என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu organization"

    • மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
    • மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.

     மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

    விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

     

    மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

    அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

    துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

    இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

     

    முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில்  ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.

    • பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்
    • பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பேசிய ஒரு கருத்து கடும் சர்ச்சையைக் கிளப்பியது.

    'பொது சிவில் சட்டம் அரசியலமைப்பு அவசியம்' என்ற தலைப்பில் உரையாற்றிய சேகர், இது ஹிந்துஸ்தான், ஹிந்துஸ்தானில் (இந்தியா) வாழும் பெரும்பான்மையினரின் விருப்பப்படி இந்த நாடு செயல்படும் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

    இதுதான் சட்டம். உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு இப்படி சொல்கிறீர்களே என்று நீங்கள் கேட்க முடியாது. உண்மையில், பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது. குடும்பம் அல்லது சமூகத்தின் பின்னணியில் பாருங்கள், பெரும்பான்மையினரின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பது மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

     

    மேலும் மதத்தை குறிப்பிடாமல் பல மனைவிகள், ஹலாலா மற்றும் முத்தலாக் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் நடைமுறையை விமர்சித்த அவர் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    நீதிபதியின் பெரும்பான்மையினர் கருத்துக்குப் பரவலாகக் கண்டனம் எழுந்த நிலையில், இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட முடியாது என விஷ்வ ஹிந்து பரிஷத் [விஹெச்பி]  தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் இதே போன்ற விழிப்புணர்வு கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,பெரும்பான்மையினர் ஒரு குறிப்பிட்ட கருத்தைக் கொண்டிருந்தால், மற்றவர்கள் அதில் பிரச்சினை செய்யக்கூடாது என்று தெரிவித்தார். இதற்கிடையே உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

    • நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரை கண்டித்து சங்கரன்கோவில் தேரடி திடலில் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    அகில பாரத அய்யப்பா சேவா சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அகில பாரத அய்யப்பா சங்க செயலாளர் கதிர்வேல் ஆறுமுகம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் வன்னிய ராஜன், சாரதி ராம் அறக்கட்டளை நிறுவனர் ராமநாதன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், சைவ சித்தாந்த பேரவை தலைவர் திருமலை வேலு, சைவ சித்தாந்த சபை தலைவர் சண்முகவேல் ஆவுடையப்பன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, நகர தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

    தென்னிந்திய செங்குந்த மகாஜன துணைத் தலைவர் மாரிமுத்து, பா.ஜனதா மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், கோமதி அம்பிகை மாத சங்க அமைப்பாளர் பட்ட முத்து, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அமைப்பாளர் கோபால், சைவ சித்தாந்த சபை செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கண்டன உரை ஆற்றினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தின் போது ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அகில பாரத அய்யப்பா சேவா சங்க பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அந்தோணி ராஜ், நகர இளைஞரணி தலைவர் விக்னேஷ், மகளிர் அணி தலைவி மகேஸ்வரி, நிர்வாகிகள் மாரிமுத்து, அருண், சுப்பிரமணியன், இந்து முன்னணி நகரத் தலைவர் சங்கர் மற்றும் பெண்கள், ஆடித்தவசு மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி களக்காட்டில் இந்து அமைப்பினர் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    களக்காடு சத்திய வாகீஸ் வரர், கோமதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. அவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

    எனவே கோவில் சொத்துக்களை மீட்க கோரி இந்து சமய மன்ற செயலாளர் கணேசன் தலைமையில் பா.ஜ. நிர்வாகி தினகரன் முன்னிலையில் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு இறைவனிடம் முறையீடு செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
    தண்டையார்பேட்டையில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இந்து அமைப்பினர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கடந்த 19-ந்தேதி பாரத் முன்னணி என்ற இந்து அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    அவர்களது பேச்சு மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியும் இருந்ததாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இது தொடர்பாக தமிழ்நாடு இந்துமக்கள் சேனா தலைவர் சரவணன், ருத்ர சேனா தலைவர் தங்கராஜ், பாரத் முன்னணி சண்முகம், சத்யசேனா பொதுச் செயலாளர் ராஜகோபால் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்த சரவணன், தங்கராஜ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் இன்று காலை பல்வேறு இந்து அமைப்பினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையொட்டி பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். #tamilnews
    ×