என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hat Trick"

    • ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • கேப்டன் நஜ்முல் 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.

    • ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார்.
    • வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதனிடையே 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் 53 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் பேட் கம்மின்ஸ்.
    • டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.

    அப்போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    அப்போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், கரீம் ஜனத் மற்றும் குல்பாதின் நைப் ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதன்மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்

    ஆப்கானிஸ்தான் அணி வீரர் நங்கெயாலியா கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறிவிட்டார். இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை நூலிழையில் பேட் கம்மின்ஸ் இழந்தார்.

    டி20 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்

    1. லசித் மலிங்கா (SL)

    2. டிம் சவுதி (NZ)

    3. மார்க் பாவ்லோவிக் (SER)

    4. வசீம் அப்பாஸ் (MALTA)

    5. பேட் கம்மின்ஸ் (AUS)

    ஆண்கள் T20 உலகக் கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்

    1. பிரட் லீ (AUS) vs BAN, கேப் டவுன், 2007

    2. கர்டிஸ் கேம்பர் (IRE) vs NED, அபுதாபி, 2021

    3. வனிந்து ஹசரங்கா (SL) vs SA, ஷார்ஜா, 2021

    4. காகிசோ ரபாடா (SA) எதிராக ENG, ஷார்ஜா, 2021

    5. கார்த்திக் மெய்யப்பன் (UAE) vs SL, கீலோங், 2022

    6. ஜோசுவா லிட்டில் (IRE) vs NZ, அடிலெய்டு, 2022

    7. பேட் கம்மின்ஸ் (AUS) vs BAN, ஆன்டிகுவா, 2024

    8. பேட் கம்மின்ஸ் (AUS) vs AFG, கிங்ஸ்டவுன், 2024

    • கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை 4-2 என பெங்களூரு எப்.சி அணி வென்றது.
    • பெங்களூரு எப்.சி. அணியின் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்தார்.

    பெங்களூரு:

    13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பெங்களூருவில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, பெங்களூரு எப்.சி அணியுடன் மோதியது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், பெங்களூரு எப்.சி. அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி ஐ.எஸ்.எல். தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்த வயதான வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

    இதன்மூலம் ஐதராபாத் எப்.சி. அணிக்காக 38 வயதில் ஹாட்ரிக் கோல் அடித்த நைஜீரிய வீரர் பார்தோலோமிவ் ஓக்பெச்சேவின் சாதனையை சுனில் சேத்ரி முறியடித்துள்ளார்.

    சுனில் சேத்ரியின் சமீபத்திய ஹாட்ரிக் ஐஎஸ்எல்லில் அவரது மூன்றாவது ஹாட்ரிக் ஆகும். இதற்கு முன் 2015ல் மும்பை சிட்டி எப்.சி.க்காகவும், 2018ல் பெங்களூரு எப்.சி.க்காகவும் ஹாட்ரிக் அடித்துள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3வது முறை ஆட்சி அமைத்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து, மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    இதையடுத்து முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

    அதைத்தொடர்ந்து ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்டங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.


    வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியது.

    காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது. இதில், தமிழகத்தில் 40 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றி இருந்தது.


    ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

    சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 3 முறை பிரதமர் பதவியை வகித்தவர் என்ற நேருவின் ஹாட்ரிக் சாதனையை, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சமன் செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது.
    • ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    ஹேமில்டன்:

    நியூசிலாந்து, இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹேமில்டனில் நேற்று நடந்தது. மழை காரணமாக 37 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 255 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 79 ரன்னும், சாப்மேன் 62 ரன்னும் எடுத்தனர்.

    இலங்கை சார்பில் தீக்ஷனா 4 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இலங்கை 30.2 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 113 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரச்சின் ரவீந்திராவுக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 7-வது இலங்கை பவுலராக சாதனை படைத்தார்.

    மேலும் சமிந்தா வாஸ் (2003), லசித் மலிங்கா (2007), துஷ்மந்தா மதுசங்கா (2018) ஆகியோருக்கு பின் வெளிநாட்டு மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த 4-வது இலங்கை பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

    • ஜிப் ஜான்சன் ஹாட்ரிக் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
    • தமிழக வீரர் கார்த்தி அடித்த கோல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    ரூர்கேலா:

    8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வருகிறது.

    சென்னையை மையமாகக் கொண்ட தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் சூர்மா கிளப்பிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் (1-4) தோற்றது.

