search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal liquor"

    • ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.
    • எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.

    கள்ளக்குறிச்சி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையினர் கைது செய்யப்பட வேண்டும். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என தொடர்புடையோர் யாரையும் விடக்கூடாது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    * ஆட்சியரை பணியிட மாற்றம் செய்வதும், போலீசாரை சஸ்பெண்ட் செய்வதும் மட்டும் தீர்வாகாது.

    * கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பங்களை அரசு காப்பாற்ற வேண்டும்.

    * ஆட்சிகள் மாறினாலும் கள்ளச்சாராய காட்சிகள் மட்டும் மாறவில்லை.

    * எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் கள்ளச்சாராய விற்பனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

    * எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ் என அனைவர் ஆட்சி காலத்திலும் கள்ளச்சாராய பலிகள் நிகழ்ந்துள்ளன.

    * அரசியல் பின்புலம் இல்லாமல் கள்ளக்குறிச்சியில் இத்தனை துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்க முடியாது.

    * முதலமைச்சர் பதவி விலகுவது இப்பிரச்சனைக்கு தீர்வாகாது. கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட வேண்டும்.

    * முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என இபிஎஸ் கூறுவது வெறும் அரசியல் என்று கூறினார்.

    • பலர் அருகாமை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி.
    • உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்துள்ளன. சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும், தமிழகத்தில் கள்ளச்சாராய சந்தைக்கு மவுசு குறையவில்லை என்பதை கள்ளக்குறிச்சி சம்பவம் வெளிச்சம் போட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

    கள்ளக்குறிச்சியை அடுத்த கருணாபுரத்தை சேர்ந்தவர்களில் சிலர் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த மேலும் பலர் உடல்நல பாதிப்பு காரணமாக அருகாமையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

     


    ஒருபுறம் நோயாளிகள் அனுமதியும், மறுபுறம் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் அதிகமாகும் சம்பவங்கள் இன்னும் முற்றுபெறவில்லை. இதுவரை கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கள்ளச்சாராய சம்பவம் பூதாகாரமாகி உள்ள நிலையில், அருகாமையில் உள்ள மருத்துவனைகளில் இருந்து மருத்துவர்கள் அடங்கிய குழு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    உறவினர்களை கள்ளச்சாராயத்துக்கு பறிகொடுத்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், கள்ளச்சாராய விற்பனை குறித்து பலமுறை புகார் அளித்திருக்கிறோம். ஆனால், ஒருமுறை கூட நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை என்று கண்ணீர்மல்க குற்றம்சாட்டினர்.

    கடந்த ஆண்டு மே மாதம் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை குறித்த புகார்கள் எழுந்தன. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்த யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியின் வீடியோ தற்போது அதிகம் பகிரப்படுகிறது.

    வீடியோவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக யூடியூபர் சவுக்கு சங்கரும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது இதே பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து யூடியூபர் சவுக்கு சங்கர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

    அந்த வீடியோவில், "தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கள்ளசாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக உள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன். இவரது தொகுதியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் 50 வீடுகளை சேர்ந்த கிராமங்கள் உள்ளன. அங்கு சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆதரவு தருபவர் உதயசூரியன். கல்வராயன் மலைப்பகுதியின் மற்றொரு பகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன். இவர்கள் ஆதரவோடு, காவல்துறை ஆதரவுடன் இந்த சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த கள்ளச்சாராய சாவுக்கு காரணம் செந்தில் பாலாஜி என்று தான் கூறுவேன்," என்று தெரிவித்துள்ளார்.

    கள்ளச்சாராய விவகாரம் குறித்து ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் அரங்கேறுவது தொடர் கதையாகி வருகிறது. இவை தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது.

    • தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்ல உள்ளார்.
    • உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலியான நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கள்ளக்குறிச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும், மருத்துவமனையில் இருப்பவர்களை சந்திக்கவும் பிரேமலதா கள்ளக்குறிச்சி செல்கிறார்.

    கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 127 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ச்சியாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரிசையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் என அரசியல் தலைவர்கள் கள்ளக்குறிச்சி செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது.
    • கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது. 50-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. கள்ளச்சாராயத்திற்கு இவ்வளவு பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டன என்பதையே இது காட்டுகிறது.

