என் மலர்
நீங்கள் தேடியது "IT employee"
- வாலிபர் ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
- காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்றுள்ளார்.வஞ்சிபாளையம் பகுதியில் வந்தபோது வாலிபர்ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.சிறிது தூரத்தில் காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.அப்போது ஏற்கனவே அங்கு இருந்த 2 வாலிபர்களும் சேர்ந்து, திடீரென கார்த்திக்கை பணம்கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன கார்த்திக் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
இதையடுத்து மொபைலில்இருந்து கூகுள் பே மூலம் ரூ.90 ஆயிரத்தை 2 பேரின்வங்கி கணக்கிற்கு பிரித்துகார்த்திக் அனுப்பி உள்ளார். பின்னர் 3 பேரும்அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார்வழக்குபதிந்து விசாரணைநடத்தினர்.மேலும் வங்கி கணக்குஎண் மற்றும் செல்போன்எண்களை கைப்பற்றி விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது வஞ்சிபாளையம்பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (26), தனபாலன்(26), சுபாஷ் (26) ஆகியோர் என தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரையும்திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்மற்றும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி இடையே உள்ள காட்சி முனையை ஐ.டி. ஊழியர் பிரீதம் ரசித்து கொண்டிருந்தார்.
- 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த பிரீதமை மீட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை பீளமேடு அருகே உள்ள பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பிரீதம் (வயது 21). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் ஊட்டிக்கு சென்றார்.
செல்லும் வழியில் கோத்தகிரி -மேட்டுப்பாளையம் இடையே உள்ள காட்சி முனையில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் 25 பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று காட்சி முனையில் இருந்து தவறி விழுந்த பிரீதமை தேடினர். 2 மணிநேர தேடலுக்கு பிறகு தலையில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த அவரை மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட பிரீதமை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- ரொம்ப சாரி அம்மா... மன்னித்து விடு... என குறுஞ்செய்தி அனுப்பினார்
கோவை,
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரு டனான காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலை தொடர்ந்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி பெரியநாயக்கன்பாளையம் பகுதிையச் சேர்ந்த வாலிபர் ஒருவரை மணமகனாக பார்த்து வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திருமணம் செய்வது என பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இ னால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பு தனது காதலனுடன் சென்று விட முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிரித்து விடு வார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் தனது தாயின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார்.
அதில் நானும், காதலித்த வாலிபரும் திருமணம் செய்து கொண்டோம். ரொம்ப சாரி அம்மா, மன்னித்து விடு என அனுப்பி இருந்தார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகளை கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் தந்தை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு மணக்கோலத்தில் வந்தனர். போலீசாரிடம் இளம்பெண் தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
- தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் செந்தில் பிரசாத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
- வீட்டின் பால்கனி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே கணபதிபுரம் பகுதியில் வீட்டில் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் செந்தில் பிரசாத் என்பவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பால்கனி அருகே தாழ்வாக சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததால் செந்தில் பிரசாத் பலி என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
- புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சோழிங்கநல்லூர்:
சென்னை அருகே பள்ளிக்கரணை, ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் புவனேஷ். (வயது 27).
இவர் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் சர்வீஸ் டெஸ்க் அனலிஸ்ட் ஆக இரண்டறை ஆண்டுகள் பணியாற்றி வந்தார். இவர் வழக்கமாக மதியம் 3.30 மணி அளவில் பணிக்கு வந்து இரவு 1:30 மணியளவில் பணி முடித்து வீட்டிற்கு செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் மதியம் 3.30 மணிக்கு பணிக்கு வந்தார், இவருடன் நாக வெங்கட சாய் என்பவர் பணியாற்றி வருகிறார்.
நேற்றுஇரவு 12 மணியளவில் சிகரெட் பிடிப்பதற்காக அவர் வேலை செய்யும் பத்தாவது மாடியில் இருந்து உடன் வேலை செய்யும் நண்பர் நாக வெங்கடசாய் இருக்கும் கீழ் தளத்திற்கு வந்தார். இருவரும் புகை பிடித்தவாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சிகரெட் புகைத்து விட்டு மீண்டும் மேலே வேலை செய்யும் இடத்திற்கு புவனேஷ் சென்றார். சற்று நேரத்தில் யாரோ மேலிருந்து கீழே விழும் சப்தம் கேட்கவே பணியாளார்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது புவனேஷ் ரத்தவெள்ளத்தில் கிடப்பதை பார்த்தனர். கீழே விழுந்ததில் அவரது தலை சிதைந்து, கைகள் உடைந்து துண்டாகி இறந்து கிடப்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் இரவு ரோந்தில் அலுவலில் இருந்த தரமணி சரக உதவி ஆணையாளர் அமீர் அகமது இதைப்பார்த்ததும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர் புவனேஷ் உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன நபர் சுமார் 10லட்சம் ரூபாய் வரை வங்கி மூலம் கடன் வாங்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
- பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
- அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.
