என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Military"

    • அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது
    • இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். இந்த திட்டத்தின்படி மானாவாரியாகச் சாப்பிட்டு 102 கிலோ வரை தனது இயல்பான எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார்.

     

    அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது. இது ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை கட்னுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் ராணுவ சேவையை தவிர்க்க முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

     

     

    இந்த குற்றத்துக்கு 3 வருடம் தண்டனை வழங்கலாம் என்ற நிலையில் முதல் முறையாக அவர் குற்றம் புரிந்துள்ளதாலும், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வேன் என்று வாக்குறுதி அளித்ததாலும் அவருக்கு 2 வருட சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

    மேலும் அவர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விளையாட்டாக இந்த திட்டத்தை சொன்னார் ஆனால் நிஜமாகவே செய்வார் என்று நினைக்கவில்லை என்று பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    • 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினா
    • திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பார்

    பழமைவாதியான டொனால்டு டிரம்ப் LGBTQ+ சமூகத்தைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர் ஆவார். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த அவர், ராணுவத்தில் திருநங்கைகள் சேருவதற்கு தடை விதித்தார்.

    அவர்களுக்கு எனத் தனியாகக் கவனம் மற்றும் ஏற்படும் செலவு உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி அவர் இதை செய்தார். ஆனால் 2020 ஆம் ஆண்டு டிரம்பை தோற்கடித்து அதிபரான ஜோ பைடன் இந்த தடையை நீக்கினார். இப்போது பிரச்சனை என்னவென்றால் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனல்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

     

    அவர்களைக் குறிவைத்து டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆட்சிக் காலத்தை போலவே ராணுவத்தில் திருநங்கைகள் சேர டிரம்ப் தடை விதிக்க உள்ளதாக அவரது அதிகார வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

    உத்தரவைத் தயாரித்து வருவதாக தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கவே ராணுவத்தில் உள்ள 15,000 திருநங்கைகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

     

    இதுதவிர்த்து பாலினத்தை உறுதிப்படுத்தும் இதுதவிர்த்து சுகாதாரப் பாதுகாப்பை திருநங்கைகள் அணுகுவதைத் தடை செய்தல், பள்ளியில் திருநங்கை மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்பதைத் தடுப்பது உள்ளிட்ட பிற்போக்கான நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடும். 

    • நேபாள ராணுவ தலைவர் ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.
    • ராணுவ வீரர்களின் மீது மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    உத்தரகாண்ட மாநிலம் டேராடூன் ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

    நேபாள ராணுவ தலைவர்ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.

    அணிவகுப்பின் இறுதிக்கட்டத்தில் ராணுவ வீரர்களின் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியது
    • தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது குற்றம்சாட்டினர்

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று குடியிருப்பு கட்டடம் ஒன்றின் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ரஷிய இராணுவத்தின் ரசாயன, உயிரியல் மற்றும் கதிர்வீச்சு பாதுகாப்புப் படைகளுக்கு தலைமை தாங்கிய இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டார்.

    மாஸ்கோவில் உள்ள ரியாசான்ஸ்கி அவென்யூவில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் வாயிலில் எலெக்ட்ரிக் ஷூட்டரில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் கொல்லப்பட்டனர் என்று ரஷிய பாதுகாப்பு அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.

     

    ரஷ்ய டெலிகிராம் சேனல்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், இடிபாடுகளால் சூழ்ந்த கட்டிடத்தின் உடைந்த நுழைவாயில் மற்றும் பனிப் படலத்தின் மீது கிடந்த இரத்தக் கறை படிந்த இரண்டு உடல்கள் கிடக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை உக்ரைன் மீது பயன்படுத்தியதாக அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கிரில்லோவ் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது இந்த கொலை அரங்கேறி உள்ளது.

     

    இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரைன் தான் காரணம் என்று கீவ் உளவுத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.

    உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பான SBU இந்த கொலைக்கு பின்னால் இருப்பதாக அந்த தகவல் கூறுகிறது. ஜெனரல் ஒரு போர்க் குற்றவாளி என்றும் எனவே அவர் தான் இலக்கு என்றும் உக்ரைன் கருதுவதாக கூறப்படுகிறது.

    • ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் 8-ம் வகுப்பு மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலா் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். 1.7.2023 அன்று 11 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். 2.7.2010-க்கு முன்னதாகவும், 1.1.2012-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது.

    இந்த வயது வரம்பில் எந்த தளா்வும் இல்லை. இதற்கான எழுத்துத் தோ்வு 3.12.2022 அன்று நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567-230045 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    • 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதற்காக, 3 லட்சம் வீரர்களை திரட்ட ரஷிய அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள் பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் ராணுவத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ ஆள்சேர்ப்பு பற்றிய அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. பொதுமக்கள் பேரணி, போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போர் வேண்டாம்.உடனே நிறுத்துங்கள் என்று கோஷங்களை எழுப்பினர். போலீசார் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து போராடுவோர் கைது செய்யப்படுகின்றனர்.

    நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 1300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே ராணுவ ஆள்சேர்ப்பு பற்றி புதின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு ரஷியாவில் இருந்த பலர் வெளிநாடுகளுக்கு செல்வதில் மும்முரமாக உள்ளனர். போரில் ஈடுபட விரும்பாத மக்கள் நாட்டில் இருந்து வெளியேறுகிறார்கள்.

    ரஷியாவில் இருந்து புறப்படும் விமானங்கள் இந்த வாரம் முழுவதுமாக கிட்டத்தட்ட முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. ராணுவச் சட்டம் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், ரஷிய விமான நிறுவனங்கள் 18 முதல் 65 வயதுக்குட்பட்ட (போருக்கு தகுதியான வயது) ரஷிய ஆண்களுக்கு டிக்கெட் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக பல்வேறு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியாகின.

    இந்நிலையில், ரஷியன் ஏர்லைன்ஸ், விமான நிலைய ஊழியர்கள் ராணுவத்தில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஷ்யாவில் விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாய அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. குறைந்தபட்சம் ஐந்து விமான நிறுவனங்கள் மற்றும் 10 விமான நிலையங்களின் ஊழியர்கள் ராணுவச் சேர்க்கை பதிவு குறித்து அலுவலகங்களுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    நாட்டின் தலைசிறந்த விமான நிறுவனமான ஏரோஃப்ளோட் குழுமம் உட்பட ஐந்து ரஷ்ய விமான நிறுவனங்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்களின் பணியாளர்கள் ராணுவத்திற்கு சேவை செய்ய சம்மன் பெற்றனர். இதில், 50- 80% ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படலாம் என்று மூன்று நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஏரோஃப்ளோட் குழுமத்திற்கு நெருக்கமான ஆதாரத்தின்படி, குழுவின் மூன்று விமான நிறுவனங்களின் ஊழியர்களில் பாதி பேர் பணியமர்த்தப்படலாம் என்றும் இவர்களில் ரோசியா ஏர்லைன்ஸ் மற்றும் போபெடா ஏர்லைன்ஸ் ஊழியர்களும் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் ஏரோஃப்ளோட் அதிகாரப்பூர்வமான கருத்தை வழங்கவில்லை என்றாலும், குழு இப்போது வெவ்வேறு சிறப்புகளில் இடஒதுக்கீட்டிற்கான பட்டியலைத் தயாரிக்க பணிக்குழுக்களை அமைத்துள்ளது.

    இதைத்தவிர, குறைந்தபட்சம் ஐந்து நிறுவனங்கள், வரைவில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டிய ஊழியர்களின் பட்டியலைத் தொகுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் இரண்டு விமான நிறுவனங்கள் பட்டியலை அனுப்பியுள்ளன. இதில் ஒன்று உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்கியது. மற்றொன்று போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. விமானக் கட்டுப்பாட்டாளர்கள், விமானிகள் மற்றும் பிற வணிக, தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இந்த விலக்கு முக்கியமானதாகக் கூறப்படுகிறது.

    • டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    டேராடுனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை-2023 பருவத்தில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) சேருவதற்காக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ந் தேதி அன்று தேர்வு நடைபெறுகிறது.

    சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்), 7-ம் வகுப்பு படிப்பவர் அல்லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் (1.7.2023 தேதியின்படி) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 11½ வயது முதல் 13 வயது வரை (1.7.2023 தேதியின்படி) (அவர்கள் 2.7.2010-க்கு முன்னதாகவும் 1.1.2012-க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது). தேர்வு நடைபெறும் நாள்: 3.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகும்.

    தேர்விற்கான திட்ட ப்படி, ஆங்கிலம் (125 மதிப்பெண்கள்) - 2 மணி நேரம், கணிதம் (200 மதிப்பெண்கள்) - 1.30 மணி நேரம், பொது அறிவு (75 மதிப்பெண்கள்) - 1 மணி நேரம் (கணிதம் மற்றும் பொது அறிவுத்தாள் ஆகியவை ஆங்கிலம் அல்லது இந்தியில் விடையளிக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, கர்ஹிகான்ட், டேராடுன், உத்தரகாண்ட் 248 003 என்ற முகவரிக்கு, விரைவு அஞ்சல் வாயிலாகவும், கேட்பு காசோலைக்குரிய கிளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டெல்பவன், டேராடுன் (வங்கி குறியீடு 01576)-ம் பெற்றுக்கொள்ளலாம்.

    விண்ணப்ப கட்டணம் காசோலை மூலம் அல்லது இணையவழியாக பொதுப்பிரிவு - ரூ.600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555 ஆகும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-600 003 என்ற முகவரிக்கு 15.10.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்கப் பெற வேண்டும்.

    விண்ணப்பப் படிவம், தகவல் தொகு ப்பேடு ஆகியவை சென்னை யிலுள்ள இந்த தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட மட்டாது. ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியின் விண்ணப்பப்படிவங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள ப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).
    • வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.

