என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Reddy"

    • வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர்.
    • கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கிய ஷ்ரேயாஸ் இந்த முறை இடம் பிடிப்பார்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் 'ஏ' கிரேடில் உள்ள வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சமும், 'பி' பிரிவுக்கு ரூ.30 லட்சமும், 'சி' பிரிவுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

    இந்நிலையில் இந்திய ஆண்கள் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது. கடைசியாக அறிவித்தபோது, உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற வாரியத்தின் கோரிக்கையை நிறைவேற்றாததற்காக, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷானை நீக்கியது. மேலும் ஐயர் மற்றும் கிஷானை மத்திய ஒப்பந்தங்களில் இருந்து நீக்குவதில் வாரியம் எந்த தயக்கமும் காட்டவில்லை .

    இந்த முறை அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பிடித்தாலும் அதே அளவில் எதிர்பார்க்கலாம். ஷ்ரேயாஸ் ஒப்பந்தப் பட்டியலில் இடம் பிடித்தாலும் இஷான் கிஷான் இடம் பெறுவது உறுதிப்படுத்த முடியாது நிலையில் உள்ளது.

    இந்நிலையில் வருடாந்திர மத்திய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் தற்போது A+ பிரிவில் உள்ளனர். இது அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட மிக உயர்ந்த மற்றும் பொதுவான வகையாகும்.

    இப்போது கோலி, ரோகித் மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்களை A வகைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இளம் வீரர்களான நிதிஷ் ரெட்டி மற்றும் அபிஷேக் சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடர் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்தத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, ரியான் பராக் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.

    இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஐதராபாத் அணி வீரரான நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:-

    சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய், ஷிவம் துபே.

    • நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் அரை சதம் விளாசினர்.
    • வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, சூர்யகுமார் யாதவ் 8 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    முதலில் நிதாமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் போக போக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தன் பங்குக்கு அதிரடியாக விளையாடிய ரிங்கு 29 பந்தில் 53 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    இறுதியில் ஹர்திக் பாண்ட்யா- பராக் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய இந்தியா 221 ரன்கள் குவித்தது.
    • நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.

    புதுடெல்லி:

    இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய நிதிஷ் ரெட்டி 34 பந்தில் 74 ரன்னும், ரிங்கு சிங் 29 பந்தில் 53 ரன்கள் குவித்தனர். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா, பராக் ஜோடி அதிரடி காட்டியது.

    வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட், தஸ்கின் அகமது, தன்சிம் அகமது, முஸ்தபிசுர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீசி அசத்தியது. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    மஹமதுல்லா மட்டும் தனி ஆளாகப் போராடி 41 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், வங்கதேசம் அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

    இந்தியா சார்பில் நிதிஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி 12-ம் தேதி நடைபெறுகிறது.

    • இளம் வயதில் அரை சதம் விளாசிய இந்தியர்களில் ரோகித் முதல் இடத்தில் உள்ளார்.
    • அடுத்த 2 இடங்களில் திலக் வர்மா, ரிஷப் பண்ட் உள்ளனர்.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் (21 வருடம் 227 நாட்கள்) சாதனையையும் நிதிஷ் ரெட்டி (21 வருடம் 136 நாட்கள்) முறியடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ரோகித் சர்மா (20 வருடம் 143 நாட்கள்), திலக் வர்மா (20 வருடம் 271 நாட்கள்), ரிஷப் பண்ட் (21 வருடம் 38 நாட்கள்) உள்ளனர்.

    • நினைத்ததை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேன்.
    • விக்கெட்டுகளுக்கு இடையில் துல்லியமாக பந்து வீசுகிறார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பெர்த்தில் தொடங்குகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். சிட்னி ஆடுகளம் மட்டும் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும்.

    இதனால் பெரும்பாலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இந்தியா விரும்பும். அந்த வகையில் இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் "இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ் ரெட்டி மிகவும் துல்லியமாக பந்து வீசுவது மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஆல்-ரவுண்டர் இடத்தை நிரப்ப அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். ஆஸ்திரேலிய தொடரில் கவனிக்கப்படும் வீரராக திகழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.

    ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். தற்போது அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஆல்ரவுண்டர் இடம் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.

    • பெர்த் டெஸ்டில் நிதிஷ் குமாரை களம் இறக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
    • ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? என ஹர்பஜன் சிங் கேள்வி.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக நிதிஷ் ரெட்டி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் விளையாடி ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோ எங்கே என ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறியதாவது:-

    உங்களுக்கு ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்-ரவுண்டர்கள் தேவை. நிதிஷ் ரெட்டியை களம் இறக்குவதை விட உங்களுக்கு வேறு ஆப்சன் இல்லை. ஷர்துல் தாகூர் எங்கே போனார்? ஹர்திக் பாண்ட்யா எங்கே போனார்? அவர்களை ஒயிட்பால் கிரிக்கெட் வடிவத்திற்குள் சுருக்கிவிட்டோம். இரண்டு மூன்று வருடங்களுக்காக ஷர்துல் தாகூரை உருவாக்கினோம். தற்போது அவரை எங்கே? திடீரென இந்த தொடரில் நிதிஷ் குமார் போன்ற பந்து வீச அழைக்கிறீர்கள்.

    சவுரவ் கங்குலி போன்று ஒன்றிரண்டு ஓவர்கள் நிதிஷ் ரெட்டியால் வீச முடியும். அவர் ஒன்று அல்லது இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினால் அது அவருக்கு போனஸ்ஆக இருக்கும். பந்து வீச்சில் கங்குலி இந்திய அணிக்கு செய்தது போன்று நிதிஷ் ரெட்டி செய்ய முடியும்.

    இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.

    ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஷர்துல் தாகூர் வேகப்பந்து வீச்சு பேட்ஸ்மேன் ஆவார்.

    ஹர்திக் பாண்ட்யா 2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது ஷர்துல் தாகூர் அணியில் இடம் பிடித்திருந்தார்.

    • இந்திய அணியில் நிதிஷ் ரெட்டி அறிமுகம்.
    • வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் பெர்த்தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் பும்ரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    நிதிஷ் ரெட்டி, ஹர்சித் ராணா இந்திய அணியில் அறிமுகமாகியுள்ளனர். வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணி:-

    1. ஜெய்ஸ்வால், 2. கே.எல். ராகுல், 3. படிக்கல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பண்ட், 6. த்ருவ் ஜூரெல், 7. வாஷிங்டன் சுந்தர், 8. நிதிஷ் ரெட்டி, 9. பும்ரா, 10. முகமது சிராஜ், 11. ஹர்சித் ராணா.

    ஆஸ்திரேலியா அணி:-

    1. நான் மெக்ஸ்வீனே, 2. கவாஜா, 3. லபுசேன், 4. ஸ்மித், 5 டிராவிஸ் ஹெட், 6. மிட்செல் மார்ஷ், 7. அலேக் கேரி, 8. கம்மின்ஸ், 9. ஸ்டார்க், 10. லயன், 11. ஹேசில்வுட்.

    • இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது.
    • உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள்.
    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 140 ரன்களும் லபுசேன் 72 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2-வது நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பண்ட் 28 ரன்களிலும் ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த நிதிஷ்குமார் - வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் சிறுது நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் நிதானமாக விளையாடி வந்த வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பும்ரா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்நிலையில் பொறுப்புடன் விளையாடி வந்த நிதிஷ்குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

    3-ம் நாள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ்குமார் 105 ரன்களுடனும் சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் நிதிஷ் குமாரின் தந்தையிடம் சதம் குறித்து வர்ணனையாளர் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு நிதிஷ் குமாரின் தந்தை கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்திற்கு இது சிறப்பு வாய்ந்த தினம். இந்த நாளை எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. 14-15 வயது முதலே நன்றாக ஆடி வந்தான். இப்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆடுகிறான். உண்மையில் இந்த நாள் ஒரு சிறப்பான நாள், சிறப்பான உணர்வைத் தந்த நாள். என்றார்.

    உடனே கில்கிறிஸ்ட், 99 ரன்களில் இருந்த போது உங்கள் உணர்வுகள் என்ன என்றார்.. அதற்கு நிதிஷின் தந்தை, "ஒரே டென்ஷன் டென்ஷன் டென்ஷன் என்றார். ஒரு விக்கெட்தான் இருந்தது, நல்ல வேளை சிராஜ் நின்றார்" என்றார் நெகிழ்ச்சியுடன்

    • இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.
    • அதிகபட்சமாக நிதிஷ் குமார் 105 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இதனை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்த போட்டியில் நிதிஷ் ரெட்டி சதம் விளாசினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் விளாசிய 3-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    மேலும் 8-வது வரிசையில் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிதிஷ் குமார் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்:-

    1. சச்சின் - 18 வயது 256 நாட்கள்

    2. ரிஷப் பண்ட் - 21 வயது 92 நாட்கள்

    3. நிதிஷ் ரெட்டி - 21 வயது 216 நாட்கள்

    4. தத்து பட்கர் - 22 வயது 46 நாட்கள்

    • நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம்.
    • நிதிஷ் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார்.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 358-9 ரன்கள் எடுத்து போராடி வருகிறது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 105 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தற்சமயத்தில் 116 ரன்கள் பின்தங்கியுள்ள இந்தியா போராடினால் வெல்லலாம் என்ற நிலையில் இருக்கிறது.

    இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுக்கு நிதிஷ் கை கொடுத்தது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அந்த வரிசையில் சச்சின் டெண்டுல்கர் அவரை மட்டுமின்றி தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரையும் சேர்த்து பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நிதிஷ் ரெட்டியிடம் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆட்டம். அவர் இந்த தொடரின் முதல் போட்டியிலிருந்து தனது பொறுமை, நிதானம் ஆகியவற்றால் என்னை இம்ப்ரெஸ் செய்தார். இன்று அவர் அதை உச்சமாக எடுத்துக் கொண்டு இந்த தொடரின் முக்கியமான இன்னிங்ஸை விளையாடியுள்ளார். அவருக்கு அற்புதமான திறமையுடன் வாஷிங்டன் சுந்தர் ஆதரவு கொடுத்தார். நன்றாக விளையாடினீர்கள்.

    என்று சச்சின் கூறியுள்ளார். 

    • இந்தியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் நிதிஷ் ரெட்டி 114 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    மெல்போர்ன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.

    பாக்சிங் டே என பாரம்பரிய பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. நிதிஷ் ரெட்டி 105 ரன்னுடனும், சிராஜ் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 116 ரன்கள் பின்தங்கி உள்ளது.

    8வது விக்கெட்டுக்கு இணைந்த வாஷிங்டன் சுந்தர்-நிதிஷ் ரெட்டி ஜோடி 127 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சில நிமிடங்களில் நிதிஷ் குமார் 114 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ், போலண்ட், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    ×