என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Onion"

    • கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.
    • கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அங்கு அவை வியாபாரிகளுக்கு ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே கோவை காய்கறி சந்தைகளுக்கான சரக்கு லாரிகளின் வரத்து தற்போது வெகுவாக குறைந்து உள்ளது.

    கோவை மார்க்கெட்டுக்கு தினந்தோறும் 110-க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வந்திறங்குவது வழக்கம். ஆனால் தற்போது சராசரியாக 40 லாரிகள் என்ற நிலையில் மட்டுமே காய்கறிகள் வரத்து உள்ளது. கோவை மாவட்டத்திலும் காய்கறி சாகுபடி குறைந்து உள்ளது. எனவே விவசாயிகளும் விற்பனைக்கு கொண்டு வருவது இல்லை.

    கோவை ஒட்டுமொத்த சந்தைகளுக்கு உணவு பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளதால், அங்கு காய்கறிகளின் விலை தற்போது உச்சத்தை எட்டி உள்ளது. இதனால் கிலோக்கணக்கில் பொருட்களை வாங்கி சென்ற பொதுமக்கள், இன்றைக்கு கிராம் கணக்கில் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தற்போது நாட்டு தக்காளி ரூ.110-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது.

    கோவை மார்க்கெட்டுகளில் தக்காளி விலை ஒருபுறம் உச்சாணிக் கொம்பில் நிற்க, சின்ன வெங்காயத்தின் விலை இன்னொரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

    இங்கு சின்ன வெங்காயம் பல்வேறு தரங்களில் ஒரு கிலோவுக்கு ரூ.140 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. அதேபோல 2 கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோவை காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தில் கோவை மட்டுமின்றி பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவில்லை. வெளியூர்-வெளிமாவட்டங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

    எனவே கோவை மார்க்கெட்டுகளுக்கான காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. இதனால் சின்ன வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது.

    தமிழகத்தில் தற்போது பருவமழை குறைந்து விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளனர். எனவே கோவை மார்க்கெட்டுக்கான காய்கறிகளின் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலை மீண்டும் குறையும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    • தக்காளி கிலோ ரூ.80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு அங்காடிகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுது றையில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தொடக்கி வைத்தார்.

    தக்காளி கிலோ ரூ. 80க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையை விட குறைவான விலைக்கு கிடைப்பதால் பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துறை இணைச் இயக்குனர் சேகர், எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம், மற்றும் கூட்டுறவு துறை மாவட்ட இணை பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், சரக துணை பதிவாளர் ராஜேந்திரன், பொது விநியோகத் திட்டம் துணைப்பதிவாளர் அண்ணாமலை, தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்து க்கான கூட்டுறவு ஒன்றியத்தை கலெக்டர் மகாபாரதி குத்து விளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்காக தொடக்கி வைத்தார்.

    • ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும்.
    • தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    கோவை,

    தமிழகத்தில் அன்றாட சமையலில் சின்ன வெங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு.

    இதற்கு உணவில் சுவை சேர்க்கும் மகத்துவம் உண்டு. அதுவும் தவிர உடலுக்கு குளிர்ச்சி தரும். எனவே பொதுமக்கள் உணவில் அதிகமாக சேர்த்து வருகின்றனர்.

    கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், வேடப்பட்டி, மாதம்பட்டி, ஜாகீர்நாயக்கன்பாளையம், தாளியூர், தீத்திப்பாளையம், தென்கரை, ஆலாந்துறை, மத்வராயபுரம், தென்னமநல்லூர், கலிக்கநாயக்கன்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வந்தது.

    இது மிதமான தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் செழிப்பாக வளரும் 70 நாள் பயிர். ஆண்டுக்கு 2 முறை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு 4 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

    ஏக்கருக்கு 700 கிலோ வரை விதை போட்டால், 8 ஆயிரம் கிலோ விளைச்சல் கிடைக்கும். ஆனால் கடந்த ஆண்டில் வெங்காயம் சாகுபடி செய்த பெரும்பாலான விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை.மேலும் தொடர் மழையால் வெங்காய்தை அறுவடை செய்வதிலும், அதனை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. கடந்த முறை கிலோ ரூ.35 வரை வியாபாரிகளால் சின்ன வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டது.

    இதன் காரணமாக தற்போது சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய பெரும்பாலான விவசாயிகள் தயக்கம் காட்டி உள்ளனர். தொடர் நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும் பாலான விவசாயிகள் வாழை, பாக்கு என பயிர் சாகுபடியை மாற்றினர்.