    2-வது ஆட்டத்தில் கலிங்கா லான்செஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் (6-5) வென்றது. 3-வது ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராவை வீழ்த்தியது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 4-வது ஆட்டத்தில் விசாகப்பட்டினத்தை மையமாகக் கொண்ட கோனாசிகா அணியை நேற்று எதிர் கொண்டது.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 6-5 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

    தமிழ்நாடு டிராகன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நெதர்லாந்தை சேர்ந்த ஜிப் ஜான்சன் ஹாட்ரிக் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 19, 33 மற்றும் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    இந்த போட்டி தொடரில் முதல் ஹாட்ரிக் இதுவாகும். அப்ஹரன் கதேவ் (15-வது நிமிடம்), நாதன் எபிரம்ஸ் (55), கார்த்தி செல்வம் (59) ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர். தமிழக வீரர் கார்த்தி அடித்த கோல் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

    இந்த வெற்றி மூலம் தமிழ்நாடு டிராகன்ஸ் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியது. டிராகன்ஸ் 9 புள்ளியுடன் இருக்கிறது. பெங்கால் டைகர்ஸ் அணியும் 9 புள்ளி பெற்றுள்ளது. கோல்கள் அடிப்படையில் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது. சூர்மா (7 புள்ளி), உ.பி. ருத்ராஸ் (6 புள்ளி) அணிகள் முறையே 3-வது, 4-வது இடங்களில் உள்ளன.

    தமிழ்நாடு டிராகன்ஸ் 5-வது போட்டியில் பெங்கால் டைகர்சை நாளை (10-ந்தேதி) எதிர்கொள்கிறது. 

    • முதல் போட்டியில் அயர்லாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
    • ஜிம்பாப்வே அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது.

    ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற முதலாவது மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கடந்த 2018-இல் விளையாடியது. இதன் பிறகு 2023-ம் ஆண்டு வரை அயர்லாந்து அணி தொடர்ந்து விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து அந்த அணி தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை அயர்லாந்து பெற்றுள்ளது. அபு தாபியில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய அயர்லாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 4 விக்கெட்டுகளிலும், மூன்றாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியை 63 ரன்களில் வீழ்த்தியுள்ளது.

    வெறும் பத்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அயர்லாந்து அணி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஹாட் ட்ரிக் வெற்றி பெற்றதே அதிவேக ஹாட் ட்ரிக் சாதனையாக இருந்து வந்தது. 

    சார்ஜாவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 10 ரன் வித்தியாசததில் வீழ்த்தினாலும் தென் ஆப்பிரிக்கா அரையிறுதி வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது.
    சார்ஜா:

    டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    இப்போட்டியின் கடைசி ஓவரை தென் ஆப்பிரிக்கா அணியின் ரபாடா வீசினார். முதல் பந்தில் வோக்ஸ், இரண்டாவது பந்தில் மார்கன், முன்றாவது பந்தில் ஜோர்டான் ஆகியோரை வெளியேற்றினார். இதன்மூலம் ரபாடா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    டி20 உலக கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 4-வது பந்துவீச்சாளர் ரபாடா என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, 2007ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பிரெட் லீ, இந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் அயர்லாந்தின் கர்ட்டிஸ் கேம்பர், இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.#SAvZIM #ZIMvSA #ImranTahir
    ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

    இதில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

    இதற்கு முன்பு லாங்வெல்ட் (2005), டுமினி, ரபடா (2015) ஆகியோர் ஹாட்ரிக் சாதனை புரிந்து இருந்தனர்.

    இந்த ஆட்டத்தில் இம்ரான் தாகீர் 24 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். #SAvZIM #ZIMvSA #ImranTahir
    சி.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜமைக்கா கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஆந்த்ரே ரஸ்செல் கடைசி ஓவரில் வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். #AndreRussell
    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    ஐ.பி.எல். பாணியில் கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிரின்பகோ நைட் ரைடர்ஸ்-ஜமைக்கா தலவாஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டிரின்பகோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. காலின் முன்ரோ (61 ரன், 42 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பிரன்டன் மெக்கல்லம் (56 ரன், 27 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் விளாசினர். ஜமைக்கா கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஆந்த்ரே ரஸ்செல் கடைசி ஓவரில் வரிசையாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜமைக்கா அணி 41 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதைத் தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஆந்த்ரே ரஸ்செல், முதல் பந்தில் கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை அலிகான் கோட்டை விட்டார். அதன் பிறகு ருத்ர தாண்டவமாடிய ரஸ்செல் சிக்சர் மழை பொழிந்து மிரள வைத்தார். 40 பந்துகளில் சதத்தை எட்டிய அவர் சி.பி.எல். தொடரில் அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். அவருக்கு கென்னர் லீவிஸ் (51 ரன்) ஒத்துழைப்பு கொடுத்தார். ஜமைக்கா தலவாஸ் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஸ்செல் 121 ரன்களுடன் (49 பந்து, 6 பவுண்டரி, 13 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுடன் சதத்தை சுவைத்த 2-வது வீரர் என்ற பெருமையை 30 வயதான ரஸ்செல் பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ஜோ டென்லி, உள்நாட்டில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட்டில் கென்ட் அணிக்காக கடந்த மாதம் இச்சாதனையை செய்திருந்தார். 
    ×