என் மலர்
நீங்கள் தேடியது "logo"
- சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை டுவிட்டர் உண்டாக்கியது.
- 2023-ல் டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழில் அதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி ‘எக்ஸ்’ என அதற்கு மறுபெயரிட்டார்.
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர், 2006-ம் ஆண்டில் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகிய தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. அப்போது அந்த நிறுவனத்தின் இலச்சினையாக (லோகோ) பறவையை தேர்ந்தெடுத்தனர்.
சமூக வலைத்தள செயலிகளில் பெரும் புரட்சியை டுவிட்டர் உண்டாக்கியது. அதன்பின், 2012-ல் டுவிட்டரில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அதன் இலச்சினை, இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டு, ஒற்றை நீல பறவையாக மாற்றப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தங்களுடைய தலைமையக கட்டிடத்திலும் ராட்சத அளவில் தயாரான 'நீலப்பறவை' இலச்சினையை பொருத்தினர்.
அதன்பின்னர் அந்த இலச்சினை அந்த நிறுவனத்தில் அடையாளமாக மாறியது. 2023-ல் டுவிட்டர் நிறுவனத்தை பெரும் தொழில் அதிபரான எலான் மஸ்க் கையகப்படுத்தி 'எக்ஸ்' என அதற்கு மறுபெயரிட்டார். அதோடு நீலப்பறவை இலச்சினை பயன்பாடும் நின்றது. மேலும் நிறுவன கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த நீலப்பறவை இலச்சினை அகற்றப்பட்டது.
இந்தநிலையில் அரிய பொருட்களை ஏலம்விடும் பிரபல நிறுவனம் ஒன்று 'எக்ஸ்' நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த 'நீலப்பறவை' இலச்சினையை கையகப்படுத்தி ஏலம் விட்டது. 12 அடி நீளம், 9 அடி அகலம், 254 கிலோ எடை கொண்ட அந்த இலச்சினை ரூ.30 லட்சத்துக்கு (34 ஆயிரம் அமெரிக்க டாலர்) ஏலம் போனதாக அறிவித்துள்ளது.
- மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
- 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை.
ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜக அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது.
அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் '₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- லெட்டா் பேடில் புதிய இலச்சினையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.
- மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கான சான்றிதழ்களிலும் அதையே பயன்படுத்த வேண்டும்.
மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இலச்சினை (லோகோ) புதிதாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி, அந்த புதிய இலச்சினையை மருத்துவக் கல்லூரி முதல்வா்களின் ஆவணங்கள், மருத்துவக் கல்வி சான்றிதழ்களில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவத்தைக் குறிக்கும் குறியீட்டுடன் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என்ற வாக்கியமும், 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' என்ற வாசகமும் அந்த இலச்சினையில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநா் சாந்திமலா், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வா்கள், துணை இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களும், தங்களது லெட்டா் பேடில் புதிய இலச்சினையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். அதேபோல், மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகளுக்கான சான்றிதழ்களிலும் அதையே பயன்படுத்த வேண்டும். தொடா் மருத்துவக் கல்வி நிகழ்வுகள், துறைசாா் பிற நிகழ்வுகளிலும் புதிய இலச்சினையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த, 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நடக்கிறது.
- குன்னூரில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊட்டி,
ஆக்கி இந்தியா அமைப்பு மற்றும் தமிழக அரசு விளையாட்டுதுறை சார்பில், சென்னையில் ஆசிய சாம்பியன் போட்டி, அடுத்த மாதம் 3-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடக்க உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தென்கொரியா உள்பட 6 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் ஆசிய கோப்பை ஆக்கி போட்டிக்கான லோகா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த லோகோவில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் வகையில் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்ஆவண படத்தில் நடித்த முதுமலையை சேர்ந்த யானை மற்றும் பாகன் பொம்மன் பெயரை இடம் பெற செய்து கவுரப்படுத்தி உள்ளது ஆக்கி இந்தியா அமைப்பு.
லோகோவில் யானை ஆக்கி ஸ்டிக் பிடித்து நிற்பது போலவும், பொம்மன் பெயர் தமிழில் எழுத்துக்களாலும் பொறிக்கப்பட்டு லோகா உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆக்கி போட்டி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பயணப்பட்டு வருகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆக்கி போட்டிக்கான வெற்றி கோப்பை மற்றும் லோகோ ஆகியவை இன்று காலை நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தது. இதனை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் வரவேற்று பொதுமக்கள் பார்வைக்கு வைத்தனர். மக்கள் திரண்டு வந்து கோப்பையையும், லோகோவையும் பார்வையிட்டு சென்றனர்.
இதுகுறித்து ஆக்கி நீலகிரிஸ் அமைப்பு தலைவர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:-
கடந்த, 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி நடக்கிறது. இது மிகவும் பெருமை வாய்ந்தது. அத்துடன் இந்த வருடம் நடக்க உள்ள ஆக்கி கோப்பை போட்டியானது தமிழகத்திற்கு மட்டுமின்றி நீலகிரிக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது வெகு சிறப்பானதாகும்.
ஆக்கி போட்டிக்கான கோப்பை மற்றும் பொம்மன் பெயர், யானை அடங்கிய இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளதே காரணமாகும்.
