என் மலர்
நீங்கள் தேடியது "Iphone"
- ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
- ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பற்றிய புது தகவல் வெளியானது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ் விவரங்கள் ஏற்கனவே பலமுறை வெளியாகி விட்டது. தற்போது ஐபோன் சீரிஸ் வெளியீடு நெருங்கி வருவதை அடுத்து, மேலும் அதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 2023 ஐபோன் மாடல்கள் டிசைன் மற்றும் ஹார்டுவேரில் அதிக மாற்றங்களை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் பழைய மியூட் ஸ்விட்ச் நீக்கப்பட்டு, புதிய பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற தகவல் வெளியாவது இதுவே முதல் முறை ஆகும்.

ஐபோனின் பாதுகாப்பு கேஸ் புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டு இருக்கும் ஐபோன் கேஸ் புகைப்படங்களில், இதன் டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதன்படி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் மியூட் ஸ்விட்ச் பட்டன் பொருத்தப்படும் இடம் மாற்றப்பட இருக்கிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆப்பிள் நிறுவனம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மாற்றத்தை மேற்கொள்ளும். ஐபோன் கேஸ் ரென்டர்களில் புதிய ஐபோன் சற்று அகலமான, வட்ட வடிவம் கொண்ட பட்டன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் மியூட் ஸ்விட்ச்-க்கு மாற்றாக பிரத்யேக கஸ்டம் பட்டன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஐபோன் மாடலில் கேமராவை இயக்கவும், போனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய புதிய பட்டன் வழங்கப்படுகிறது. மேலும் புதிய ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா பம்ப் சற்றே பெரியதாக இருக்கும் என்றும், இதில் மேம்பட்ட கேமரா சென்சர்கள் வழங்கப்படுகின்றன.
- 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்
- விஸ்ட்ரான் தொழிற்சாலையின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான டாடா குழுமம், அடுத்த மாதம் விஸ்ட்ரான் கார்பரேசனின், ஐபோன் தொழிற்சாலையை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்யவிருக்கிறது. ஒரு இந்திய நிறுவனம் ஐபோனை தயாரிக்கும் (assembly of iPhones) துறையில் நுழைவது இது முதல் முறையாகும். இதன்மூலம் ஐபோன் தயாரிக்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறப்போகிறது.
தெற்கு கர்நாடகாவில் தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட விஸ்ட்ரான் கார்பரேசன் நிறுவனத்தின் தொழிற்சாலை ரூ.5 ஆயிரம் கோடிக்கும் ($600 மில்லியன்) அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் ஐபோன் 14 மாடலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை வாங்க டாடா குழுமம் ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது.
விஸ்ட்ரான், 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், சுமார் ரூ.15 ஆயிரம் கோடி ($1.8 பில்லியன்) மதிப்பிலான ஐபோன்களை தங்கள் தொழிற்சாலையிலிருந்து அனுப்ப உறுதியளித்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் ஆலையின் பணியாளர்களை மும்மடங்காக்கவும் திட்டமிட்டுள்ளது. விஸ்ட்ரான் இந்தியாவை விட்டு வெளியேறும் போது, டாடா ஒப்பந்தத்தின்படி செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த 2-வது காலாண்டில், விஸ்ட்ரான் இந்தியாவில் இருந்து சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் டாடா, விஸ்ட்ரான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் செய்தித்தொடர்பாளர்கள் இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
தமிழ்நாட்டில் டாடா குழுமம், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் அதன் தொழிற்சாலையில் ஐபோன் சேஸிஸ் எனப்படும் முக்கிய பாகத்தை உருவாக்கி வருகிறது.
கோவிட் முடக்கம் மற்றும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் ஆகிய காரணங்களால் சீனாவை சார்ந்திருக்கும் நிலையிலிருந்து விலகும் முயற்சிகளை ஆப்பிள் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது.
உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை விரிவுபடுத்தும் வகையில் லாபகரமான நிதிச்சலுகைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி அரசு திட்டங்களை வகுத்ததில் இருந்து உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது.
டாடா குழுமத்தின் இந்த முயற்சி உறுதியானால் உலகின் தொழிற்சாலை என்ற சீனாவின் தற்போதைய நிலையை மாற்ற மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைக்கும்.
- இதன் அரிதான தன்மைதான் ஐபோன் விரும்பிகளிடையே அதற்கு ஒரு மதிப்பை உண்டாக்கியிருக்கிறது.
- மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போன் 2007ம் வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டது.
முதல் தலைமுறை போன் எனப்படும் 2007ம் வருட ஐபோன் ஒன்று சுமார் ரூ.1 கோடியே 56 லட்சத்திற்கு ($190373) ஏலம் போயிருக்கிறது.
இந்த ஐபோனின் அசல் விலையான சுமார் ரூ.50,000ஐ விட தற்போது ஏலம் போன தொகை 300 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
"4 ஜிபி மெமரி கொண்ட இந்த ஐபோன், வாங்கும்போது இருந்த தொழிற்சாலை பேக்கிங்குடன், நல்ல தரமான நிலையில் இருக்கிறது. இது ஒரு கிடைத்தற்கரிய உயர் ரக சேகரிக்கும் பொருள்", என எல்சிஜி ஆக்சன்ஸ் எனும் இணைய ஏல நிறுவனம் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தது.
ஏலம் தொடங்கியபோது, சுமார் ரூ.80,000 ($10,000) என முதலில் கேட்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியான ஏலத் தொகை உயர்ந்து உச்சத்தை எட்டியது. இந்த ஏலத்தில் 28 போட்டியாளர்கள் இருந்தனர்.
"இதன் அரிதான தன்மைதான் ஐபோன் விரும்பிகளிடையே அதற்கு ஒரு மதிப்பை உண்டாக்கியிருக்கிறது. இதன் தொடு திரைக்கோ அல்லது பொத்தான்களுக்கோ எந்த குறைபாடும் இல்லாமல் இருந்தது மற்றொரு அரிதான விஷயம். இதன் உரிமையாளர் இந்த மாடல்கள் தயாரிக்கப்படும் போது ஆப்பிளின் தொழிற்சாலையில், அதன் பொறியியல் பிரிவில் வேலை செய்து வந்தார்" என ஏல நிறுவனம் தெரிவித்தது.
16 வருடத்திற்கு முன்பு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்ஸிஸ்கோவில் ஜனவரி 2007ல் மேக்வேர்ல்ட் நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் அப்போதைய தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த ஐபோனை அறிமுகப்படுத்தும் போது, "இந்த ஐபோனை ஆப்பிள் இன்று மீண்டும் புதிதாக கண்டெடுத்திருக்கிறது" என கூறினார்.
மிகுந்த வரவேற்பை பெற்ற இந்த போன் 2007ம் வருடத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக டைம் பத்திரிக்கையால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு குறைந்துபோன விற்பனையினாலும், 8 ஜிபி மெமரியுடன் அடுத்த வடிவம் வந்ததாலும் இதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.
- குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
- போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா அருகே உள்ள கங்காநகர் பனிஹத்தி பகுதியில் அந்த தம்பதி வசித்து வருகிறார்கள். அவர்கள் கடந்த சில வாரங்களாக தங்கள் குழந்தையின்றி நடமாடுவது குறித்தும், ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றித்திரிவது குறித்தும் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரிப்பதை அறிந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டார். குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.
ஒரு மாதத்திற்கு முன்பாக அந்த தம்பதி தங்களது 8 மாத ஆண் குழந்தையை ஒருவரிடம் விற்றுள்ளனர். அதில் கிடைத்த பணத்தில் ஐபோன்-14 என்ற நவீன மாதிரி போனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று உல்லாசமாக வாழ்ந்துள்ளனர்.
அத்துடன் புதிதாக வாங்கிய செல்போனில் வீடியோ காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.
"இதுகுறித்து எங்களுக்கு கடந்த 24-ந் தேதிதான் புகார் வந்தது. குழந்தையை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை எவ்வளவு பணத்திற்கு விற்றார்கள், யாரிடம் விற்றார்கள் என்பது பற்றிய விவரங்கள், அந்த பெண்ணின் கணவரை பிடித்தால்தான் தெரியவரும். இது தொடர்பாக அவளது கணவரையும், குழந்தையை வாங்கியவர்களையும் தேடி வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்தனர்.
- ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் இடம்பெற்று இருக்கலாம்.
- இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் வெளியீட்டு தேதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் தேதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கோப்புப் படம்
அந்த தேதியில் எந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த தேதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மாடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
- இந்நிறுவனத்தை தொடங்கிய கவ், 2019ல் தலைமை பதவியை துறந்தார்
- இதுவரை அரசியலில் அவரால் பெரும் வெற்றி பெற முடியவில்லை
அமெரிக்காவின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள், அதன் பிரபலமான ஐபோனை தயாரிக்க உலகெங்கும் பல நிறுவனங்களை ஒப்பந்ததாரர்களாக நியமித்துள்ளது. இவற்றில் முன்னணியில் இருப்பது சீனாவிலும், தைவான் நாட்டிலும் உள்ள தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோன் ஹாய் பிரஸிஷன் நிறுவனம்.
உலகெங்கிலும் இந்நிறுவனம், ஃபாக்ஸ்கான் எனும் பெயரில் தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகம், ஜப்பான் நாட்டின் நிண்டென்டோ வீடியோ கேம் உட்பட உலகின் பல நிறுவனங்களுக்கு மின்னணு பொருட்களை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தை டெர்ரி கவ் எனும் தைவான் நாட்டின் கோடீசுவரர் 1974ல் தொடங்கினார். தனது உழைப்பால், முன்னணி நிறுவனமாக இதனை முன்னேற்றிய கவ், 2019ல் தனது தலைமை பதவியை துறந்தார். இவருக்கு தற்போதைய வயது 72. அதற்கு பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த போதிலும் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், வரும் 2024 ஜனவரி மாதம் தைவான் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் எந்க கட்சியையும் சாராத சுயேட்சை வேட்பாளராக போட்டியிட போவதாக கவ் அறிவித்துள்ளர்.
தைவானின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் 2022 ஆம் ஆண்டு 6வது இடத்தை பிடித்த டெர்ரி கவ், பல தசாப்தங்களாக பொது வெளியில் தனது கருத்துக்களை அஞ்சாமல் கூறும் வழக்கம் கொண்டவராக கருதப்படுகிறார்.
வெற்றி பெறுவதற்காக தனது தேர்தல் அறிக்கையில் அவர் கூறப்போகும் திட்டங்களை குறித்து யூகங்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
- குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.
- புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைப்பு.
புனே மாவட்டத்தில் உள்ள குடோனின் ஷட்டரை உடைத்து ரூ. 65 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை திருடியதாக 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜார்க்கண்டை சேர்ந்த தோபாஜுல் குர்ஷித் ஷேக் என்றும் மும்பை காவல்துறையின் குற்றப் பிரிவின் மிரட்டி பணம் பறித்தல் தடுப்புப் பிரிவினரால் மஸ்ஜித் பந்தர் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தோபாஜூல் குர்ஷித் கடந்த ஜூலை 15ம் தேதி புனே அருகே வாகோலி பகுதியில் உள்ள குடோனுக்குள் புகுந்து 105 ஐபோன்களை திருடியதாக கூறப்படுகிறது.
இதைதொடர்ந்து, குர்ஷித் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரிக்கும் புனே மாவட்டத்தில் உள்ள லோனிகண்ட் காவல் நிலையத்தில் குர்ஷித் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- புதிய ஐபோனை வாங்க பல வாடிக்கையாளர்கள் மும்பை விரைந்தனர்.
- சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு.
உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு வாடிக்கையாளர்கள் புதிய ஐபோன் 15-ஐ வாங்க காத்திருந்தனர். ஐபோன் 15 கிடைக்க அவர்கள் எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ஆகும் போது, இரு வாடிக்கையாளர்கள் கோபமுற்றனர். இது தொடர்பாக விற்பனையாளர்களிடம் நடந்த பேச்சுவார்த்தை, மோதலில் நிறைவுற்றது. சம்பவத்தின் போது, ஐபோன் 15 கிடைக்க தாமதமானதால் கடையில் பணியாற்றிய விற்பனையாளரை தாக்கினர்.
வடக்கு டெல்லியில் உள்ள கம்லா நகர் சந்தையில் உள்ள ஐபோன் விற்பனை மையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக இரு வாடிக்கையாளர்கள் மீதும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக ஆமதாபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் மும்பைக்கு சென்று புதிய ஐபோனை வாங்க விரைந்தனர் என்று தகவல்கள் வெளியாகின. மேலும் புதிய ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ் உள்ளிட்டவைகளை ஆப்பிள் ஸ்டோரில் (பி.கே.சி.) வாங்க வரிசையில் காத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க நீதித்துறை கூகுள் மீது "ஆன்டி டிரஸ்ட்" வழக்கு பதிவு செய்துள்ளது
- எங்களால் சந்தையில் கால் பதிக்கவே முடியவில்லை என்றார் நாதெல்லா
அமெரிக்க வியாபார நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதற்காக, நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தால், பிற நிறுவனங்களின் எதிர்காலம் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால் அத்தகைய நிறுவனங்களின் மீது அந்நாட்டில் "ஆன்டி டிரஸ்ட்" (antitrust) எனப்படும் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
உலகின் முன்னணி இணையவழி வலைதள தேடுதல் இயந்திரமான கூகுள் (Google) எனும் பிரபல நிறுவனத்தின் மீது அத்தகைய ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.
தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு கூகுள் பல கோடிகள் சட்ட விரோதமாக தந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நீதித்துறையால் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உலகின் மற்றொரு முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
வலைதள தேடுதல் இயந்திரங்களுக்கான சந்தையில் கூகுள் வலைதளத்தின் ஆதிக்கம் பிற போட்டியாளர்களை தலைதூக்கவே அனுமதிப்பதில்லை. அந்நிறுவனத்தின் வியாபார தந்திரங்கள் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள், ஆப்பிள் நிறுவனத்தினரோடு போட்டிருக்கும் ஒப்பந்தங்களினால் எங்கள் வலைதள தேடுதல் இயந்திரமான 'பிங்' (Bing) 2009லிருந்து சந்தையில் ஒரு இடம் பிடிக்க எவ்வளவு முயன்றும் இயலவில்லை. கூகுள் தேடுதல் இயந்திரத்திலிருந்து பெறும் பயனர்களின் விவரங்களை கூகுள் நிறுவனம், தங்களின் தேடுதல் இயந்திரத்தின் விளம்பரத்திற்கே பயன்படுத்தி பெரும் வருமானம் ஈட்டுகிறது. அந்த தொகையை ஆதிக்கத்தை நிலைநாட்ட மீண்டும் செலவிடுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் எங்களின் பிங் சேவையை பயன்படுத்த அனுமதித்தால் அதற்குண்டான செலவினை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், கூகுளின் ஆதிக்கத்திலிருந்து ஆப்பிள் வெளிவர முடியாததால், மைக்ரோசாப்ட், சந்தையிலேயே நுழைய முடியாமல் தவிக்கிறது.
இவ்வாறு நாதெல்லா சாட்சியம் அளித்தார்.
3 தசாப்தங்களுக்கு முன் மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது விண்டோஸ் எனும் இயக்கமுறை மென்பொருளுக்கு (Operating System) இதே போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி சந்தையில் முதலிடம் பிடித்ததை இப்போது கூறி தற்போது அதே நிலைமை தங்களுக்கு வந்ததும் மைக்ரோசாப்ட் புலம்புவதை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் உற்பத்தி செய்ய இருக்கிறது.
- விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.
டாடா குழுமம் உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான ஐபோன்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்து உள்ளார். மேலும் இதே தகவலை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் PLI திட்டம் மூலம் இந்தியா ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு நம்பத்தகுந்த மற்றும் மிகமுக்கிய தளமாக உருவெடுத்து இருக்கிறது. இன்னும் கிட்டத்தட்ட இரண்டறை ஆண்டுகளில், உள்நாடு மற்றும் சர்வதேச சந்தைக்கான ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்ய இருக்கிறது."
"விஸ்ட்ரன் நிறுவனத்தை கைப்பற்றியதற்கு டாடா குழுமத்திற்கு வாழ்த்துகள். இதுவரை வழங்கிய பங்களிப்புகள் அனைத்திற்கு விஸ்ட்ரன் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தியாவில் இருந்து இந்திய நிறுவனங்களை வைத்து சர்வதேச விநியோகத்தை விரிவுப்படுத்த இருக்கும் ஆப்பிள் சரியான முடிவை எடுத்து இருக்கிறது."
"இந்தியாவை சக்திவாய்ந்த மின்னணு தளமாக உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் இலக்கை அடைய உதவுவதற்கும், இந்தியாவில் தங்களது சாதனங்களை நம்பிக்கையாக உற்பத்தி செய்ய முன்வரும் சர்வதேச மின்னணு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச இந்திய மின்னணு நிறுவனங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையான ஆதரவை வழங்கும்," என்று தெரிவித்து இருக்கிறார்.
