என் மலர்
நீங்கள் தேடியது "jeep"
- ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
- ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது.
போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்ட படி பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா, "என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார், அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. மகான்களின் பாதுகாப்புக்காகவே போலீஸ் வாகனம் பின்னல் சென்றது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி பயண செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விதிகளை மீறி ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக 5000 ரூபாய் அபராதமும் சீட் பெல்ட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதமும் செல்போனில் பேசியபடியே பயணம் செய்தற்காக 1000 ரூபாய் அபராதம் என மொத்தமாக 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பியுள்ளார்.
- ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி நெடுஞ்சாலையில் ஓட்டியுள்ளார். ஜீப்பின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மீது மண் விழுந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் நகரில் ரீல்ஸ் எடுப்பதற்காக இளைஞர் ஒருவர் தனது தார் ஜீப்பின் மேற்பகுதியில் மணலை நிரப்பி அதை விடியோவாக பதிவு செய்கிறார். பின்னர் அந்த ஜீப்பை சாலையை ஓட்டி ரீல்ஸ் எடுத்துள்ளார். ஜீப்பின் பின்னல் விழுந்த மண்ணால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
- 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு தோட்டா ஓட்டுநர் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜீப் ஓட்டுநர் ஒருவர், தனது வயிற்றில் புல்லட் காயம் ஏற்பட்ட போதிலும், பல கிமீ வாகனத்தை இயக்கி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது .
ஜீப் ஓட்டுநர் சந்தோஷ் சிங், 14 பயணிகளுடன் "திலகம்" விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது ஒரு தோட்டா சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
அப்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மரமா நபர்களிடம் இருந்து தப்பிக்கவும் பல தாங்க முடியாத வழியிலும் பல கிமீ ஜீப்பை ஓட்டி சென்று பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷ் சிங்கை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிங்கின் வயிற்றில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- இது ஜீப் நிறுவனத்தின் மிகவும் சிறிய எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.
ஜீப் நிறுவனம் கடந்த மாத துவக்கத்தில் புதிய அவெஞ்சர் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. இது ஜீப் நிறுவனத்தின் மிகவும் சிறிய எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக கார் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இதன் பவர்டிரெயின் மற்றும் ரேன்ஜ் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் புதிய ஜீப் அவெஞ்சர் மாடல் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்டெலாண்டிஸ் நிறுவனத்தின் STLA சிறிய பிளாட்பார்ம் பயன்படுத்திய முதல் கார் என்ற பெருமையை அவெஞ்சர் பெற்று இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய அவெஞ்சர் மாடலில் 54 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை செல்லும். எனினும், பயணிக்கும் நிலைகளுக்கு ஏற்ப இந்த கார் அதிகபட்சம் 550 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஜீப் தெரிவித்து இருக்கிறது.

புதிய ஜீப் அவெஞ்சர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கும் பேட்டரியை 100 கிலோவாட் கேபிள் கொண்டு 20-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 24 நிநிடங்களே ஆகும். இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள் 154 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த கார் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.
இத்துடன் ஜீப் நிறுவனத்தின் செலக்-டிரெயின் ஆப்-ரோடு மோட்கள் (நார்மல், இகோ, ஸ்போர்ட், ஸ்னோ, மட் மற்றும் ஸ்னோ) உள்ளிட்டவை அவெஞ்சர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன் பின் எதிர்காலத்தில் இந்திய சந்தையிலும இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
- ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி எஸ்யுவி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஐந்தாம் தலைமுறை ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யுவி இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை முதல் முறையாக வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் புதிய தலைமுறை கிராண்ட் செரோக்கி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதன் ஒட்டுமொத்த டிசைனில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. தோற்றத்தில் இந்த எஸ்யுவி பாக்ஸ் வடிவ டிசைன், கூர்மையான கோடுகள், புதிய கிரில், 7 இன்ச் ஸ்லாட் பேட்டன், சதுரங்க வடிவ வீல் ஆர்ச்கள், மெல்லிய ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் எல்இடி யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மற்ற அப்டேட்களுடன் இந்த காரில் ஆப் ரோடிங் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலில் 10.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 10 இன்ச் ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் ஸ்கிரீன், யுகனெக்ட் யுஐ உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
சர்வதேச சந்தையில் கிடைக்கும் ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் 3.6 லிட்டர் பெண்டாஸ்டார் வி6 பெட்ரோல் என்ஜின், 5.7 லிட்டர் ஹெமி வி8 மற்றும் புதிய 4xe பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன் என பல்வேறு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலின் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
- ஜீப் நிறுவனத்தின் புதிய கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
- இந்த கார் சோதனை இந்திய சாலைகளில் நடைபெற்று வருகிறது.
ஜீப் நிறுவனம் தனது புது செரோக்கி மாடல் இந்திய சந்தையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கும் புதிய ஜீப் செரோக்கி மாடல் அம்சங்கள் மற்றும் சில விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய ஜீப் கிராண்ட் செரோக்கி மாடல் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி இந்த கார் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் ஸ்டைலிங் வேகனீர் மற்றும் கிராண்ட் வேகனீர் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. காரின் உள்புறம் மூன்று டிஸ்ப்ளேக்கள்- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் டச் ஸ்கிரீன் மற்றும் முன்புற பயணிகளுக்காக பிரத்யேக டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது.