    இதன் காரணமாக நடப்பாண்டில் 40 சதவீத விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காயம் பயிர் செய்வதை தவிர்த்து உள்ளனர். இதனால் அதன் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைய தொடங்கி யுள்ளது. முன்பெல்லாம் அதனை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலை உள்ளது.

    அந்தளவிற்கு அதன் விலையானது உச்சத்ததை எட்டி உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.180க்கு மேல் விற்பனை யாகி வருகிறது. இதனால் சமையலில் சின்ன வெங்கா யத்தை பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.

    தற்போது ஜூன் மாத தொடக்கத்தில் ஒரு சில விவசாயிகள் மீண்டும் சின்ன வெங்காய சாகு படியை தொடங்கினர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பருவமழை தொடங்கவில்லை.

    கடந்த ஆண்டு ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.15 முதல் 20க்கு விற்பனை யானது. தற்போது அதன் விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

    முன்பெல்லாம் சின்ன வெங்காயம் பயிரிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் மட்டுமே செலவாகும். ஆனால் தற்போது ரூ.1.5 லட்சம் வரை செலவாகிறது. அப்படியே செலவு செய்தாலும் தற்போது ஏக்கருக்கு 4 டன் வரை மட்டுமே மகசூல் கிடைத்து வருகிறது.

    மேலும் சின்ன வெங்காயத்தில் தற்போது நுனிக ருகல், பூஞ்சை தாக்குதல் அதிகளவில் உள்ளது. எனவே பயிர்களை காய்ப் பாற்ற 4 தடவைகள் கூடுதலாக மருந்து தெளிக்க வேண்டி உள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    பருவமழையை நம்பி காத்திருந்ததால் சின்ன வெங்காயம் சாகுபடி தள்ளிபோனது. ஜூனில் கிலோ ரூ.65க்கு விற்ப னையான சின்ன வெங்காயம் தற்போது கிலோ ரூ.145க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு அறுவடை நேரத்தில் பருவமழை தொடங்கியது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த சின்ன வெங்காயத்தை அறு வடை செய்வதில், எங்களுக்கு பெருத்த சிரமநிலை ஏற்பட்டது. விளைச்சலும் போதிய அளவுக்கு இல்லை.

    இந்த ஆண்டு பருவமழை போதியளவு பெய்ய வில்லை. 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஊட்டியை போன்ற சீதோஷ்ண நிலை வேண்டும். தற்போது விவசாயிகளிடத்தில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லை.

    எனவே ஆகஸ்டு மாதம் வரைக்கும் வெங்காய தட்டுப்பாடு என்பது தொடரும். இதனால் விலையேற்றமும் நீடிக்கும்.

    வேளாண்துறை, வேளாண் விற்பனைத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகியவை ஒன்றிணைந்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் என்னென்ன பயிரிடுகின்றனர்.

    எவ்வளவு ஏக்கரில் பயிரிடுகின்றனர். மாநிலத்தின் தேவை எவ்வளவு, அறுவடை செய்தால் கிடைக்கும் மகசூலின் அளவு போதுமானதாக இருக்குமா, விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்குமா, நஷ்டம் ஏற்படுமா, இருப்பு வைத்து விற்றால் லாபம் கிடைக்குமா என்பது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு அதனை அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    மேலும் காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் உரிய விலை கிடைக்கும் பயிர்களை சாகுபடி செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தடுப்பாடும் வராது. விலையும் உயராது.

    கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இங்கு 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மட்டுமே பயிரிடப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 ஏக்கர் சாகுபடி பரப்பு குறைந்து விட்டதால் தற்போது பயிரிட்டுள்ள வெங்காயத்தை ஆகஸ்டு மாத இறுதியில் மற்றும் செப்டம்பர் மாத துவக்கத்தில் தான் அறுவடை செய்ய முடியும்.

    அதுவரை தட்டுப்பாடு நிலையே நீடிக்கும். கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து வரும் வெங்காயமும் குறைந்து விட்டதால் தமிழகத்திற்கு வரும் அளவு படிப்படியாக குறைய தொடங்கும். இதனால் வெங்காயம் விலை தற்ச மயம் குறைய வாய்ப்பில்லை.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.

    கோவை:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.

    கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை அதிகரித்து காணப்படுகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாகவும், உள்ளூர் தக்காளி வரத்து முற்றிலுமாக நின்று விட்டதாகவும், அதன் காரணமாகவே விலை ஏற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தக்காளி விலை ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தக்காளி, சின்ன வெங்காயம் உள்பட காய்கறிகளின் விலை சற்று குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.140 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் உழவர் சந்தைகளில் ரூ.110 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று ரூ.12 அதிகரித்து ரூ.124-க்கு விற்பனையானது.

    ஆனால் இன்று தக்காளி விலை ரூ.4 குறைந்து ரூ.120-க்கு உழவர் சந்தைகளில் விற்கப்பட்டது. அதேபோல் பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 முதல் ரூ.135 வரை விற்பனையானது. மேலும் மார்க்கெட்டில் இன்று காலை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150 வரையிலும், இஞ்சி ரூ.250-க்கும், பூண்டு ரூ.200 முதல் ரூ.240 வரைக்கும் விற்பனையானது. அதேபோல் மிளகாய் கிலோ ரூ.100-க்கு விற்பனையாகிறது. உருளை, பீட்ரூட், புடலங்காய் தலா ரூ.40-க்கு விற்பனையானது.தொடர்ந்து தக்காளி விலை உச்சத்தில் நீடிப்பதால் இல்லத்தர சிகள் புளியை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி பயன்பாடு அதிகரித்து, தக்காளி சட்னியின் பயன்பாடு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. அதே நேரத்தில் விலை உயர்ந்த உணவு ரகங்கள் விற்பனை செய்யப்ப டும் பெரிய ஓட்டல்களில் மட்டுமே தக்காளி சட்னியை பார்க்க முடிகிறது. சிறிய ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் தக்காளி சட்னி நிறுத்தப்பட்டு விட்டது.

    • குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்
    • சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    குண்டடம்:

    குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இதனால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்டபகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்

    இது குறித்து மேட்டுக்கடையை சேர்ந்த ஒரு விவசாயி கூறியதாவது;-

    குண்டடம் வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம்.

    இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களைஅதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உட்பட ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகிறது.

    இந்தநிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடையை தீவிரமாக செய்துவருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே அதிக விலைக்கு விற்பனையானதால் இப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியாக சின்ன வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடு பொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்து ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தனர்.

    நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர்.

    அவர்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஏற்றுமதி வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது

    இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு.

    உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

    • வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது
    • வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

    புதுடெல்லி:

    வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில் வெங்காயத்தின் விலை உயர்வை தடுக்கும் விதமாக கடந்த மாதம் மத்திய அரசு 3 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து, கையிருப்பில் வைத்தது.

    அதன் தொடர்ச்சியாக வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து மத்திய நிதி அமைச்சகம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5 லட்சம் டன்னாக உயர்த்தும் விதமாக கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கூடுதல் கொள்முதல் இலக்கை அடைய இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு ஆகியவை தலா ஒரு லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சில்லரை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்தைகளை குறிவைத்து, இருப்பிலிருந்து வெங்காயத்தை விடுவிப்பது தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 டன் வெங்காயம் இலக்கு சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

    முக்கிய சந்தைகளில் வெளியிடுவதை தவிர, இருப்பிலிருந்து வெங்காயம் சில்லரை நுகர்வோருக்கு ஒரு கிலோ ரூ.25 என்ற மானிய விலையில் 21-ந்தேதி முதல் (அதாவது இன்று முதல்) சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்கும்.

    வெங்காயம் கொள்முதல் செய்தல், இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும் ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது.
    • சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்படுகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை சேர்ந்த தோட்ட விவசாயி கரேத் கிரிபின் என்பவர் தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார். அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.

    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.

    • சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுவதால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.
    • சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது. திண்டுக்கல் பைபாஸ் சாலையில் தரகு மண்டி வர்த்தகர் சங்க வணிக வளாகத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் வெங்காய மார்க்கெட் நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்தும், வேடசந்தூர், குஜிலியம்பாறை, அய்யலூர், எரியோடு, கோவிலூர், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ளூர் பகுதிகளில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    சாம்பார் காய் எனப்படும் சின்ன வெங்காயம் காரம் அதிகம் உள்ளதால் வீட்டு சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை திடீர் உச்சமடைந்தது. மொத்த மார்க்கெட்டில் 3 ஆயிரம் மூடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட. நிலையில் கிலோ ரூ. 90க்கு விற்கப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100க்கு விற்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டனர்.

