என் மலர்
நீங்கள் தேடியது "Grants"
- வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை விருதுநகர் கலெக்டர் வழங்கினார்.
- திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.
இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
இதில் ராஜபாளையம் ரிதம் அறிவுசார் குறை பாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர் முனியசாமி 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், மாணவி ஜீவிதா நீளம் தாண்டுதல் போட்டியிலும், மாணவி அமலா கிரிக்கெட் பந்து எறிதல் போட்டியிலும் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். அவர்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னாள் படைவீரர் கொடிநாளையொட்டி 2019-ம் ஆண்டில் அதிக வசுல் செய்து சாதனை புரிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, சார் பதிவாளர் முத்துச்சாமி ஆகியோருக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில், ஆனையூர், மங்களம், கீழ திருத்தங்கல் பகுதிகளை சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு தலா 2 சென்ட் வீதம் தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 20ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ.65ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 30ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
- ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை கடந்த 2001-ம் ஆண்டு 25 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை செய்து வருகிறது. மேலும் நோன்பு காலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு "ஜகாத் உதவி",கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு செய்தது.
இந்த நிலையில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான கல்வித்தொகை மற்றும் மருத்துவ நிதி உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது.
- 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
சேலம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் தொங்கும் பூங்காவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார்.
விழாவில் 987 ஊரக பகுதியில் உள்ள மகளிர் உதவி குழுக்களுக்கு ரூ.7452.39 லட்சம் வங்கிக் கடன் உதவியும், 14 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.648.10 லட்சம் கடன்களையும், 295 ஊரக பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.442.5 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி வழங்குதலும், 40 மகளிர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.80 லட்சம் தொடக்க நிதியும், 221 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1492.71 லட்சம் வங்கி கடன் உதவியும், 10 நகர்ப்புற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 லட்சம் சுழல் நிதி வழங்குதலும், வாழ்ந்து காட்டுவோம் திட்ட 35 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.153.40 லட்சம் இணை மானியம் வழங்குதலும் என மொத்தம் 1,602 மகளிர் சுய உதவி குவழுக்களுக்கு ரூ.100 கோடியே 51 லட்சத்தி 70 ஆயிரம் செலவில் கடன் உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மேயர் ராமச்சந்திரன், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கடன் உதவிகளை வழங்கினர். அப்போது மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- ஆர். எஸ். மங்கலம் அருகே நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ. 26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.
- அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள புல்லமடை ஊராட்சி தெற்கனேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சார்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.
முகாமில் கலெக்டர் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அக்கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத்திட்டங் கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.
பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையான குடிநீர் வசதி முழுமையான அளவு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சாலை வசதிகள் தேவைக்கேற்ப அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தனிநபர் பொரு ளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. அதை தகுதியுடையோர் பெற்று பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயணசர்மா, வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை கலெக்டர் மாரிச்செல்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் கனிமொழி (புல்ல மடை), ஜெயபாரதி (சனவேலி), பூபதி (காவண கோட்டை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
- பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் 32 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 35 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் 1 சிறுபான்மையினர் நல விடுதி என ஆககூடுதல் 68 விடுதிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் 3044 மாணவர்கள் மற்றும் 1681 மாணவியர்கள் என ஆக மொத்தம் 4725 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவ்வகையில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் வாயிலாக சிறுபான்மை யினர் கல்வி உதவித்தொ கைத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 -ம் ஆண்டில் 12146 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகைகள் வழங்கப்ப ட்டுள்ளன. மேலும், 2022-23 -ம் ஆண்டிற்கு 5655 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 27,113 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 11.24 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டத்தின் கீழ் மிகப்பிற்டுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 13,095 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.41 கோடி மதிப்பீட்டில் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த வர்களுக்கு 43 ேபர்களுக்கு ரூ. 2,39,940 மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் 56 ேபர்களுக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொருளாதார கடனுதவித் திட்டங்கள் வாயிலாக, தமிழ்நாடு சிறுபா ன்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 977 ேபர்களுக்கு ரூ. 4.25 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 1775 நபர்களுக்கு ரூ. 11.43 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாவ ட்ட த்தில் பொரு ளாதாரத்தில் பின்தங்கி யுள்ள முஸ்லிம் பிரிவைச் சார்ந்த மகளிர்களுக்கு 322 ேபர்களுக்கு ரூ. 43.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் சந்திப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற் கான முகாம் வாழப்பாடி அருகே உள்ள அத்த னுார்பட்டி மாரியம்மன் கோயில் திடலில் நடை பெற்றது. முகாமிற்கு சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கார்மே கம் தலைமை வகித்தார்.
