என் மலர்
நீங்கள் தேடியது "milk"
- கடந்த சில நாட்களாக பெங்களூரு பகுதியில் அடிக்கடி கடைகளில் பால், தயிர் பாக்கெட்டுகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது.
- இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிலர் லிட்டர் கணக்கில் பால், தயிர் பாக்கெட்டுகளை திருடினர்.
பெங்களூரு:
கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் பால் மற்றும் தயிர் விலையை அரசு உயர்த்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் விலை உயர்வை அரசு திரும்ப பெறவில்லை.
இந்த நிலையில் பால், தயிர் விலை அதிகரித்த நிலையில் கடந்த சில நாட்களாக பெங்களூரு பகுதியில் அடிக்கடி கடைகளில் பால், தயிர் பாக்கெட்டுகள் திருட்டு அதிகரித்து காணப்படுகிறது.
பெங்களூரு காமாஷிபல்யா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒரு மர்ம நபர் 1 லிட்டர் பால் பாக்கெட்டை திருடியுள்ளார். இந்த காட்சிகள் அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதே போல் காமாஷிபாளையம் என்ற பகுதியில் பால் பூத்துக்கு முன்பு பெட்டிகளில் பால் பாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த சிலர் லிட்டர் கணக்கில் பால், தயிர் பாக்கெட்டுகளை திருடினர். இந்த காட்சிகளும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதே போல் பல்வேறு இடங்களிலும் பால், தயிர் பாக்கெட் திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
- சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.
திருப்பூர் :
திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.மதுசூதனன், செயலாளா் ஆா்.குமாா் ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
கால்நடை தீவனங்களான பருத்திக் கொட்டை, தவிடு, பிண்ணாக்கு உள்ளிட்டவற்றின் விலை அண்மையில் கடுமையாக உயா்ந்துள்ளது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு உயா்த்தியது. இந்த நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு பால் ஊற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திக் கொடுக்கக் கோரி ஆங்காங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எறுமைப்பால் லிட்டருக்கு ரூ.51 கொள்முதல் விலையாக நிா்ணயித்து ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் வட்டாட்சியா்கள் ராஜேஷ், கனகராஜ், கோவிந்தராஜ், சைலஜா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
- ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
- குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.
ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.
பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.
- ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தென்னிந்திய பார்வர்டு பிளாக் வலியுறுத்தல் விடுத்துள்ளனர்.
- இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.
அவனியாபுரம்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.சி.திருமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு ஏறும் நிலை ஏற்படுகிறது.
ஏற்கனவே மின்சார கட்டண உயர்வு கடுமையாக பாதிக்கும் வேளையில் பால் விலை உயர்வும் மக்களை வறுமை சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். எனவே தமிழக அரசு உடனே போர்க்கால நடவடிக்கையாக பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
தி.மு.க. அரசின் தேர்தல் அறிக்கையான குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. ஆயிரம் தருவதாக கூறி இன்று வரை அதை தராமல் குடும்பத் தலைவிகளை ஏமாற்றியதை கண்டித்தும், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் என்று கூறி சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை குறைத்ததை கண்டித்தும், எளிய மக்களை பாதிக்கும் வகையில் வீட்டு வரி கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், பத்திரப்பதிவு துறையில் உள்ள முறைகேடுகளை களையவும், தற்போது நடைமுறையில் உள்ள பத்திரப்பதிவின் கடினமான முறையை மாற்றி ரியல் எஸ்டேட் தொழிலை நம்பி வாழும் 1 கோடி நடுநிலையாளர்களை வாழ்வை பயன்பெறும் வகையில் பத்திரப்பதிவில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமை யாக்க வேண்டும் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சரை வலியுறுத்துகிறோம்.
அன்றாடும் சாமானிய மக்களை பாதிக்கும் போக்குவரத்து துறையின் அபராத கட்டண உயர்வால் இந்த சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பல இடங்களில் பொது மக்களுக்கும், போக்கு வரத்து காவல்துறைக்கும் பிரச்சினை ஏற்பட்டு மக்கள் மற்றும் காவல் துறையில் இடையே முரண்பாடு ஏற்படுகிறது.
இந்த முரண்பாடுகளை களைவதற்கு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தமிழகம் தழுவிய அறப்போராட்டத்தை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி விரைவில் நடத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும்.
- பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.
பசுமையான மேய்ச்சல் நிலங்களை கிராமங்களில் உருவாக்கி புல், கீரைகளை தீவனமாக அளித்தார்கள். பசுக்கள் இன்று நகர-கிராம குப்பைத் தொட்டிகளில் உணவை தேடி திரிகின்றன. குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவை உண்டு தரும் பால் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
தமிழகத்தில் பால் மாடு வளர்ப்பு என்பது பல லட்சக்கணக்கான மக்களுக்கான வாழ்க்கை ஆதாரமாக உள்ளது.
