என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO"

    • சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
    • இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்

    மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

    சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது.  கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • பண்ருட்டி அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (26) திருமணம் ஆனவர். மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்துவருகிறார்.இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 10ம்வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறிகடத்தி சென்றார்.இதுகுறித்து மாணவியின் தாய் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்த ப்பட்ட பள்ளி மாணவியை வலை வீசி தேடி வந்தனர். போலீசாரின்தீவிர தேடு தல் வேட்டையில் மணி கண்டனை மடக்கி பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட பள்ளி மாணவியை கடலூர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
    • பனியன் தொழிலாளியான ரியாஸ் அகமது என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த, 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். மாநகராட்சி பள்ளியில்,பிளஸ் 2 படித்து வருகிறார். இவரிடம் முதலிபாளையத்தை சேர்ந்த பனியன் தொழிலாளியானரியாஸ் அகமது(வயது 23) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார்.

    இந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது ரியாஸ் அகமது, சிறுமியை மேட்டுப்பாளையத்துக்குஅழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சிறுமியை மீட்ட போலீசார்,ரியாஸ் அகமதுவை 'போக்சோ' வழக்கில் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், சிறையில் அடைத்தனர்.

    • சிறுவர்களின் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை.
    • பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது

    சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:

    மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை. அது குற்றச்செயல் இல்லை.

    மாணவர்கள் தற்போது ஸ்டைலாக முடிவெட்டி கொள்கிறார்கள். அந்த மாணவர்களை பிடிக்கும் நீங்களெல்லாம் அந்த காலத்தில் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமி திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தனர்.
    • ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான ராதாகிருஷ்ணன்(வயது 25) என்ற வாலிபர் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமி திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்கு ப்பம் ஜாகீர் உசைன் தெருவை சேர்ந்த முகமதீன் அன்சாரி (வயது 56) இவர் அதே பகுதியை சேர்ந்த சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருத்தி வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்க ப்பட்ட சிறுமியின் பெற்றோர்பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். இதனை தொடர்ந்துபண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்குபதிவு செய்து முகமதீன் அன்சாரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துபண்ருட்டி நீதிமன்ற த்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • போதை பொருள் விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    தாராபுரம் :

    மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு முகாம் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    முகாமிற்கு தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.தர்ம பிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். அப்போது பள்ளி மாணவர்களுக்கு போக்சோ சட்டம் மற்றும் போதைப்பொருட்கள் ஒழிப்புகுறித்து விளக்கினார்கள்.

    போதை பொருள் விற்பனை செய்வதும், வாங்கி பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போதைப் பொருட்களின் பயன்பாட்டை தடுத்து நல்ல எதிர்கால மாணவ சமுதாயத்தை காப்பாற்ற மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    பிறகு முகாமில் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீதிபதிகள் பதிலளித்தனர். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். அப்போது வழக்கறிஞர் சித்ராபாண்ட்ஸ், பள்ளி தலைமையாசிரியர் மோகன்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார்.
    • தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்.

    கடலூார்:

    பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த 14 வயதுசிறுமி வீட்டில் தனியாக இருந்த போது இவரது தந்தையின் நண்பர் பக்கத்து ஊரானகாட்டுக்கூடலூரை சேர்ந்த சோழன்(32 என்பவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார். அதிர்ச்ச்சி அடைந்த சிறுமி அவனை தள்ளிவிட்டு வெளியேஓடி வந்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின்தந்தை பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில்இன்ஸ்பெக்டர்(பெ) நந்தகுமார், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சுடர்மதி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்

    • 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்
    • ஜெயிலில் அடைப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 60).

    இவர் வீட்டின் அருகே விளை யாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வந்து தனது தாயிடம் தெரிவித்தாள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆரோக்கியதாசை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    பின்னர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் ஆரோக்கியதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தார்.

    • சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, 5 சிறுமிகளை மீட்டனர்.
    • இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் வாத்துப்பண்ணை நடத்திவருகிறார். மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் வாத்து பண்ணை பணிகளை கவனித்து வந்தனர். வாத்துகளை மேய்ப்பதற்காக புதுச்சேரியை ஒட்டி உள்ள தமிழக பகுதிகளில் இருந்து சிறுமிகளை வேலைக்கு வரவழைப்பது வழக்கம். இவ்வாறு வாத்து மேய்க்கும் சிறுமிகளை கொத்தடிமை போன்று அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகள் செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக குழந்தைகள் நல காப்பகத்தில் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் நல காப்பக அதிகாரிகள் வாத்துப் பண்ணைக்கு சென்று, சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதியை ஆய்வு செய்து, அங்கிருந்த 5 சிறுமிகளை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்கு கன்னியப்பன் மற்றும் அவரது உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக 2020ஆம் ஆண்டு புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    5 சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வாத்துப்பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், உறவினர்கள் பசுபதி, அய்யனார் உள்ளிட்ட 7 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கன்னியப்பன் மனைவி சுபாவுக்கு ஆயுள் தண்டனையும், காத்தவராயன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடும், மற்ற 4 பேருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    • மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    சாத்தூரை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி. இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். அப்போது சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த கார்த்தி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அடிக்கடி மாணவியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் அடிக்கடி வாந்தி எடுத்ததால் பெற்றோர் மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை போக்சோவில் கைது செய்தனர்.

    இதேபோல் வ.புதுபட்டியை சேர்ந்தவர் 16 வயது பிளஸ்-2 மாணவி. இவரை அரசு மருத்துவமனைக்கு உடல்நல பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மாணவியிடம் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த அறிவரசன் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து தாயார் அளித்த புகாரின்பேரில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • போக்சோ சட்டத்தில் மாணவன் மீது வழக்கு பதியப்பட்டது
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

    கரூர்:

    வரும் அரசு பள்ளியில், பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர், கரூர் அருகே புரவிபாளையம் பகுதியில் உள்ள, சகோதரி வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி, முருகானந்தம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின்பேரில், கரூர் மகளிர் போலீசார், முருகானந்தம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.




    ×