என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT"

    • மருத்துவ அறுவை சிகிச்சை எந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் இருப்பதில்லை.
    • முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை என்ற புதிய துறை நேற்று தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் நாட்டிலேயே முதல் முறையாக பி.எஸ். மெடிக்கல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவன இணை நிறுவனர் லட்சுமி நாராயணன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். இதற்கான அணுகு முறைகளை இந்த துறை வழங்கும்.

    மேலும் மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த ஏதுவாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், நாட்டில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியையும் இந்த துறை மேற்கொள்ளும்.

    இது குறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைக்க இது மிகப்பெரிய முன்னெடுப்பாக இருக்கும். மருத்துவ அறுவை சிகிச்சை எந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் இருப்பதில்லை.

    பொதுவாக 95 சதவீத மின்னணு சாதனங்கள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவிலேயே மருத்துவ பயன்பாடுகளுக்கான கருவிகள், எந்திரங்கள், தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முதல்படி சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. யில் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள துறை மூலம் பி.எஸ்.மருத்துவ அறிவியல்-தொழில்நுட்பம் (4 ஆண்டு படிப்பு), மருத்துவர்களுக்கான முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள், அறிவியல்- பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆராய்ச்சி படிப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    நாட்டில் முதல் முறையாக பி.எஸ்.மருத்துவ அறிவியல் - பொறியியல் பாடப்பிரிவு தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கப்பட்டு உள்ளது.

    பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் படித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் 'ஐ.ஏ.டி.' நுழைவுத் தேர்வு எழுதி பி.எஸ்.படிப்பில் சேரலாம்.

    இந்தப் பாடப்பிரிவுக்கு முதல் கட்டமாக 30 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.
    • இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடத்திற்குள் வந்து சாதனைப் படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147-வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் தற்போது ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குமுன் இருந்ததில் இருந்து 23 வரிசை முன்னேறி 149 இடத்தை பிடித்துள்ளது.

    அதேவேளையில் இந்திய அறிவியல் கழகம் 155-வது இடத்தில் இருந்து 225-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174-ல் இருந்து 197-வது இடத்திற்கும், ஐ.ஐ.டி. கான்பூர் 278-வது இடத்திலும், ஐ.ஐ.டி. சென்னை 250-ல் இருந்து 285 இடத்திற்கும் பின்தங்கியுள்ளன.

    இந்நிலையில், ஐஐடி மும்பை 149-வது இடத்தை பிடித்தது தொடர்பாக மத்திய அமசை்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டின் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியுள்ளார்.

    இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. இனி குறைந்த இந்தியர்கள் சிறந்த கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்திருத்தப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

    780ம் இடம் பிடித்து, சிறந்து விளங்கிய சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, உலகக் கண்ணோட்டத் தரவரிசை மற்றும் QS தரவரிசை முறைகள் மற்றும் பிற முயற்சிகள் அந்த வேகத்தைத் தொடரும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐஐடி சென்னையின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • புதிய ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது.

    இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தான்சானியாவிற்கு சென்றிருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் உள்ள தான்சானியா தீவுக்கூட்டமான சான்சிபாரில், ஜெய்சங்கர் மற்றும் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோருக்கிடையே ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது.

    இந்த வளாகம், இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துவதையும் இதன் மூலம் இந்தியா நினைவூட்டுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை அங்கீகரித்து, சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதன் மூலம், இரு தரப்பிற்கான கல்வி கூட்டுறவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    ஐஐடி கல்வி நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 23 இடங்களில் இயங்கி வருகிறது.

    "உயர் செயல்திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்ற நாடுகளில் வளாகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்" என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன.
    • இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி.

    அண்மையில் தகுதித்தேர்வு குறித்து ராகுல்காந்தி பேசிய வீடியோ வைரலானது.

    அந்த வீடியோவில், "இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன. அந்தத் தேர்வுகள் அமல்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். கறுப்பினத்தவரும் லத்தீன் அமெரிக்கர்களும் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர்களுக்கு தகுதியும் அறிவும் இல்லை எனப் பேசினார்கள்.

    பிறகொரு நாள் ஒரு பேராசிரியர் வந்தார். அதே தேர்வுத்தாள்களை கறுப்பினத்தவர்களைக் கொண்டு தயார் செய்து, கறுப்பினத்தவர்களை எழுத வைத்தார். வெள்ளை மாணவர்கள் எவரும் தேர்ச்சி பெற முடியவில்லை.

    எனவே இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி."

    உயர் சாதியினர் நடத்தும் தேர்வுகளில் தலித்துகள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், ஒன்று செய்வோம், தலித்துகளை தேர்வுத் தாளை தயாரிக்க வைத்து, உயர் சாதியினரை தேர்வு எழுதச் சொல்லுங்கள்" என்று ராகுல்காந்தி பேசுகிறார்.

    தகுதியின் சிக்கலான விஷயங்களை ராகுல்காந்தி மிக எளிமையாக விளக்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும்.

    JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்கலாம். ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், "இந்தியாவின் மதிப்புமிக்க ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் கல்வி பயிலும் வாய்பை நிறைவேற்ற, JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் வழங்கும் BS பட்டப்படிப்பு பயில தாட்கோ மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    லட்சக்கணக்கான சம்பளத்துடன் 11.5 லட்சம் வேலைவாய்ப்பு நிறைந்த தரவு அறிவியல்(Data Science) பட்டப்படிப்பையும், மின்னனு துறையில் தரம் வாய்ந்த மாணாக்கர்களை உருவாக்கும் மிண்ணணு அமைப்புகள் (Electronic Systems) பட்டப்படிப்பையும் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்திலும், அறிவாற்றலிலும் சிறந்த மாணாக்கர்களை உருவாக்க சுய கற்றல் முறையில் இணையதளம் மூலமாக படித்து, நேரடியாக தேர்வுகளை எதிர்கொண்டு 4 வருட ஐஐடி மெட்ராஸ் பட்டப்படிப்பினை பெறலாம்.

    தகுதித் தேர்வின் அடிப்படையில் BS பட்டப்படிப்பில் சேர்க்கை பெறும் மாணாக்கர்கள் படிக்கும் காலத்திலேயே வேறு ஒரு கல்லூரியில் தங்களது விருப்பமான பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே BS பட்டப்படிப்பினை பயிலலாம்.

    இப்படிப்பிற்கான கல்விக் கட்டணமானது சென்னை ஐஐடி மற்றும் தாட்கோவால் இணைந்து வழங்கப்படும். தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு மூலம் பயில்வதற்கான வழிகாட்டுதல் வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள், மற்றும் கல்வித்தகுதியை மேம்படுத்த விரும்பும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாளை (மே 12) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. 11, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் பெற்றோருடன் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம்.

    பதிவு செய்ய : http://lnkiy.in/iitdegree

    TAHDCO : https://iei.tahdco.com/iit_reg.php

    மேலும் பட்டப் படிப்பு குறித்த தகவல்களுக்கு

    Data Science-study.itm.ac.in/ds

    Electronic Systems-study atm.ac.in/es

    குறிப்பு - விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் மே 20. 2024

    tamilnaduvolunteers@gmail.com

    9087293339

    • அக்னிபான் ராக்கெட் செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    அக்னிபான் ராக்கெட் செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

    தனியார் பங்களிப்புடன் புதிய வகை ராக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

    திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் அக்னிபான் ராக்கெட் இயங்குகிறது.

    இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் இயந்திரத்தை அக்னிபான் ராக்கெட் கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது.
    • வறுமையால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவரது பெற்றோரால் கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை

    தான்பாத் ஐஐடி-யில் படிக்க இடம் கிடைத்து, வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்தாததால் சேர்க்கை மறுக்கப்பட்ட பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதான அதுல் குமாருக்கு தான்பாத் ஐஐடியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வறுமை காரணமாக கல்விக் கட்டணமாக கட்டவேண்டிய ரூ.17,500 பணத்தை ஜூன் 24ஆம் தேதிக்குள் கட்ட அவரது பெற்றோர் தவறியதால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.சி. எஸ்.டி ஆணையம் என எங்கும் தீர்வு கிடைக்காததால் உச்ச நீதிமன்றத்தை அம்மாணவனின் தந்தை நாடியிருந்தார்.

    இந்த வழக்கில், இவ்வளவு திறமையான மாணவன் படிப்பை கைவிடுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

    அதுல் குமாரை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிடெக் படிப்பில் சேர்க்குமாறு தன்பாத் ஐஐடியிடம் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

    • ஐஐடி தன்பாத் மாணவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
    • இந்த வீடியோவை இணையத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    அக்டோபர் 31 அன்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதே சமயம் வட இந்தியாவின் பல நகரங்களில் தீபாவளியன்று பட்டாசு வெடித்த பின்பு காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது.

    இந்நிலையில், ஐஐடி தன்பாத் மாணவர்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.

    அந்த வீடியோவில் மாணவர்கள் பட்டாசை பற்ற வைத்து அதன் மேல் பெரிய பிளாஸ்டிக் குப்பை குப்பை தொட்டியால் மூடுகின்றனர். பட்டாசு வெடித்ததும் அந்த குப்பை தொட்டி 4 மாடி அளவிற்கு உயர பறந்து கீழே விழுகிறது.

    இந்த வீடியோவை இணையத்தில் 10 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    • திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
    • கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆன்மீக தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றம் அதிகமாக காணப்பட்டு கடற்கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் வரை 7 அடியில் இருந்து 10 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடல் அரிப்பை தடுத்து கோவிலை பாதுகாக்கும் பொருட்டு இன்று காலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஆகியோர் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலையொட்டி உள்ள கடற்கரை தொடர்ந்து காலநிலை மாற்றத்தால் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் நீராட முடியாத நிலை உள்ளது. கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து கடல் அரிப்பு பாதிப்பு ஏற்படுவது ஒரு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடற்கரை குறைந்து கொண்டே வருகிறது. அதை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம்.