கிராமங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் கறந்த பாலை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் தனியாகவும், பண்ணைகள் மூலமாகவும் விற்கிறார்கள். பொதுவாகவே கொள்முதல் செய்யப்படும் பாலை அந்தந்த நிறுவனங்கள் ` பாஸ்டிரைசேசன் ' என்ற முறையில் 160 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் பதப்படுத்தி கிருமி நீக்கம் செய்து பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
நகரங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் பலர் ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர். ஆனால், சரியான வெப்பநிலையில் காய்ச்சாத பாலில் அந்த பசுக்கள் உட்கொண்ட தீவனத்தின் மணம் மற்றும் தன்மை காணப்படுவதுடன், புருசெல்லோசிஸ் போன்ற நோய் தொற்று கிருமிகளும் இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும். ஆரோக்கியமான சுகாதார நிலையில் பசும் புற்கள், புண்ணாக்கு, உலர் தீவனங்கள், தூய குடிநீர் தரப்பட்டு வளர்க்கப்படும் பசுக்களில் கறந்த பசும்பால் நறுமணத்துடன், இனிப்பு சுவையோடு இருக்கும்.
மேய்ச்சலுக்கு போகும் பசுக்கள் நிலத்தில் முளைத்திருக்கும் காட்டு வெங்காயம் போன்ற களைகளை மேயும் போது அவற்றின் பாலில் இந்த களைகளின் வாடை காணப்படும். நிறமும் வேறுபடும். இதுதான் பாலின் இயல்பு.
இப்போது நம் நாட்டில் பசுக்களின் நிலைமையை பார்க்கலாம். தற்போது நகரங்களிலும் பல கிராமங்களிலும் கூட வளர்க்கப்படும் பசுக்களை போதிய தீவனம் அளிக்க வசதி இல்லாமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இந்த பசுக்கள் தெருத்தெருவாக வீடுகளில் போய் மக்கள் தரும் எஞ்சிய இட்லி, தோசை முதல் குப்பையில் வீசப்பட்ட பாலித்தீன், நாப்கின் வரை அனைத்து கழிவுகளையும் உண்கின்றன.இந்த பசுக்களின் பால் எந்த தரத்தில் இருக்கும் என்பது கேள்விக்குறி.
இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-
பொதுவாக, பாலை வீட்டில் காய்ச்சும் போது அதிகபட்சமாக 100 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் தான் காய்ச்ச முடியும். இந்த கொதி நிலையிலும் தப்பி உயிர் வாழும் நுண்ணுயிரிகள் பாலில் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் செல்லும் போது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இதுவரை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. ஆனால், குப்பையில் வீசப்பட்ட கெட்டுப் போன உணவை உண்டு வாழும் பசுக்களுக்கு உறுதியாக பல உடல் நல குறைபாடுகளும், அவற்றின் பாலில் தரமற்ற கொழுப்பு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படும் என்பது உறுதி.
இந்த வகை மாடுகளின் பாலை சரியாக காய்ச்சாமல் குடிக்கும் போது மனிதர்களுக்கு அனீமியா என்னும் ரத்தசோகை வரும். இந்த பாலை குடிக்கும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகும். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோய்களும் தொடர்ந்து வரும்.சுகாதாரமற்ற நிலையில் வளரும் பசுக்களில் எலும்புருக்கி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோய் இருக்கலாம். இந்த பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரமற்ற பால் உற்பத்தியை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ` மாடு வளர்ப்பு என்றால் அதற்கு சுகாதாரமான கொட்டகை, சத்துள்ள பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம், தூய குடிநீர் எல்லாம் இருக்க வேண்டும். நகரங்களில் மாடு வளர்ப்பவர்களுக்கு இப்படி எந்த வசதியும் இல்லை. பணம் செலவழித்து தீவனம் வாங்க தயங்கி பசுக்களை சாலையில் திரிய விட்டு குப்பையில் மேய விடுகின்றனர்.
இதனை தடுக்க, நகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகளை ஒரு இடத்தில் வைத்து பராமரிக்கும் வகையில் மாநகராட்சி ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கி மாட்டு கொட்டில்களை ஏற்படுத்தி தர வேண்டும்.இதன் மூலம் மட்டுமே நகர சாலைகளிலும் குப்பை தொட்டிகளை தேடி பசுக்கள் திரிவதை தடுக்க முடியும். மக்களுக்கு ஆரோக்கியமான பசுக்களின் பால் கிடைக்கும்' என்றார்.
தாய்ப்பாலுக்கு அடுத்ததாக போற்றப்படுவது பசுவின் பால். மனிதனுக்கு உணவாக பால், நெய், வெண்ணெய், தயிர், மோர் என்றுபல விதமான பொருட்களை தரும் பசுக்களை மனிதர்கள் பாதுகாப்பாக கொட்டில், கோசாலை, பசு மடம்என்று அமைத்து வளர்த்தார்கள்.
