என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Duraimurugan"

    • இந்தி வந்தால் தமிழ் அழியும் என்று முதலில் 1938 இல் சொன்னது பெரியார் தான்
    • தன்னுடைய 92 வயதிலும் மூத்திரச் சட்டியுடன் கூட்டம் கூட்டமாக சென்று பேசியவர் பெரியார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பெரியாருக்கு எதிரான அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசி வருவதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "இந்தி வந்தால் தமிழ் அழியும் என்று முதலில் 1938 இல் சொன்னது பெரியார் தான். இன்று பெரியார் ஒழிக என்று சொல்கிறார்கள் இதைவிட நன்றி கெட்டத்தனம் வேறு ஏதாவது இருக்குமா? பெரியார் இல்லாவிட்டால் இந்த நாடு என்னவாகியிருக்கும். குட்டிசுவராகி போயிருக்கும்.

    நான் இன்றைக்குக்கு எம்.ஏ. படித்துள்ளேன். கிட்டத்தட்ட 50 வருடமா சட்டசபையில் இருக்கிறேன். 5 - 6 முறை மந்திரியாக இருந்திருக்கிறேன். நான் என்ன ராஜா வீடு பையனா? நான் ஒரு ஏழை விவசாயியின் மகன். அவன் படிப்பதற்கும் இந்த நிலைமைக்கும் கொண்டு வந்தது பெரியார் தான்.

    பெரியாரை பற்றி பேசுவது மிக கேவலமான செயல். தன்னுடைய 92 வயதிலும் மூத்திரச் சட்டியுடன் கூட்டம் கூட்டமாக சென்று பேசியவர் பெரியார். பாவிகளா, அப்படிப்பட்ட பெரியார் குறித்து இப்படியா பேசுவது?" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    • பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினம்.
    • அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பேராசிரியர் அன்பழகனின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காட்பாடி தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அன்பழகன் உருவப் படத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது என அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, பெரிய மனிதர்கள் எது வேண்டுமானாலும் பேசிவிட்டு போகலாம் என்றார்.

    மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் மொழியில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அமித்ஷா பேசியது குறித்து கேட்டதற்கு, `சொல்லுதல் யாவருக்கும் எளிய அரியவாம்' என திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சென்றடைவதற்கு முன் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும் என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் இருந்து மதகுகளை இயக்கி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.

    சம்பா, தாளடி விளைச்சாலுக்காக தொடர்ந்து அடுத்த ஆண்டு (ஜனவரி) 28-ந் தேதி வரை மேட்டூர் அணையில் இருந்து 250 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

    இதன் மூலம்  காவிரி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடியில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பயன் பெறுகிறது. 

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருவதாக மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் 23.04.2022 அன்று துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    4,964 கி.மீ. தூரம் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதுவரை 4,047 கி.மீ. நீளத்திற்கு (82 சதவிகிதம்) பணிகள் முடிவடைந்துள்ளது. 

    இதில் ஆறுகள் தூர்வாரும் பணி முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இப்பணிகள் தினசரி 210 கி.மீ. நீளத்திற்கு போர்க்கால அடிப்படையில் கூடுதல் இயங்திரங்களை பயன்படுத்தி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 

    ஆறுகள் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சென்றடைவதற்கு முன் மீதமுள்ள பணிகள் அனைத்தும் 31.05.2022-ற்குள் முழுமையாக முடிக்கப்படும். 

    இவ்வாறு அமைச்சர் திரு.துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    • காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டபணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன.
    • வெள்ளப் பெருக்கு நேரத்தில் கடலுக்கு வீணாக தண்ணீர் செல்வதை தடுக்க நடவடிக்கை

    முக்கொம்பு:

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கதவணையை தமிழக நீர்வளதுறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    முக்கொம்பு கொள்ளிடம் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய கதவணை விரைவில் திறக்கப்படும். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே மூத்த பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்துள்ளோம். வீணாகும் வெள்ள நீரை சேமிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு மேற்கொள்ளும். 

    மேட்டூர்- சரபங்கா நதிகள் இணைப்புப் பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கவில்லை. காவிரி- கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகள் மற்ற மாநிலங்களிலும் தாமதமாக நடைபெற்று வருகிறது. காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்பது அதிமுக அரசு உடைய திட்டமல்ல. அது மத்திய அரசின் திட்டம். தமிழகத்தில் அனைத்து ஏரி, குளங்களும் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளது.

    கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால், வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்களை படிப்படியாக நிரந்தர பணியாளர்களை பணியில் அமர்ந்த தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாளை கே.டி.சி. நகரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
    • தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    நெல்லை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் தி.மு.க. பொதுச்செயலாளருமான துரைமுருகன் நாளை முதல் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    இதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடி வரும் அவர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.

    பாளை கே.டி.சி. நகரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனைத் தொடர்ந்து வண்ணார்பேட்டை விருந்தினர் மாளிகை செல்கிறார். மதியம் 3 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறையின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.

    அன்று இரவு நெல்லையில் தங்கும் அமைச்சர் துரைமுருகன் மறுநாள் காலை சபாநாயகர் அப்பாவு தலைமையில் தாமிரபரணி-கருமேனியாறு இணைப்பு பணிகளை பொன்னாக்குடி பகுதியில் ஆய்வு செய்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வஹாப், ரூபி மனோகரன், ஞான திரவியம் எம்.பி.,மேயர் சரவணன், துணை மேயர் ராஜு மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    • ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது.
    • தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல.

