என் மலர்
நீங்கள் தேடியது "kill"
- சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த தென்மலையை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் வைரமுத்து(வயது 33).
- கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக வைரமுத்துவின் மொபட் மீது மோதியது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த தென்மலையை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் வைரமுத்து(வயது 33).
இவர் நேற்று சங்கரன்கோவில்-ராஜபா ளையம் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள பருவக்குடி விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக வைரமுத்துவின் மொபட் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட வைரமுத்து தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வைரமுத்து உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான ஆலங் குளம் அருகே உள்ள ஊத்துமலையை சேர்ந்த ஜெயக்குமார்(45) என்பவ ரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). அதே ஊரை சேர்ந்தவர் சாமுவேல் (40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
- நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
திசையன்விளை:
களக்காடு பொத்தை சுத்தியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 47). அதே ஊரை சேர்ந்தவர் சாமுவேல் (40). இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்துவந்தனர்.
நேற்று இரவு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து களக்காட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தராஜ் ஓட்டி சென்றார். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திசையன்விளையை அடுத்த குமாரபுரம் அருகே சென்றபோது எதிரில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த பொத்தக் காலன் விளையை சேர்ந்த பிரான்சிஸ் (35) என்பவர் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.
இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் பாளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மதுரையில் ஆட்டோ டிரைவரை கொன்ற அண்ணன்- தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
- செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மதுரை
மதுரை, நாராயணபுரம், கோகலே தெருவை சேர்ந்த செல்வம் மகன் வெள்ளை மணி (வயது 24). ஆட்டோ டிரைவர்.
நேற்று இவர் அருள்தாஸ்புரம், வைகை வடகரை சர்வீஸ் ரோடு பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் வெள்ளைமணி நண்பர்களுடன் வைகை வடகரை பகுதியில் நடந்து செல்வது தெரிய வந்தது. அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். வெள்ளை மணியுடன் சென்றவர்கள், அதே பகுதியில் வசிக்கும் கணேசன் மகன் ஹரிஹரன் (20), அவரது சகோதரர் வினோத்குமார் (21) மற்றும் சரண் என்பது தெரியவந்தது. அருள்தாஸ்புரம், வைகை வடகரை பகுதியில் வெள்ளைமணி உள்பட சிலர் ஒன்றாக மது குடித்தனர். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு, இதன் காரணமாக அந்த கும்பல் வெள்ளைமணியை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள அண்ணன், தம்பி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கமல் (வயது35).
- ஆனந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள கருவேலங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் கமல் (வயது35).
மினிலாரி மோதி விபத்து
இவரது நண்பர் தெற்கு புளியங்குளத்தை சேர்ந்த விஜயகுமார் (21). இவர்கள் இருவரும் சென்னையில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களது மற்றொரு நண்பரான வாசுதேவன் என்பவரது அண்ணன் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தனர்.
தொழிலாளி பலி
நேற்று திருமணத்தில் கலந்து கொண்டு மாலையில் நண்பர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கருவேலங்காட்டில் இருந்து சாத்தான்குளத்திற்கு சென்றனர்.
ஆனந்தபுரம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு மினிவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நண்பர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் கமல் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துகாளை(வயது 55). இவரது மகள் செல்வி(25).
- நேற்று காலை முத்துகாளையும், செல்வியும் தேவர்குளத்தை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர்.
நெல்லை:
கயத்தாறு அருகே உள்ள பன்னீர்ஊத்து தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் முத்துகாளை(வயது 55). இவரது மகள் செல்வி(25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. நேற்று காலை முத்துகாளையும், செல்வியும் தேவர்குளத்தை நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
பன்னீர் ஊத்து விலக்கில் இருந்து இரண்டும் சொல்லான் கிராமம் செல்லும் ரோட்டில் சென்றபோது எதிர்பா ராதவிதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
பெண் பலி
இதில் செல்வி படுகாயம் அடைந்தார். முத்துகாளை, சுப்பிரமணியனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வி உள்பட 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் சுப்பிரமணியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காசிராம் ( வயது 31).
- துறைமுகம் சாலை வ.உ.சி. சிலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முள்ளக்காடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்ற காசிராம் ( வயது 31). தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்து கார்த்திக் வீடு திரும்பி கொண்டிருந்தார். துறைமுகம் சாலை வ.உ.சி. சிலை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி கார்த்திக்கின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திக் உயிரிழந்தார்
இது குறித்து தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த செய்யது அலி ( 22) என்பவரை கைது செய்தார்.
