என் மலர்
நீங்கள் தேடியது "House Rent"
- வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாட்ரிட்:
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் மக்கள் அடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்று. வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட பல தேவைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குடியேறுகின்றனர். ஆனால் அந்த அளவுக்கு அங்கு வீடுகளின் எண்ணிக்கை இல்லை.
இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். இதனால் வருமானத்தில் பாதி வாடகைக்கே செலவிட வேண்டியுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக அரசாங்கம் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, வீட்டு வாடகை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன.
இந்நிலையில், தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
- 2019-ல் வாடகை வீடு தேடுவோர் எண்ணிக்கை சராசரியாக 6 என்ற அளவில் இருந்தது
- தற்போது 18 முதல் 20 என மூன்று மடங்கு உயர்ந்துள்ளது
இங்கிலாந்து முழுவதும் வாடகைக்கு வீடு கிடைப்பது கடினமாகி வருகிறது.
வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2019-ம் அண்டு சராசரியாக 6 என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு உயர்ந்து 18 முதல் 20 ஆக உள்ளது என வீடுகள் வாங்க மற்றும் விற்பதற்காக இயங்கும் இணைய தளம் ரைட்மூவ் அளிக்கும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சில பகுதிகளில் இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கிலாந்தின் வடமேற்கு பகுதிகளில் 30-ஐ எட்டியுள்ளது.
வாடகைக்கு ஒரு வீட்டை தேடுவது மிகவும் மன அழுத்தத்தை உண்டாக்க கூடிய கடினமான செயலாக இருப்பதாக பலர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சில வருடங்களாகவே இங்கிலாந்தில் வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்ந்து வந்தது. இதனால் மக்கள் வங்கி கடன் பெற்று வீடு வாங்கும் திட்டத்தை தள்ளிபோட்டு வாடகைக்கு இருப்பதையே விரும்ப தொடங்கினார்கள். அதிகரித்திருக்கும் வட்டி விகிதத்தால் சில வீட்டு உரிமையாளர்களும் லோன் மூலம் வாங்கிய தங்கள் வீடுகளை விற்க முயல்கிறார்கள்.
இந்த காரணங்களால் வாடகைக்கு வீடு தேடுவோர் அதிகமாகவும், வீடுகள் குறைவாகவும் உள்ள ஒரு முரண்பட்ட சூழ்நிலை உருவாகி வாடகை வீட்டிற்கான தேவை அதிகரித்துள்ளது.
பல இடங்களில் கேட்கப்படும் வாடகையை விட அதிகமாக வழங்கவும் பலர் தயாராக இருக்கிறார்கள். வீட்டை பார்ப்பதற்கு வரிசையில் நிற்க மக்கள் முன்னரே வந்து விடும் நிலை பல இடங்களில் நிலவுகிறது. பல குடும்பங்களில் இதனால் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரியும் கிளாடியா (25), ஒரு படுக்கையறை கொண்ட ஒரு ஃப்ளாட்டில் அவளது காதலன் மைக்கேலுடன் மாதத்திற்கு ரூ. 2.3 லட்சம் (2150 pounds) வாடகைக்கு குடிபுகுந்திருக்கிறார். இந்த வாடகை வழக்கமான வாடகையை விட ரூ.30 ஆயிரம் (200 pounds) அதிகம் ஆகும்.
"எங்கள் இருவரின் மொத்த வருமானத்தில் பாதியை இதுவே விழுங்கிவிடும். ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை" என கிளாடியா கூறுகிறார். வழக்கமாக இந்தியாவில், நகரங்களில் உள்ள மக்களை பெரிதும் பாதிக்கும் இந்த நெருக்கடி தற்போது இங்கிலாந்திலும் பரவி வருவது பேசுபொருளாகியுள்ளது.
- சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்கிறது.
- வீட்டு வாடகை உயர்த்துவதற்கு முக்கிய காரணமே சொத்து வரி கூட்டப்பட்டதுதான்.
சென்னை:
சென்னையின் மையப் பகுதிகளை நோக்கி மக்கள் நகர்ந்து வருவதால் வீடுகளுக்கு தேவை அதிகரிக்கிறது. இதனால் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.
சென்னையின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் தேவை தொடர்ந்து இருக்கும் நிலையில் மாதவரம், கொளத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தேவை அதிகரித்துள்ளது.
மேலும் சிறந்த வேலைவாய்ப்புகள், வீட்டில் இருந்து வேலை செய்தல் மற்றும் தனி குடும்பங்களின் அதிகரிப்பு காரணமாக வீடுகளின் தேவை கூடியுள்ளது. இதனால் வீட்டு வாடகை 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்தன. மேலும் வாடகை உயர்வுக்கு சொத்து வரி உயர்வு ஒரு முக்கிய காரணமாகும். அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் இருந்து மக்கள் உள் நோக்கி மாறுவது மற்றொரு முக்கிய காரணமாகும்.
சென்னையில் புலம் பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வீட்டு வாடகை உயர்கிறது. வெளிநாடுகளில் உள்ளவர்கள் தங்கள் முதலீடுகளை வீடுகளில் செய்து வாடகைக்கு விடுகின்றனர். பழைய வீடுகளை மேம்படுத்தி அதிக வாடகைக்கு விடும் நிலை உள்ளது.
