என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupation"

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
    • வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட்டு ள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு திருமங்கலம் தினசரி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவி ன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் தாசில்தார் சிவராமன் தலைமையில் நடந்தது.

    இதில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், டவுன் பிளானிங் அதிகாரி வேல்முருகன், கவுன்சிலர் திருக்குமார், வீரக்குமார். வருவாய்த்துறை சார்பில் சர்வேயர் ரம்யா மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மணிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.

    • நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
    • போலீஸ் பாதுகாப்பு

    திருச்சி, 

    திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் இடித்த அகற்றப்பட்டன.நெடுஞ்சாலைதுறை சார்பில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டது. அதன்படி இன்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை 4 பொக்ளைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். இதில் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 30 கடைகள் மற்றும் சில வீடுகளின் முன் பகுதிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. எடமலைப்பட்டி புதூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அதன்படி சிலர் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே அகற்றிக் கொண்டனர். அகற்றப்படாத பகுதிகளில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. விரைவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கும் என்றனர்.

    • மாநகராட்சி ஊழியர்களுடன் வியாபாரிகள் மோதல்
    • சத்திரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு

    திருச்சி, 

    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஆக்கி–ரமிப்புகள் அதிகம் உள்ள–தாக புகார்கள் எழுந்தது. இதனால் தினமும் போக்கு–வரத்துக்கு இடையூறும் ஏற் பட்டது.இது தொடர்பாக மாநக–ராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம், சிங்கா–ரத்தோப்பு, சிந்தாமணி பஜார், காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.இதில் 400-க்கும் மேற் பட்ட தரைக்கடைகள், தள்ளுவண்டி மற்றும் பெட்டி கடைகளை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் உத்தரவின் பேரில், மாநகராட்சி உதவி ஆணையர் ரவி தலை–மையில், மாநகராட்சி அதி–காரிகள் மற்றும் கோட்டை காவல் நிலைய இன்ஸ் பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றினர்.இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது மாநகராட்சி உதவி செயற்பொ–றியாளர் பாலசுப்பிர–மணியன், இள–நிலை பொறியாளர் கணேஷ் பாபு மற்றும் மாநக–ராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பேன்சி பொருட்கள் விற் பனை பெட்டிக்கடையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது அந்த கடையின் பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை ஒருமையில் அவதூறாக பேசினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து இது யாருடைய கடை என தெரியுமா? என கூறி மிரட்டும் வகையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஊழியர்கள் மற்றும் அதிகா–ரிகளை தாக்க முற்பட்டனர்.உடனடியாக அருகில் இருந்த போலீசார் கடையின் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களை விலக்கி விட்டனர். அதனை தொடர்ந்து ஜே.சி.பி. எந்தி–ரம் மூலம் அந்த பெட்டி கடை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உள்ள ஆக்கி–ரமிப்புகளை மாநக–ராட்சி ஊழியர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.அப்போது வியாபாரிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பூங்காக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
    • பூங்காக்களில் காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித்திடம், சிராஜ்பூர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள சிராஜ்பூர் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த நகரில் அமைந்துள்ள அமரன் பூங்கா, மைமூன் பூங்கா, ஷேக்நூர் பூங்கா ஆகிய பூங்காக்களில் ஆக்கிரமிப்பதற்காக போடப்பட்டிருந்த கயிறு மட்டும் கம்புகளை அகற்றி சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    40 அடி சாலையின் தெற்கு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    எனவே தடை உத்தரவை விலக்கி சிராஜ்பூர் நகருக்கு சொந்தமான பூங்காக்களை சுத்தம் செய்து காவல்துறை பாதுகாப்போடு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேலூரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய் அருகில் சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதை மீட்க வலியுறுத்தி மேலூரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் கண்ணன், நகர தலைவர் சேவுகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தசரதன், ராஜகோபால், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும்.
    • ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக முதலமைச்சருக்கு திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    சீமைக் கருவேலம் மரங்கள் வேளாண் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய ஒரு கொடியத் தாவரமாகும். மெக்சிகோ, கரிபியன் தீவுகள் மற்றும் தென் அமெரிக்கா போன்றவற்றை தாயகமாகக் கொண்டவை.