மதுரை:
மதுரை சின்ன சொக்கி குளத்தை சேர்ந்தவர் விஜய் நாராயணன். ஐ.டி. ஊழியரான இவர் கடந்த சில ஆண்டு களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கற்று தேர்ச்சி பெற்றார். இதனை தொடர்ந்து அவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கை யால் உடைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாகசங்களை செய்து 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்று உள்ளார்.
இந்நிலையில் புதிய முயற்சியாக விஜய் நாராயணன் தனது வீட்டின் மாடியில் எரியும் 29 சிமெண்ட் கான்கிரீட் கற்களை 30 விநாடிகளில் அடுத்தடுத்து உடைத்து சாதனை படைத்து உள்ளார். இவரது சாதனையை கின்னஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் குறைந்த வினாடியில் அதிக எண்ணிக்கையில் எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை உடைத்த முதல் வீரர் என்ற பெருமையை விஜய் நாராயணன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை செய்திருந்தார். தற்போது விஜய் நாராயணன் மூலம் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
- தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர்
- என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க நீதிபதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாடியிருக்கிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, கிட்டத்தட்ட 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும் மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தூக்கிட்டு தற்கொலை செய்வதற்குப் பலமாதங்களாகத் திட்டமிட்டுள்ள சுபாஷ், இறப்பதற்கு முந்தைய தினம், இறக்கும் தினம், இறப்பதற்கு முன் என மூன்று காலங்களாக பிரித்துத் தான் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் அட்டவணையாகப் பட்டியல் போட்டு அதை வீட்டின் சுவர் மீது மாட்டி வைத்துள்ளார். அதில் உள்ளவற்றை முடித்தன் அடையாளமாக வரிசையாக டிக் செய்து அவர் குறித்து வைத்துள்ளார்.

அந்த அட்டவணையில் தனது போனில் உள்ள கைரேகை பாஸ்வேர்டை அகற்றுவது, கார், பைக் மற்றும் ரூம் சாவிகளை குளிர்சாத பிரிட்ஜ் உள்ளே வைப்பது, ஆபீஸ் வேலையை முடித்து கம்பெனி லேப்டாப், சார்ஜரை அவர்களிடம் ஒப்படைப்பது போன்றவை குறிக்கப்பட்டு அதை முடிந்ததன் அடையாளமாக அதில் டிக் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனது சேமிப்பை பாதுகாப்பு செய்வது, இறப்பதற்கு முன் குளிப்பது, தற்கொலை கடிதத்தை மேஜை மேல் வைப்பது வரை அதில் குறித்துவைத்து அனைத்தையும் முடித்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபட உதவிக்கு 044 2464 0050 என்ற எண்ணை அழைக்கவும்.
- மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
- திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரித்தது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார். மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
பெங்களூரு போலீஸ் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில் சுபாஷ் தற்கொலையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

எனவே நிகிதா சிங்கானியா குடும்பத்தினர் எங்கிருந்தாலும் 3 நாட்களுக்குள் போலீசில் ஆஜராக வேண்டும் என உத்தரப் பிரதேசம் சென்ற பெங்களூரு போலீஸ் அவர்களது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
அந்த நோட்டீஸில், கிடைத்த ஆதாரங்கள் மற்றும் தரவுகள் அடிப்படையிலும் சம்பவ சூழ்நிலை காரணமாக உங்களிடம் விசாரணை செய்யவேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே நீங்கள் எங்கிருந்தாலும் பெங்களூரில் உள்ள விசாரணை அதிகாரி முன் இன்னும் 3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிசம்பர் 11 அன்று உச்ச நீதிமன்றம், தங்கள் கணவர்களுக்கு எதிராக பெண்கள் தாக்கல் செய்யும் திருமண தகராறு வழக்குகளில் கொடுமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்தது.
செவ்வாயன்று நடைபெற்ற வேறு ஒரு விவாகரத்து வழக்கில், நிரந்தர ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய எட்டு அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
- 24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார்.
- வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டனர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்யவேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலைக் குறிப்பை விட்டுவிட்டு, 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்துவைத்து அவர் தற்கொலை செய்துள்ளார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்கவேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
மேலும் உத்தர பிரதேச ஜான்பூர் நீதிமன்ற நீதிபதி, என் மீதான வழக்குகளைத் தீர்த்து வைக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதுல் மீதான வழக்குகளை வாபஸ் பெற ரூ. 3 கோடியும், அவரது மகனைப் பார்க்க வருவதற்கு ரூ. 30 லட்சமும் நிகிதா குடும்பத்தினர் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கிடையே சுபாஷின் தற்கொலையை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள மனைவி, மாமியார் மற்றும் உறவினர்கள் தலைமறைவாகினர். அவர்கள் மூன்று நாட்களுக்குள் போலீஸ் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தர பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் பெங்களூரு போலீஸ் நேற்று முன் தினம் நோட்டீஸ் ஒட்டியது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த அதுல் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹரியானாவின் குருகிராமில் இருந்த நிகிதாவையும், உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் இருந்த அவரது தாய் நிஷா மற்றும் சகோதரர் அனுராக் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்கு அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்கு சாதகமாகவே இருப்பதாக தனது பதிவில் குற்றம் சாட்டிய அதுல் சுபாஷ்,
நான் எவ்வளவு கடினமாக உழைத்து, என் வேலையில் சிறந்து விளங்குகிறேனோ, அவ்வளவு அதிகமாக நானும் என் குடும்பத்தினரும் துன்புறுத்தப்படுகிறோம், மிரட்டி பணம் பறிக்கப்படுகிறோம், மேலும் இதை ஒட்டுமொத்த சட்ட அமைப்பும் ஊக்குவிக்கிறது.
இப்போது, நான் போனதால், பணமும் இருக்காது, என் வயதான பெற்றோரையும், என் சகோதரனையும் துன்புறுத்த எந்த காரணமும் இருக்காது என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் மனைவி நிகிதாவும் அவரது தாயார் நிஷாவும் தன்னை தற்கொலைக்கு தூண்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மனைவியை பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
- கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
மகாராஷ்டிர மாநிலம் கல்யான் நகரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தனது முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்ள மறுத்த தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டிசம்பர் 19 அன்று 45 வயதான அந்த நபர் தனது 28 வயதுடைய 2வது மனைவியை அலுவலகத்தில் பார்ட்டிக்கு அழைத்துச்சென்று தனியறையில் தனது முதலாளியுடன் உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு மனைவி மறுக்கவே, பெற்றோரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுக்கவே தனது 2வது மனைவிக்கு அவர் உடனே முத்தலாக் கூறி வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்ய பணம் கேட்டு அந்த நபர் 2வது மனைவியை உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சம்பாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து முத்தலாக் கூறிய கணவன் மீது முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 2019 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை உழைத்து சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராகியுள்ளார்.
- நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.
ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.
சமூக ஊடகமான Blind தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் தான் தவறவிட்ட பல முக்கியமான குடும்ப நிகழ்வுகளை அவர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார். பதவி உயர்வு ஆசை, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தன என்று பகிர்ந்துள்ளார். தற்போது தான் பெற்ற பதவி உயர்வு குறித்து வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் அவர் கூறியதாவது,
3 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கு பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையிலான பணிகளை அங்கு செய்து வந்தேன். நிறுவனத்தின் ஐரோப்பா - ஆசியா குழுவை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உயர்ந்தேன். அதனால் என் மீட்டிங்- கள் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைகின்றன.
என் மகள் பிறந்த நாளில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் நான் மீட்டிங்ளில் இருந்தேன். என் மனைவிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கும்போது, மீட்டிங்கில் இருந்த பிரச்சனையால் அவளை உடன் இருந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் விவாகரத்து கேட்டாள்.
இன்று எனது பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.
என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இந்த குழப்பமான காலத்தில், என்னிடம் உள்ளதைப் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? என்று தெரிவித்துள்ளார்.
- நாசரேத்தில் உள்ள வீட்டில் சில்வான்ஸ் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் கடந்த 23 -ந் தேதி வேலை விஷயமாக சென்னை சென்றார்.
- வீட்டில் இருந்த டி.வி., விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் கதீட்ரல்ரோட்டில் வசித்து வருபவர் அகஸ் டின் ஸ்பர்ஜர்.இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் சில்வான்ஸ் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.
கடந்த2 மாதங்களுக்கு முன்பு அகஸ்டின் ஸ்பர் ஜரின் மனைவி இறந்து விட் டதால் இறப்புக்கு வந்த மகள் தனது தந்தையை அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார். நாசரேத்தில் உள்ள வீட்டில் சில்வான்ஸ் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் கடந்த 23 -ந் தேதி வேலை விஷயமாக சென்னை சென்றார்.
இன்று காலை வீட்டு முற்றத்தை பெருக்குவதற்கு ஊழியர் வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த டி.வி., விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அகஸ்டின் ஸ்பர்ஜரின் உறவினர் ஆஸ்டின் மைக்கேல் நாசரேத் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் ராய்ட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.