சென்னையில் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ. புரம் போன்ற பகுதிகளில் புதிய பிரீமியம் வீடுகளுக்கான வாடகை ரூ.75 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை உள்ளதாக சொத்து ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். மயிலாப்பூர், மந்தைவெளியின் பழைய பகுதிகளில் கட்டிடங்கள் பழமையானவை. அவற்றில் வசதிகள் குறைவாகவே உள்ளன. இங்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வாடகை உள்ளது. மற்ற பகுதிகளில் 2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை உள்ளது.
வீட்டு வாடகை உயர்த்துவதற்கு முக்கிய காரணமே சொத்து வரி கூட்டப்பட்டதுதான். கே.கே.நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பழைய சொத்துக்களை பெரிய அளவில் மறு சீரமைப்பு செய்வதால் உரிமையாளர்கள் தற்காலிகமாக வாடகை வீடுகளை தேடுகிறார்கள். இதுபற்றி ரியல் எஸ்டேட் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் கூறும் போது, மெட்ரோ ரெயில் இணைப்பு நிறைய வேலை வாய்ப்புள், சமூக உள் கட்டமைப்பு ஆகியவை மக்களை நகரத்தை விட்டு வெளியேற ஊக்குவிப் பதோடு அந்த பகுதிகளில் வாடகை தேவையும் அதிகரித்து வருகிறது என்றார்.
- ஒரு பயனர், அந்தேரி அல்லது கோரேகான் பகுதியில் தேடுங்கள். அங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
- மற்றொரு பயனர், மும்பையில் வீட்டு வாடகை செலவு நியூயார்க்கில் செய்யப்படும் செலவை நெருங்குகிறது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்காக செல்லும் நபர்கள் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை வீட்டு வாடகைக்கு செலவழிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விதா என்ற பெண் வக்கீல் எக்ஸ் தளத்தில் தனது வீட்டு வாடகை தொடர்பாக செய்த பதிவு வைரலானது. அதில், மும்பையில் ஒரு படுக்கை அறை, ஹால், சமையல் அறை கொண்ட வீட்டுக்கு வாடகையாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலுத்த வேண்டியது இருக்கும். சுதந்திரமாக இருப்பதற்காக உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை. குடும்பத்துடன் இருப்பது நல்லது என்று அவர் கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் மும்பையில் குறைந்த செலவு கொண்ட வீடுகளை பரிந்துரைத்தனர்.
ஒரு பயனர், அந்தேரி அல்லது கோரேகான் பகுதியில் தேடுங்கள். அங்கு குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்கும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், மும்பையில் வீட்டு வாடகை செலவு நியூயார்க்கில் செய்யப்படும் செலவை நெருங்குகிறது.
எனவே தானே, நவி மும்பை போன்ற பகுதிகளில் வாடகையில் வீடுகளை பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதே போன்று பல பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டதால் அந்த பெண்ணின் பதிவு விவாதமாகி உள்ளது.
- வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
குஜராத் மாநிலம் சூரத்தில் 2 மாத வீட்டு வாடகையை செலுத்த தவறியதால் வீட்டின் உரிமையாளர் இளம்பெண் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை. இந்த வீடியோ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
வீட்டின் உரிமையாளர் ஜெயேந்திர மானவவாலா, ராதே நகர் சொசைட்டியில் அவருக்கு சொந்தமான வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தியதை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வீட்டின் உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்துள்ளார். அந்த தாக்குதலில் வீட்டின் உரிமையாளரின் கண்ணில் காயம் ஏற்பட்டதை அடுத்து, பெண்ணுக்கு எதிராக அவரும் புகார் கொடுத்துள்ளார்.
- அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது.
- திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது.
பெரு நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பது குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகும். அதுபோன்று பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில், மிகச்சிறிய அளவு கொண்ட ஒரு அறையை காட்டுகிறார்.
அந்த அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது. திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது. அந்த அளவுக்கு மிகச்சிறிய தீப்பெட்டி வடிவில் இருக்கும் இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ.25 ஆயிரம் என கூறுகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வீட்டு வாடகை தொடர்பாக தங்களது கருத்தக்களை பதிவிட்டதால் அவரது இந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
- வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
- குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் ஜி.எஸ்.டி. கிடையாது.
புதுடெல்லி :
கடந்த மாதம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அரிசி, தயிர், கோதுமை மாவு, பருப்புவகைகள், தயிர், லஸ்சி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையே, வீட்டு வாடகைக்கு மத்திய அரசு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்து இருப்பதாக நேற்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பதிவில், ''அன்றாட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்த பிறகு இப்போது வீட்டு வாடகைக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாகேத் கோகலே, ''இனிமேல் வீட்டு வாடகை 18 சதவீதம் உயரும். ஏனென்றால், மோடி அரசு வீட்டு வாடகை மீது 18 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கிடையே சாதாரண மனிதர்களிடம் இருந்து ஒவ்வொரு ரூபாயையும் பறிக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், இக்குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய அரசின் பத்திரிகை தகவல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
குடியிருப்பு பயன்பாட்டுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால், அதற்கு ஜி.எஸ்.டி. கிடையாது. வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விட்டால்தான் 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
மேலும், ஒரு நிறுவனத்தின் உரிமையாளரோ, பங்குதாரரோ ஒரு குடியிருப்பை தனிப்பட்ட பயன்பாட்டுக்கு வாடகைக்கு எடுத்தால்கூட ஜி.எஸ்.டி. கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம்:
துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.
சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.