    பயிர்களுக்கு வேலியாகவும், சமையலுக்கு விறகாகவும் பயன்படும் என்ற நம்பிக்கையில், 1950 களில் ஆஸ்திரேலியாவில் இருந்து சிறிதளவு விதையாக இது இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

    இந்த 60 ஆண்டுகளில் வளர்ந்து பெருகிப் பரவி இன்று தமிழகம் முழுவதையுமே ஆக்கிரமித்து விட்டது. இந்த முள்மரம், அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் வேளாண்மைக்கு எதிரான ஆபத்தான நச்சுத் தாவரமாக அறிவிக்கப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது,

    கேரளாவில் இவை வேறோடு பிடுங்கியெறியப்பட்டு இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகிறது.

    தமிழகத்தில், இவை விளை நிலங்களில் 25 விழுக்காட்டிற்கு மேல் வளர்ந்து வேளாண்மையே தொடரா வண்ணம் நிலத்தைப் பாழ்படுத்தியிருக்கிறது.

    இதனைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

    எந்த வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை சீமைக் கருவேல மரங்களுக்கு உண்டு. மழை இல்லாமல் போனாலும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனது இலைகளை வாடவிடாமல் பார்த்துக்கொள்கிறது.

    இவை ஆழமாக வேர் விட்டு உறுதியானப் பக்கவேர்களையும் கொண்டு வளர்வதால் இவை மழைநீரை உறிஞ்சி நிலத்தடிக்குச் தண்ணீர் செல்வதை தடைசெய்கிறது.

    இதைப்போல் இதன் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கின்றன.

    இதன் வெப்பத்தால் மழையின் அளவை வெகுவாக குறைத்துள்ளது. மற்ற மரங்கள் போல் ஆக்ஸிஜனை வெளியிடுவதில்லை.

    எனவே கருவேல மரங்களை மாவட்டந்தோறும் அரசு துறைகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகளை கொண்ட மக்கள் இயக்கம் மூலம் தொடர் அழிப்பு பணி செய்தால் மட்டுமே முற்றிலுமாக அழிக்க முடியும்.

    எனவேஇதை அழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது.
    • பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிமாவட் டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த ஏந்தல் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பும்போது, உபரி நீர் மரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வாய்க்கால் உள்ளது  ஏந்தல் மயானம் அருகே செல்லும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து விவ சாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட் டது. இ தனால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மோகன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில் உயர்நீதி மன்றம் வாய்க்கால் ஆக்கி ரமிப்பை அகற்றக்கோரி பொதுப்பணித்துறை யினருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சங்கராபுரம் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் பிரசாந்த் மேற்பார்வையில் பகண்டைகூட்டுரோடு போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

    இந்த பணியின்போது, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 40 ஆண்டு காலம் குடியிருந்த வீடுகள் இடித்து அகற்றப்படடது
    • வீடுகள் இடிக்கப்படுவதை கண்டு கதறி அழுத பொதுமக்கள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகர்பாளையம் கிராமத்தில் புண்ணியமூர்த்தி (60) என்பவர் தனது மனைவி ராஜேஸ்வரி மகன்கள் பாலமுருகன், ராஜசேகர், தேவேந்திரன், ராஜேந்திரன் மற்றும் மகள் ஆனந்தி பேரக்குழந்தைகள் ஆசிரா மாதேஷ் ஆகியோருடன் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் களுக்கு பட்டா வழங்கப்பட்டு மீதமுள்ள காலி இடத்தில் புண்ணியமூர்த்திக்கு வீட்டுமனை ஏதும் இல்லாததால் அங்கு கூரை வீடாக இருந்ததை மாற்றி ஆஸ்பட்டா சீட் போட்டு கடந்த 40 ஆண்டு காலமாக ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்கள்.அதற்குச் சான்றாக சர்வே எண் 622/2 என்னில் மின் இணைப்பு, வீட்டு வரி ரசீது, குடிநீர் வரி உள்ளிட்டவைகள் கட்டி வருகின்றனர். மேலும் ஊராட்சி மூலம் இலவச கழிப்பிட வசதிக்காக கழிப்பறை கட்டி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இடம் ஆக்கிரமிப்பு என கூறி மாற்று இடம் வழங்காமலேயே வருவாய் துறையினர் கட்டி இருந்த வீட்டை இடித்து அகற்றியுள்ளனர். இதுகுறித்து வருவாய் துறையினரிடம் கால அவகாசம் கேட்டும் மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் குடும்பத்துடன் கண்ணீர் மல்க போராடினர். இருப்பினும் அதிகாரிகள் செவி சாய்க்காமல் வீடுகளை இடித்து அகற்றினர்.இதுகுறித்து சம்பவம் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆண்டிமடம் வட்ட செயலாளர் வி.பரமசிவம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்மணிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கால அவகாசம் கேட்டனர். இருப்பினும் அதிகாரிகள் கால அவகாசம் தர இயலாது என மறுத்து விட்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு பட்டா வழங்க மேல் அதிகாரியிடம் கலந்து பேசி ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் அதே பொது இடத்தில் சர்வே எண் 622/3 ல் ஒரு நபருக்கும் 622/4 ல் ஒரு நபருக்கும் என இரண்டு நபருக்கு இடம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை ஆகியோர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு இதுபோன்று ஏழைகளை துவம்சம் செய்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டம் ஏழைக்கு ஒரு சட்டம் என வருவாய்த் துறையினர் உள்ளிட்ட காவலர்கள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • அரியலூர் மாவட்டத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
    • அரசு அதிகாரிகளின் மெத்தனபோக்கு என்று குற்றச்சாட்டு

