என் மலர்
நீங்கள் தேடியது "Police arrest"
- ஆறுமுகம் மகன் மணிகண்டன். இவரது சின்ன மாமனார் வீட்டுக்கு சென்றார்.
- மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல்விடுத்தனர்,
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(வயது31). இவர் சம்பவத்தன்று பொங்கல் பண்டிகைக்காக கடுவனூரில் உள்ள தனது சின்ன மாமனார் சங்கர் வீட்டுக்கு சென்றார். அப்பொழுது வீட்டுமனை சம்மந்தமான முன் விரோதம் காரணமாக சங்கரிடம் கடுவனூரை சேர்ந்த அவரது அண்ணன் குப்பன் தனது ஆதரவாளர்களுடன் தகராறு செய்ததோடு இதை தடுக்க முயன்ற மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த குப்பன்(46), அமுதா, ரவி, அஜித்குமார்(27) ஆகிய 4 பேர் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குபதிவு செய்து குப்பன், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் குப்பன் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், மஞ்சுளா, முத்துராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், சில்லக்கல்லு போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் செல்போன் வீடியோவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறு கருத்தை வெளியிட்டுள்ளார்.
போலீசாருக்கு 3 மாத சம்பளம் வழங்காவிட்டால் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியில் இருந்து இறக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டுவரப்படும் எனவும் மேலும் சில அவதூறான வார்த்தைகளை பேசி தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவு செய்தார்.
அவர்கள் மேலும் சிலருக்கு வீடியோவை அனுப்பி வைத்ததால் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடியோ பதிவிட்டவர் யார் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முதலமைச்சரை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டது வெங்கடேஸ்வரராவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சில்லக்கல்லு போலீசார் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி அவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரராவை கைது செய்தனர்.
அவரை ஜக்கையப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெரம்பூர் காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதல் நிலைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் சம்பவதன்று அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆடு மேய்க்க வந்துள்ளார். அந்த சிறுமிக்கு, திருநாவுக்கரசு குளிர்பானத்தில் மதுபானம் கலந்து கொடுத்து அவரை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ்காரர் திருநாவுக்கரசை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகை கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா காவலர் திருநாவுக்கரசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் போலீஸ்காரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)நந்தகுமார் தலைமையில் புதுப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவைப் பகுதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் புதுவையில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணையில் கொறத்தி கிராமத்தைச் சேர்ந்தநடராஜன், ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் , ஆகியோர் என தெரியவந்தது.இவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து 120 பாக்கெட் சாராயங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தில்ஷாத். இவர் தனது துறை ரீதியிலான பணி காரணமாக கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரெயிலில் பயணம் செய்தார்.
அவர் சென்ற அதே பெட்டியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவரும் பயணம் செய்தார். மாணவியிடம் போலீஸ்காரர் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டு வந்தார். அந்த மாணவியும் போலீஸ்காரருடன் பேசிக் கொண்டு பயணம் செய்தார்.
அந்த ரெயில் திருவனந்தபுரத்தை நெருங்கியபோது அந்த பெட்டியில் பயணம் செய்த பெரும்பாலான பயணிகள் இறங்கி விட்டனர். இதை பயன்படுத்திக் கொண்டு அந்த மாணவியிடம் போலீஸ்காரர் தில்ஷாத் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை கற்பழிக்கவும் முயன்றார். இதனால் அந்த மாணவி அவரை எதிர்த்து போராடினார்.
மேலும் தனது செல்போனிலும் அவரை புகைப்படம் எடுத்தார். அதற்குள் ரெயில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. உடனே அந்த போலீஸ்காரர் ரெயிலில் இருந்து இறங்கி தப்பிச் சென்று விட்டார். பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நடந்த கொடுமை பற்றி ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.
செல்போனில் படம் எடுத்த தகவலையும் அவர்களிடம் தெரிவித்தார். அந்த புகைப்படம் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி போலீஸ்காரர் தில்ஷாத்தை கைது செய்தனர். அவர் மீது போஸ்கோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் அருகே படிஞானத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 41). மத போதகரான இவர் தனக்கு சொந்தமான ஆட்டோவில் அந்த பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுமிகளை பள்ளிக்கூடத்தில் சென்று விடுவது வழக்கம்.
சமூக சேவை போல அவர் இதை செய்து வந்ததால் அவரது ஆட்டோவில் பல பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இந்தநிலையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு சிறுமி படித்த பள்ளிக்கூடத்துக்கு சைல்டு லைன் ஊழியர்கள் சென்று மாணவிகளிடம் பாலியல் கொடுமை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது 5 பள்ளி சிறுமிகள் மதபோதகர் மனோஜால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதுபற்றி சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர். #tamilnews
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள 63-வது செக்டார் பகுதியில் இயங்கிவந்த ஒரு கால்சென்டரில் சில மோசடி செயல்கள் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவில் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள்.
அங்கு பணிபுரிந்த தொலைபேசி ஆபரேட்டர்கள் உள்பட 126 ஊழியர்களையும் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், அமெரிக்காவில் உள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவார்கள். அவர்களுக்கு அங்கு 9 இலக்க சமூக பாதுகாப்பு எண் வழங்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணில் பிரச்சினை இருப்பதாக அவர்களிடம் தெரிவித்து, அதனை சரிசெய்வதாக கூறி பணம் பெற்றுவந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று 126 பேரையும் கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர்.
நொய்டாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு டஜன் போலி கால்சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஏராளமான ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அமெரிக்கர்கள், கனடா நாட்டினர் உள்பட பல வெளிநாட்டு மக்களை இதேபோல ஏமாற்றி மோசடி செய்துவந்ததாக போலீசார் தெரிவித்தனர். #Noida #FakeCallCentre #USCitizen
கலசபாக்கம் அருகே பத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 29). இவர் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவு காவலராக பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
திருமணமாகி சில மாதங்கள் தான் ஆவதால் தன்னை மீண்டும் திருவண்ணாமலை கோர்ட்டுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று மாவட்ட நீதிபதியிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 6-ந்தேதி திருவண்ணாமலை கோர்ட்டுக்கு வந்த கிருஷ்ணன், திடீரென பூச்சிமருந்து (விஷம்) குடித்து கோர்ட்டு வளாகத்தில் மயங்கி விழுந்தார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews