என் மலர்
நீங்கள் தேடியது "Hawala money"
- சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
- ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் சோதனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பண்டல்களை பிரித்து சோதனை செய்தனர்.
இதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த வாலிபரையும் பண்டல்களையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தனர். அப்போது அவரது பெயர் நவீன் அன்வர்(வயது 30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் ரூ.40 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வருமான வரித்துறையினர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது
- ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
- பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு ரெயில் சென்று வருகிறது.
இந்த ரெயில் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அந்த ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ஒருவரது நடவடிக்கை சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால் போலீசார் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது அவர் தனது இடுப்பில் துணியால் பணத்தை கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் கோட்டயம் மாவட்டம் ஈராற்று பேட்டையை சேர்ந்த முகமது ஹாஷிம் (வயது 52) என்பதும், சேலத்தில் இருந்து அங்கமாலிக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருப்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
- வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அவினாசி:
திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
- பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
- பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
போரூர்:
விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.
அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ஆட்டோ டிரைவரான இவர் மாதவரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு 3 வாலிபர்கள் செங்குன்றம் எட்டயபாளையத்திற்கு செல்வதற்காக இவரது ஆட்டோவில் பயணம் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வால்டாக்ஸ் ரோட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு எதிரே உள்ள யானைக்கவுனி போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது ஆட்டோவில் சந்தேகம் படும்படி 3 பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது பெயர் யாசின், தாவூத், பைசூலா என்பது தெரியவந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு காரில் வந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி பணம் இருந்தது. இது பற்றி விசாரித்த போது இவர்கள் முதலாளியான முகமத் என்பவர் எட்டயப்பாளையத்தில் உள்ள தத்தா என்பவரி டம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.
இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
- பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.
அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.
எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.
இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
- சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.
கோவை:
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.
இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.
இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.
சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.
அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.
அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.
அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?
அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் நடந்திருப்பது சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
துபாயில் உள்ள இலங்கையை சேர்ந்த ஒருவர் மூலம், சென்னையை மையமாக வைத்து இந்த தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. இதற்கு சென்னை விமான நிலையத்தில பரிசு பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்து யூடியூப்பர் சபீர் அலி உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சபீர் அலி, அவரது கடையில் வேலைபார்த்த 7 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடைகள் நடத்தும் உரிமம் பெற யூடியூப்பர் சபீர் அலி கொடுத்த ரூ.77 லட்சம் ஹவாலா பணம் என்பதும், அவருக்கு சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
மேலும் சென்னை விமான நிலையத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரி ஒருவர் இந்த தங்கம் கடத்தலில் தொடர்பில் இருந்து உள்ளார். அவரது வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினர்.
அந்த அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். இந்த தங்கம் கடத்தலில் விமான நிலைய அதிகாரிகள் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களும் அடுத்தடுத்து சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் சிக்கி வருகிறார்கள்.
இதேபோல் விமான நிலையத்தில் செயல்பட்ட மேலும் 3 கடைகளுக்கும் தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாகவும் அதிரடி விசாரணை நடந்து வருகிறது.
எனவே வரும் நாட்களில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரி களிடம் தகவல்களை பெற்று தமிழக போலீசாரும் தனியாக விசாரித்து வருகி றார்கள். சர்வதேச கும்பல் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரி கூறும்போது, `சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்பனை கடையை மையமாக வைத்து தங்கம் கடத்தல் நடந்து உள்ளது. அதில் உள்ளவர்கள் சிக்கிய நாள் அன்றே சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேலும் 2 கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் அந்த 2 கடைகளிலும் சோதனை நடந்தது. தங்க கடத்தலில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை:
கேரள கலால் பிரிவு ஆய்வாளர் ராகேஷ் தலைமையிலான தனிப்படையினர் பொள்ளாச்சி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கார் கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் மறித்த போதும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கலால் பிரிவு அதிகாரிகள் காரினை பின் தொடர்ந்து சென்றனர்.
பின்னர் குருடிக்காடு என்ற இடத்தில் காரினை மடக்கினர். தொடர்ந்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதனுள் கட்டுக்கட்டாக ரூ.21.35 லட்சம் ஹவாலா பணத்தினை பதுக்கி வைத்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.
இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரில் வந்த நபர் தனது செல்போனை உடைத்து ஆவணங்களை அழிக்க முயன்றார். அதனை தடுத்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் தங்க பிஸ்கட்டுகள், தங்க ஆயில் ஆகியவற்றின் போட்டோக்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் காரில் வந்த பாஜீவ்ராவ் (வயது 19). சுமித் ஜாவீர் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.
மேலும் துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு விமானத்தில் தங்க கட்டிகளை கடத்தி வந்து, அதனை கோவையில் உள்ள பிரபல நகை கடையில் விற்றுள்ளனர். நகை விற்ற பணத்தினை காரில் கடத்தி சென்றபோது தான் கலால் துறை அதிகாரிகளிடம் இருவரும் சிக்கியுள்ளனர்.
கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் திருத்தாலா இன்ஸ்பெக்டர் சித்தரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.
சித்தரஞ்சன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாம்பி பஸ் நிலையம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.88 லட்சம் ஹவாலா பணம் கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் ஹவாலா பணம் கடத்திவந்த பட்டாம்பியை சேர்ந்த தனஞ்செயன் (வயது 24) என்பதும், கோவை உக்கடத்தில் இருந்து மலப்புரத்துக்கு கடத்திச் செல்வதாகவும் கூறினார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.
ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.
அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.
இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
பரமக்குடி:
மதுரையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பயணிகள் ரெயில் மண்டபத்துக்கு புறப்பட்டது. காலை 9 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்தடைந்தது. அப்போது ரெயிலில் இருந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த ஒரு பையை பிளாட் பாரத்தில் வீசினர். ரெயில் சென்றுவிட அந்த பை கேட்பாரற்று கிடந்தது.
ரெயில் நிலையம் வந்த மோசஸ் என்பவர் அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் 2000, 500 ரூபாய் கட்டுகள் என ரூ.37 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது.
உடனே மோசஸ் அந்த பையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு ரெயில் நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மோசஸ்சிடம் இருந்த பணப்பை தங்களுடையது என கூறினர். ஆனால் மோசஸ் தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் பரமக்குடி நகர் போலீசாருக்கு பணம் சிக்கியது தொடர்பாக தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பணப் பையை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கும்பலையும், மோசசையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு விசாரணை நடத்தியதில் பணத்துக்குரிய எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. மேலும் பணம் தங்களுடையது என கூறிய தகவல்களும் நம்ப தகுந்தவையாக இல்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி பின்னர் யாருடையது? எதற்காக கடத்தப்பட்டது? ஹவாலா பணமா? என விசாரித்து வருகிறார்கள்.