கிராண்ட் செரோக்கி மாடல் 5 சீட்டர் மற்றும், மூன்று அடுக்கு இருக்கை கொண்ட கிராண்ட் செரோக்கி L என இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கிறது. இதில் 5-சீட்டர் வேரியண்ட் மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் வெண்டிலேடெட் சீட்கள், பானரோமிக் சன்ரூப், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய கிராண்ட் செரோக்கி மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைகும் என தெரிகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4 வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் கிராண்ட் செரோக்கி மாடல் பல்வேறு என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது.
Photo Courtesy: Motor Beam
- ஜீப் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியிடுவது பற்றி முக்கிய தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறது.
- எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய திட்டங்களை ஜீப் நிறுவனம் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்க இருக்கிறது.
ஜீப் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜீப் எலெக்ட்ரிக் மாடல்களை வெளியிடுவது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி நிகழ்வை ஜீப் நிறுவனம் 4xe தினம் என அழைக்கிறது.
முதல் எலெக்ட்ரிக் காரை இதுவரை அறிமுகம் செய்யாத நிலையில், ஜீப் நிறுவனம் தற்போது தேர்வு செய்யப்பட்ட மாடல்களின் ஹைப்ரிட் வெர்ஷனை சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல்கள் இ ஹைப்ரிட் மற்றும் 4xe பிராண்டுகளின் கீழ் விற்பனையாகி வருகின்றன.

முன்னதாக ஜீப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தின் ரெண்டர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தது. இது காம்பஸ் மற்றும ரெனகேடு போன்று காம்பேக்ட் எஸ்யுவி-யாக இருக்கும் என தெரிகிறது. இந்த கார்களின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் 2023 ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
ஜீப் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஸ்டெலாண்டிஸ் STLA பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதே பிளாட்பார்மில் இந்த நிறுவனத்தின் மற்ற கார் உற்பத்தியாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருகின்றன.
முதல் முறையாக 2021 மார்ச் மாத வாக்கில் ஜீப் நிறுவனம் மேக்னெடோ கான்செப்ட் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாடலில் 285 பிஎஸ் பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் இ மோட்டார், 70 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகள் வழங்கப்பட்டு இருந்தது.
- ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்திய சந்தையில் ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 24 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் களமிறங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடலை விற்பனை மையங்கள் அல்லது ஜீப் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்பதால், இந்த காரில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த காரின் வெளிப்புறம் 18 இன்ச் அளவில் அலாய் வீல்கள், கிரானைட் க்ரிஸ்டல் பினிஷிங், நியூட்ரல் கிரே நிறத்தால் ஆன ORVM, பாடி கலர் ஃபெண்டர் ஃபிளேர்கள், அக்செண்ட் நிற ரூஃப் ரெயில்கள், முன்புற கிரில் ரிங்குகள் நியூட்ரல் கிரே நிறம் கொண்டுள்ளன. இவை அனைத்தும் காரின் தோற்றத்தில் மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன. இதனால் கார் முன்பை விட அதிக பிரீமியம் தோற்றம் பெற்று இருக்கிறது. இத்துடன் ஐந்தாவது ஆனிவர்சரி பேட்ஜிங்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் லெதர் இருக்கை, பிளாக் ஹெட்லைனர்களில் டக்ஸ்டன் அக்செண்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், பியானோ பிளாக் மற்றும் அனோடைஸ்டு கன் மெட்டல் இண்டீரியர் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.
ஜீப் காம்பஸ் ஆனிவர்சரி எடிஷன் மாடல் 162 ஹெச்பி பவர் கொண்ட 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டி-ஏர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 170 ஹெச்பி பவர், 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மல்டிஜெட் டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்பெஷல் காரை 4x4 வெர்ஷனிலும் பெற முடியும். எனினும், இந்த வசதி டீசல் என்ஜினில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை பொருத்தவரை பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு DCT, டீசல் என்ஜினுக்கு 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- ஜீப் நிறுவனம் இந்திய சந்தையில் காம்பஸ் மாடல் காரை 2017 ஆகஸ்ட் மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- கடந்த ஆண்டு ஜீப் காம்பஸ் மாடல் மிட்-லைஃப் அப்டேட் செய்யப்பட்டது.
இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை கொண்டாட ஜீப் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. அதன்படி ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் ஜீப் நிறுவனத்தின் முதல் மாடலாக ஜீப் காம்பஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஆகஸ்ட் 2017 வாக்கில் துவங்கியது.
விற்பனை துவங்கியதில் இருந்தே ஜீப் காம்பஸ் மாடல் கணிசமான யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு இந்த காருக்கு மிட்-லைஃப் அப்டேட் வழங்கும் முன் பல முறை இந்த காரின் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களை ஜீப் இந்தியா தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தது. இதன் மூலம் கார் மாடலை உயிர்ப்புடன் வைத்திருந்தது.

இந்த ஆண்டு துவக்கத்தில் கூட ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் மாடலின் நைட் ஈகிள் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இது தற்போதைய காம்பஸ் மாடலின் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் கிளாஸ் பிளாக் நிற கிரில், 18 இன்ச் பிளாக் அலாய் வீல்கள், பிளாக் ரூப் ரெயில்கள், கிளாஸ் பிளாக் விங் மிரர்கள் மற்றும் ஃபாக் லேம்ப் பெசல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஜீப் காம்பஸ் 5-ஆவது ஆனிவர்சரி எடிஷன் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கலாம். காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர இந்த காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
இதன் டீசல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை
ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 30). இவர் தனது பெரியப்பா பழனிச்சாமி (72) என்பவருடன் கிணத்துக்கடவு அருகே உள்ள குப்பணசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் குடிமங்கலம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜீப் ராமகிருஷ்ணன் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் கார் அருகே உள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயங்களுடன் இருந்த ராமகிருஷ்ணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் விபத்துக்கு காரணமான ஜீப் டிரைவர் பெரியசாமி மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

