என் மலர்
நீங்கள் தேடியது "Parliament winter session"
- நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது.
- கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது.
இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்த நிலையிலும் மத்திய அரசு இந்த மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறுகையில் "அரசு பில்டோசர் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அங்கே சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் இல்லை என்றால் எப்படி சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் இருக்க முடியும்.
நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது. கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது. நாங்கள் இதுகுறித்து எங்களுக்குள் ஆலோசனை நடத்தி, சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெறுவோம். அதன்பின் உச்சநீதிமன்றத்தில முறையீடு செய்வோம்" என்றார்.
தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட தேர்வு குழுவை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக மந்திரிசபை செயலாளர் இடம் பிடிப்பார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை.
- எம்.பி.க்கள. தங்கள் தொகுதி பயனடையும் வகையில் கூட்டத்தொடரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
நடப்பாண்டின் கடைசி கூட்டத்தொடர் இது. ஆக்கப்பூர்வமான நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக காத்திருக்கிறேன். நாடாளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை. எம்.பி.க்கள. தங்கள் தொகுதி பயனடையும் வகையில் கூட்டத்தொடரை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. அனைவரும் நாடாளுமன்ற கண்ணியத்தை காக்க வேண்டும். அவைகளில் தொடரும் அமளியால் இளம் எம்.பி.க்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அதானி மீதான அமெரிக்காவின் புகார் உள்ளிட்ட கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- அதானி மீது புகார் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்.
- வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு திட்டம்
2024-ம் ஆண்டிற்கான இந்திய பாராளுமன்றத்தின் கடைசி மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
- மாநிலங்களை புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவிப்பு.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மராட்டியம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள பரபரப்பான சூழ்நிலையில் கூட்டம் தொடங்கியதால் சபை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவியது.
கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கும்போது சபை நடவடிக்கைகள் பற்றி அலுவல் ஆய்வு குழுக்கள் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதானி விவகாரத்தை விசாரிக்க கோரி பாராளுமன்ற சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
எனவே பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் மிகப்பெரிய புயலை வீசச் செய்யும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வர தொடங்கினார்கள். 10.30 மணிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வந்தனர்.
பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "பாராளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை" என்று கூறினார்.
பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனையில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி. மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
பின்னர் சரியாக 11 மணிக்கு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.
அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அவை தொடங்கியதுமே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.
மீண்டும் 12 மணிக்கு சபை கூடியது. அப்போது அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.
இந்த கூட்டத் தொடரில் 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் வக்பு வாரிய திருத்த மசோதா மிக முக்கியமான தாகும்.
தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா, வர்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர போக்குவரத்து மசோதா ஆகியவை இந்த கூட்டத் தொடரில் புதிதாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.
8 மசோதாக்கள் ஏற்கனவே பாராளுமன்ற மேல் சபையில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களை மக்களவை யில் எடுத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
ஆனால் பல மசோதாக்களுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக ளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இன்று இரு தரப்பினரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.
அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த பாராளு மன்ற விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கிடையே நாளை (செவ்வாய்க்கிழமை) பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டலத்தில் இருசபைகளின் கூட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் 75-வது அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட உள்ளது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி இதில் பங்கேற்று பேச உள்ளனர். 75-வது அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் நூல்கள் வெளியிடப்பட உள்ளன.
பாராளுமன்ற மேல் சபை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் இன்று காலை கூடியது. அங்கும் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்குமாறு கோஷம் எழுப்பினார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி ஜெகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபடி இருந்தனர். இதையடுத்து மேல்சபையை நாள் முழுவதும் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் மேல்சபையில் விவாதங்கள் இல்லை. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேல்சபை கூடும் என்று ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
- பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன.
- மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2025-ம் ஆண்டுக்காக நாடு தயாராகும் நிலையில் 2024-ம் ஆண்டின் கடைசி கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது. நாளை அரசியலமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாடப்படுகிறது.
பாராளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பாராளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடக்கும் என்று நம்புகிறேன். அதிகாரப்பசி கொண்ட கட்சிகளை மக்கள் பலமுறை தோற்கடித்து இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் மக்களுக்காக காங்கிரஸ் எப்போதும் பேசியது இல்லை.
பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்க சில கட்சிகள் முயற்சிக்கின்றன. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுகிறார்கள்.
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அமளியில் ஈடுபட்டு பாராளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறார்கள். இடையூறுகள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற ஒரு சிலரின் எண்ணம் வெற்றியடையவில்லை. நாட்டு மக்கள் அவர்களின் செயல்களை கவனித்து தகுந்த நேரத்தில் தண்டித்தனர். அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து நேரம் வரும்போது நீதியை வழங்குகிறார்கள்.
பாராளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்த நான் பலமுறை எதிர்க்கட்சியினரை வற்புறுத்தி வருகிறேன். எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலர் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். அவை நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பொதுமக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டவர்கள் தான் தங்கள் சக உறுப்பினர்களின் வார்த்தைகளை புறக்க ணித்து அவர்களின் உணர்வு களையும் ஜனநாயகத்தையும் மதிக்கவில்லை.
