என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "officer"

    • மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன்.
    • இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.

    மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் திரைப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மக்களின் மனதையும் ஆஃபிசர் திரைப்படம் வென்று வருகிறது.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீசை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 20 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட உத்தரவு.
    • சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நகராட்சி நிர்வாக துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் திரு. கே. என் .நேரு தலைமையில் நடைபெற்றது.

    அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன், நகராட்சி நிர்வாகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா , தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர்தட்சிணாமூர்த்தி , பேரூராட்சிகள் ஆணையர் செல்வராஜ் , மாவட்ட கலெக்டர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (தஞ்சாவூர்), அருண் தம்புராஜ் (நாகப்பட்டினம்), லலிதா (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது:- 

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், எரிவாயு தகனமேடை, சாலைப்பணிகள், பூங்கா அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.

    நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருப்பனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 67 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் திருவிடைமருதூர். வேப்பத்தூர் பேரூராட்சிகளைச் சார்ந்த 2 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.117.09 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.82 சதவீதம் பணிகள் முடிவுற்றுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர், ஒன்றியங்களுக்குட்பட்ட 214 குடியிருப்புகளுக்கு ரூ.265.29 கோடி மதிப்பீட்டில் 1.79 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டம். தஞ்சாவூர் மாவட்டம் பாநாசம் மற்றும் அம்மாப்பேட்டை ஒன்றியங்களைச் சார்ந்த 252 குடியிருப்புகளுக்கு ரூ. 288.02 கோடி மதிப்பீட்டில் 2.09 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், செல்வராஜ், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், திரு. டி.கே.ஜி.நீலமேகம் , அன்பழகன் ,அண்ணாதுரை ,ஜவாஹிருல்லா ,ஷாநவாஸ் , ராஜ்குமார் , பன்னீர்செல்வம், நிவேதா முருகன் , நாகைமாலி , பூண்டி கலைவாணன்,டி. ஆர்.பி.ராஜா,மாரிமுத்து , கூடுதல் கலெக்டர்கள்சுகபுத்ரா , ஸ்ரீகாந்த், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித்தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள்அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர்முத்து, மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில் முருகன் (கும்பகோணம்) மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்

    27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை

    உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

    மேலும், அவரை அறை

    எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் வாலிபர்கள் ஈடுபட்டனர்
    • பன்றிகளை பிடிக்கும் முயற்சி

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் சுகாதா ரத்திற்க்கும் கேடு விளைவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனடிப்படையில் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி, ஆகியோர் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டனர். உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சாம்கர்னல் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பா ர்வையாளர் ரமேஷ், துப்புரவு பணி மேற்பா ர்வையாளர்கள் நகர் பகுதி முழுவதும் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர்.

    அப்பொழுது பன்றிகளை வளர்க்கும் இளை ஞர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் வண்டிகளை அடித்து உடைத்து விடுவதாக கூறியதால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பன்றிகளை வளர்ப்போர் அதற்கான வழிமுறைகளுடன் வளர்க்க வேண்டும் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் தொடர்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
    • விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.

    அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.

    இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62)பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்துவருகிறார் .மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
    • பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கச்சிராயபாளையம் அருகே பரிகம் செக்போஸ்ட் அருகே ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் ஆறுமுகம் (வயது 62) வசித்து வருகிறார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும் செந்தில்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது மகன் வெளிநாட்டிலும், மனைவி கள்ளக்குறிச்சியில் வசித்து வருகின்றனர். பரிகம் செக்போஸ்ட் அருகே ஆறுமுகம் தனியே வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சிக்கு சென்று மனைவியை பார்த்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்க ப்பட்டு அதிலிருந்த 8.5 பவுன் நகை கொள்ளையடி க்கப்பட்டி ருந்தது. மேலும், வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த 4 சி.சி.டி.வி. கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், சி.சி.டி.வி. விடியோக்களை சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.
    • கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தொகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுத்துத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன், மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர்கள், தலையாரிகள் என அனைவரையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களுக்கு ராஜபாளையம் தொகுதி விவசாயிகள் சார்பிலும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் பாராட்டு தெரிவித்தார்.

    • வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு
    • 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

    சேலம்:

    தமிழக தொடக்கக் கல்வித்துறையில் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 50 சதவீதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

    அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பதவி உயர்வு மூலமாக வட்டார கல்வி அதிகாரி ஆகின்றனர். நேரடி நியமனத்துக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு நடத்துகிறது.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களில் பட்டப்படிப்பு, பி.எட் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம்.

    நேரடியாக இப்பணிக்கு வருபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுகின்றனர். அதன் பிறகு மாவட்ட கல்வி அதிகாரி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

    இந்த நிலையில் வட்டார கல்வி அதிகாரி நியமனத்தில் 23 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு 2023 பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித் தேர்வு நடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் கூறப்பட்டிருந்தது.

    ஆனால் பிப்ரவரி கடந்து 2 மாதங்கள் ஆகியும் தேர்வுக்கான அறிவிப்பை வாரியம் வெளியிடவில்லை. கடந்த 2020 பிப்ரவரியில் நடத்தப்பட்ட வட்டார கல்வி அதிகாரி தேர்வின் முடிவுகள் கடந்த 2022 பிப்ரவரியில் வெளியிடப்பட்டன.

    அத்தேர்வில் நூலிழையில் வாய்ப்பை இழந்தவர்களும், கடந்த ஆண்டு பி.எட். முடித்தவர்களும் புதிய தேர்வை எதிர்நோக்கி தயாராகி வரும் நிலையில், தேர்வு அறிவப்பை வெளியிடாமல் வாரியம் தாமதம் செய்வது பி.எட். பட்டதாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே பதவி உயர்வு மூலம் 40 வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார்.
    • இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலராக கோமதி பணியாற்றி வந்தார். இவர் பதவி உயர்வு பெற்று பெரம்பலூர் மாவட்ட உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த சரவணன், பணிஇட மாறுதல் பெற்று வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    அவருக்கு தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
    • இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தமிழக நீர்வள துறையில் உள்ள 40 பணியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் நீர்வள ஆதார துறையில் உதவியாளர் ஜியால ஜிஸ்ட்-11 பேர், கனிமம் துறையில் உதவியாளர் ஜியாலஜிஸ்ட்- 29 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    கல்வி தகுதி ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, ைஹட்ரோ ஜியாலஜி பிரிவில் எம்.எஸ்.சி. படித்து முடித்திருக்க வேண்டும். வயது 1.7.2023 அடிப்ப டையில் பொதுப்பிரிவினர் 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் ேதர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க கடைசிநாள் வருகிற 23-ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.
    • அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி லதா (வயது 40). இவர் திண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று காலை கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் லதாவின் கணவர் பூபதி, மாலை வரை தனது மனைவி வீட்டுக்கு வராதால் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூபதி, பல்வேறு இடங்களில் லதாவை தேடி உள்ளார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பரமத்தி போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய் துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் லதா, தானாக எங்காவது சென்று விட்டா ரா? அல்லது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் கிராம நிர்வாக அலுவலர் திடீரென மாய மான சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லணை தொடங்கி பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார்.‌
    • ஆய்வின்போது உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவா லங்காட்டில் நீர்வளத்து றையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

    காவிரி ஆற்றில் கல்லணை தொடங்கி காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் பகுதி வரை அவர் ஆய்வு மேற்கொண்டார். திருவாலங்காடு கிராமத்தில் உள்ள காவிரி, விக்கிரமன் தலைப்பிலும் ஆய்வு செய்து பாசன வசதிகளை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயராமன், வீரமணி மற்றும் உதவி பொறியா ளர்கள் உள்ளிட்ட அலுவ லர்கள் உடனிருந்தனர்.

    ×