என் மலர்
நீங்கள் தேடியது "jewelry theft"
- பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது.
- சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைசேர்ந்தவர் செல்வம் (வயது 47).விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு அருகே இருக்கும் ஏப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக ஊருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீேராவை திறந்து அதில் இருந்த பணம்- நகையை கொள்ளையடித்து சென்றனர். மாலை நேரம் செல்வம் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடைந்துஉள்ளே சென்று பார்த்தபோது பீேராவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்துஒலக்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல பாதிரி கிராமத்தை சேர்ந்த காளி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை,5000 ரூபாய் பணம்,ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.மேலும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் 250 கிராம் கிலோவெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுதவிர நீலகண்டன் என்பவரது வீட்டிலும்கொள்ளையர்கள் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். தேபோ மேலும் பாங்களத்தூர் பாதிரி,போன்ற பல்வேறு இடங்களில் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்து உள்ளனர்.அங்கு எந்த பொருளும்இல்லாததால் அங்கிருந்து சென்றுள்ளனர். திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்.
- இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா (50) கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 33/4 பவுன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அருமை கண்ணு வயது 90 வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
- 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது தாயார் அருமை கண்ணு (வயது 90). சம்பவத்தன்று இவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்க அன்பழகன் ஏற்பாடு செய்தார். அதன்படி குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்த, திருநள்ளாறு தென்னங்குடி பகுதியை சேர்ந்த ரஞ்சித் (32), அவரது நண்பர் ராஜபாண்டியன் (37) ஆகிய 2 பேர், மூதாட்டியின் உடலை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் போது, மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை திருடியதாக கூறப்படுகிறது.
மூதாட்டி உடலில் இருந்த 4 பவுன் தங்க நகையை காணாமல் போனதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, அன்பழகன் திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார், சந்தேகத்தின் பேரில் குளிர்சாதன பெட்டி வைக்க வந்த ரஞ்சித் மற்றும் ராஜபாண்டியை பிடித்து விசாரித்தனர். அப்போது, மூதாட்டி உடலில் இருந்த தங்க நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கும் தாமோதரன் என்கின்ற ரவிக்குமார் (வயது 25) இன்ஜினியர் பட்டதாரி என்பவருடன் முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்கள் ஆன பின்னர் செல் நம்பரை பகிர்ந்து கொண்டு நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் தாமோ தரன் கூறியுள்ளார். உன்னு டைய அழகான புகைப்ப டங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகி றேன் என்று கூறியுள்ளார்.
அந்த இளம் பெண் தன்னிடம் போட்டோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் எனக்கு போட்டோகிராபி தெரியும் என்றும் நான் நேரில் வந்து உன்னை அழகாக படம் பிடித்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு சம்மதம் தெரி வித்த அந்தப் பெண்ணிடம் வீட்டின் முகவரியை கேட்ட றிந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து உன் வீட்டருகே அருகே தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்தப் பெண் தாமோதரனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் உன்னிடம் இருக்கும் உடையிலே அழ கான உடையை உடுத்திக் கொண்டுவா என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சினிமா ஆசை உச்சத்திற்கு ஏற போட்டி ருந்த நகைகள் எல்லாம் கழட்டி வைத்து விட்டு அறையினுள் சென்றார். இதனை எதிர்பார்த்திருந்த தாமோதரன் நகைகள் மற்றும் செல்போனை எடுத்து க்கொண்டு அங்கி ருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளார்.
துணி மாற்றிக் கொண்ட இளம்பெண் வெளியில் வந்து பார்த்த பொழுது நகை, செல்போனை காண வில்லை. அங்கிருந்த தாமோ தரனையும் காண வில்லை. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சின்ன சேலம் போலீஸ் நிலைய த்தில் இது குறித்து புகாரளி த்தார். வழக்கு பதிவு செய்த போலீ சார் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து தாமோதரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் செல் போன் நம்பரை வைத்து தாமோதரன் காரைக்கு டியில் இருப்பதை போலீ சார் கண்டுபிடித்தனர். காரைக்குடிக்கு விரைந்த சின்னசேலம் போலீசார் தாமோத ரனை மடக்கிப் பிடித்தனர். சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு இன்று அழைத்து வந்தனர். கள்ளக்குறிச்சி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சின்ன சேலம் சிறையில் அடைத்த னர்.
- ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.
- காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
வேலூர்:
கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடந்த ஜூன் மாதம் ரெயில் பயணிகள் பைகளில் வைத்திருந்த நகைகள் திருடு போனது.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த ரெயில் பயணிகள் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு இதுகுறித்த தகவல்களை அனுப்பி வைத்தனர்.
ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.
நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் இங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்தனர். அவர் பெங்களூரை சேர்ந்த வினோத் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவரிடம் ரெயில் டிக்கெட் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத் கோவை இன்டர்சிட்டி மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கி கொண்டிருந்த பயணிகளின் பைகளில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 3 பவுன் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2 மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பொன்னை ரோட்டில் சிப் காட் நெல்லிக்குப்பம் பகு தியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 59), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (48). அங்குள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு ராஜேஷ் (33), தினேஷ் (24) என 2 மகன்கள் உள்ளனர். தினேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி தனலட்சுமி, ராஜேஷ் வேலைக்கும், முனுசாமி வயலுக்கும் சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த முனுசாமி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து முனுசாமி சிப் காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயிலில் அடைப்பு
- தங்க செயின், 2 மோதிரங்கள் பறிமுதல்
வேலூர்:
கோவையில் இருந்து சென்னை செல்லும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடந்த ஜூன் மாதம் ரெயில் பயணிகள் பைகளில் வைத்திருந்த நகைகள் திருடு போனது.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த ரெயில் பயணிகள் பெரம்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களுக்கு இது குறித்த தகவல்களை அனுப்பி வைத்தனர்.
