என் மலர்
நீங்கள் தேடியது "palm seeds"
- வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா
- 3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைப்பாற்று ஆற்றுப்படு கையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நிறைவு விழா மற்றும் 25 லட்சம் பனை விதைகள் நடவும் பணி தொடக்க விழா மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், கூடுதல் கலெக்டர் தாக்ரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் மரங்கள் மக்கள் இயக்கநிர்வாக அதிகாரி ராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
3 பேரூராட்சி 139 கிராம ஊராட்சி பகுதிகளுக்கு தலா 2000 பனை விதைகள் வழங்கப்பட்டன. அப்போது விழாவில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
பிரம்மனை ஆக்கக்கூடிய கடவுள் என்றும், விஷ்ணுவை காக்கக்கூடிய கடவுள் என்றும், சிவனை அளிக்கக்கூடிய கடவுள் என்றும் கூறுவார்கள்.
ஆக்குவதை விட பாதுகாக்கக் கூடிய கடவுள் விஷ்ணுவுக்கு தான் மரியாதை அதிகம் என மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுச் சொன்னார்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அரியும் சிவனும் ஒன்று என நம்பக் கூடியவர்கள். அந்த அடிப்படையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்துவிட கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மரங்கள், சுற்றுப்புற சூழலை அழிப்பதற்கு ஏராள மானோர் உள்ளனர்.
மத நல்லிணக்கத்தை மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கு நிறைய பேர் உள்ளனர். அழிக்கக்கூடிய சக்திகளை எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சாதி மதங்களைக் கடந்து மக்களை ஒன்றிணைக்கும், மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய மரக்கன்று நடுதல் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.
தமிழ் கற்றுக் கொள்வது கஷ்டம் அல்ல. இந்தியாவில் உள்ள அனைவரும் கற்றுக்கொள்ள கூடிய மொழியாக உள்ளது. அதனால் முதலில் அவர்கள் தமிழ் பேசட்டும். நாம் அதுக்கு அப்புறம் யோசிக்க லாம். தமிழ் அழகான மொழி,
இவ்வாறு அவர் பேசினார்.
- அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன.
- 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும்.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமல்லாமல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ள பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண் அரிப்பை தடுக்கும், மண்ணை உறுதிப்படுத்துவதுடன் வளப்படுத்தியும் மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகிறது. அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன.
நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல், பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த பனைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகிறது.
பனை விதைகளை சேகரிக்க தேவைப்படும் தாய் பனைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக விளைச்சல் கொண்டதாகவும், முறையாக காய்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தாய்ப்பனையில் இருந்து சேகரிக்கப்பட்ட பழுத்த பழங்களை 4 வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விரைவில் முளைப்புத் திறன் ஏற்படும். விதைப்பதற்கு முன்பு பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் 100 சதவீத முளைப்புத்திறனை பெறலாம். பனை மரங்கள் எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டவை. இவற்றை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் என்றாலும் கார்த்திகை மாதத்தில் நடவு செய்வதன் மூலம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்று விட்ட பனங்கிழங்கு எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம். நீர் பாய்ச்சுதல் விதைகளை நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 முதல் 3 வருடம் வரை மாதம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் பருவமழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழி வரை நிரப்ப வேண்டும். 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும்.
ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியினை விட்டு மற்றவற்றை பிடுங்கி விட வேண்டும். பனைமரம் வளர்ச்சி மெதுவாக இருக்கும். விதைத்து 5 மாதங்கள் கழித்து தான் முதல் குருத்தோலை தோன்றும். 13 முதல் 15 வருடம் கழித்து பதநீர் கொடுக்கும். சராசரியாக ஒரு மரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதநீர் கொடுக்கும். ஒரு லிட்டர் பதநீர் காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் பனைவெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனைவெல்லம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது மடத்துக்குளம் வட்டாரத்திற்கு தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குவதற்காக 1900 பனை விதைகள் இருப்பில் உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. குறைவான எண்ணிக்கையில் இருப்பு உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் வரும் விவசாயிகளுக்கு பனை விதைகள் வழங்கப்படும். சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகினால் உடனடியாக பனை விதைகளை பெற்று நடவு செய்யலாம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேலிப்பயிராக பனை மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
- உடன்குடி வணிகர்கள் சங்கத்தின் 5 ஆண்டு விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை விதைத்தனர்
- சங்கத்தின் தலைவர் அம்புரோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
உடன்குடி:
உடன்குடி வணிகர்கள் சங்கத்தின் 5 ஆண்டு விழாவையொட்டி குலசேகரன்பட்டினம், தருவைகுளத்தில் 100-க்கும் மேற்பட்ட பனை மர விதைகளை விதைத்தனர்.சங்கத்தின் தலைவர் அம்புரோஸ், சங்கச செயலாளர் சதீஷ், இணைச்செயலாளர் ஜெயபால், சங்கதுணைத் தலைவரும் உடன்குடி பேரூராட்சி மன்ற கவுன்சிலருமான பிரதீப் கண்ணன்,பொருளாளர் மனோ. கவுரவ ஆலோசகர் கணேசன், தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும் இயக்க தலைவர் முகைதீன், கிறிஸ்தியாநகரம் கவாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடையம் அணைக்கட்டு சாலையோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது.