    திண்டுக்கல் சில்லறை கடைகளில் மூன்று தரங்களில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது புது காய்களின் வரத்து அறவே இல்லாத நிலையில் பட்டறை காய் எனப்படும் பழைய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனால் திடீர் விலையேற்றம் உள்ளது. இதுவும் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உச்சத்தை தொடும். தற்போது கிலோ ரூ. 70 முதல் ரூ. 100 வரை விற்கப்படுகிறது என்று சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சின்ன வெங்காயத்தின் இந்த திடீர் விலை உச்சம் இல்லத்தரசிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது.
    • கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை,

    கோவையின் புறநகர் பகுதிகளில் தக்காளி, வெண்டை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு உள்ளன. அவற்றை வியாபாரிகள் சந்தைக்கு கொண்டுவந்து ஏலமுறையில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் வெளி மாவட்டம்-மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    கோவை தியாகி குமரன் காய்-கனி சந்தையில் தற்போது காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளன. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    இங்கு கடந்த சில நாட்களுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.40 ஆக இருந்தது. அது தற்போது கிலோவுக்கு ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது. தரத்துக்கு ஏற்ப விலையும் மாறுபடுகிறது. இதனால் சில்லரை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 வரை விற்பனையாகிறது.மேலும் காய்கறிகளின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக வந்திருந்த இல்லத்தரசிகள் மிகுந்த கவலைக்கு ஆளாகி உள்ளனர்.

    கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை): தக்காளி- ரூ.15 (10), வெண்டை-ரூ.40 (30), கத்தரிக்காய்-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.90 (60), சின்னவெங்காயம்-ரூ.80 (40), பெரிய வெங்காயம்-ரூ.30, உருளைகிழங்கு-ரூ.25, சேனை-ரூ.60, சிறுகி ழங்கு-ரூ.80, இஞ்சி-ரூ.100, சேம்பு-ரூ.70, காளிபிளவர்-ரூ.35 (30), பீன்ஸ்-ரூ.60 (80), எலுமிச்சை-ரூ.80 (100), புடலை-ரூ.30 (40), பீர்க்கங்காய்-ரூ.40 (50), சீனிஅவரை-ரூ.30, அவரை-ரூ.40, பூசணி-ரூ.15.

    • சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது.
    • கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது.

    சென்னை:

    நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சத்திற்கு சென்ற தக்காளி விலை உயர்வு பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளிலும் எதிரொலித்தது. இதனை தொடர்ந்து தக்காளியின் விலை படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது மத்திய, மாநில அரசுகளின் கவனம் விலை உயர்ந்த வெங்காயத்தின் பக்கம் திரும்பி உள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வருவதுடன், வடமாநிலங்களில் உள்ள ஒரு சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க இருப்பதால், வெங்காயத்தின் விலை உயர்வு மத்திய, மாநில அரசுகளை மட்டும் அல்லாது இல்லத்தரசிகளையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.

    வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி விதித்திருப்பது மட்டுமல்லாது, தனது சேமிப்பில் உள்ள வெங்காயத்தை மொத்தச் சந்தையில் விடுவித்து சில்லறை விலையைக் குறைக்கும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் தாராளமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தும் முயற்சியிலும் மத்திய, மாநில அரசுகள் இறங்கி உள்ளது.

    நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய மொத்த விலை சந்தையான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.42 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையில் கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. வெளிசந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் பண்டிகை காலத்தில் இதுபோன்று விலை உயர்ந்து, தேவையான அளவு வெங்காயத்தை வாங்க முடியாததால் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கோயம்பேட்டில் உள்ள வெங்காயம் விற்பனையாளர்கள் கூறும்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. நாளொன்றுக்கு 7 ஆயிரம் டன் வெங்காய வரத்து இருந்து வந்ததால் விலையும் சீராக இருந்தது. தற்போது திடீரென வெங்காய வரத்து குறைந்துவிட்டது. இதனால் வெங்காய விலை கிடுகிடுவென உயரத் தொடங்கிவிட்டது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிர மாநிலத்தில் முறையாக பெய்யாததால், காரிப் பருவத்தில் (ஜூலை - ஆகஸ்டு) வெங்காயம் நடவு நடைபெறவில்லை. அதனால் அக்டோபர் மாதம் வெங்காய அறுவடை நடைபெறாததால், கோயம்பேடு சந்தைக்கு வெங்காய வரத்து கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, இருப்பில் வைத்துள்ள வெங்காயத்தை விடுவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அடுத்த சில தினங்களில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

    ×