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலையை மறைத்து விளம்பர போர்டுகள் மற்றும் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்தில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இதனால் சில காலங்கள் விளம்பர போர்டுகள் வைக்கப்படாத நிலையில், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கினால் மீண்டும் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.பேனர்கள் வைக்கப்பட்டு சிலை முழுவதுமாக மறைக்கப்பட்டு உள்ளது குறித்து பாமக நகர செயலாளர் இ.பரசுராமன் அரசு அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தார். இந்நிலையில் அங்கு புதிதாக தண்ணீர் பந்தல் திறக்க கொட்டகை அமைக்கப்பட்டது.இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெகநாத் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் புண்ணியகோடி உள்ளிட்ட போலீசார், கொட்டகையை அகற்றியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த, விளம்பர பேனர்களையும் அகற்றினர். 

    • ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
    • ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் ராக்காச்சி அம்மன் கோவில் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ராக்காச்சி அம்மன் கோவில்.இந்த கோவிலுக்கு செல்லும் சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.

    குறிப்பாக பாலாறு, பல்லாறு என்று அழைக்கப்படும் பகுதியில் சுமார் 32 விவசாயிகளின் 82 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் ஓடை மற்றும் ஓடை கரை அமைந்துள்ளது. இந்த இடத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த தாக விவசாயிகள் 32 பேரும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவ லகத்தில் புகார் செய்தனர்.

    குறிப்பாக 15 விவசாயிகள் மனுவாக கொடுத்து கோர்ட்டையும் நாடினர். இதன் அடிப்படையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன். மண்டல துணை வட்டாட்சியர் ஆண்டாள். ஆர்.ஐ.தங்க புஷ்பம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசா யிகளின் பயன்பாட்டுக்குரிய ஓடை மற்றும் பாதையை ஜே.சி.பி. எந்திரம் உதவி யுடன் ஆக்கிரமிப்பை அகற்றினர். 

    • மணிகண்டம் அருகே 14 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு
    • திருச்சி கலெக்டரிடம், பொதுமக்கள் புகார் மனு

    திருச்சி,

    திருச்சி மணிகண்டம் ஒன்றியம் திருமலை சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் பட்டியத்தார் பிச்சை மூக்கன், கணேசன், சிவக்குமார், கதிர்வேல், சுப்பிரமணி, கௌதமன் முன்னிலையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.அதில்,திருமலை சமுத்திரம் கிராமத்தில் புல எண் 95 ல்14 ஏக்கர் நீர் நிலை புறம்போக்கு உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு இன்றைய சந்தை மதிப்பில் ரூ. 15 கோடி அளவுக்கு இருக்கும். இதனை வெளியூரை சேர்ந்த சில நபர்கள் மனைகளாக பிரித்து முள்வேலி அமைத்து ஏக்கர் கணக்கிலும் வீட்டுமனை அளவிலும் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த இடம் வாரி புறம்போக்கு ஆகும். எனவே நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×