     கடந்தகால தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது தான் நல்ல அரசுக்கு அழகு. அதன்படி, கடந்த ஆண்டு மே மாதத்தில் மரக்காணம், மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிகழ்விலிருந்து தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராய விற்பனையை தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய அரசு தவறிவிட்டது. மாறாக, சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில், அதில் இது குறித்து எதிர்க்கட்சிகள் சிக்கல் எழுப்பும் என்பதால், இந்த விவகாரத்தை மூடி மறைக்க அரசு முயன்றது. ஒருகட்டத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த பிறகு தான் தமிழக அரசு உண்மையை ஒப்புக்கொண்டது.

    கள்ளச்சாராய வணிகத்தை தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், காவல்துறை கண்காளிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் சரியான நடவடிக்கை தான் . ஆனால், இது போதுமானதல்ல. கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராய சாவுகளுக்கு முக்கியக் காரணம் அங்குள்ள கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு திமுகவினர் கொடுத்த ஆதரவு தான்.

    கல்வராயன்மலையில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் காய்ச்சி, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது. அதற்கு காரணமானவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும் கூட, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ. வேலுவின் ஆதரவாளரான ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளிட்டோர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்ய வைக்கின்றனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கும் காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். கடந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போக மறுத்த காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதனால், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் மேலாக கள்ளச்சாராய சாவு தொடர்பாக இப்போது கைது செய்யப்பட்டுள்ள கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்ற சாராய வியாபாரி, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திமுக அலுவலகம் அருகில் பதாகை வைத்துள்ளார். கள்ளச்சாராய சாவு குறித்த செய்தி வெளியான பிறகு தான் நேற்று மாலை அந்த பதாகை அகற்றப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு சாராய வணிகர்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பு உள்ளது.

    கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு காரணமான சாராய வியாபாரி மருவூர் இராஜாவுடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மஸ்தானுக்கு நெருங்கிய உறவு இருந்தது அம்பலமானது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளில் சாராய வியாபாரி கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவருக்கும் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பது இப்போது உறுதியாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்துவதுடன், கள்ளச்சாராய வணிகத்திற்கு துணை போன அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
    • உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் பலியாகி உள்ள துயர நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.

    கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் உடல் நிலை மோசமாக உள்ளதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தஞ்சை மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

    தற்போது மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

    கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

    காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் மதுவினால் அதிகரிக்கும் சமூக குற்றங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதும் வேதனை தருகிறது.

    உயிர் இழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்து உயிர்களைக் காப்பாற்றுமாறு மருத்துவத் துறையினரைக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    • இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கள்ளச்சாராய பலி அரசு நிர்வாகத்தில் அலட்சியம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

    கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

    இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்திக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். சட்டசபையின் இன்றைய நிகழ்வில் பங்கேற்ற பின்னர் கள்ளக்குறிச்சிக்கு அவர் செல்ல உள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி இன்று செல்கிறார்.

    மேலும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது.
    • 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் மாலை நேரத்தில் கடை வீதியில், பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. இப்படி விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் அதிகமாக கலக்கப்பட்டதால், அதனை குடித்து 33 பேர் உயிரிழந்துள்ளனர். 90க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அங்குள்ளவர்களிடம் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதும், அதனை அவர்கள் வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

    கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில் 5, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கள்ளச்சாராய பலி காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனை முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிவிரைவு, ஆயுதப்படை என ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
    • கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 103 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி செல்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளச்சாராயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் அலுவல் பணிகள் முடிந்த பிறகு, தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

    • கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடை பாரில் அரசு நிர்ணயித்த நேரத்தை மீறி, இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக கலப்பட மது விற்பனை நடைபெறுவதாகவும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற சம்பவத்தை போல சின்னியகவுண்டம்பாளையத்திலும் நடைபெறாமல் இருக்க, சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மது விற்பனையை காவல்துறையினர் முழுமையாக தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வித்ய பிரகாஷ், என்ற வாலிபர் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து பணிக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி வித்ய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×