என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigating"

    • கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
    • வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி சுடலை முத்து மகன் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசன் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மதன் குமார் அவரது சக நண்பரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து மதன்குமார் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரில் உள்ள சுடலைமுத்து வீட்டில் யாரும் இல்லாத போது சிலர் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி சென்று பெட்ரோல் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்து கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக நேரில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சுடலை முத்து புகார் அளித்தார். சுடலைமுத்து மகன் மதன்குமார் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும்போது சுடலைமுத்து குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்று இதுபோன்று நடத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் வித்யா (வயது 22). இவர் கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 30-ந்தேதி வீட்டில் உள்ள பீரோ சரிந்து விழுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வித்யா பிணமாக கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அப்பகுதியில் உள்ள மயானத்தில் புதைத்தனர்.

    இந்த நிலையில் வித்யாவின் காதலன் திருப்பூரை சேர்ந்த வெண்மணி (22), காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காம நாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. வேறு சமூகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான வெண்மணியை, வித்யா காதலித்து வந்ததால் அவரது சகோதரர் சரவணகுமார்(24) தங்கையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்று நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து சரவணகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கை வித்யா கோவையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அந்த கல்லூரியில் படிக்கும் திருப்பூர் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்பவரை காதலித்து வந்துள்ளார். இது எங்களுக்கு தெரியவரவே நாங்கள் வித்யாவை கண்டித்தோம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினோம்.

    இருப்பினும் காதலை கைவிடாமல் வெண்மணியுடன் பேசி வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே வெண்மணியின் வீட்டினர் எனது தங்கையை பெண் கேட்டு எங்களது வீட்டிற்கு வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வது பற்றி பேசிக்கொள்வோம் என்று எச்சரித்து அனுப்பினோம். இந்த சம்பவத்திற்கு பிறகு வித்யாவை கடுமையாக எச்சரித்தேன். ஒழுங்காக படிக்க வேண்டுமென்றால் கல்லூரிக்கு செல்... இல்லையென்றால் வீட்டிலேயே இருக்குமாறு மிகவும் கண்டிப்புடன் கூறினேன்.

    இதனால் கடந்த 2 மாதங்களாக என்னிடம் எனது தங்கை பேசாமல் இருந்து வந்தார். கடந்த 30-ந்தேதி எனது பெற்றோர் கோவிலுக்கு சென்று விட்டனர். வித்யா மட்டும் தனியாக இருந்தார். அவருடன் பேச முயற்சித்த போது அவள் பேசமறுத்து விட்டாள். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வித்யாவின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவள் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தாள். சிறிது நேரத்தில் இறந்து விட்டாள். இதனால் என்னசெய்தென்று தெரியாமல் தவித்தேன்.

    கொலையை மறைக்க வீட்டில் இருந்த பீரோவை இறந்து கிடந்த வித்யா உடலின் மீது தள்ளி, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்தேன்.அவர்களிடம் வித்யா மீது பீரோ சரிந்து விழுந்ததில் இறந்து விட்டாள் என்று நாடகமாடினேன். வெளியில் சென்றிருந்த எனது பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் நடந்த விவரத்தை கூறினேன்.

    பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் மயானத்தில் உடலை புதைத்து விட்டோம். இனிமேல் யாருக்கும் சந்தேகம் வராது என்று எண்ணியிருந்தேன். இந்த நிலையில் போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு சரவணகுமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தொடர்ந்து வித்யாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சினையில் தங்கையை கொன்று சகோதரர் நாடக மாடிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடந்த 30-ந் தேதி வித்யா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
    • மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 30-ந் தேதி தூங்கி கொண்டிருந்த வித்யா என்ற பெண் தலையில் பீரோ விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அதில் இருந்த மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதனையடுத்து போலீசாருக்கு எந்த தகவலும் அளிக்காமல் அந்த பெண்ணை உறவினர்களே அடக்கம் செய்துள்ளனர்.

    முன்னதாக மரணமடைந்த வித்யா என்ற பெண்ணும் விஜயாபுரத்தை சேர்ந்த வெண்மணி என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இளைஞர் பெண் கேட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வெவ்வேறு ஜாதி காரணங்களாலோ, அல்லது தனிப்பட்ட காரணங்களாலோ திருமணம் முடித்து கொடுக்க பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பெண் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. அந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று அந்த பெண் மர்மமான முறையில் இறந்துள்ளார்.காதல் விவகாரம் தொடர்பாக பிரச்சனை இருந்த நிலையில் காதலி பலியானதால் காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மர்ம மரணம் குறித்து காவல் நிலையத்தில் பெண்ணின் காதலன் புகார் செய்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை தோண்டும் பணியில் காவல் துறை ஈடுப்பட்டுள்ளது. மேலும் ஆணவக்கொலையா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்க நகைகளுக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • தங்ககட்டி மோசடி குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    கேரளா மாநிலம் திருச்சூர் ஒல்லூர் சீராச்சி சிரிய கண்டத்து ரேசன் கடை அருகில் வசிப்பவர் ஷேண்டோ வர்கீஸ் (வயது 39). இவர் திருச்சூர் பி.ஆர் ஜூவல்லர்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவருடன் திருச்சூர் அவினஷ்வரி எழுக்கம்பனி கருக்கயில் இல்லத்தை சேர்ந்தவர் விஷ்ணு (30), திருச்சூர் ஒல்லூர் கைகாட்டுச்சேரி கரிய பள்ளி இல்லத்தை நெல்சன் (29) ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு சேலம் வந்தனர்.