மேலும் ஆக்கி போட்டி கோப்பை, லோகோ உள்ளிட்டவை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் முழுவதும் சுற்றுப்பயணமாகி வருகிறது.
இந்த கோப்பையானது இன்று நீலகிரிக்கு வருகிறது. இதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இங்கிருந்து இந்த கோப்பை ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது என்றார்.
- தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.. என்ற தலைப்பில் லோகோ.
- நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம்.
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதற்கான லோகோவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

இது நிதிநிலை அறிக்கையின் வெற்றியை கூறும் முத்துச்சின்னம் எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும், யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே எனும் பழமொழிக்கு ஏற்ப முத்திரை சின்னம் தயார் செய்யப்பட்டுள்ளது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை அதனை மாற்றியுள்ளது.
- ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோதுகிறது.
பெங்களூரு:
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ளது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 மாற்றங்களை கொண்டுள்ளது. கடந்த 16 சீசன்களாக 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' என்ற பெயரில் விளையாடி வந்த ஆர்சிபி அணி இந்த முறை "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு" என்ற பெயரில் விளையாடவுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு கர்நாடகா மாநில தலைநகரான பெங்களூரின் பெயர் 'பெங்களூரு' என மாற்றப்பட்டது. அப்போதிருந்தே ஐ.பி.எல். அணியின் பெயரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அந்த அணி நிர்வாகம் பெயரை மாற்றி இருக்கிறது.
இதனை தொடர்ந்து ஜெர்சியின் வண்ணத்தையும் மாற்றியுள்ளது. ரெட் மற்றும் கருப்பு கலரில் இருந்த ஜெர்சியை தற்போது நீலம் மற்றும் சிவப்பு கலரில் மாற்றியுள்ளது. கடைசியா ஆர்சிபி அணியின் லோகோவை மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை ஆரிசிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- டிடி நியூஸ் தொலைக்காட்சி தனது லோகோவை காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது.
- அரசின் செய்தி சேனல் நிறம் மாற்றியதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
புதுடெல்லி:
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கல் நடவடிக்கை நடக்கிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர். ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது ஒரு சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.
- டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது
- பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது - ஜவகர் சிர்கார்
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
தற்போது டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்களிடையே கடும் அதிருப்தியும், கண்டனங்களும் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் டிடி இந்தியா (ஆங்கில செய்தி சேனல்) லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவிலிருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன என கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.
ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு 'நடுநிலையான' பொதுத்துறை செய்தி சேனலின் நிறத்தை ஒரு மதத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும்
பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- டிடி நியூஸ் சேனலின் லோகோவையும் காவி நிறத்துக்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது
- பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது - ஜவகர் சிர்கார்
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறுத்துக்கு மாற்றியுள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதற்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும், பிரசார் பாரதி முன்னாள் தலைவருமான ஜவகர் சிர்கார் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
பிரசார் பாரதியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தூர்தர்ஷனின் லோகோவை காவி நிறத்திற்கு மாற்றியதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.
ஒரு பாரபட்சமான ஒருபக்க சார்புடைய அரசு, ஒரு 'நடுநிலையான' பொதுத்துறை செய்தி சேனலின் நிறத்தை ஒரு மதத்தின் நிறமாகவும், சங் பரிவார் நிறமாகவும் மாற்றுவது இந்திய வாக்காளர்களை பாதிக்கும்
பிரசார் பாரதி இப்போது 'பிரசார' பாரதியாக மாற்றப்பட்டுள்ளது. லோகோ மட்டுமல்ல தூர்தர்ஷன் முழுவதுமாகவே காவிமயமாகியுள்ளது. பாஜகவின் செய்திகள் மட்டுமே தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகின்றன" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், "நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தூர்தர்ஷன் லோகோ காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது முற்றிலும் சட்டவிரோதமானது. தேசிய ஊடகம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என தெளிவாகத் தெரிகிறது.இதை தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது? உடனடியாக லோகோவை மீண்டும் நீல நிறத்திற்கே மாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவை மையமாக கொண்டு வால்மார்ட் நிறுவனம் இயங்கி வருகிறது.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது.
உலகெங்கும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வரும் பன்னாட்டு பல்பொருள் விற்பனை அங்காடி, வால்மார்ட்.
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வால்மார்ட் நிறுவனத்தில் அன்றாட உபயோக பொருட்கள், மளிகை, மருந்து, விளையாட்டு பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும்.
இந்நிலையில், வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவின் பின்புற நிறத்தை மட்டும் அடர் நீல நிறத்தில் மாற்றி அதனை புதிய லோகோ என்று சமூக வலைத்தளங்களில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நெட்டிசன்கள் அதன் புதிய லோகோவை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
வால்மார்ட் நிறுவனம் தனது பழைய லோகோவையே பட்டி டிங்கரிங் செய்து புதிய லோகோவாக வெளியிட்டுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
17 ஆண்டுகளுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாக அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 10-ந்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி என்ற நிலையில் தமிழக அரசு இப்போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இதற்கான லோகோ சதுரங்க குதிரை வடிவம் தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், முக்கிய அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த லோகோ பொறித்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.