உலகமே இன்று இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. பாராளுமன்ற நேரத்தை பயன்படுத்துவது, அவையில் நமது நடத்தையும் உலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள மரியாதையை வலுப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும்.
இந்திய வாக்காளர்கள் ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் உள்ளனர். அரசியலமைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு காரணமாக பாராளுமன்ற அமைப்பு முறையின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் நாம் அனைவரும் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இது காலத்தின் தேவை.
ஒவ்வொரு விவாதத்தின் அம்சங்களும் ஆரோக்கியமாக அவையில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். வரவிருக்கும் தலை முறையினர் அதிலிருந்து உத்வேகம் பெறுவார்கள்.
இந்த அமர்வு பயனுள்ள தாக அமையும் என்பது உண்மை. இந்த அமர்வை ஆர்வத்துடன் முன்னெடுத்து செல்ல மரியாதைக்குரிய எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வயநாடு இடைத்தேர்தலில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
- இன்று மக்களவை உறுப்பினராக பதவி ஏற்கிறார்.
வயநாடு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் அண்ணன் ராகுல் காந்தியிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இதன்மூலம் காந்தி குடும்பத்தில் இருந்து மற்றொரு நபர் பாராளுமன்றம் அவையை அலங்கரிக்கிறார்.
ஏற்கனவே சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கிறார். ராகுல் காந்தி மக்களவை எம்.பி. மற்றும் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்த நிலையில் மக்களவையில் ராகுல் காந்தியுடன் இணைந்து பிரியங்கா காந்தி குரல் கொடுக்க உள்ளார்.
அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவ் உறவினர் அக்ஷய் யாதவ் ஆகியோர் எம்.பி.யாக உள்ளனர். மற்றொரு உறவினர் தர்மேந்திர யாதவும் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
அதேபோல் பப்பு யாதவ் மக்களவை எம்.பி.யாகவும், அவரது மனைவி மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார்.
- பாராளுமன்றம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது
- இரண்டு நாட்கள் கடும் அமளியால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 25-ந்தேதி) தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடர் மற்றும் 2-வது நாளான நேற்றைய கூட்டத்தொடர் எதிர்க்கட்சி அமளியால் நாள்முழுவதும் ஒத்திவைப்பட்டது.
- அதானி விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
- பல்வேறு பிரச்சனையால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 3-வது நாளாக முடங்கியது.
புது டெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக முதல் நாளே இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது. நேற்றும் அதானி விவகாரத்தால் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கியது. அதானி மற்றும் உ.பி. வன்முறை தொடர்பாக எதிர்கட்சிக்களின் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
மக்களவை கூடியதும் பிரியங்கா, ரவீந்தர் சவான் எம்.பி.யாக பதவியேற்றனர். அதை தொடர்ந்து சமாஜ் வாடி உறுப்பினர்கள் உ.பி. வன்முறை குறித்த விவகாரத்தை கிளப்பினார்கள். அதானி விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மேல் சபையிலும் இதே நிலை நீடித்தது. அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, மணிப்பூர் மறறும் உ.பி. வன்முறை குறித்து எதிர் கட்சி எம்.பி.க்கள் பிரச்சனையை கிளப்பினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
அதானி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று 3-வது நாளாக முடங்கியது.
- வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்கள் மக்களவையில் அரசியல்சாசனம் மீதான விவாதம் நடைபெறும்.
- மாநிலங்களவையில் அடுத்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும்.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. டிசம்பர் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
அதானி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதனால் அவை நடவடிக்கை முழுமையாக செயல்படாமல் பாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாட்கள் அவைகள் ஒத்திவைக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் அரசியல்சாசனம் (Constitution) மீதான விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளும், என்.டி.ஏ. அரசும் சம்மதித்துள்ளது. அதன்படி வருகிற 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதி (வெள்ளி மற்றும் சனி) ஆகிய இரண்டு நாட்கள் மக்களவையில் அரசியல்சாசனம் மீதான விவாதம் நடைபெறும். சனிக்கிழமை பிரதமர் மோடி விவாத்தின் மீது பதில் அளிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவையில் 16 மற்றும் 17 (திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி பதில் அளிக்க இருக்கிறார்.
மக்களவையில் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை விவாதத்தை தொடங்குவார். மாநிலங்களவையில் திங்கட்கிழமை அமித் ஷா விவாதத்தை தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும்.
- மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
இந்தியாவில் மக்களவை தேர்தலுடன் அனைத்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி முடித்திட மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதாவை இந்த கூட்டத் தொடரிலேயே பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த மசோதா மீது ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இந்த மசோதா மீதான விரிவான ஆலோசனைக்காக பராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு (Joint Parliamentary Committee) அனுப்ப வாய்ப்புள்ளது.