    இதற்கு நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு முன்பாக கடற்கரை அரிப்பை தடுக்க ஐ.ஐ.டி. நிபுணர்கள் மற்றும் சிறந்த வல்லுனர்கள் மூலமாக ஆய்வு செய்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு நிரந்தரமான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், ஆணையாளர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையாளர் சுகுமாரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, தலைமை பொறியாளர் பெரியசாமி, திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மண்டல இணை ஆணையாளர் அன்புமணி, கோவில் பொறியாளர் வெங்கட சுப்பிரமணியன், தாசில்தார் பாலசுந்தரம், ஐ.ஐ.டி. பேராசிரியர் சன்னாசிராஜ், மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் புஷ்ரா சற்குணம், செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், தி.மு.க. மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரி சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி விளக்கம் அளித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரம்மாண்டமான மகா கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது.

    கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர். மகா கும்பமேளாவுக்கு ஏராளமான துறவிகளும் வந்துள்ளனர்.

    அந்த வகையில் ஐஐடி பாம்பேயில் பி.டெக். ஏரோஸ்பேஸ் [விண்வெளிப் பொறியாளராக] பயின்று பின் அதை துறந்து சன்யாசம் புகுந்த அரியானாவை சேர்ந்த அபய் சிங் கும்பமேளாவுக்கு வந்திருந்தார். ஐஐடி பாபா என்ற அடைமொழியுடன் அவர் இணையத்தில் வைரலானார்.

    இந்நிலையில் தனது குரு மஹந்த் சோமேஷ்வர் புரியை அவமரியாதை செய்ததற்காக சாதுக்களின் மிகப்பெரிய பிரிவுகளில் ஒன்றான ஜூனா அகாராவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அகாரா முகாமில் இருந்து கடந்த சனிக்கிழமை இரவு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

     இந்த விவகாரத்தில் ஜூனா அகாரா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒழுக்கமும் குரு பக்தியும் முதன்மையானது என்றும், இந்தக் கொள்கையைப் பின்பற்ற முடியாத எவரும் சன்யாசி ஆக முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஜூனா அகாராவின் தலைமை புரவலர் மஹந்த் ஹரி கிரி கூறுகையில், அபய் சிங்கின் செயல் குரு-சிஷ்ய மரபு மற்றும் சன்னியாசம் (துறவு) ஆகியவற்றுக்கு எதிரானது. நீங்கள் உங்கள் குருவை அவமதித்து, சனாதனத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டியுள்ளீர்கள். உங்கள் மனதில் மதத்திற்கோ அல்லது குருபீடத்திற்கோ எந்த மரியாதையும் இல்லை என்று கூறினார்.

    ஒரு சமூக வலைதள ரீல் வீடியோவில் அபய் சிங், தனது தந்தை மற்றும் குருவுக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக தெரிகிறது.

    ஜூனா அகாரா முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐஐடடி பாபா அபய் சிங் மற்றொரு துறவியின் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐடி பிலாய் இயக்குநர் ரஜத் மூனா, ஐஐடி காந்திநகர் இயக்குநராகவும், ஐஐடி தார்வாட் இயக்குநர் பசுமார்த்தி சேசு ஐஐடி கோவாவின் இயக்குநராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இரண்டாவது முறையாக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஐஐடி இயக்குநர்கள் – கே.என் சத்தியநாராயணா (ஐஐடி திருப்பதி) மற்றும் மனோஜ் சிங் கவுர் (ஐஐடி ஜம்மு), ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்களான சேஷாத்ரி சேகர் மற்றும் ஸ்ரீபாத் கர்மல்கர் ஆகியோர் முறையே ஐஐடி பாலக்காடு மற்றும் ஐஐடி புவனேஷ்வரின் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஐஐடி காரக்பூரின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த வெங்கயப்பய ஆர் தேசாய் ஐஐடி தார்த்வாட்டின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐஐடி பிஹெச்யுவின் பொருள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த ராஜீவ் பிரகாஷ் ஐஐடி பிலாய் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    அகில இந்திய அளவில் உயர்கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தொடர்ந்து இந்த ஆண்டும் சென்னை ஐ.ஐ.டி.க்கு முதலிடம் அளித்துள்ளது. #IITChennai #HRDranking
    புதுடெல்லி:

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் இப்படி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

    கல்வி பயிற்சி, கற்கும் திறன், ஆராய்ச்சி பணி, தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் ஆண்டுதோறும் தயாரிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.



    “2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த தரவரிசை பட்டியலில் சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.யான இந்திய தொழில்நுட்பக் கழகம் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சிறப்பிடத்தை சென்னை ஐ.ஐ.டி. பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த தரவரிசை பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி. இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    மருத்துவ கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ் முதல் இடத்தையும், சட்டக் கல்லூரிகளில் பெங்களூரு தேசிய சட்டப்பள்ளி முதல் இடத்தையும் பிடித்துள்ளன. #IITChennai #HRDranking
    ×