என் மலர்
நீங்கள் தேடியது "hockey"
- ஒடிசா ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழ்கிறது.
- தங்களது ஸ்பான்சர்ஷிப்பை ஒடிசா மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்தது.
புவனேஸ்வர்:
இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இதற்கிடையே, ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டித்தது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்-பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
- ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார்.
- இந்த வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் டாசனின் விரல் அகற்றப்படும்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 30 வயதான ஹாக்கி வீரர் மாட் டாசன் [Matt Dawson] தனது விரலை துண்டித்துக்கொள்ள மடுவெடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான அணியை உலக நாடுகள் அறிவித்து வருகின்றன. 117 பேர் கொண்ட அணியை இந்தியாவும் அறிவித்துள்ளது.
அந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் மேட் டாசன் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளாயாட மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கினார். கடைசியாக டோக்கியோ ஒலிம்பிக்சில் ஆஸ்திரேலேயே ஹாக்கி அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் மாட் டாசன். இந்நிலையில் விளையாட்டின்போது மேட் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் டாசன் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் எழுந்தது.

ஒன்று நீங்கள் உங்கள் விரல் குணமடையும் வரை விளையாடக்கூடாது அல்லது உங்கள் விரலை நீக்கியாக வேண்டும் என்று டாசனின் மருத்துவர் தெரிவிக்கவே, அவர் தனது விரலை அகற்றும் முடிவை எடுத்துள்ளார்.
இந்த முடிவு குறித்து மாட் டாசன் பேசுகையில், இந்த வாய்ப்பு பாரிஸில் விளையாடுவதற்கானது மட்டுமல்ல, வாழ்கைக்கானது. பலர் தங்களது வாழ்க்கையில் எவ்வளவோ இழக்கின்றனர். நான் இழக்கப்போவது வெறும் விரலை மட்டும்தான் என்று தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூலை 27 ஆம் தேதி அர்ஜென்டினா ஹாக்கி அணியை ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது.
- ஹாக்கி ஆடவர் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளது.
ஹாக்கி ஆடவர் பி பிரிவில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா,அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா அணியும் இடம் பெற்றுள்ளது
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
பி பிரிவு ஹாக்கி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில் 3 -2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
மந்தீப் சிங், விவேக் சாகர் பிரசாத் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பி பிரிவில் 2-ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
- ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
- காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஹாக்கியில் லீக் போட்டிகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதியில் போட்டியிட்ட அதே அணிகள்தான் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கி ஆடவர் பிரிவில் காலிறுதி போட்டியில் மோதுவுள்ளன.
காலிறுதி போட்டிகளில் இந்தியா இங்கிலாந்தையும், ஜெர்மனி அர்ஜென்டினாவையும், பெல்ஜியம் ஸ்பெயினையும், நெதர்லாந்து ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது.
2020 டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-ஜெர்மனி ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது.
- மற்றொரு அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் இங்கிலாந்துடன் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. 22-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்டன் கோல் அடித்தார்.
இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்தியவீரர் அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 வீரர்களுடன் விளையாடி இந்தியா பெற்ற இந்த வெற்றி சிறப்பானது.
இந்திய அணி அரை இறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதியில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து விடும். ஜெர்மனியை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். அந்த அணி ஸ்பெயினிடம் மட்டுமே தோற்று இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெர்மனி அணி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியமும், வெள்ளி பதக்கம் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவும் கால் இறுதியிலேயே வெளியேறி விட்டன. வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-சீனா (பிற்பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-ஜெர்மனி (மாலை 4 மணி ) , நெதர்லாந்து-இங்கிலாந்து (இரவு 9 மணி), பெல்ஜியம்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) மோதுகின்றன.
- அரையிறுதியில் ஸ்பெயின் அணி இன்றைய ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொண்டது.
- இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 4-0 என அபார வெற்றி பெற்றது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் ஹாக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
முதல் அரையிறுதியில் நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினர். அவர்களது ஆட்டத்துக்கு ஸ்பெயின் அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இறுதியில், நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
இன்று இரவு நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொள்கிறது.
- ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
- இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
இதனால் போட்டி விறுவிறுப்பானது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.
இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர். இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது.
இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜெர்மனி அணி ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.
- ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
- இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.
துவக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர்.
இதனால் இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன.

இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர். இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது.
போட்டி முடிய இரண்டு நிமிடங்கள் இருந்த நிலையில், இந்திய அணி கோல்கீப்பர் ஸ்ரீஜீஷ் வெளியேறினார். அவருககு பதிலாக மற்றொரு வீரர் அந்த இடத்திற்கு வந்தார். ஜெர்மணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற இந்திய வீரர்கள் கோல்கீப்பர் இல்லாமல் போராடினர். கடைசி நிமிடத்தில் பந்து இந்திய வீரர்கள் வசம் வந்தது.
அதனை லாவகமாக மறுபுறம் கொண்டு சென்றனர். இக்கட்டான சூழலில் பந்தை எதிர்கொண்ட ஷாம்ஷெர் சிங் அதனை கோல் போஸ்ட் நோக்கி வேகமாக அடித்தார். எனினும், பந்து போஸ்ட் வெளியே கடந்து சென்றது. இதனால் இந்திய அணியின் மூன்றாவது கோல் அடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதோடு போட்டியிலும் நேரம் முடிந்ததால், ஜெர்மனி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.
- இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்கள் அடித்தார்.
- 3-வது பாதியின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பாரீஸ்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் இன்று வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோற்றது.
கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்க வைக்குமா என்று எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கியது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் முதல் கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதனையடுத்து நடந்த 2-வது கால் பாதியின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் தனது முதல் கோலை பதிவு செய்தது. 2-வது கால் பாதியின் இறுதி வரை போராடிய இந்திய அணி 30-வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தது. இதனால் 1-1 என்ற கணக்கில் 2-வது கால் பாதி சமன் நிலையில் இருந்தது.
3-வது கால் பாதியின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. ஸ்பெயின் அணியால் கோல் போடமுடியவில்லை. இதனால் 3-வது கால் பாதியின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 4-வது மற்றும் கடைசி கால் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முயன்றனர். இறுதி வரை போராடிய நிலையில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றது.
- இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
- இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.
கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.
இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.
- ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சண்டிகர்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.
இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம்.
- இந்தியா இறுதிப்போட்டிக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பாரீஸ்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தியது.
இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கூறியதாவது:
இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் மீண்டும் வென்றுள்ளோம். இந்திய ஹாக்கி அணி வளர்ந்துள்ளது. எந்தப் பெரிய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இது முழு நாட்டிற்கும் பெரிய விஷயம், எங்களுக்கும் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.
நிறைய காத்திருக்க வேண்டிய நிலை இது. நீங்கள் பல கட்டங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஹாக்கி வீரராக, இது எளிதானது அல்ல.
நாங்கள் ஒரு அணியாக விளையாடியதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். பயிற்சியாளர்களுக்கு நன்றி.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
பதக்கத்தின் நிறத்தை மேம்படுத்த அணி முயற்சி செய்யும். இங்கு தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் கனவாக இருந்தது. அனைவரும் எங்களை நம்பினர்.
எப்பொழுது மைதானத்திற்கு வந்தாலும் வெற்றி பெறத்தான் வருவோம் என்பதே நமது மனநிலை. சில நேரங்களில் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. இது எங்கள் விதி என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் ஹாக்கியின் வரலாறு மிகப் பெரியது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்லவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஹாக்கிக்கு அன்பைக் கொடுங்கள், எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இதை விட சிறப்பாகச் செய்து நாட்டிற்கு பதக்கங்களை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.