    நெல்லை:

    வீரவநல்லூர் அருகே உள்ள புதுக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையா கார்த்திகேயன். இவரது மகன் வேலு(வயது 23).

    இவர் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி எடுத்து வந்தார். சமீபத்தில் நடந்த ராணுவத்திற்கான உடல் தகுதி தேர்வில் அவர் பங்கேற்றார். அதில் தேர்ச்சி பெற்ற வேலு மருத்துவ பரிசோதனை தேர்வில் மட்டும் தோல்வி அடைந்தார்.

    அதாவது கண் பார்வை திறன் தொடர்பான சோதனையில் அவருக்கு பார்வை குறைபாடு இருப்பதாக கூறிவிட்டனர். இதனால் அவருக்கு ராணுவத்தில் சேர முடியாமல் போய்விட்டது.

    இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த வருத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்திம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுதொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஈராக்கில் ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 34 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #Militantskilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது.  தீவிரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அச்சா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 27 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

    இதேபோல், குஷ் டேபா மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் 7 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 11 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்..

    மேலும், இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 பேரும் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Militantskilled
    சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்த அந்நாட்டு ராணுவம், அவரை சிறைபிடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது. #Sudanesepresident #OmaralBashir
    கர்ட்டோம்: 

    சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   

    போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

    இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையிலான மோதல்களில் உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.  அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை சுமார் 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போராட்டங்களை கட்டுக்குள் வைக்க தவறியதாக அதிபர் ஒமர் அல் பஷீருக்கு கண்டனங்கள் குவிந்தன.

    இந்நிலையில், சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்து சிறைபிடித்துள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக சூடான் நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி அவாட் இப்னூ கூறுகையில், அதிபர் பதவியில் இருந்து ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை சிறைபிடித்துள்ள நாங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

    சூடான் நாட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் பதவி வகித்தவர் ஒமர் அல் பஷிர் என்பது குறிப்பிடத்தக்கது. #Sudanesepresident #OmaralBashir
    இந்திய ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
    சென்னை :

    சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தென் இந்தியாவின் முதல் பெண்கள் பள்ளியாக திகழ்கிறது. இப்பள்ளியின் 150-வது ஆண்டு தொடக்க விழா பள்ளி அருகே உள்ள ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது.

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து விளையாட்டு மற்றும் படிப்பில் சிறந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னாள் மாணவிகள் டாக்டர் வி.சாந்தா, பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகை லட்சுமி ஆகியோருக்கு சிறப்பு விருதுகளையும் அவர் வழங்கினார்.

    விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    ஒரு பள்ளி 150-வது ஆண்டுவிழா கொண்டாடுவது மிகச்சிறப்பு. இந்த பள்ளியில் படித்தவர்கள் நிறைய பேர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். டாக்டர் வி.சாந்தா, பின்னணி பாடகி வாணி ஜெயராம், நடிகை லட்சுமி ஆகியோர் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள். அவர்கள் பேசுகையில் இந்த பள்ளியில் படித்த நாட்களை நினைவு கூருகிறோம் என்றனர். மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களின் பெயர்களையும் மறக்காமல் கூறினார்கள். அந்த அளவுக்கு ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு ஈடுபாடு இருந்துள்ளது.

    டாக்டர் வி.சாந்தா பேசுகையில் சீனிவாச சாஸ்திரி தனக்கு ஆங்கில வகுப்பு எடுத்தார் என்றார். நான் பிரமித்து போனேன். அவரைப் பற்றி நான் நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். ஏனென்றால் சீனிவாச சாஸ்திரி பெரிய மனிதர். ஆங்கிலத்தில் மிகுந்த புலமை பெற்றவர். அவரிடம் ஆங்கிலம் படித்ததற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

    ஏழை மற்றும் நடுத்தர மக்களின் குடும்பத்தினருக்கு இந்த பள்ளி கல்வி வழங்கி வருவது பாராட்டத்தக்கது. இந்திய ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் சேரவேண்டும். இந்த பள்ளியில் நல்ல குணத்தை மாணவிகள் பெற்றிருக்கிறார்கள். இந்த பள்ளியில் இருந்தும் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற்றிற்கு நிறைய மாணவிகளை உருவாக்கவேண்டும். முன்பு தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. போன்றவற்றில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.ஐ.டி. மத்திய அரசு பணிகளில் தமிழக மாணவர்கள் குறைந்து வருகிறார்கள். இதில், அவர்கள் கூடுதலாக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் “தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிக மாற்றங்களை மாணவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டு வருகிறது. அதன்படி பாடத்திட்டம் மாற்றப்பட்டு இந்த வருடம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீட் தேர்வு, ஐ.ஐ.டி., சி.ஏ.தேர்வுகளுக்கு அடுத்த மாதம் முதல் இலவசமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது” என்றார்.

    தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், பள்ளியின் செயலாளர் லீலா, துணைத்தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பேசினார்கள். டாக்டர் ஜெயவர்த்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்ரீதரன் நன்றி கூறினார். 
    ×