- தென்பத்து குட்டிகுளக்கரைகளில் இயற்கையான சூழலில் வளர்ந்து வரும் பனங்கன்றுகளை பார்த்துக்கொண்டே நடந்தனர்.
கடையம்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கடையம் அணைக்கட்டு சாலையை பயன்மிக்க பனைமரச்சாலையாக்கும் பணியில் ஜம்பு ஆறு பாலத்திலிருந்து தென்பத்து குளம் வரையிலான சாலையோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது. அத்தோடு கடந்த ஆண்டுகளில் பனை விதைகள் நடுகை செய்யப்பட்ட தென்பத்து குட்டிகுளக்கரைகளில் இயற்கையான சூழலில் வளர்ந்து வரும் பனங்கன்றுகளை பார்த்துக்கொண்டே நடந்தனர்.
பள்ளி மாணவர்கள் ஜெப்வின், விஷ்ணு,கவின், மெர்வின், செர்வின் மற்றும் பல கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை பனையாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்திருந்தார்.
- பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
- இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.
வாழப்பாடி:
நிலத்தடி நீர் காக்கும் பனை மரங்களின் பயன்கள் குறித்தும், உதிர்ந்து விழுந்து வீணாகும் பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலை களிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணம், மாசிநா யக்கன்பட்டி, உடையாப் பட்டி, பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றி ணைந்து, இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.
இக்குழுவினர் ஏற்படுத் திய விழிப்புணர்வால், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி ஏரியில் திரண்ட பள்ளி, கல்லுாரி மாணவ–மாண வியர் மற்றும் தன்னார்வலர் கள், நுாற்றுக்கணக்கான பனை மர விதைகளை சேக ரித்து ஏரிக்கரையில் விதைத்தனர். இக்குழுவின ருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள் ளனர்.
- தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
- தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் நடை பெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் நாடார், பேரவை தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்
இதில் நாடார் பேரவை பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகர செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், காமராஜ், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் இந்தாண்டு தமிழ்நாட்டின் கடற்கரை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை தொடங்கி இருக்கிறார்கள். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார் முதல் ஆலந்தலை வரை சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திற்கு 15 லட்சம் பனை விதைகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகத்தினரும், நாடார் பேரவை நிர்வாகிகளும் சமூக அமைப்புகள், பொது மக்களுடன் சேர்ந்து பனை விதைகளை நடுவதற்கு பாடுபட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூலம் பாசன வசதி பெறும் குளங்கள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடுகின்றது.
எனவே தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தலையிட்டு மேற்கண்ட அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு கருகி நிற்கும் விவசாய பயிர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
- ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது.
- உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம்
கடலூர்:
பனை மேம்பாட்டு இயக்க திட்டம் 2023-–24 ஆம் ஆண்டின் கீழ் விக்கிரவாண்டி பகுதிகளில் 2300 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 50 பனை விதைகளும், கிராம ஊராட்சிக்கு 100 பனை விதைகளும் வழங்கபடுகிறது. அதன்படி கொட்டியாம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரியில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பனை விதைகளை பெற்று பயனடையலாம் என்று உதவி இயக்குனர் ஜெய்சன் கூறினார்.
- 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.
- 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தில் பனை மர விதைகள் நடுப்பணி நடைபெற்றது. இப்பணியயினை திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தாய்த் திருநாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்வுகளைத் தொடர்ந்து என் மண் - எனது தேசம் என்ற சிறப்பு விழிப்புணர்வு திட்ட செயலாக்கத்தின் அடிப்படையில் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றி யத்தைச் சேர்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளிலும், சுமார் 25,000 பனை விதைகள் ஏரி, குளங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் நடப்பட்டது.
மேலும் பலன் தரும் மரக்கன்றுகள் (நாவல், இலுப்பை, புங்கண், மகாகனி, நெல்லி, வேம்பு, புளியங்கன்று, தென்னங் கன்று மேலும் பல வகை பலன் தரும் மரக்கன்றுகள்) சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாத்து மழை வளத்தை பெருக்கும் நோக்கத்துடனும் 10,000 எண்ணிக்கையில் மேற்படி மர கன்றுகள் நடப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகி நடன சிகாமணி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுளா வீரன், துணைத் தலைவர் பவானி மகாலிங்கம் மற்றும் வார்டு உறுப்பி னர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செப்டம்பர் மாதம் 24-ந்தேதி தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது.
- பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது.
