப்பட்டது என்று ஹீதர் விவரிக்கிறார்.மேலும் தனது நாட்டு தூதரகத்தையும் தொடர்புகொண்டதாக அவர் அதில் தெரிவித்தார்.

    கார்மின் இன் ரீச்

    இந்த கார்மின் இன்ரீச் கருவியை சுவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1885 ஆம் ஆண்டின் இந்திய தந்தி சட்டம் மற்றும் 1933 ஆம் ஆண்டின் வயர்லெஸ் டெலிகிராபி சட்டம் ஆகியவற்றின் கீழ் அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி, கார்மின் இன்ரீச் போன்ற செயற்கைக்கோள் தகவல் தொடர்பு [ஜிபிஎஸ்] சாதனங்களைப் பயன்படுத்துவதை இந்தியா தடை செய்துள்ளது.

    இந்த பழைய விதிமுறைகள் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது வலுப்படுத்தப்பட்டன.

    பாதுகாப்பு அபாயங்கள் மற்றும், உளவு பார்த்தலை தடுக்கவும், செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த தடையானது விதிக்கப்படுகிறது.

     

    இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், கியூபா, ஜார்ஜியா, ஈரான், வட கொரியா, மியான்மர், சூடான், சிரியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 14 நாடுகளால் இந்த கருவி தடை செய்யப்பட்டுள்ளது.

    • லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் தெரிந்துள்ளது.
    • முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் தனியார் கல்குவாரி உள்ளது. குவாரிக்குள் இயங்குவதற்காக புதுப்பட்டியைச் சேர்ந்த மாலதி(வயது 32) என்பவருக்குச் சொந்த மான லாரி இயங்கி வந்தது.

    லாரி கடத்தல்

    ஆடி அமாவாசையை விடுமுறையை முன்னிட்டு லாரி அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த லாரி ஆலங்குளம் - முக்கூடல் சாலையில் செல்வதாக ஜி.பி.எஸ். சிக்னல் மூலம் தெரிந்துள்ளது. இது குறித்து லாரி உரிமையாளர், டிரைவரிடம் கேட்ட போது அவர் தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.

    3 பேர் கைது

    இதையடுத்து மாலதி ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் தலைமையிலான போலீசார், முக்கூடல் அருகே சென்று கொண்டிருந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.

    மேலும் லாரியை கடத்தி் சென்ற புதுப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(38), பாலமுகேஷ்(34), மதன்(30) ஆகிய 3 பேரை் கைது செய்தனர்.

    • செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் பங்கேற்ற காலாண்டு நுகர்வோர் கூட்டம், கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்டது. அதன் தீர்மான விபரம் தற்போது நுகர்வோர் அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அதில்,தெருக்களில் சரியான முறையில் வாட்டமாக மழைநீர் வடிகால் அமைத்து, பிரதான ஓடை, ஆறுகளின் வழியாக தண்ணீர் வழிந்தோடி செல்லும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், 15வது நிதிக்குழு மானிய நிதியிலும், தூய்மை பாரத இயக்க திட்டத்தின் மூலமும் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளில் உள்ள தெருக்களில் நீர் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால் அமைப்பு, வடிகால் அமைப்பு, தனிநபர் இல்லம் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

    ஊராட்சிகளில் உள்ள குளங்கள் வற்றிய நிலையில் புதர், செடி, கொடி மண்டி, மரம் வளர்ந்து, குப்பைகள் கொட்டப்பட்டு அதில் வழிந்தோடி வரும் மழைநீர் தடைபடும் வகையில் உள்ளது என நுகர்வோர் அமைப்பினர் கூறியிருந்தனர்.இதற்கு ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அளித்துள்ள விளக்கத்தில், கிராம உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குளம், ஊரணிகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டுள்ளன. நீர் நிலைகளில் உள்ள புதர், செடி, கொடி, மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாதந்தோறும் 5 மற்றும் 20-ந் தேதிகளில் கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை சுத்தம் செய்தல், குப்பை அகற்றுதல் போன்ற மாஸ் கிளினீங் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரிகளின் இந்த விளக்கம் குறித்து, தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாஷா கூறியதாவது:-

    நுகர்வோர் அமைப்பினரின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறையினர் விளக்கமளிப்பது பாரட்டுக்குரியது,வரவேற்கதக்கது. அதே நேரம், சரியான தகவலை அளிக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் நீர்நிலைகள் சுத்தமாக இல்லை. உதாரணமாக நல்லாறு, கவுசிகா நதிக்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன.பல ஊராட்சிகளை ஒட்டிய சாலையோர மழைநீர் கால்வாய் புதர்மண்டி, மழைநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளன. எனவே, ஊராட்சிகள் வாரியாக ஜி.பி.எஸ்., தொழில்நுட்பத்தில் நீர்நிலைகளை சர்வே செய்து அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் யுடிராக் என பெயரிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஜி.பி.எஸ். பயன்பாட்டிற்கு வருகிறது. #GPS

    இந்தியாவின் சொந்த ஜி.பி.எஸ். மாட்யூல் விரைவில் பயன்பாட்டிற்கு வரயிருக்கிறது. யுடிராக் என பெயரிடப்பட்டுள்ள இந்திய ஜி.பி.எஸ். சேவை இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பில் இருக்கும் விவரங்களை கொண்டு இயங்குகிறது.

    யுடிராக் ஜி.பி.எஸ். சேவை முழுக்க முழுக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன ஆய்வாளர்களின் திட்டமிடலில் உருவாக்கப்பட்டு இயக்கப்படுகிறது.

    இந்தியாவுக்கென சொந்தமாக ஜி.பி.எஸ். சேவை துவங்குவதற்கு முதல் காரணம் அமெரிக்கா தான் எனலாம். கார்கில் போரின் போது குறிப்பிட்ட பகுதியின் ஜி.பி.எஸ். விவரங்களை வழங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. அமெரிக்கா இந்த கோரிக்கையை நிராகரித்த நிலையில், இந்தியாவுக்கென சொந்தமான ஜி.பி.எஸ். சேவை துவங்க வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.



    இதுவரை பல்வேறு ஜி.பி.எஸ். செயலிகள் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் ஜி.பி.எஸ். அமைப்புகளை சார்ந்து இயங்குகிறது. இந்தியாவின் யுடிராக் சேவையை கொண்டு ராணுவம் மற்றும் கடற்சார் சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு இருவித நேவிகேஷன் சேவைகளை வழங்குகிறது. ஒன்று அனைவருக்குமான ஸ்டான்டர்டு பொசிஷனிங் சேவைகள் மற்றொன்று என்க்ரிப்ட், தடை செய்யப்பட்ட சேவைகள் அனுமதி பெற்ற பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு L5 மற்றும் S ஃப்ரீக்வன்சி பேன்ட்களில் வேலை செய்கிறது. யுடிராக் சேவை மிகவும் துல்லியமாக வழிகாட்டும் என்பதால் பயணிகள் மற்றும் ஹைக்கர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த அமைப்பு ரஷயாவின் GLONASS அமைப்புடன் இணையும் வசதி கொண்டுள்ளது.
    ×