    வேலூர்:

    வேலூரில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேலூரில் அடி பம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அதே கட்சியை சேர்ந்தவருக்கு காண்ட்ராக்ட் வழங்கப்பட்டுள்ளது. பஜாரில் பீடி, சிகரெட் விற்பனை செய்து கொண்டு இருந்தவருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு பெரிய பணியை செய்யக்கூடிய தகுதி அந்த காண்ட்ராக்டருக்கு இல்லை. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரூ.20 ஆயிரம் கோடி சுருட்டி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம்.

    ஆந்திராவிலிருந்து போதை பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுகிறது. கும்மிடிப்பூண்டி முதல் கிருஷ்ணகிரி வரை ஆந்திரா பகுதி இருப்பதால் எளிதில் கடத்தி வந்து விடுகின்றனர்.

    கவர்னர், நடிகர் ரஜினி சந்திப்பு சொல்ல முடியாத அரசியல்.

    பாலாற்றில் தற்போது தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாலாற்றின் குறுக்கே 10 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. பிப்ரவரி மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

    மேல்அரசம்பட்டு அணை கட்டிட பணி அடுத்த ஆண்டு தொடங்கப்படும். தமிழக கவர்னர் மசோதாக்களை கிடப்பில் போடுவது நல்லதல்ல. அவர் தன்னை உணர்ந்து நீட் உள்ளிட்ட சட்டமசோதாக்களில் கையெழுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூர் அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய நீர் இருப்பு, மழையையொட்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்தும் அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    மேட்டூர்:

    மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து தற்போது 40 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணை உபரி நீரை விவசாய பயன்பாட்டிற்கு வழங்கும் உபரி நீரேற்று திட்டப்பணிகளை விரைவு படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளையும், மேட்டூர் அணை நீர் இருப்பு பற்றியும் ஆய்வு செய்தவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மேட்டூருக்கு வந்தார். பின்னர் இரவு அவர், மேட்டூர் பொதுப்பணித்துறை மாளிகையில் தாங்கினார்.

    மேட்டூர் அணை

    இதையடுத்து இன்று காலையில் அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் அணையை பார்வையிட்டார். அப்போது அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய நீர் இருப்பு, மழையையொட்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பொதுமக்களுக்கு தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் என அறிவுரைகளும் வழங்கினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று, மேட்டூர் திப்பம்பட்டியில் நடந்து வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, சோதனை முறையில் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படுவதை பார்த்து அந்த பணிகளின் நிலையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் இந்த திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வரவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது நீர்வளத்துறை அரசு கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா, பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 


    முல்லை பெரியாறு அணை திடமாக உள்ளது என்று சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முல்லை பெரியாறு அணையில் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அதிகாரி அளித்த அனுமதி அடிப்படையிலேயே நன்றி தெரிவித்து கேரள முதல்-மந்திரிக்கு, தமிழக முதல்-அமைச்சர் கடிதம் எழுதினார்.

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் டாக்டர் ஜோசப் போட்ட ரிட் மனுவின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின் சட்டபடியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதுபற்றி முன் எச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    முல்லை பெரியாறு அணை


    மேலும், 138 அடி தான் நீர் இருக்க வேண்டும், 29-ந் தேதி 138.75 அடியாக நீர் இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது.

    பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லை பெரியாறு அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என கேரளா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் முல்லை பெரியாறு அணை திடமாக உள்ளது. இதில் தமிழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தேதியை குறித்து வைக்கும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணைக்கு விளம்பரத்திற்காக செல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்ட தேதிகளை கூற முடியுமா? என முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளித்துள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நான் முல்லைப்பெரியாறு அணைக்கு சென்று வந்த தேதிகளை குறிப்பிட முடியுமா? பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் காலண்டரில் பதிவாகி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    பொதுவாக, விளம்பரத்திற்காக செல்பவர்கள்தான் இதையெல்லாம் குறித்து வைத்திருப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்துடன் செல்பவர்கள்தான், சென்ற தேதியை எல்லாம் குறித்துக்கொள்ளமாட்டார்கள்.

    இப்போது ஆட்சியில் இருப்பது தி.மு.க. எனவே, காலண்டரில் இருக்கிறதா என்பதை அவர்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதும் உண்மையைச் சொல்வார்களா என்பது சந்தேகம்தான். அப்போது பொதுப் பணித்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் என்னுடன் வந்தனர். அவர்கள் பணியில் இருந்தால் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

    அதைப்போல, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிடும்போது அணையின் பின்புறம் இருந்துதான் தண்ணீர் திறக்க வேண்டும், அணைக்குப்போக வேண்டிய அவசியம் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    இதன்மூலம் மத்தியிலும், மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வளவு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஒரு வார்த்தைகூட வாய்திறக்காதது வேதனை அளிக்கிறது.

    இனியாவது, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.
    அவனியாபுரம்:

    முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு விதியை மீறி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இது குறித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 9-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணையை பார்வையிடுவதற்காக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவரிடம் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தை அறிவித்துள்ளார்களே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் முல்லை பெரியாறு அணையை எப்போதாவது நேரில் சென்று பார்த்தாரா? என்பதற்கு பதில் சொல்லிவிட்டு போராட்டம் நடத்தட்டும் என்றார்.

    முல்லை பெரியாறு அணை


    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து கொண்டிருக்கிறதே என்று கேட்டபோது, முல்லை பெரியாறு அணையை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன் என்றார்.

    பேட்டியின் போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, பூமிநாதன், தி.மு.க. நிர்வாகிகள் இளைஞரணி ராஜா, வாடிப்பட்டி பால்பாண்டி, திருப்பரங்குன்றம் ஒன்றிய சேர்மன் வேட்டையன் உள்பட பலர் இருந்தனர்.

    ×