பொன்னேரி:
தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப் பணி திட்டம் அமைப்புகள் இணைந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகளை 14 மாவட்டங்களில் தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவுக்கான கடற்கரை ஓரங்களில் நடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 24-ந்தேதி என்எஸ்எஸ் தினத்தன்று தமிழக கடற்கரை ஓரங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் முதல் விதை நடப்பட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முன்னோடியாக பனை விதைகளை சேகரிக்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் பழைய எருமைவெட்டி பாளையத்தில் உள்ள ஆதித்தன் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் டி சிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், எலைட் பள்ளி தாளாளர் மற்றும் மாணவர்கள், கிரீன்நீடா அமைப்பினர்கள் கலந்து கொண்டு 1லட்சம் அளவிலான பனை விதைகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சேகரித்தனர். நிகழ்ச்சியில் எலைட் பள்ளி தாளாளர் ஜெபாஸ்டின்
பனைமர தோட்ட உரிமையாளர் அகிலன், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் வழக்கறிஞர் கண்ணன், முனிஸ்வரன், தங்கமுத்து, ஜெபராஜ்டேவிட், சீனிவாசன், ராஜேஷ், மோகன்ராஜ், தாஸ், சதீஷ், ரமேஷ், சங்கர பாண்டியன், வேல்முருகன், சண்முகசுந்தரம், சுடலை மணி, பாக்கியராஜ், ஆனந்த லிங்கம், சஞ்சீவராஜன், மகளிர் அணி கல்பனா, குணசுந்தரி, ஆனந்தி, விஜயலட்சுமி, அனிதா, ராஜேஸ்வரி கிரீன்நீடா அமைப்பின் சந்தான கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
- பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி மன்றம், ஏரி வளர்ச்சி குழுவு டன் வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து சோமம்பட்டி ஏரியில் 2 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன் முன்னிலையில் வாழப்பாடி அரிமா சங்க பட்டய தலை வர் சந்திரசேகரன், வட்டார தலைவர் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் கந்தசாமி, பன்னீர்செல்வன், கலைஞர்புகழ், சிவ.எம்கோ, அன்னை அரிமா சங்க தலைவர் ஷபிராபானு, செயலர் இந்திரா காந்தி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தனர்.
பனை விதைகளை நடவு செய்த தோடு மட்டுமின்றி, தொடர்ந்து பராமரித்து பனை மரத் தோப்பை உருவாக்குவதென, ஊராட்சி மன்ற தலைவர் பால சுப்பிரமணியம், செயலாளர் மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பொது மக்கள் உறுதியேற்றனர். பனைமரத் தோப்பு உருவாக்கும் நோக்கில் 2 ஆயிரம் பனை விதைகளை விதைத்த தன்னார்வலர்க ளுக்கு பலரும் பாராட்டு தெரி வித்துள்ளனர்.
- 1,001 பனை விதைகளை நட்டனர்
- பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி குரும்பர் குளக்கரைகளில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் 1,001 பனை விதைகள் நடப்பட்டன. தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் விதமாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மரமும், மனிதனும் அமைப்பை சேர்ந்த, மாங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் முகம்மது ஆஸிம், ஊர் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு 1,001 பனை விதைகளை நட்டனர்.
- கல்லணை கால்வாய் கரைகளில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமர விதைகள் நடும்விழா நடை பெற்றது.
- கலெக்டர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டு 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் லயன் வெங்கடேசனின் இளைய மகள் நிர்மலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை ரெட்டிப்பாளையம், முருகன் நகரில் உள்ள கல்லணை கால்வாய் கரைகளில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான பனைமர விதைகள் நடும்விழா வசந்தம் லயன்ஸ் சங்க தலைவர் லயன் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரம் பனை விதைகள்
நடும் விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு 1,00,00,000 பனை விதை நடுதல் திட்டத்திற்காக நமது சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 10 ஆயிரம் பனை விதைகளை பெற்றுக்கொண்டார்.
விழாவில் வட்டார தலைவர் லயன் அன்பழகன், கிறிஸ்துமஸ் விழா மாவட்ட தலைவர் லயன் ஸ்டீபன், மண்டல ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் லயன் பால்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குனர் (நடவு பொருள்) கனிமொழி, மேலவெளி ஊராட்சி தலைவர் லதா செந்தில்குமார், செயலாளர் லயன் சீனிவாசன், பொருளாளா லயன் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் முன்னாள் தலைவர் வெங்கடேசன், துணை தலைவர் லயன் வடிவேலன், செயற்குழு உறுப்பினர்கள் லயன் அழகிய மணவாளன், லயன் வில்லியம் ஸ்டீபன்சன், லயன் பிரகாஷ், லயன் அப்துல்லா, லயன் உலகநாதன், லயன் ஹரி பிரசாத், ஊராட்சி நிர்வாகிகள் மற்றம் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சேவைக்கு தனது ஒரு மாத ஊதியத்தை சேவை நிதியாக வழங்கிய முன்னாள் தலைவர் லயன் வெங்கடேசனின் மகள் நிர்மலாவை பாராட்டி சங்கத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.