- பயனர்களின் தரவுகள் மீது தாக்குதல் நடப்பதாக ஆப்பிள், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது
- இதே போன்ற குற்றச்சாட்டு முன்னர் பொய் என தெரிய வந்தது என அமைச்சர் கூறினார்
இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் மற்றும் பவன் கேரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா ஆகியோர் தங்களின் ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வந்ததாக ஒரு குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அந்த செய்தியில், "அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும் ஹேக்கர்கள் சிலரால் உங்கள் ஐபோனில் உள்ள தனிப்பட்ட தகவல் பரிமாற்ற தரவுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் நம்புகிறது. இந்த தகவலை அலட்சியப்படுத்த வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வெளியிட்ட அந்த எம்.பி.க்கள், ஆளும் பா.ஜ.க. அரசு தங்களை வேவு பார்க்க முயல்வதாக குற்றம் சாட்டினர்.
அவர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது கட்சி அலுவலகத்தில் பலருக்கு இவ்வாறு மின்னஞ்சல் வந்துள்ளதாகவும், இதன் மூலம், ஆளும் பா.ஜ.க. அரசு அதானி விவகாரம் உட்பட பல விவகாரங்களில் இருந்து மக்களை திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. தெளிவில்லாமல் இருக்கும் அதன் அறிக்கையில் இந்த தகவல் உண்மையா பொய்யா என்பதை அந்நிறுவனம் உறுதிபடுத்தவோ மறுக்கவோ இல்லை.
இதற்கிடையே மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:
இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக பார்க்கிறது. நடந்தது என்ன என்பது முழுவதுமாக ஆராயப்படும். தாங்கள் ஆட்சியில் இருந்த போது தங்கள் குடும்ப முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்ட சிலருக்கு நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாது. அவர்கள் அனைத்தையும் விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுமார் 150 நாடுகளில் உள்ள பயனர்களுக்கு ஆப்பிள் இத்தகைய குறுஞ்செய்தியும், மின்னஞ்சலும் அனுப்பியுள்ளது. ஆனால், நடந்தது என்ன என்பது குறித்து அந்நிறுவனமே தெளிவான விளக்கத்தை இதுவரை தரவில்லை. முன்னர் ஒரு முறை இதே போன்ற ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நீதிமன்ற மேற்பார்வையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இறுதியில் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என தெரிய வந்தது.
இவ்வாறு அஸ்வினி கூறினார்.
- இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க முடியும்.
- ஐபோன்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதும், அவர் அதிர்ந்து போனார்.
ஆன்லைன் குறைந்த விலை கொண்ட பொருளை ஆர்டர் செய்து, மாறாக விலை உயர்ந்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டு இருக்கிறதா? ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுதலாக ஆர்டர் மாறி டெலிவரி செய்யப்படுவதும், மாற்றப்படுவதும் சாதாரண விஷயமாகி விட்டது. அந்த வகையில், வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்காக நான்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
நான்கு ஐபோன்களை ஆர்டர் செய்தவருக்கு 60 ஐபோன்கள் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. டிக்டாக்கில் லெஜன்ட்ஸ்_கியோ என்ற பயனர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு ஊழியர்களுக்கு ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்-ஐ ஆன்லைனில் ஆர்டர் செயதார். இதில் ஒரு யூனிட் (1 டி.பி.) தனக்கும், மற்ற மூன்று (256 ஜி.பி.) யூனிட்கள் ஊழியர்களுக்காக ஆர்டர் செய்யப்பட்டது.
ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள் தனக்கு டெலிவரி செய்யப்பட்டதும், அவர் அதிர்ந்து போனார். இவர் மொத்தம் 3600 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 763 விலையில் புதிய ஐபோன்களை ஆர்டர் செய்தார். ஆனால் ஆப்பிள் நிறுவனம் இவருக்கு டெலிவரி செய்த ஐபோன்களின் மதிப்பு 96 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 79 லட்சத்து 93 ஆயிரத்து 680 ஆகும்.
ஆப்பிள் நிறுவனம் எப்படி இத்தகைய தவறை செய்திருக்க முடியும் என்று நெட்டிசன்கள் குழப்பத்தில் ஆழந்துள்ளனர். ஆப்பிளிடம் நேரடியாக சாதனங்களை ஆர்டர் செய்பவர்கள் மிகக் குறைந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் எப்படி இவ்வளவு பெரிய தவறு நடந்திருக்க முடியும் என்பது மர்மமாகவே உள்ளது.