என் மலர்
நீங்கள் தேடியது "Lawrence Bishnoi"
- லாரன்ஸ் பிஷ்னோய் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- ரவுடி லாரன்ஸ் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் பஞ்சாபை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி லாரன்ஸ் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லரன்ஷ் பிஷ்னோய் மற்றும் கூட்டாளிகள் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு எதிரான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது.
அரியானா, ராஜஸ்தானில் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.
இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், சட்டம் அனுமதித்தால், லாரன்ஸ் பிஷ்னோயின் ஒட்டுமொத்த கும்பலையும் 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன் என்று பீகார் எம்பி பப்பு யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பப்பு யாதவ், "சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (லாரன்ஸ் பிஷ்னோய்) அரசாங்கத்திற்கு சவால் விடுகிறான். மக்களைக் கொன்று கொண்டிருக்கிறான், எல்லோரும் அமைதியாக இதை பார்த்து கொண்டிருக்கிறோம்.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மற்றும் கர்னி சேனா தலைவரின் கொலையில் பிஷ்னோய் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தற்போது பாபா சித்திக் கொலை வழக்கில் அவன் சம்பந்தப்பட்டுள்ளான்" என்று தெரிவித்துள்ளார்.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
மும்பையில் மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று முன்தினம் இரவு 3 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொரானா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக இவர் மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித்பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாபா சித்திக்கை அரசியல் முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரை சுட்டுக் கொன்றதாக பிரபல தாதா கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்று இருக்கிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பாபா சித்திக் தொடர்பு வைத்தி ருந்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது.
மும்பை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற 2 பேர் பிடிபட்டனர். அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்மெயில் பல்ஜித்சிங், தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் என்று தெரிய வந்தது.
இவர்களில் குர்மெயில் பல்ஜித்சிங்கை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து இன்று காலை முதல் விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு குற்றவாளியான தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் சிறுவன் என்று அவரது வக்கீல் கோர்ட்டில் வாதிட்டார். இதையடுத்து தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் உடல் எலும்பு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தர்மராஜ் சிறுவன் அல்ல என்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான பிரவீண் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய குற்றவாளிகளில் மற்றொருவரான சிவக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது.
- சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார்
பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சுகா என்ற நபரை நவி மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டில் வைத்து அவரை கொலை செய்ய 25 லட்சம் பணம் கொடுப்பதாக ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது என்று நவிமும்பை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பத்திரிகையில் 5 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தான் இந்த ரூ.25 லட்ச கான்ட்ராக்ட்டை எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகா பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக ஏகே 47 ஏகே 92 ரக துப்பாக்கிகளை வாங்கியுள்ளார் என்றும் சல்மானை கொலை செய்ய குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 5 பேரை நியமித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சல்மானை கொலை செய்த பின்பு கொலைகாரர்கள் கன்னியாகுமரியில் ஒன்றுகூடி இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல்கள் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் நேஹ்ரா கும்பல்கள், சல்மான் கானை வேவு பார்க்கும் நோக்கத்துடன் அவரின் பந்த்ரா இல்லம், பான்வேல் பண்ணை வீடு மற்றும் படப்பிடிப்பு தளங்களில் அவரின் நடமாட்டத்தை கண்காணிக்க 60 - 70 பேரை களமிறக்கியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கானை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி பான்வேல் காவல்நிலையத்தில் பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
- லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
- 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கினார்.
- பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி முக்கியப் புள்ளியான பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய தொடர்ந்து முயற்சித்து வரும் இந்த கும்பல் சல்மானுக்கு உதவி செய்தால் பாபா சித்திக்கின் கதிதான் ஏற்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1998 இல் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு முதன்முதலில் லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார். அதன் மூலமே அவர் முதன்முதலில் பரவலாக அறியப்பட்டார். 1998 இல் சல்மான் கான் கரும்புலி வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கியதை அடுத்து இந்த கொலை மிரட்டல் வந்தது. இந்து மதத்தின் பசு புனித விளங்காக உள்ளதுபோல் லாரன்ஸின் பிஷ்னோய் சமூகத்தில் கரும்புலி மான் என்பது புனித விலங்காகும்.
சல்மான் கான் அதை வேட்டையாடினர் என்பதனால் லாரன்ஸ் அவருடன் பகையை வளர்த்துக்கொண்டார். அதுமுதல் பல்வேறு சமயங்களில் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் குறிவைத்து வருகிறது.சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் தற்போது பாபா சித்திக் கொலை செய்யப்பட்ட பின்னர் சல்மான் கானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சல்மான் கான் பிஷ்னோய் சமூகத்தினரின் புனித விலங்கை சுட்டதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கரும்புலி வகை மான்களை சல்மான் கான் வேட்டையாடியதாக கூறப்படும் விவகாரம் குறித்து அவரது தந்தை சலீம் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய சலீம் கான், "சல்மான் கானுக்கு விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு கரப்பான் பூச்சியை கூட கொன்றதில்லை. சல்மான் கான் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வந்தார். அந்த நாய் உடல்நலக் குறைவால் இறந்தபோது சல்மான் கான் கணீர் விட்டு அழுதார். கரும்புலி வகை மான்களை யார் கொன்றது என்று சல்மானிடம் நான் கேட்டேன். நான் அதை செய்யவில்லை என்று அவர் என்னிடம் கூறினார். என்னிடம் அவர் பொய் சொல்லமாட்டார். சல்மான் கான் விளையாட்டுக்காக விலங்குகளை கொள்ளும் நபர் கிடையாது.எந்த தவறும் செய்யாத சல்மான் கான் எதற்காக பிஷ்னோய் சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.
- பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
- லாரன்ஸ் பிஷ்னோய் குழு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் குழுவால் முன்னாள் அமைச்சர் படுகொலை செய்யப்பட்டதே சல்மான் கானுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை தான் என்று கூறப்பட்டது. கடந்த 1998 ஆம் ஆண்டு சல்மான் கான் கருப்பு மானை வேட்டையாடியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வகை கருப்பு மான் ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பிஷ்னோய் சமூக மக்களால் வணங்கப்படுகிறது. கருப்பு மானை வேட்டையாடிய விவகாரத்தில் சல்மான் கான் ஜோத்பூர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து லாரன்ஸ் பிஷ்னோய் குழு அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறது.
இந்த வரிசையில் தான் நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இது தொடர்பாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நடிகர் சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தியில், "இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால், லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வர விரும்பினால், அவர் ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும். பணம் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கானின் நிலை இந்த விவகாரத்தில் பாபா சித்திக்கை விட மோசமாக இருக்கும்" தெரிவிக்கப்பட்டிருந்தது.
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக மும்பை காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு இன்று அதே எண்ணில் இருந்து இன்னொரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது. அதில், சல்மான் கானுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று செய்தி அனுப்பியதன் மூலம் நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து அனுப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடிக்க மும்பையிலிருந்து ஒரு போலீஸ் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும்.
- அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது.
புதுடெல்லி:
மகாராஷ்டிராவில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் முக்கிய தலைவர் பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் பொறுப்பேற்றது.
எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது குஜராத் சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளே இருந்தவாறே குற்றச்செயல்களை அரங்கேற்றி வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் என்.ஐ.ஏ.வால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது.
அன்மோல் பிஷ்னோய் மீது 2022ம் ஆண்டில் 2 குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும் அன்மோல் தேடப்பட்டு வருகிறார்.
- மக்களவை எம்.பி. பப்பு யாதவ் 24 மணிநேரதத்தில் பிஷ்னோய் கும்பலை அளித்துவிடுவேன் என்றார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அஜித் பவார் சிவ சேனா தலைவரைக் கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய துடித்து வருகிறது. இதனால் அவரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பீகார் பூர்ணியா தொகுதி மக்களவை எம்.பி. பப்பு யாதவ், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் தான் அழித்து விடுவேன் என்றும் பேசினார். இதனால் அவருக்கும் அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
எனவே தனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு வேண்டும் என்று பப்பு யாதவ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேரடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், எனது உயிருக்கு அச்சுறுத்துதல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டல் வந்த பிறகும் பீகார் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் செயலிழந்துள்ளது. இப்போது எனக்கு Z கேட்டகிரி பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம் என்று கூறியுள்ள்ளார்.
- மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார்.
- பாபா சித்திக் கொல்லப்பட்டதையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சமீபத்தில் அவரது வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்தது.
இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.
மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி (வயது20) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரை கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர் மீது மிரட்டி பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அஜித் பவார் சிவ சேனா தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது
- லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்றது.
பாஜகவை சேர்ந்த உத்தரப் பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்னும் 10 நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று [சனிக்கிழமை] பின்னேரத்தில் அடையாளம் காணப்படாத தொலைப்பேசி எண்கள் மூலம் மும்பை காவல் கட்டுப்பாடு அறைக்கு இந்த மிரட்டலானது வந்துள்ளது.
அதில், சமீபத்தில் மும்பையில் வைத்து அஜித் பவார் சிவ சேனா தலைவர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டது போல் 10 நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால் யோகி அதித்யநாத்தும் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மிரட்டல் விடுத்தவர்களைக் கண்டறியும் பணியில் மும்பை போலீஸ் இறங்கிய நிலையில் மெசேஜ் அனுப்பிய தானேவை சேர்ந்த 24 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். யோகி ஆதித்யநாத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் - இன் கும்பல் பாபா சித்திக்கை அவரது எம்எல்ஏ மகனின் அலுவலகத்தின் முன் வைத்து கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
- எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்னா:
மராட்டிய மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியை சேர்ந்த எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பப்பு யாதவின் செல்போனுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதில் பேசிய ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எதிராக இதுபோன்று பேசுவதை தவிர்க்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி இருந்தார்.
அதன் பிறகு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பப்பு யாதவ் எம்.பி.க்கு மீண்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.யின் தனிப்பட்ட செயலாளர் முகமது சாதிக் ஆலமுக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில், பப்பு யாதவை கொலை செய்ய 6 நபர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.