- பெரியசாமிநகர் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
- லாரி டிரைவரான இவர் நேற்று கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீளவிட்டான்-துறைமுகம் ரெயில் நிலையங்கள் இடையே பெரியசாமிநகர் பாலம் அருகே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி இருப்புபாதை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் இறந்துகிடந்தது தூத்துக்குடி பெரியசாமிநகரை சேர்ந்த முருகன் (வயது31) என்பது தெரியவந்தது. லாரி டிரைவரான இவர் நேற்று கடைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார்.
அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகன் மீது கடந்த 9 ஆண்டுகளுக்கு அவரது மனைவி சத்யாவை கொலை செய்ததாக வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55)
- நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மனைவி சுயம்புகனி (வயது55).
அரை நிர்வாண நிலையில்
நேற்று சுயம்புகனி வீடு வெளியே பூட்டியிருந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம்பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு ஆடைகள் களையப்பட்டு அரை நிர்வாண நிலையில் சுயம்புகனி இறந்த நிலையில் கிடந்தார்.
எஸ்.பி. விசாரணை
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
அரை நிர்வாண நிலையில் சுயம்பு கனி இறந்து கிடப்பதால் அவரை யாரேனும் கொலை செய்திருக்கலாமா? போலீ சார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது குடும்பபிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை
இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டனர்.
மேலும் சுயம்பு கனியின் உறவினர்கள், அவரது கணவர், நண்பர்கள் ஆகியோரிடம் விடிய, விடிய விசாரனை நடத்தி நடத்தினர். தொடர்ந்து தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகங்கை அருகே கந்துவட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
- இதுதொடர்பாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் கந்து வட்டி தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பலர் போலீஸ் நிலைய ங்களில் புகார்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
சிவகங்கை அருகே உள்ள காளையார்கோவில் திருநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பிரியா. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி ராஜாத்தி ஆகியோரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
இதற்காக 5 புரோ நோட்டுக்கள், 2 வெற்று பத்திரத்தில் பிரியா கையெழுத்திட்டு கொடுத்து ள்ளார்.
கடனை வட்டியுடன் பிரியா செலுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் காளையார்கோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், கூடுதல் வட்டி கேட்டு சுரேஷ், ராஜாத்தி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவியை கைது செய்தனர்.
- எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தினேன்.
- கைதான ராஜரத்தினம் பெயர் கடையம் போலீஸ் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் உள்ளது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பாதுகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
குத்திக்கொலை
இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் கீழபத்து வயல் பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ராஜரத்தினம் (38 ) என்பவர் சக்திவேல் முருகனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுதொடர்பாக கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரசேகர் விசாரணை நடத்தி ராஜரத்தினத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-
அவதூறு பேச்சு
தினமும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம்போல் நேற்றும் மது அருந்தினோம். அப்போது சக்திவேல் முருகன் மனைவியை நான் அவதூறாக பேசினேன்.
உடனே அவர், எனது மனைவியை எவ்வாறு நீ அவதூறாக பேசலாம் என்று கேட்டு என்னை சத்தம் போட்டார். இதனால் மதுபோதையில் இருந்த நான் ஆத்திரம் அடைந்தேன்.
- மனைவியை பார்க்க சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலியானார்.
- இவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்.
சிவகங்கை
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜுக்குட்டி. இவர் மதுரையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகே உள்ள மனக்கரையை சேர்ந்த கலைச்செல்விக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்தபின் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க மதுரையில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ராஜுக்குட்டி சிவகங்கை நோக்கி சென்றார்.
அவர் நல்லாகுளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பூவந்தி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிவகங்கை பகுதியில் பொதுமக்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
- ரூ.1 லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்த சித்திரை சாமி என்பவரிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீபா என்ற பெண் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இந்தத் தொகைக்கு மாதம்தோறும் ரூ.24 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார். கடன் வாங்கிய பணம் ரூ.3 லட்சத்தில் ரூ.2 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டார்.
ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டிய நிலையில், சித்திரை சாமி அடியாட்களுடன் ஹபீபா வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்தார். நேற்று ஹபீபா கணவருடன் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மீன் கடை அருகே சென்றபோது அவரை வழி மறித்த கந்து வட்டிக்காரர் சித்திரை சாமி, ரூ.1லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ஹபீபா திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை சாமியை கைது செய்தனர்.