என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M.l.A."

    • தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.
    • விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

    தென்காசி:

    முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.

    விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

    மேலும் அங்கே விதிகளை மீறி அதிக அளவு ஆழத்தில் துளையிட்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வெடித்ததால் தான் நில அதிர்வு ஏற்பட்டு உயரமான பகுதியில் இருந்து பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை தற்செயல் விபத்து மரணம் என்ற 174- வது பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது.

    விதிமுறைகளை பின்பற்றாத அந்த குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து குவாரி இயங்குவதை தடை செய்ய வேண்டும்.

    விபத்தில் பலியான பரமசிவம் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன் தொழிலாளர் நலச் சட்டப்படி குவாரி உரிமையாள ரிடமிருந்து குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த குவாரியில் கனிமவளத்துறை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஒளிவு மறைவற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகள் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலிபாளையம் பகுதி 44 வது வார்டில் உள்ள கோம்பை தோட்டம் பகுதி பள்ளிவாசல் அருகே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணிகளை செல்வராஜ் எம்.எல்.ஏ., இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது திருப்பூர் தெற்கு மாநகர தி.மு.க. செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ்,வடக்கு மாநகரக் அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வாலிபாளையம் பகுதி செயலாளர் மு .க .உசேன் , 44 வது வட்ட செயலாளர் ரபிக், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், திலகராஜ் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள்,மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிவாசல் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

    • வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார்.

    கோவில்பட்டி:

    வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார நிலையம் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து குடிநீர் இயந்திரத்தை பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மருத்துவர் சரவணன், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கவியரசன், பால் நுகர்வோர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தாமோதரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கோபி, முருகன், பழனிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரை புதிய பாலம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும்.
    • பெருமாநல்லூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் கே.என்.விஜயகுமார் கலெக்டர் வாயிலாக, முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் பாண்டியன் நகர் முதல் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் வரை புதிய பாலம் அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும். பெருமாநல்லூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும். பொங்குபாளையம் ஊராட்சி ஜி.என்., கிருஷ்ணா நகரில் புதிய சமுதாயக்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும்.

    தெற்கு தொகுதிக்குள் அமைந்துள்ள திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தை இரண்டாக பிரித்து, வேலம்பாளையம், திருப்பூர் வடக்கு பிர்காக்களை கொண்ட புதிய தாலுகா அலுவலகம் ,நெருப்பெரிச்சல் பகுதியில் ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும்.புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ,பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதலாக வகுப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும். திருப்பூர் மருத்துவமனைக்கு, 30 கி.மீ., தூரம் சென்றுவர வேண்டியுள்ளது.எனவே பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • குலசேகரநல்லூர் கிராமத்தில் ஆரைக்குளம் முதல் மலர்குளம் வரையிலான ஓடையில் சுடலைமாடசாமி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
    • மழைக்காலங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வலியுறுத்தினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் ஊராட்சி குலசேகரநல்லூர் கிராமத்தில் ஆரைக்குளம் முதல் மலர்குளம் வரையிலான ஓடையில் சுடலைமாடசாமி கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ., யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    மேலும் மழைக்காலங்களுக்கு முன்னர் முன்னெச்சரிக்கையாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய துணைச்செயலாளர் லட்சுமணன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டையசாமி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானார் கலந்து கொண்டனர்.

    • தனி நபர் நடத்திய மொய் விருந்தில் இதுவே அதிகபட்ச வசூலாகும்.
    • மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி மற்றும் அதனைச்சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அண்டை மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளாக மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது. மொய் விருந்து நடத்தியவர்கள் வசூலான பணத்தின் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்.

    இந்தநிலையில், பேராவூரணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக்குமார் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காதணி விழா மொய் விருந்து என்ற பெயரில் மொய் விருந்து நடத்தினார்.

    விழாவில் 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு 1,300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் சோறு சமைக்கப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொண்டோருக்கு இலை நிறைய சோறு, கரண்டி நிறைய கமகமக்கும் கறி விருந்து வைக்கப்பட்டது. இந்த மொய் விருந்தில் 15 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    விருந்து சாப்பிட்டவர்கள் மொய் எழுதினார்கள். இதற்காக பணம் எண்ணும் எந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மொய் எழுதும் இடத்தில் துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஆயிரம் ரூபாய் தொடங்கி ரூ.5 லட்சம் வரை தங்கள் வசதிக்கேற்ப மொய் எழுதி சென்றனர். மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து மொய் விருந்தில் வசூலான பணத்தை எண்ண தொடங்கினர். இதில் ரூ.11 கோடி மொய் வசூல் ஆகி இருந்தது. தனி நபர் நடத்திய மொய் விருந்தில் வசூலான தொகையில் இதுவே அதிகபட்சம் என்று தெரிவித்தனர்.