ரெயிலில் திருடிய கும்பலை பிடிக்க காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் முரளி ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.
நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக அங்கும் அங்குமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்தனர்.அவர் பெங்களூரை சேர்ந்த வினோத் (வயது 39) என்பது தெரிய வந்தது. அவரிடம் ரெயில் டிக்கெட் இல்லை.அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வினோத் கோவை இன்டர்சிட்டி மற்றும் கச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தூங்கி கொண்டிருந்த பயணிகளின் பைகளில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 3 பவுன் எடை கொண்ட தங்க செயின் மற்றும் 2 மோதிரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ‘ஹெல்மெட்’ அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
- சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள இளஞ்செம்பூரில் முத்து இருளாயி அம்மன் கோவில் இருக்கிறது. சம்பவத்தன்று நள்ளிரவில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் சாமி நகைகளை திருடினார்.
கோவில் உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவிலுக்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்த பணமும், சாமிக்கு அணிவித்திருந்த தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் உள்ளிட்டவைகளும் திருட்டுபோய் இருந்தது.
இதுகுறித்து இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த ஒரு நபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்த காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் யார்? என்று விசாரித்தபோது, அவர் பிரபல கொள்ளையனான பரமக்குடி சுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி (வயது 52) என தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அம்மன் கோவிலில் திருட்டுபோன தங்கத்தாலி, வெள்ளி கிரீடம் மற்றும் உண்டியல் பணம் ரூ.5,750 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அவர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் என்று போலி அடையாள அட்டை வைத்திருந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சுல்தான் செய்யது இப்ராகிம் அலி, வக்கீல் என போலி அடையாள அட்டையுடன் சுற்றி திரிந்து திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
'ஹெல்மெட்'அணிந்து திரிந்ததால் அவர் வெகுநாட்களாக சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் 'ஹெல்மெட்' அணிந்து கோவிலுக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட அவர், சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சி மூலம் தற்போது சிக்கினார்.
சுல்தான் செய்யது இப்ராகிம் அலி மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
- கடைக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
- இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே உள்ள கருத்தமடைப்பட்டி மெயின்ரோட்டைச் சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி கண்ணகி (வயது 55). இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு அருேக உள்ள பலசரக்கு கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது அந்த கடைக்கு வந்த ஒரு வாலிபர் திடீரென கண்ணகியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.
இது குறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பூபதி(வயது 43). இவர் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கோமதி.இவர்களுக்கு துர்ஷ்யந்த் (14), தன்ஷிகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
- உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்ட 7 பவுன் வெள்ளிப் பொருட்கள் உள்பட தங்க நகை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி டி.வி.சி. நகர் பகுதியில் வசித்து வருபவர் பூபதி(வயது 43). இவர் சிவில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி கோமதி.இவர்களுக்கு துர்ஷ்யந்த் (14), தன்ஷிகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு பூபதி குடும்பத்துடன் ஈரோடு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்ட 7 பவுன் வெள்ளிப் பொருட்கள் உள்பட தங்க நகை சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
நள்ளிரவு வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கேட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமாக அவர் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் தலைமையில் தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபடும் பெண் குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி(வயது 70). சில நாட்களுக்கு முன்பு இவரிடம் டிப்டாப் இளம்பெண் ஒருவர் பேச்சு கொடுத்து முதியோர் ஓய்வு தொகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.
அப்போது மூதாட்டி ராணியிடம் அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை ஒரு முறை போட்டு பார்த்து கொடுத்து விடுவதாக கூறி நகையை சுருட்டிக்கொண்டு சென்று திருடி சென்று விட்டார்.
இதேபோல் திருவள்ளூர் அருகே உள்ள பொன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்தி, பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லம்மாள் (60) ஆகியோரிடமும் இதேபோல் நகை பறிக்கப்பட்டது.
நூதன முறையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபடும் டிப்-டாப் இளம்பெண் குறித்து ஊத்துக்கோட்டை மற்றும் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் ராவ்பகதூர், செல்வராஜ், லோகநாதன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபடும் பெண் குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இதற்கிடையே ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அம்பத்தூர் அருகே உள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஷீபா புஷ்பராணி (35) என்பதும் அவர் மூதாட்டிகளை குறிவைத்து முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக பேச்சு கொடுத்து நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஷீபா புஷ்பராணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஷீபா புஷ்ப ராணியை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
- வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
- வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பர்னபாஸ் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான இவா் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்துபர்னபாஸ் குடும்பத்தினருடன் ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் மாடியில் வசித்து வரும் அவரது மகன் விஜய் இருதயராஜ் வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நெக்லஸ், வளையல், தோடு உள்ளிட்ட 13 பவுன் நகைகளை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து பர்னபாஸ் கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் புகுந்து மர்ம நபர்கள் 13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ளது.