search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கள்ளச்சாராய உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை
    X

    கோப்புப்படம் 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கள்ளச்சாராய உயிரிழப்பு 29 ஆக அதிகரிப்பு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை

    • 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 80 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில், கள்ளச்சாராயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இன்று துவங்கும் சட்டப்பேரவை கூட்டம் மற்றும் அலுவல் பணிகள் முடிந்த பிறகு, தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

    ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ. வேலு, பொன்முடி மற்றும் காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி, மதுவிலக்கு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×