முகாமை முன்னிட்டு துணை கலெக்டர்கள் உள்ளிட்ட மாவட்ட உயரதி காரிகள் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்த மாவட்ட ஆட்சியர் கார்மேகம், ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்திடவும், அந்தந்த பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்கவும் உத்தர விட்டார். இதனையடுத்து மக்களை சந்தித்து, குறைகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்து அறிக்கை தயார் செய்த குழுவினர்,
அந்தந்த பகுதிக்கு தேவை யான அடிப்படை வசதிகள் மற்றும் திட்டங் களை செய்து கொடுக்க உரிய நட வடிக்கை எடுக்க வேண்டு மென அரசுத்துறை அதிகாரி களுக்கு உத்தர விட்டார்.
இதனைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பல்வேறு துறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளி களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த, அரசின் மக்கள் நலத்
திட்டங்கள் குறித்த குடில் களை பார்வையிட்டார்.
முன்னதாக, அத்த னுார்பட்டி கூட்டுறவு கடன் சங்கம், பொது வின்யோக் ககடை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வற்றை ஆய்வு மேற்கொண்ட தோடு, அத்தனுார்பட்டி புதுார் கிராம மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஆதிதிரா விடர் நலத்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறை, மகளிர் திட்டம், தோட்டக் கலைத்துறை உள்ளிட்ட பல்வேறுத் துறைகளின் மூலம் 70 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், மாவட்ட வரு வாய் அலுவலர் மேனகா, சேலம் ஆர்.டி.ஓ. அம்பாயிர நாதன், வேளாண்மை இணை இயக்குநர் சிங்காரம், கூட்டு றவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ரவிக்குமார், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மயில், துணை இயக்குநர் (சுகாதாரப் பணி கள்) ஜெமினி, வாழப்பாடி தாசில்தார் கோபால கிருஷ்ணன், அட்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி, அத்தனூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாரதி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பேருந்து நிறுத்தம் கேட்டு மனு
தொடர்ந்து கலெக்டர் கார்மேகத்தை பா.ம.க. பிரமுகர் சத்தியராஜ், மருத்துவர் பிரேம்குமார் உள்பட பொதுமக்கள், மாணவ–மாணவியர் சந்தித்து புளிந்தோப்பு பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதி காரிகளுடன் கலந்தாய்வு செய்து, சாத்தியமும், தேவையும் இருப்பின் பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- 10 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
- அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில், இணை மானிய திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.20.15 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
இந்த திட்டம் ராமநாத புரம் மாவட்டத்தில் ப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தொழிற்கடன்களுக்கு 30 சதவீதமும், அதிக பட்சமாக ரூ.40லட்சம் வரையும் மானியம் பெறலாம். தனிநபர், குழு தொழில்க ளுக்கு கடன் வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் தொழில் கடன் பெறுபவர் பங்களிப்பு தொகை பொது பிரிவினர் 10 சதவீதம், சிறப்பு பிரிவினர்களுக்கு 5சதவீதம் செலுத்த வேண்டும். கடன் பெறுவோர் 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnrtp.org/citizenlog.in இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய லாம். விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சி தொழில் சார் வல்லுநர்களிடம் பெறலாம்.
