என் மலர்
நீங்கள் தேடியது "Haryana Assembly election"
- இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக களம் காண்கிறது.
- பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையான நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியது.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.
பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.
வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி தனித்து போட்டியிடுகிறது.
எனவே பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி என 4 முனை போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது.
இந்நிலையில், அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்ற 5 வாக்குறுதிகளை வெளியிட்டார்.
இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Panchkula: Delhi CM and AAP national convenor Arvind Kejriwal's wife Sunita Kejriwal launches 5 guarantees ahead of Haryana Assembly elections.
— ANI (@ANI) July 20, 2024
AAP promises to provide free and 24-hour electricity, free treatment, free education, Rs 1,000 per month to all mothers and… pic.twitter.com/cgvXRE0xoa
- பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது.
- பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன.
புதுடெல்லி:
90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
ஆளும் பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து களம் இறங்கியுள்ளது.
இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். பா.ஜனதா வெற்றிக்கு சிறிய வாய்ப்பும் தரக்கூடாது என கருதி அவர் ஆம்ஆத்மியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒன்றிணைக்க ஆம்ஆத்மி கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மிடன் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல்காந்தி கருத்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன. கெஜ்ரிவாலும், குமாரி செல்ஜாவும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் ராகுல்காந்தி கூட்டணிக்கான ஆர்வத்தில் உள்ளார்.
ஜம்மு காஷ்மீரிலும் இதே போல தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டி என்று அறிவித்து வந்தது. ஆனால் ஸ்ரீநகருக்கு சென்ற ராகுல்காந்தி நேரடியாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்தார். இதே வியூகத்தைத்தான் அரியானாவிலும் ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார்.
- அரியானா சட்டமன்ற தேர்தல் வினேஷ் போகத் பேட்டியிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
- தற்போது ராகுல் காந்தியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினோஷ் போகத். அதன்பின் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியா வந்ததும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்தான் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்துள்ளனர்.
இதன்மூலம் அரியானா தேர்தலில் இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வியாழக்கிழமை (நாளை) இந்த கேள்விக்கு தெளிவு கிடைத்தும் என பதில் அளித்திருந்தார்.
நேற்று பபாரியா இவ்வாறு தெரிவித்த நிலையில் இன்றைய சந்திப்பு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.
மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக முன்னணியில் நின்று போராட்டம் நடத்தியவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினோஷ் போகத் ஆவார்கள்.
- கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
- ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
அரியானா:
90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் சூடு பிடித்துள்ளது.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க கட்சி, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில் சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சில தகுதியற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.எல்.ஏ நரேஷ் கவுசிக், ஜஜ்ஜரின் பஹதுர்கர் தொகுதியில் தனது தம்பியை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இல்லையென்றால் தங்களில் ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. கட்சி தலைமை ஈடுபட்டு உள்ளது.
- அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
- அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.
சண்டிகர்:
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க சமீபத்தில் வெளியிட்டது. சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் பேரன் ஆதித்யா தேவி லால் இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி, இந்திய நேஷனல் லோக் தளம் கட்சியில் இணைந்தார். அவருக்கு அரியானாவின் தப்வாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 2வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. சார்பில் ஜுலானா தொகுதியில் கேப்டன் யோகேஷ் பைரகி போட்டியிடுகிறார்.
- இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.
புதுடெல்லி:
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப் பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.
அரியானாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டசபை தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளராக கேப்டன் யோகேஷ் பைரகி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரியானா மாநில பா.ஜ.க. இளைஞர் பிரிவு துணை தலைவராகவும், அரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
- அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
- அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
சண்டிகர்:
90 தொகுதிகளை கொண்ட அரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. இரு கட்சிகள் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதே போல் ஜே.பி.பி. இந்திய தேசிய லோக்தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் போட்டியில் உள்ளன.
அரியானாவில் ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவர் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார்.
