என் மலர்
நீங்கள் தேடியது "paris olympics 2024"
- 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது.
- ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில் 2024 ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெறும் நாடானா பாரீஸில் ஏற்றப்பட்டது. இதனை ஃபிஃபாவின் உலகளாவிய கால்பந்து மேம்பாட்டுத் தலைவர் அர்சென் வெங்கர் ஏற்றி வைத்தார். இதன்மூலம் 30 நாட்கள் கவுண்ட் டவுன் தொடங்கி உள்ளது.
ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றாலும், கிரேக்கத்தின் தென் பகுதி நகரான ஒலிம்பியாவில் பாரம்பரிய முறையில், நடனம், நாடகம் போன்ற கலைவிழாக்கள் நடத்தி இச்சுடர் ஏற்றப்படும். அப்போது நீளமான உடையணிந்த வீராங்கனை ஒருவர், ஒளிக்கான கிரேக்கக் கடவுள் அபோலோவிடம் பிரார்த்தனை செய்த பிறகு, நிலத்தில் மண்டியிட்டு சூரிய ஒளியால் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவார்.

இது உலக நாடுகளை சுற்றி வந்து இறுதியில் போட்டி நடைபெறும் இடத்தை வந்து அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
- கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.
8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு வரலாற்றுப் பதக்கம்!
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024ல் சிறப்பான விளையாட்டால், இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மானு பாகெர்-க்கு வாழ்த்துகள்.
வெண்கலத்திற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளதால், இந்த வெற்றி மேலும் சிறப்பு வாய்ந்தது.
நம்பமுடியாத சாதனை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
- இந்தியாவின் முதல் பதக்கத்தை மானு பாகெர் வென்றது பெருமையான தருணம்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார்.
8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியதில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பித்துள்ளது.
கொரிய வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கம் வென்றனர்.
ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மானு பாகெர் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மானு பாகெரின் வெற்றி குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு எகஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்கப் பட்டியலைத் தொடங்கிய மனு பாக்கருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். மனு பாக்கரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை பல விளையாட்டு வீரர்களை, குறிப்பாக பெண்களை ஊக்குவிக்கும்.
எதிர்காலத்தில் அவர் மேலும் சாதனை படைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறுகையில், " பாரீஸ் ஒலிம்பிக்2024ல் பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மானு பாகெர் வென்றது பெருமையான தருணம்.
வாழ்த்துகள் மானு, நீங்கள் உங்கள் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மேலும், ஒலிம்பிக் பதக்கம் வென்றதன் மூலம் துப்பாக்கி சுடும் முதல் வீராங்கனையாக மாறியுள்ளீர்கள்" என்றார்.
- 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர்.
- ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும்.
பாரிஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலாகலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. இந்த நிலையில் நேற்றைய 9-வது நாளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நோவா லைல்ஸ் முதல் 30 மீட்டர் வரை 8-வது இடத்தில் தான் இருந்தார். ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார். ஆனால் 50 மீ தூரம் கடந்த பின் நோவா லைல்ஸ் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தினார். கடைசியாக நோவா, தாம்சன் ஆகியோர் ஒரே நேரத்தில் இலக்கை அடைந்தனர்.
இருவரும் 9.79 நொடிகளில் வந்திருந்தாலும், நோவா லைல்ஸ் - தாம்சன் இடையில் 0.784 மைக்ரோ நொடிகள் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் தாம்சன் 2-வது இடத்தை பிடித்தார். 3-வது இடத்தை அமெரிக்காவின் கெர்லி பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.
இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றொரு முக்கிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் 100 மீட்டர் ரேஸில் பங்கேற்ற 8 வீரர்களும் 10 நொடிகளுக்குள் தங்களின் பந்தய தூரத்தை எட்டியுள்ளனர். 4-வது இடத்தில் வந்த தென்னாப்பிரிக்காவின் அகானி 9.82 நொடிகளிலும், இத்தாலியின் ஜேகப்ஸ் 9.85 நொடிகளிலும், போட்ஸ்வானாவின் டிபோகோ 9.86 நொடிகளிலும், அமெரிக்காவின் கென்னத் 9.88 நொடிகளிலும், ஜமைக்காவின் செவில் 9.91 நொடிகளிலும் பந்தயத்தை முடித்துள்ளனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல்முறையாகும். வெற்றிக்கு, தோல்விக்கும் இடையிலான இடைவெளி என்பது மைக்ரோ நொடிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்ததை விடவும், அதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கு நடுவர்கள் அதிக நேரம் எடுத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-ஜெர்மனி ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது.
- மற்றொரு அரையிறுதி போட்டியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி கால் இறுதியில் இங்கிலாந்துடன் விளையாடியது. ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. 22-வது நிமிடத்தில் இந்திய அணிக்காக கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்தார். 27-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்டன் கோல் அடித்தார்.
இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் இந்தியவீரர் அமித் ரோஹிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நடுவர்கள் தெரிவித்தனர். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. 10 வீரர்களுடன் விளையாடி இந்தியா பெற்ற இந்த வெற்றி சிறப்பானது.
இந்திய அணி அரை இறுதியில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் நாளை (6-ந்தேதி) இரவு 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரை இறுதியில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்து விடும். ஜெர்மனியை வீழ்த்துவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும். அந்த அணி ஸ்பெயினிடம் மட்டுமே தோற்று இருக்கிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெர்மனி அணி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
நாளை நடைபெறும் மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து-ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. மாலை 5.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியமும், வெள்ளி பதக்கம் கைப்பற்றிய ஆஸ்திரேலியாவும் கால் இறுதியிலேயே வெளியேறி விட்டன. வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
பெண்கள் பிரிவில் இன்று நடைபெறும் கால் இறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-சீனா (பிற்பகல் 1.30 மணி), அர்ஜென்டினா-ஜெர்மனி (மாலை 4 மணி ) , நெதர்லாந்து-இங்கிலாந்து (இரவு 9 மணி), பெல்ஜியம்-ஸ்பெயின் (இரவு 11.30 மணி) மோதுகின்றன.
- நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு 5 தங்கம் கிடைத்தது.
- 3, 4 இடங்கள் முறையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது.
பாரீஸ்:
33-வது ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 26-ந்தேதி பாரீசில் கோலா கலமாக தொடங்கியது. மறுநாள் 27-ந்தேதி முதல் போட்டிகள் ஆரம்பமானது. போட்டி தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை அமெரிக்க அணியால் பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க இயலவில்லை.
இந்த நிலையில் நேற்றைய 9-வது நாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவுக்கு 5 தங்கம் கிடைத்தது.
இதனால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. ஆனால் அந்த இடத்தை அமெரிக்காவால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை.
மீண்டும் சீனா முதல் இடம் பிடித்தது. சீனா இதுவரை 21 தங்கம், 17 வெள்ளி, 14 வெண்கலம் ஆக மொத்தம் 52 பதக்கத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்கா 19 தங்கம், 27 வெள்ளி, 26 வெண்கலம் ஆக மொத்தம் 72 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.
3, 4 இடங்கள் முறையே பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளது. 3 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 58-வது இடத்தில் உள்ளது.
- 68 கிலோ எடை பிரிவில் நிஷா தஹியா- டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
- முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார்.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவை சேர்ந்த நிஷா தஹியா மற்றும் உக்ரைன் வீராங்கனையான டெட்டியானா ரிஷ்கோ ஆகியோர் மோதின.
இந்த போட்டியில் முதல் பாதியில் இந்திய வீராங்கனை 1-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய நிஷா இறுதியில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
- அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவின் கால் இறுதியில் இந்தியாவின் நிஷா தஹியா தென் கொரியாவின் சோல் கம் பாக்கை எதிர்கொண்டார்.
சிறப்பாக விளையாடிய நிஷா 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில் நிஷா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அவர் அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருந்தது. கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை சுதாரித்து கொண்ட தென் கொரியா வீராங்கனை மிரட்டலாக விளையாடு அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-8 என்ற கணக்கில் தென் கொரியா வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கையில் ஏற்பட்ட வலியையும் மனதில் ஏற்பட்ட வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் நிஷா கண்ணீர் சிந்தினார். காயத்துடன் போராடிய நிஷாக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- காலிறுதியில் அமித்துக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
- நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஹாக்கிபோட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷீட் அவுட்டில் 1-1 (4-2) என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் அமித் ரோகிதாஸ் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் எப்.ஐ.எச் நடத்தை விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் அமித் ரோகிதாஸ் விளையாட மாட்டார்.
- அரையிறுதியில் வினேஷ் போகத்- ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
- அரையிறுதியில் கியுபா வீராங்கனையான யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வினேஷ் எதிர் கொள்கிறார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்
- 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.
- இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்
இந்நிலையில், வினேஷ் போகத் வெற்றி தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். அவர் 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரத்தரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் வினேஷ் போகத் , பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராடினர்.
- ஜப்பானின் சுசாகியை அவர் வீழ்த்தியது அசாதாரணமானது. அவருக்கு எனது வாழ்த்துகள்
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மல்யுத்தத்தில் பெண்கள் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் மற்றும் உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச் ஆகியோர் மோதின.
இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய போகத் 4-0 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வினேஷ் போகத் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதி போட்டி இன்று இரவு 10.25 மணிக்கு நடைபெறும்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ராவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "வலியை அனுபவித்து வந்த வினேஷ் போகத் பதக்கம் வெல்ல வேண்டும் என பிரார்த்திக்கிறேன். களத்தில் அவரது உழைப்பு தெரிகிறது. ஜப்பானின் சுசாகியை அவர் வீழ்த்தியது அசாதாரணமானது. அவருக்கு எனது வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.
பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய வீராங்கனைகளில் வினேஷ் போகத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.