இந்த திட்டம் குறித்த தகவல்களுக்கு மகளிர் வாழ்வாதார சேவை மையம் (மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரங்களுக்கு 72004 36477 என்ற தொடர்பு எண்ணிலும், திருவாடனை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களுக்கு 90477 08040 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வாழ்ந்து காட்டு வோம் திட்ட அலுவலகத்தை 9486745280, 8300098120 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட திட்ட செயல் அலுவலர் குமரன் , செயல் அலுவலர்கள் ராஜபாண்டி, தொழில் நிதி வல்லுநர் சத்திய சொரூபன் , உதவி பொறியாளர் பிரதீப், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
- மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை
இளையான்குடி வட்டா ரம் தோட்டக்கலைத்துறை த் துறையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் காய் கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும் மழை நீர் சேமிக்க பண்ணைக் குட்டை அமைக்கவும், மற் றும் விவசாய உரங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்ட மாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயம் செய்ய ஏது வாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூரிய திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்களது பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைபடத்துடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிய ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்ட றிந்தார்.
கூட்ட த்தில் பொது மக்கள் முதியோர் உதவி த்தொகை, விதவை உதவி த்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை ப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 452 மனுக்களை வழங்கி னார்கள். அவற்றை பரி சீலனை செய்த கலெக்டர், உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், ஆதி திராவிடர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.6,000 வீதம் ரூ.18,000 மதிப்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தையல் மெஷின்கள், தாட்கோ சார்பில் 1 பயனாளிகளுக்கு ரூ. 3,500 மதிப்பில் சலவைப்பெட்டி, ஒரு விவசாயிக்கு நிலம் வாங்கு வதற்காக, மானி யத்துடன் ரூ. 4,05,000 கடன் உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவி மற்றும் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைகளையும் பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை யின் சார்பில் தலா ரூ.2,780 வீதம் ரூ.11,120 மதிப்பில் 4 மாற்றுத்தி றனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், மாவட்ட தாட்கோ மேலா ளர் ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.
- புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தேசிய பட்டியல் இனத்தவா் மற்றும் பட்டியல் பழங்குடியினா் மைய மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை மந்திரி பானு பிரதாப்சிங் வா்மா பேசியதாவது:
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏறத்தாழ 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.
இந்தியப் பொருளாதாரத்துக்கான பாதையாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் 6 கோடிக்கும் அதிகமான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்திய பொருளாதாரத்துக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனுக்கும் இடையேயான தொடா்பு வலுவாக இருந்ததில்லை.
வரும் ஆண்டுகளில் இந்த உறவு இன்னும் நெருக்கமாக மாறும்.
தற்போது, 1.09 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ளன.
இவற்றில் 11.46 லட்சம் நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சாா்ந்தவை.
நாடு முழுவதும் உள்ள நிறுவனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை இந்த அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
வலுவான இந்தியாவை உருவாக்குவதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன .
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் பேசும்போது:
தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மூலம் பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் பட்டியல் இனத்தவா், பழங்குடியின இளைஞா்களுக்கு ரூ. 37 கோடி மானியத்துடன் ரூ. 148 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு, 1,535 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா்.தி.மு.க அரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் இந்த 3 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 399 கோடி மானியத்துடன் ரூ. 1,596 கோடி வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு, 11,330 படித்த இளைஞா்கள் புதிய தொழில்முனைவோா்களாக உருவாக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
பொருளாதார ஆய்வு
ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசும்போது:
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் தொழில்மு னைவோருக்காகத் தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு மூலம் ரூ. 100 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் தொடங்குவதற்குச் சாதகமாக உள்ள தொழில் திட்டங்களைக் கண்டறிந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட உதவும் விதமாக மாவட்ட வாரியாக தொழில்நுட்பப் பொருளாதார ஆய்வு நடத்தப்படும் என்றாா் .
மாநாட்டில், வெற்றிகரமாகத் தொழில் செய்யும் தொழில் முனைவோா்களைப் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் துறை இணைச் செயலா் மொ்சி, ஆதிதிராவிடா் நலத் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலா் டி.எஸ். ஜவஹா், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தொழில் வணிகத் துறை ஆணையா் சிஜி தாமஸ், தாட்கோ மேலாண் இயக்குநா் கந்தசாமி, தாட்கோ தலைவா் மதிவாணன், மாநிலங்களவை உறுப்பினா் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.