    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
    • விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் , வியாபாரிகள் எடைக்கல் தராசு பயன்படுத்தி வருவதால் மின்னணு தராசு வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையினை ஏற்று தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் இன்று காலை உழவர் சந்தைக்கு நேரடியாக சென்று மின்னணு தராசுகளை விவசாயிகளுக்கு வழங்கினார். விவசாயிகள் கோரிக்கை வைத்த24மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக விவசாயிகள், வியாபாரிகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்க ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
    • மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மக்கள் நல்வா–ழ்வுத்துறை அமைச்சர் இன்று மதுரை வந்துள்ளார். அவர் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.த்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் எப்போது தொடங்கும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    தென் மாவட்ட மக்களுக்கு இந்த பணி எப்போது தொடங்கும் என இனிப்பான செய்தியை வழங்க அமைச்சர் முன் வர வேண்டும். அதேபோல் மருத்துவமனையை ஆய்வு செய்யும்போது தேவையான உபகரணங்களை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனா காலகட்டத்தில் உயிரை பணயம் வைத்து செவிலியர்கள் சேவையாற்றினர். அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.அவர்களுக்கு என்ன திட்டம் உள்ளது? என்று அரசு விளக்க வேண்டும். அவர்களின் எதிர்காலம் குறித்த அரசு நடவடிக்கையை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

    திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை, பேரையூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும், பேரையூர் மருத்துவ–மனையில் தேவையான மருத்துவர்கள், செவிலி–யர்களை நியமிக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது டெங்கு ஒழிப்பு குறித்த முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அரசு கூறி வருகிறது. அது குறித்து முழுமையான விளக்கத்தை அரசு அளிக்க வேண்டும்.சாமானிய மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் கொண்டுவர அரசு முன்வருமா? என்று அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாத்தான்குளத்தில் அகில இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.
    • பா. ஜனதா கட்சியினர் சொந்த முயற்சியில் கட்சி வளர்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகளை உடைத்து அவர்கள் வளர முடியாமல் போவதற்கு வழி செய்கிறது

    சாத்தான்குளம்,ஆக.10-

    சாத்தான்குளத்தில் அகில இந்திய சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் முன்பு இருந்து புறப்பட்ட பாதையாத்திரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீவல்லபிரசாத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாத யாத்திரையில் மாநில, மாவட்ட நகர கிளை கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், திரளான பெண்களும் கலந்து கொண்டனர்.

    மெயின் பஜார் வழியாக சென்ற பாதை யாத்திரையில் அனைவரும் கையில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர். நிறைவில் புதிய பஸ் நிலைய அருகே பாதயாத்திரை வந்தடைந்தது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேசினார்கள். ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசும்போது, கள்ளக்குறிச்சி மாணவி சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாகும்.

    ராகுல் காந்தி எங்கள் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இப்பொழுது வழி நடத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி சொந்தக் காலில் நிற்க வலுவில்லாமல் உள்ளது. பா. ஜனதா கட்சியினர் சொந்த முயற்சியில் கட்சி வளர்க்க வேண்டும் அதை விட்டுவிட்டு அ.தி.மு.க. போன்ற கட்சிகளை உடைத்து அவர்கள் வளர முடியாமல் போவதற்கு வழி செய்கிறது என்று கூறினார்.

    இந்த பாதயாத்திரையில் சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, நகர தலைவர் வேணுகோபால், பனை நல வாரிய உறுப்பினர் எடிசன், பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சீலன் துரை, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நாராயணன், கதிர்வேல் உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளான பேர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே உழவர் சந்தையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் ஊராட்சியில் செயல்பாடுகளின்றி காணப்படும் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இதையடுத்து தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. இந்த உழவர்சந்தை வளாகத்தில் ஆய்வு செய்தார். அவருடன் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    பின்னர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகளின் நலன் கருதி தளவாய்புரம் உழவர் சந்தைக்கு புத்துயிர் கொடுத்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர சட்ட மன்ற உறுப்பினரான நானும், ஒன்றிய சேர்மனும் முயற்சி எடுத்து வருகிறோம். கருணாநிதி ஆட்சியில் விவசாயிகள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது உழவர் சந்தை. அதனை மீண்டும் புதுப்பித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் மு.க. ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

    அவரது வழியில் தளவாய்புரத்திலுள்ள உழவர் சந்தைக்கு பேவர் பிளாக் தளம், சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதியை மேம்படுத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி யூனியன் சேர்மன் ஒத்துழைப்புடன் உழவர் சந்தை புதுப்பிக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் தோட்டக்கலை வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி, விற்பனைத்துறை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உதவிப்பொறியாளர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் முத்துச்சாமி, தி.மு.க. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், கிளைச்செயலாளர் தங்கமணி மயிலேறி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
    • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍,சிறு பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் பகுதியில், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍, வடிவியல் மேம்பாடு, சிறு பாலம் கட்டுதல் மற்றும் வடிகால் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் , 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி ,வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    ×