என் மலர்
நீங்கள் தேடியது "JCB"
- ஜே.சி.பி. வாகனம் எரிந்து சேதம்
- கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இவரது ஜே.சி.பி. வாகனத்தின் ஆப்பரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள மூக்கரநத்தம் பகுதியில் உள்ள செந்தட்டிக் காளை என்பவருக்கு சொந்தமான வயல் காட்டில் ஜே.சி.பி. உதவியுடன் முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு மேட்டில் சென்றபோது ஜே.சி.பி. வாகனம் பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக கருப்பசாமி சென்றார்.
அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் தீ பரவி ஜே.சி.பி. வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜே.சி.பி. வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஜே.சி.பி. வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- முராரி லால் என்பவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார்.
- ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் டீக்கடைக்காரர் ஒருவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் (TVS XL) பைக் வாங்கியதை ரூ.60,000 பணம் செலவழித்து கொண்டாடிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முராரி லால் என்பவர் சிவபுரி மாவட்டத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் ரூ.20,000 முன்பணம் செலுத்தி டிவிஎஸ் பைக் வாங்கியுள்ளார். பைக் வாங்கும் முன்பு டிஜே இசையுடன் வீட்டிலிருந்து நடனமாடிய படியே பைக் ஷோரூமிற்கு பைக்கை வாங்க சென்றுள்ளார்.
அங்கு பைக்கை முன்பணம் கொடுத்து வாங்கிய பின்பு, ஜேசிபியை வாடகைக்கு எடுத்து பைக்கை தூக்கி கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடியுள்ளார்.
தனது குழந்தைகளை மகிழ்ச்சியடையச செய்வதற்காக இவ்வாறு செய்ததாக முராரி லால் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
முராரி லால் இவ்வாறு செய்வது ஒன்றும் இது முதல் முறையல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்கு 12,500 கடன் வாங்கி மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் மொபைல் போன் வாங்கியதை கொண்டாட ரூ.25,000 செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர்.
- ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த யானையின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்தில் அட்டகாசம் செய்த யானையை ஜேசிபி கொண்டு விரட்ட முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபியை அலேக்காக தூக்கியுள்ளது. பின்னர் பக்கத்தில் இருந்த கட்டிடத்தை யானை இடிக்க முயன்றது.
இதனால் சிறுது காயமடைந்த யானை அங்கிருந்து விலகி நடந்து சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ஜே.சி.பி.எந்திரம் மோதி 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
- இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அருள்தாஸ்புரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி. இவரது மகன் அஜித் (வயது 17). சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் மாசாணம் (20), ராஜ்குமார் (21) ஆகியோரும் அவருடன் சென்றனர்.
ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் செக்கானூரணி-விக்ரமங்கலம் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த ஜே.சி.பி. எந்திரம் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அஜித், மாசாணம், ராஜ்குமார் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. டிரைவரான அ.கொக்குளத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.