என் மலர்
நீங்கள் தேடியது "owner"
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை
மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.
மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மாவட்டம் சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் த ங்கராசு( வயது 80 )ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு குமார், அரவிந்தன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அரவிந்தன் பழைய பஸ் நிலையத்தில் உள்ள சக்தி அரிசி ஆலைக்கு செல்லும் வழியில் வசித்து வருகிறார். எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார் பெங்களூரில் வசிக்கும் மூத்த மகளை பார்ப்பதற்கு நேற்று மாலை அரவிந்தன் மற்றும் அவரது மனைவி ரமணி மற்றும் இளைய மகள் ஆகியோர் குடும்பத்துடன் பெங்களூ ருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அரவிந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்று தங்கராசு பார்த்துள்ளார் அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோ உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இது குறித்து சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் 65 ஆயிரம் பணம் திருட்டு போய் உள்ளது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வெளியூருக்கு சென்ற வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே முழு விவரம் தெரியும் என போலீசார் தெரிவித்துள்ளனர் சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.உரிமையாளர்உரிமையாளர்
- மைக்செட் உரிமையாளர் மீது தாக்குதல் நடந்தது.
- மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கட்டைய தேவன் பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் சரவணகுமார்(32). மைக்செட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று ஊத்துப்பட்டியில் உள்ள சூசையப்பர் ஆலய திருவிழாவிற்காக மைக்செட், சீரியல் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சோலைபட்டியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் மின்விளக்குகளை அணைத்துள்ளார். சரவணகுமார் அதனை தட்டிகேட்டார்.
இதைத்தொடர்ந்து அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 11 பேர் சரவணகுமாருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் சரவணகுமார், அவருடைய சகோதரர் ரமேஷ்குமார்,உறவினர் வேல்முருகன் ஆகியோரை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
- சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் பெரியசாமி என்பவர் மளிகை கடை நடத்தி வருகி றார். இந்த நிலையில் திருப்பூர் அருகே உள்ள மங்கலம் சின்னாண்டிபாளையத்தில் காரைக்குடியை சேர்ந்த சீனிவாசன்(வயது 48) என்பவர் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இவர் பெரியசாமி மளிகை கடைக்கு கடந்த 6 மாதத்திற்கு முன் அரிசி மூட்டைகள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த அரிசி மூட்டைகளுக்கு பணம் தராமல் பெரியசாமி தவணை சொல்லி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பணத்தை வசூல் செய்வதற்காக வந்த சீனிவாசனை, பெரியசாமி தரப்பினர் தாக்கியுள்ளனர். அவர் வந்த காரையும் அடித்து நொறுக்கினர். இது குறித்து சீனிவாசன் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை தாக்கியவர்களை தேடி வந்த நிலையில், பெரியசாமியின் மளிகை கடையில் வேலை பார்க்கும் சின்னத்துரை(24) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
- மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
- காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காங்கேயம் :
காங்கேயம் அருகேயுள்ள கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது33). இவர் பெரிய இல்லியம் ரோட்டில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழனிசாமி வீட்டில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
இதனை கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆலை அதிபர் பழனிசாமிக்கும் அவரது குடும்பத்தினருக்கு இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மன உளைச்சல் அடைந்த அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடை உரிமையாளரை கைது செய்தனர்.
மேலூர்
மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
- பேக்கரி உரிமையாளரிடம் நகை-பணம் மோசடி செய்யப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியை வளர்மதி (வயது51). இவர்க ளது பேக்கரியில் விருதுநகர் ஆவலப்ப கோவில் தெருவை சேர்ந்த முத்து கணேஷ் (37) என்பவர் 17 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் வீடு கட்டுவதற்கு உதவி செய்யும்படி மகேந்தி ரனிடம் கேட்டார். அவர் பல தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்தார். மீண்டும் உதவி கேட்டபோது வளர்மதி 24 பவுன் நகை களை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேக்கரிக்கு சரக்கு வாங்க கொடுத்த பணத்திற்கு சரியாக கணக்கு தராமல் முத்து கணேஷ் இருந்துள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கான பணிகள் எதனையும் அவர் செய்த தாகவும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து வளர்மதி அவரிடம் பணம் மற்றும் நகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார். இந்த நிலையில் அவர் வேலையை விட்டு சென்று விட்டார்.
அதன் பின்பும் பலமுறை பணம்-நகையை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை. இதையடுத்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
- கமுதி புறவழிச்சாலைக்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
பசும்பொன்
கமுதியில் புறவழிச்சாலை அமைக்க கமுதி வருவாய் கிராமத்தில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலம் வழங்கியவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்து இழப்பீட்டுத் தொகை பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்திருந்தார். அதன்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ஜானகி தலைமை யில் இதற்கான கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட 12 பட்டாதாரர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தனர். 12 பேருக்கும் இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஷ்வரன், தலைமை நில அளவையர் நாகவள்ளி மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
- சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார்.
- தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார்.
கடலூர்:
கடலூர் அடுத்த கம்பளிமேடை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 52). இவர் அதே பகுதியில் இட்லி கடை வைத்து வந்துள்ளார். சம்பவத்தன்று உத்திராபதி என்பவர் இட்லியை கடனாக கேட்டுள்ளார். அப்போது நெடுஞ்செழியன் தர மறுத்துள்ளார். இதன் காரணமாக இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து உத்ராபதி தனது ஆதரவாளருடன் கடைக்கு சென்று நெடுஞ்செழியனை தாக்கினார். அப்போது அதனை தடுக்க வந்த எழிலரசி, வசந்தா, ஆறுமுகம் ஆகியோரையும் தாக்கினார்கள். மேலும் எழிலரசியை மானபங்கம்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நெடுஞ்செழியன், எழிலரசி, ஆறுமுகம் ,வசந்தா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெடுஞ்செழியன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் உத்ராபதி, மோகன், விஜி ஆகிய 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
- ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை:
சென்னை மாநகரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள். இருப்பினும் மாடுகள் ரோட்டில் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியில் ஏற்கனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி தள்ளியது. நங்கநல்லூர் பகுதியிலும் இதே போன்று 3 பேரை மாடு முட்டு தள்ளிய சம்பவமும் நடை பெற்று உள்ளது. இந்த சம்பவங்களில் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டிய சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதியில் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார்.
- புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கோமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கடலூர்:
புதுவை மாநிலம் கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமாரசாமி. இவர் பண்ருட்டியில் உள்ள துணிக்கடையில் ஜவுளி எடுக்க வந்தார். அப்போது அவரது மணிபர்சை தவறவிட்டார். அதில் ரூ.8 ஆயிரம் இருந்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் காணாமல் போன மணி பர்ஸை தேடி கண்டுபிடித்து உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.