- 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
- மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர்(பால்வளம்) சிவக்குமார்:- பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் இயங்கிவரும் 197 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் உள்ளுர் தேவைக்காக சுமார் 19 ஆயிரத்து 300 லிட்டர் போக மீதமுள்ள பால், 11 பால் குளிர்வு மையங்களில் தலா 5 ஆயிரம் லிட்டர் வீதம் 55 ஆயிரம் லிட்டர் பால் குளிர்விக்கப்பட்டு, சென்னை பெருநகர தேவைக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள பால் ஆவின் பால் குளிர்வு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பாட்டிலில் பால் விற்பனை செய்வது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.
- பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.
- பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை.
உடுமலை:
உடுமலை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பால், ஆவின் மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு அளிக்கப்படுகிறது. மக்களுக்கும் நேரடியாக பால் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பாலின் தரம் மற்றும் எடையை சோதனை செய்து அதற்குரிய ரசீது வழங்கப்படுவதில்லை. பாலின் எடை அளவு குறைவதால் நுகர்வோர் மட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கின்றனர்.
அதேநேரம் பாலின் தரத்தை கண்டறியும் வகையில் இமெட் எனும் எலக்ட்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட் கருவிகளை இத்தகைய இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
அதிக அளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களை தேர்வு செய்து அங்குள்ள பொது இடங்களில் உணவு பாதுகாப்பு துறையால் இமெட் கருவி வைக்க வேண்டும்.அதன் வாயிலாக, நுகர்வோர் அனைவரும் பாலின் தரத்தை இலவசமாக பரிசோதிக்கலாம். ஏற்கனவே இக்கருவிகள் சில இடங்களில் வைக்கப்பட்டது. ஆனால் கருவியின் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.பெரும்பாலான தனியார் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பாலின் தரம் குறைவாகவே உள்ளது. அங்கு இமெட் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கலப்படம் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல் பட்டி அருகே இளையாத்தங்குடியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் தொகை மற்றும் கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்க டேஷன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், துணை செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்ட மைப்பு தலைவர் மாணிக்க வாசகம், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை.
- மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய், எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கறவை பாலுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு பால் கொள்முதல் குறைந்தபட்ச விலையை மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய்,எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.அதேபோல் மாட்டு தீவன வகையிலான சோளத்தட்டு வைக்கோல் போன்றவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.அரசு ஆவின் மூலம் வழங்கும் அடர் தீவனத்தை நல்ல தரத்துடன்அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பால் கொள்முதல் நிலையங்களில் எந்த பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் பால் கொள்முதல் அனைவரிடத்திலும் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- 1000 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது.
- விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை.
தாராபுரம் :
தாராபுரத்தில் 100க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பால் விற்பனை செய்து வருகின்றனர். தாராபுரம் கூட்டுறவு சங்கத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது.
கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பாலை அப்பகுதி பொதுமக்கள் வாங்கி செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இந்நிலையில் மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான புண்ணாக்கு, பசுந்தீவனம், ஆட்கள் கூலி ,விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுப்படி ஆவதில்லை. எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாலை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில்:-
மாடுகளை பராமரிக்க தேவையான வேலை ஆட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை. கூட்டுறவு சங்கம் கொடுக்கும் பால் விலை கட்டுபடியா கவில்லை. எனவே பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும். மானிய விலையில் தீவனங்கள் வழங்க வேண்டும். அரசு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார்.
- இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு கணபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் ரவிகாந்த் (வயது 52). தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
விலங்குகள், பறவைகள் மீது அதீத பற்று கொண்ட இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, வீட்டில் பானைகள், செயற்கை கூடுகள் அமைத்து, பல ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளுக்கு வாழிடம் அமைத்து கொடுத்து வருகிறார். கோடை காலங்களில் குருவிகளுக்கு, தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் வைத்து வருகிறார்.
வாழப்பாடி பகுதியில் ஏராளமாக சுற்றித்திரியும் நாய்க்குட்டிகளை, குறிப்பாக பெண் நாய்க்குட்டிகளை, வாழப்பாடி கிழக்குக்காடு மயானம் அருகே கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இப்படி கைவிடப்பட்ட ஏராளமான நாய்க்குட்டிகள் இப்பகுதியிலேயே தங்கி உணவின்றி தவித்து வருகின்றன.
இதனைக் கண்ட ரவிகாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் இருக்கும் நாய்குட்டிகளுக்கு தினம்தோறும் வீட்டிலிருந்து பால் சாதம் தயாரித்து எடுத்து வந்து அளித்து வருகிறார். இதனை கண்ட பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இவரிடம் கேட்டதற்கு, 'தெரு நாய்கள் குட்டி போடும்போது ஆண் குட்டிகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள், பெண் குட்டிகளை கொண்டு வந்து மயானத்தில் விட்டு சென்று விடுகின்றனர். இந்த குட்டிகள் உணவின்றி தவித்து வருகின்றன.
இதனால், இந்த நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க வேண்டும் என மனதில் தோன்றியது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து உணவளித்து வருகிறேன். இது எனக்கு மன நிறைவைத் தருகிறது' என்றார்.
- பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விலை நிலங்களில் விளைந்த நெல், கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.
விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராம மக்கள், மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.