என் மலர்
நீங்கள் தேடியது "inspection"
- அரசு மாதிரி பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் நேரடி ஆய்வு செய்தார்.
- ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் கீழக்கண்டனியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் அரசின் மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டகலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் கல்விகற்றல் குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தார்.
பள்ளியில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்று அவர், அங்கு மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஆய்வின்போதுமாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் இந்திய அளவிலான நுழைவு தேர்வு தயார் செய்யும் விதமாக கடந்த செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினத்தன்று மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகளை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அதில் சிவகங்கை கீழக்கண்டனி அரசு மாதிரி பள்ளியும் ஒன்று. இதில் 77 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு உணவு விடுதி, கட்ட மைப்பு வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ள இந்த பள்ளிகள் தொடங்கப்ப ட்டுள்ளது. திறன்மிக்க ஆசிரியர்களை வைத்து இங்கு பாடங்கள் கற்பிக்க ப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வின்போது முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், ஒருங்கி ணைப்பாளர் காளிதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறிவுறுத்தினார்
ஆறுமுகநேரி:
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் நம் பள்ளி நம் பெருமை என்ற ஆய்வுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள 6-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 1 வகுப்பு மாணவி களிடம் பாடங்கள் தொடர்பான வினாக்களை கேட்டறிந்தார்.பின்னர் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும் மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறி வுறுத்தினார். மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வசதிக்காக பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஆதவா தொண்டு நிறு வன தலைவருமான பால குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பாராட்டினார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் அன்று நான்கு பிரசவங்கள் நடந்தது. அதில் ஒருவருக்கு மட்டுமே சுகப்பிரசவம்ஆன நிலையில் 3 நபர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.
இவர்களை இணை இயக்குனர் பிரேமலதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், பிரசவ அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர், செவிலியர்கள், சுகாதார பார்வையாளர் மற்றும் அனைத்து பணி யாளர்களும் உடன் இருந்தனர்.
- முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர்.
- திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விழுப்புரம்.
புதுச்சேரியில் இருந்து நேற்று திண்டிவனத்திற்கு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் இணையத்பாஷா தலைமையில் பே45ாலீசார், திண்டிவனம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது, ரோஷணை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட முருங்கப்பாக்கம் தனியார் பள்ளி அருகில் அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் 48 மதுபாட்டில்களை கொண்ட 20 அட்டைப்பெட்டிகளில், மொத்தம் 1,960 மதுபாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து, திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த முருகன் என்பவர் கடத்தி வந்தது தெரிய வந்தது.
மதுபாட்டில்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரமாகும். அதன் பேரில் கார் ஓட்டி வந்த முருங்கப்பாக்கம் சிவசக்தி நகரை சேர்ந்த கெஜராஜ்(வயது34) என்பவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், இவர் மீது ரோஷணை, கிளியனூர், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவில், ஏற்கனவே மதுகடத்தல் வழக்கு இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
- திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
அனுப்பர்பாளையம்:
திருமுருகன்பூண்டி பேரூராட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நகராட்சி பணிகளில் தொய்வு ஏறபட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகராட்சி தலைவர் குமார் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித்துறை நிர்வாக இயக்குனர் பொன்னையனை சென்னையில் சந்தித்து நகராட்சிக்கு தேவையான வசதிகள் குறித்து கோரிக்கை மனு வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் ராஜன், யுவராஜ், மதிவாணன், சுப்பிரமணியம், நடராஜ் உள்பட மேலும் ஒரு சில கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர், அதிகாரிகள் நியமனம், சாலை, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாக்கடை கால்வாய் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்காக இயக்குனர் ராஜனிடம் கோரிக்கைகளாக வைத்தனர்.
மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளிலும் இந்த பிரசசினை இருப்பதாகவும், அடுத்த சனிக்கிழமைக்குள் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
- வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்தார்.
- கண்காணிப்பு அலுவலர் மேற்கொண்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகளில் இணையதளம் வாயிலாக 33,043 மனுக்களும், நேரடியாக 24,183 மனுக்களும் என மொத்தம் 57,226 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் பெயர் சேர்க்க 25,777 மனுக்களும், பெயர் நீக்க 23,180 மனுக்களும், திருத்தம் மேற்கொள்ள 8,269 மனுக்களும் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மனுக்களின் உண்மைத்தன்மை குறித்தும், வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் வள்ளலார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை சின்னப்பாநகர் முதலாம்வீதி, மாலையீடு சண்முகா நகர் மற்றும் வாகவாசல் கிராமம் ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தாசில்தார்கள், நகராட்சி ஆணையர்கள் ஆகியோர்களுடன், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), மாரி (பொறுப்பு) (இலுப்பூர்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், தேர்தல் தாசில்தார் கலைமணி, தாசில்தார்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்."
- பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.
- துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம்ஷா பேருராட்சியில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளையும் உதவி செயற்பொறியாளர், பேருராட்சி தலைவர் வள்ளி, செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருடன் கூட்டாக ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது துணைத்தலைவர் யூனுஸ் உள்பட அனைத்து உறுப்பினர்களும் இருந்தனர்பாடந்துறை பகுதியில் நடைபெற்ற சிறப்பு துப்புரவு பணியினையும், ஆலம்வயல் பகுதியில் நடைபெற்ற வரிவசூல் பணியினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தேவர்சோலை பேரூராட்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு இம்மாத இறுதியில் புதியபஸ் நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி தலைவர் வள்ளி மற்றும் செயல்அலுவலர் முகம்மது இப்ராகிம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நபார்டு திட்ட பணியினை ஆய்வு செய்து உடன் முடித்திட இளநிலை பொறியாளர் வின்சென்ட் மற்றும் சேகர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார்.
- காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தினையும் கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு ,கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
- அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மருந்து கிடங்கினை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தென்காசி ஊராட்சி ஒன்றியம், காசி மேஜர்புரம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மூலம் ஊரணியில் அமைக்கப்பட்ட சிறு குளம் , படித்துறை மற்றும் தடுப்பு சுவர் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும், ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அப்போது பொது சுகா தார துணை இயக்குநர் முரளிசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம் என்று மேயர் கூறினார்.
நெல்லை:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பஸ் நிலையம் புதுப்பிக்கப்பட்டது.
மேயர் ஆய்வு
இதனை கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் இன்று புதிய பஸ்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் ஜகாங்கீர் பாதுஷா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பிளாட்பாரங் கள் சுத்தமாக வைக்கப்பட்டுள் ளதா? கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து கடைகளின் முன்பு கூரை அமைத்தவர்களை உடனடியாக அகற்றவும், பழக்கடைகளில் அழுகிய பழங்களை விற்க கூடாது எனவும் டீக்கடைகளில் பஜ்ஜி உள்ளிட்ட பண்டங்களை வாழை இலைகளில் வழங்கவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முதல் தளத்தில் அறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேயர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஓய்வறை
புதிய பஸ்நிலையத்தை ஆய்வு செய்து நடைபாதை வரை கடைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளோம். டீக்கடைகளில் சுகாதாரமான முறையில் தரமான உணவுகளை வழங்க உத்தரவிட்டுள்ளோம். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.
இரவு நேரங்களில் புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு செய்த போது பெண்கள், முதியவர்கள், பிளாட்பாரங்களில் படுத்திருப்பது காண முடிந்தது. எனவே அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் புதிய பஸ்நிலையதில் முதல் தளத்தில் ஓய்வறைகள் விரைவில் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
இங்கு தங்குபவர்கள் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையை காண்பித்து தங்க அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு வாடகை வாங்கலாமா அல்லது இலவசமாக வழங்கலாமா என ஆய்வு செய்து வருகிறோம்.
டெங்கு காய்ச்சலை தடுக்க மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து தவறான சிகிச்சை அளித்த 38 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 84 பணிகள் மேற்கொள்ளப்பட்டு 62 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. 22 பணிகள் நடந்து வருகிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகிறது. இதனை அகற்றி அந்த சுவர்களில் அரசு திட்டங்கள் குறித்து விளம்பரங்களை எழுத முடிவு செய்துள்ளோம். பழைய பேட்டை பகுதியில் சரக்கு முனையம் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
இதில் குளிர்சாதன கிடங்கு அமைக்கப்பட்டு தற்போது பரிசோதனை நடந்து வருகிறது. இன்னும் 20 நாட்களில் அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி கூறும் போது, மாநகரில் 4 மண்டலங்களில் சாலைகளில் சுற்றித்திரிந்த 160 மாடுகள் இதுவரை பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 97 மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
மற்ற மாடுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இதுவரை மாடுகள் ஏலம் மற்றும் அபராதம் மாநகராட்சிக்கு ரூ.10 லட்சம் கிடைத்துள்ளது. இந்த தொடர் நடவடிக்கையால் மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை 60 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.
- பணியை பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
- அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல் துறை திருச்சி சரக துணை தலைவர் சரவணசுந்தர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். அப்போது காவல் துறை வாகனங்கள், காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரின் பணியை பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
- மீன்-இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்
- முத்திரையிடாமல் எடை அளவுகள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டால் ரூ. 5 ஆயிரம் முதல் அபராதம் விதிக்கப்படும்
கரூர் :
கரூர் சட்டமுறை எடை அளவுகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரியும், தொழிலாளர் உதவி ஆணையருமான ராமராஜ் தலைமையில் சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அதிகாரி தங்கையன் மற்றும் போலீசார் கரூர் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் உள்ள மின்னணு தராசுகள், விட்ட தராசுகள், மீசை தராசுகள் மற்றும் எடை கற்கள் ஆகியவை முத்திரை இடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் சட்டத்துறை எடை அளவு சட்டம் 2009 மற்றும் அமலாக்க விதிகள் 2011 கீழ் மறு முத்திரை இடப்படாத எடை அளவுகள், மறுபரிசீலனைச் சான்று காட்டி வைக்கப்படாமல் சோதனை எடை கற்கள் வைத்திருப்பது தொடர்பாக 20 கடைகளில் கூட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் முத்திரை இடாத தராசுகள் மற்றும் எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அபராதம் விதிக்கப்படும் மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாதது தொடர்பாக இசைவு தீர்வு கட்டண அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முத்திரையிடாமல் எடை அளவுகள் பயன்படுத்துதல் கண்டறியப்பட்டால் ரூ. 5 ஆயிரம் முதல் அபராதம் விதிக்கப்படும். எனவே வியாபாரப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் எடை அளவுகள் உரிய காலத்தில் மறுபரிசீலனை செய்து அரசு முத்திரை இட வேண்டும் என்று கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.
- மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வெண்கலச் சிலை அமைய உள்ள இடத்தில் சிலைவைக்க பீடம் அமைக்கும் பணி மற்றும் தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் அமைய உள்ள இடம், சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2010ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.
இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றது. இதணை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ47,02,500க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சரவணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாலரவிக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.