டெல்லியில் இருந்து மதியம் 12.10 மணிக்கு ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மூலம் அரியானா புறப்பட்டார். கர்னாலில் உள்ள அசந்த் நகருக்கு அவர் சென்றடைகிறார். பிற்பகலில் அசந்த் சட்டசபையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹிசார் பகுதியில உள்ள பர்வாலாவுக்கு செல்கிறார் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகிறார். மாலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு திரும்புகிறார். அரியானாவில் 89 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. எஞ்சிய 1 இடத்தில் உள்ள கூட்டணியில் மார்ச்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு களத்தில் நிற்கிறது.
- ராகுல்காந்தி அரியானாவில் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
- ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.
அரியானாவில் வருகிற 5-ந்தேதி ஒரே கட்டமாக 90 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளும் பா.ஜ.க.-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அரியானாவில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில் பகதூர்கர் நகரில் ராகுல்காந்தி ரோடுஷோ நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்திற்கு நடுவே ராகுல்காந்திக்கு தொண்டர்கள் பஜ்ஜி கொடுத்தனர். அப்போது அருகில் இருந்து காவலர் ஒருவருக்கும் ராகுல்காந்தி பஜ்ஜி கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். அது யாருடைய பணம்?
- இந்தியாவில் இன்று அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு என்றார்.
சண்டிகர்:
அரியானா சட்டசபைத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோனிபட் பகுதியில் கோஹனா என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மகாபாரதத்தில் அபிமன்யு குருக்ஷேத்திரத்தில் மாட்டிக்கொண்டதைப் போல, கடைக்காரர்களை ஒரு சக்கர வியூகத்தில் சிக்க வைத்துவிட்டார் நரேந்திர மோடி.
அவர்கள் எப்படி மாட்டிக்கொண்டார்கள்? பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி, 2-3 கோடீஸ்வரர்களுக்கு வங்கிகளின் பணம் அனைத்தும் வழங்கப்பட்டது. வங்கிகளில் கடன் வாங்கச் சொன்னால் வங்கிகள் கடன் தராது என சொல்வார்கள்.
இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி மட்டுமே கடன் பெற முடியும். அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு எல்லாம் உண்டு.
அக்னிவீர் யோஜனா என்றால் என்ன? இந்தத் திட்டத்திற்கு ஒரே ஒரு நோக்கம்தான் - ராணுவ வீரர்களுக்குப் போகும் பென்ஷன், கேன்டீன், இழப்பீடு என பணத்தைப் பறிக்க.
இந்தத் திட்டத்தின் உண்மையான பெயர் அதானி யோஜனா என இருக்கவேண்டும்.
பயிற்சி, ஓய்வூதியம், ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் என பணத்தை அதானியின் பாக்கெட்டில் போடவேண்டும் என்றும், இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டைத் திருப்புவதே இதன் நோக்கம்.
அம்பானியின் திருமணத்தைப் பார்த்தீர்களா? அம்பானி திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்தார். இது யாருடைய பணம்? இது உங்கள் பணம்.
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வங்கிக் கடன் வாங்குகிறீர்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யலாம்.
ஆனால் ஒரு விவசாயி கடனில் மூழ்கி மட்டுமே திருமணத்தை நடத்த முடியும் என்ற கட்டமைப்பை நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். இது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றால் இது என்ன என கேள்வி எழுப்பினார்.
- அரியானா மாநிலத்தில் வருகிற 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அரியானா மாநில சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து அங்கு புதிய சட்டசபை அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. வருகிற 5-ந் தேதி அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
அரியானா சட்டசபை மொத்தம் 90 தொகுதிகளின் பிரதிநிதித்துவம் கொண்டது. 90 தொகுதிகளிலும் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள்.
கடந்த 2 வாரங்களாக 90 தொகுதிகளிலும் அனல்பறக்கும் பிரசாரம் நடந்தது. பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
நாளை வாக்காளர்களுக்கு வாக்களிப்பதற்கான சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து, வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
- அரியானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
சண்டிகர்:
அரியானா சட்டசபை தேர்தல் வரும் 5-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல், காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. எனவே அரியானாவில் 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அரியானாவின் நுஹ் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம்.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியல் அமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.
காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன.
அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.
நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள்.
அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்து விட்டது.
பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.
- அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், பா.ஜ.க. அங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றும், 29 இடங்களில் முன்னிலை பெற்றும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
முதலமைச்சர் நயாப் சிங் சைனி 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து 3வது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளதால், தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.