பாராளுமன்ற கூட்டுக்குழுவில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் இருப்பார்கள். அவர்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள். இது தொடர்பான மற்ற பிரிதிநிதிகளும் கலந்து கொள்வார்கள். நாட்டின் அனைத்து மாநில சட்டமன்ற சபாநாயகர்களும் அழைக்கப்பட வாய்ப்புள்ளது. அனைத்து பொதுமக்களிடமும் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த குறைந்த பட்சம் ஆறு மசோதாக்களை திருத்தம் செய்ய வேண்டும். இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரு அவைகளிலும் கூட்டணி கட்சிகளுடன் மெஜாரிட்டி உள்ளது. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உள்ளதா? என்பது கேள்விக்குறியானது.
245 இடங்களை கொண்ட மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 112 இடங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளுக்கு 85 இடங்கள் உள்ளன. அரசுக்கு 164 வாக்குகள் தேவை.
மக்களவையில் 545 இடங்களில் 292 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பங்கிற்கு 364 வாக்குகள் தேவை. ஆனால் வாக்கு நடத்தப்படும் வீதம் மாறுபடும். அப்போதைய நிலையில் எவ்வளவு உறுப்பினர்கள் அவைக்குள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
- அரசியல் சாசனம் மீதான விவாதம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது.
- அவை நடைபெற வேண்டும் என சமாஜ்வாடி கட்சி விரும்புகிறது.
இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. பாராளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவை நடவடிக்கையை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் அவை நடவடிக்கைகள் முழுமையாக நடைபெறவில்லை. அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சோரோஸ்- சோனியா காந்தி விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதம் நடத்த பா.ஜ.க. கோரிக்கை வைக்கிறது.
இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநிலங்களவை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் பாராளுமன்ற நடவடிக்கை ஒருநாள் முழுவதும் தங்குதடையின்றி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசியல் சாசனம் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.
தினந்தோறும் அவை ஒத்திவைக்கப்படுவதால் சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ் விரக்தியடைந்துள்ளார். அதானி விவகாரம் தொடர்பாக முதலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தற்போது நாங்கள் இரு பிரச்சனையுடன் அல்ல. அவை சமூகமாக நடைபெற வேண்டும் என டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான டிம்பிள் யாதவ் கூறுகையில் "அவை நடந்து கொண்டிருக்கிறது. இன்று அவை நடைபெற்றது. இது தொடர்ந்து நடைபெறும் என நம்புகிறோம். எங்களுக்கு சோரோஸ் விவகாரமும் அல்ல. அதானி விவகாரமும் அல்ல. அவை நடைபெற வேண்டும். அவைகள் நடைபெற இரண்டு தரப்பில் இருந்தும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம். அரசியல் சாசனம் மீதான விவாதம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற இருக்கிறது. அவை நடைபெற வேண்டும் என சமாஜ்வாடி கட்சி விரும்புகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
- எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
- 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் முடங்கின.
இதற்கிடையே மேல்-சபையின் அவைத் தலைவர் ஜெகதீப்தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் அளித்தன.
இந்த நிலையில் பாராளுமன்றம் இன்று காலை கூடியது. காலை 11 மணிக்கு மேல்-சபை கூடியதும், ஆளும் கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள், அவைத் தலைவர் தங்கரை காங்கிரஸ் தலைவர்கள் அவமதித்ததாக குற்றம் சாட்டினர்.
விவசாயியின் மகனை எதிர்க்கட்சியினர் அவமதிப்பதாகக் கூறினர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து பா.ஜ.க. எம்.பி ராதா மோகன் தாஸ் பேசினார். பா.ஜ.க. எம்.பியின் பேச்சுக்கு எதிர்ப்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.
அப்போது ஜெகதீப்தன்கர் கூறும்போது, நான் ஒரு விவசாயியின் மகன். நான் பலவீனத்தை காட்டமாட்டேன். என் நாட்டிற்காக என் உயிரை தியாகம் செய்வேன். நான் நிறைய சகித்துக் கொண்டேன். தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் நீங்கள் அரசியலமைப்பை அவமதிக்கிறீர்கள் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, மற்ற கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பேசுவதற்கு பா.ஜ.க. உறுப்பினர்களை ஊக்குவிக்கிறீர்கள். நானும் விவசாயியின் மகன்தான். உங்களை விட அதிக சவால்களை நான் எதிர்கொண்டு உள்ளேன்.
எங்கள் கட்சி தலைவர்களை அவமதிக்கிறீர்கள், காங்கிரசை இழிவு படுத்துகிறீர்கள். உங்கள் புகழைக் கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. விவாதத்திற்கு வந்துள்ளோம் என்றார்.
தொடர்ந்து தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் நோட்டீஸ் வர முதலீட்டாளர் ஜார்ஜு டன் காங்கிரஸ் தலைமையின் தொடர்பு பற்றிய பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரு தரப்பு உறுப்பினர்கள் இடையே கூச்சல்-குழப்பம் நிலவியது.
இதையடுத்து மேல்-சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார். 16-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.