என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvsNZ"

    • நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. இதில், நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ், பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    இதில், தற்போது இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பனி மூட்டம் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
    • நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது. 

    • விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.
    • நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்களை விளாசி அவுட் ஆனார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும்.

    இவருடன் ஆடிய சுப்மன் கில் 65 பந்துகளில் 79 ரன்களை குவித்த நிலையில், காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-வது சதத்தை அடித்த விராட் கோலி 117 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். 

    ஷ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 105 ரன்களையும், கே.எல். ராகுல் 39 ரன்களையும் குவிக்க, இந்திய அணி போட்டி முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களை குவித்துள்ளது. நியூசிலாந்து சார்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், போல்ட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    • இலங்கை தொடரின்போது கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது.
    • கடைசி இரண்டு போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.

    நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 16-ந்தேதி பெங்களூருவில தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் புனேவில் அக்டோபர் 24-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நவம்பர் 1-ந்தேதியும் தொடங்குகிறது.

    இந்தியா தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரண்டிலும் தோல்வியை தழுவியது.

    இந்த தொடரின்போது நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சனுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த காயம் குணமடையாத காரணத்தால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்குப் பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மைக்கேல் பிரேஸ்வேல் முதல் போட்டியில் விளையாடுவார். 2-வது போட்டியின் போது அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்து திரும்பிவிடுவார். அவருக்குப் பதிலாக இஷ் சோதி அணியில் இணைவார்.

    இலங்கையிடம் தோல்வியடைந்த காரணத்தில் டிம் சவுத்தி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் டாம் லாதம் தலைமையில் நியூசிலாந்து அணி இந்தியாவில் விளையாடுகிறது.

    • பெங்களூரு டெஸ்டில் சர்பாராஸ் கான் 150 ரன் விளாசினார்.
    • சுப்மன் கில் அணிக்கு திரும்புவதால் 2-வது டெஸ்டில் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் விளையாடவில்லை. சர்பராஸ் கான் அணியில் இடம் பிடித்தார். முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது. இதற்கு சர்பாராஸ் கான் விளாசிய 150 ரன்கள் முக்கியமானதாகும்.

    2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாட சுப்மன் கில் தயாராகிவிட்டார். இதனால் சர்பராஸ் கான் நீக்கப்படலாம். அதேவேளையில் கே.எல். ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சரியாக விளையாடவில்லை. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் நீக்கப்படலாம்.

    ஆனால் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகம் கே.எல். ராகுலை நீக்காது எனத் தெரிகிறது. இதனால் சர்பராஸ் கான் வெளியே இருக்க வாய்ப்புள்ளது.

    இதற்கு முன்னதாக 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் கருண் நாயர் முச்சதம் விளாசினார். ஆனால் அதன்பிறகு டெஸ்ட் போட்டியில் அவருக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    கருண் நாயர் அந்த போட்டியில் ரகானேவிற்குப் பதிலாக களம் இறக்கப்பட்டார். அடுத்த போட்டிக்கு ரகானே தயாரானதால் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை.

    சேவாக்கிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர்தான். இருந்தபோதிலும் அதன்பிறகு அவரது டெஸ்ட் வாழ்க்கை மங்கிப்போனது.

    அதேபோல் சர்பராஸ் கானை வெளியில் வைக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது. அவர் ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என இந்திய முன்னாள் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில் "அங்கு ஒரு கோட்பாடு உள்ளது. கருண் நாயர் 300 ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அவர் நீக்கப்பட்டார். ஏன்?. ஏன் என்றால் அவர் ரகானோ இடத்தில் களம் இறங்கினார். ரகானே மீண்டும் அணிக்கு திரும்பியதும், கருண் நாயர் வெளியில் உட்கார வைக்கப்பட்டார். அதனோடு அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.

    இந்த கோட்பாட்டின்படி, சர்பராஸ் கான் வெளியில் உட்கார வைக்கப்படுவார். அது நடக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது முக்கியமான விசயம், வெளிப்புறத்தில் இருந்து சர்பராஸ் கானுக்கு சாதகமான ஆதரவு வெளிப்புறத்தில் இருக்கிறது" என்றார்.

    • சர்பராஸ் கான் இந்திய அணியில் நீட்டிக்கப்பட்டுள்ளார்.
    • கே.எல். ராகுல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    முதல் போட்டியில் விளையாடாத சுப்மன் கில் 2-வது போட்டியில் இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியானது. இதனால் சர்பராஸ் கான் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இந்திய அணியில் குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், முகமது சிராஜ் ஆகிய மூன்று பேர் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டதை கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "காயம் தொடர்பான கவலையைத் தவிர்த்து மற்றபடி பெரும்பாலான அணிகள் மூன்று மாற்றங்கள் செய்யும் என பார்க்கவில்லை.

    வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டது, இந்திய அணியின் பேட்டிங் குறித்து கவலைப்படுவதை சொல்கிறது. அவருடைய பந்து வீச்சை தவிர்த்து, பின்கள பேட்டிங் வரிசையை வசதியாக்க அவருடைய பேட்டிங் தேவைப்படுகிறது. நியூசிலாந்தின் இடது கை பேட்டிங் வரிசை குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால் நான் குல்தீப் யாதவை தேர்வு செய்திருப்பேன். இடது கை பேட்ஸ்மேன்களை அவரால் கட்டுப்படுத்த முடியும்.

    • சுப்மன் கில் 66 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார்.
    • ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் அடித்தார்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சால் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் வில் யங் 71 ரன்னும், டேரில் மிட்செல் 82 ரன்னும் அடித்தனர்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், ரோகித் சர்மா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 84 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    5-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். கில் 31 ரன்னுடனும், ரஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கில் நிதானமாக விளையாட ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 66 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் இந்தியா காலை 10.45 மணி நிலவரப்படி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. கில் 62 ரன்களுடனும், பண்ட் 55 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது.
    • மும்பை டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளித்தது குறித்து பி.சி.சி.ஐ. கடுமையாக பாய்ந்தது.

    நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது. 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனது.

    இந்த தோல்வி காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் நியூசிலாந்து ஒயிட்வாஷ் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) 6 மணி நேரம் ஆய்வு நடத்தியது. பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் கம்பீர், தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். கம்பீர் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் ரோகித் சர்மா, கம்பீர் ஆகியோர் மீது கிரிக்கெட் வாரியம் அதிருப்தி அடைந்து கடுமையான கேள்விகளை எழுப்பியது. மும்பை டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு அளித்தது குறித்து பி.சி.சி.ஐ. கடுமையாக பாய்ந்தது. நியூசிலாந்து தொடர் முழுவதும் அணி நிர்வாகம் எடுத்த சில முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பியது. கம்பீரின் பயிற்சி அணுகுமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி செயல்படும் விதம் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    • நியூசிலாந்து தோல்வியை போல் வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன்.
    • அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை.

    நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என இழந்து முதன்முறையாக சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது. இதனால் இந்திய அணி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது.

    இந்த நிலையில் முதன்முறையாக அஸ்வின் நியூசிலாந்து தொடர் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

    இது தொடர்பாக அஸ்வின் கூறியதாவது:-

    நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் நாங்கள் தோல்வியடைந்தோம். இதுபோல வரலாற்றில் எப்போதும் இந்தியாவில் நடந்ததில்லை என்று நான் படித்தேன். அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று உண்மையில் எனக்குத் தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் என்ன செய்வதென்று கூட எனக்கு புரியவில்லை. எனது தொழில் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை அனுபவத்தில் இது ஒரு சிதறடிக்கும் அனுபவமாக இருந்தது.

    நான் இந்த தோல்விக்கு மற்றவர்களை குறைகூறும் நபர் அல்ல. முதலில் நான் என்னிடமே அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். பந்துவீச்சை விட கடைநிலை பேட்டிங்கில் என்னால் ரன்கள் அடிக்க முடியவில்லை என்பதுதான் பெரிய வேதனையாக இருந்தது.

    கடைசியாக ரன்கள் அடிப்பது எப்போதும் அணிக்கு தேவையானதாக இருந்தது. பல நல்ல தொடக்கம் கிடைத்தும் நான் என்னுடைய விக்கெட்டை தவறான நேரத்தில் இழந்தேன். கடைசி டெஸ்ட் போட்டியில் கூட வெற்றிக்கு குறைவான ரன்கள் இருந்தபோது தவறாக விக்கெட்டை இழந்தேன். இந்த பெரிய தோல்விக்கு நானும் ஒரு காரணம்.

    வீரர்களான எங்களுக்கு எந்தவிதமான வேதனையும் இல்லை, பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் விமர்சங்களை வைத்தனர். எனக்கு புரிகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரிய வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் உங்கள் எல்லோரையும் விட அணியின் வீரர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வலியும், வேதனையும் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்து அணி 155 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்ததையடுத்து இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
    கான்பூர்:

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்த நிலையில், நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது. பின்னர் 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது டிக்ளேர் செய்தது. இதனால் மொத்தம் 283 ரன்கள் இந்தியா முன்னிலைப் பெற்றது. 

    இதையடுத்து  284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் ஆட்டநேர முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 2 ரன்களுடனும், வில்லியம் சோமர்வில் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    அரை சதம் அடித்த டாம் லாதம்

    இன்று கடைசி நாள் ஆட்டத்தின்போது, 279 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் இன்று களம் இறங்கினர். இந்திய ஆடுகளத்தில் கடைசி நாள் ஆட்டத்தில் 279 ரன்கள் எடுப்பது மிகவும் கடினம். இதனால் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டது.

    ஆனால், மதிய உணவு இடைவேளை வரை முதல் செசனில் டாம் லாதம், வில்லியம் சோமர்வில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அஸ்வின், அக்சார் பட்டேல், உமேஷய் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் மாறிமாறி ஓவர்கள் வீசியும் பலன் அளிக்கவில்லை.

    நியூசிலாந்து அணி மதிய உணவு இடைவேளை 35 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் சேர்த்திருந்தது. அதன்பின்னர் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பத் தொடங்கியது. சோமர்வில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த டாம் லாதம் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. 

    வில்லியம்சன் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ஜடேஜா

    கேப்டன் வில்லியம்சன் 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். பின்வரிசை வீரர்களும் விரைவில் ஆட்டமிழந்தனர். 155 ரன்களில் 9  விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், கடைசி விக்கெட் ஜோடியான அஜாஸ் பட்டேல், ரச்சின் ரவீந்திரா இருவரும் நங்கூரம் போல் நிலைத்து நின்றனர். அவர்களின் விக்கெட்டை வீழ்த்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் பலனில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி டிராவில் முடிந்தது. 

    இப்போட்டியில் நியூசிலாந்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் ரச்சின் ரவீந்திரா. நீண்ட நேரம் களத்தில் நின்ற இவர் 91 பந்துகள் தாக்குப்பிடித்து ஆடினார். 
    ×