    இவர்கள், செவ்வாய்பேட்டை மாதவராயன் செட்டி தெருவில் உள்ள பி.ஜே. ஜூவல்லரி கடைக்கு சென்றனர். கடையின் உரிமையாளர் லால் டூவிடம் எங்களிடம் உள்ள 1 கிலோ தங்கத்தை உருக்கி தருமாறு கொடுத்தனர். இதையடுத்து, லால்டூ அந்த தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக அவர்களிடம் கொடுத்தார்.

    இந்நிலையில், அந்த கட்டிகள் தங்கம்தானா என பரிசோதனை செய்து பார்க்க, ஒருவரை மட்டும் கடையில் உட்கார வைத்துவிட்டு, மற்ற 2 பேர் கட்டிகளுடன் சென்றனர்.

    பரிசோதனையில் அவை தங்க கட்டிகள் இல்லை, செம்பு கட்டிகள் என்று தெரியவந்தது. உடனே 2 பேரும் கடைக்கு வருவதற்குள், லால் டூ அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து வர்கீஸ் உள்பட 3 பேரும், இது குறித்து செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய நகை கடை உரிமையாளர் லால் டூவை தேடி வருகின்றனர்.

    தங்க நகைகளுக்கு பதிலாக செம்பு கட்டிகளை கொடுத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் ஒருவர் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அடிபட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே மரக்கடை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயிலில் அடிபட்டு கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்னேஷ் மேல்பேட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டில் சிறுமியை தங்க வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
    • விக்னேஷ்-க்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நரசிம்மா நகரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு அப்குடாவை சேர்ந்த சிந்து என்கிற விக்னேஷ் (22) என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டது.

    இவர்களது நட்பு பின்னர் காதலாக மாறியது. இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் மணிகணக்கில் அரட்டை அடித்து வந்தனர். விக்னேஷ் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய சிறுமி காதல் திருமணம் செய்வதற்காக கடந்த மாதம் 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

    அப்போது விக்னேஷ் மேல்பேட்டையில் உள்ள தனது நண்பரான சாகித் வீட்டில் அவரை தங்க வைத்துள்ளார். அங்கு வைத்து சிறுமியை விக்னேஷ் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி அடிக்கடி வற்புறுத்தி உள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டினார்.

    இதனால் ஆதிரமடைந்த விக்னேஷ் அவரை கொலை செய்ய முடிவெடுத்தார். இதற்காக தனது நண்பர் சாகித் மற்றும் அவரது மனைவி கல்யாணியிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்தனர். இதனால் வேறு ஒரு திட்டத்தை முன் எடுத்தார். திருமணத்தை முடித்து விட்டு சிறுமியை கொலை செய்ய முடிவு எடுத்தார்.

    அதன்படி விக்னேஷ் சிறுமியை கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். திருமண போட்டோவை சிறுமியின் பெற்றோருக்கு விக்னேஷ் அனுப்பி வைத்தார். பின்னர் சாகித், கல்யாணி வீட்டில் இல்லாத சமயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தில் அழுத்தியும் கொலை செய்தார்.

    பின்னர் வீட்டுக்கு திரும்பிய கல்யாணி சிறுமி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தால். உடனே கணவருக்கு போன் செய்து வரவைத்தார். உடனே நண்பர்கள் உதவியுடன் சிறுமியின் பிணத்தை பைக்கில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள தொழிற்பேட்டை குப்பையில் வீசினர்.

    மகள் காணாமல் போனது குறித்து சிறுமியின் தாய் மியாபூர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் குப்பைகளுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டனர். மேலும் விக்னேஷ் அவரது நண்பர்களான சாகித், கல்யாண் ஆகியோரை கைது செய்தனர்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.
    • தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    திருவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் மீது சாதிவெறியர்கள் நடத்தியுள்ள சாதிய கொலைவெறித் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    சில நாட்களுக்கு முன்னர் கட்டாரிமங்கலத்தில் அரியநாயகபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் அணிக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் அரியநாயகபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அரியநாயகபுரம் அணியில் இடம் பெற்றிருந்த தேவேந்திர ராஜ் உள்ளிட்ட அனைவரும் கோப்பையுடன் கொண்டாடியுள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியால் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என தேவேந்திர ராஜின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    கெட்டியம்மாள்புரத்தைச் சார்ந்த மூன்று பேர் இன்று பள்ளிக்கு தேர்வு எழுத பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜை பேருந்திலிருந்து கீழே இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இத்தாக்குதலில் மாணவன் தேவேந்திர ராஜின் இருகைகளிலும் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. நான்கு விரல்கள் துண்டாகியுள்ளன. அவற்றில் ஒரு விரல் கிடைக்கவில்லை. மற்ற மூன்று விரல்களையும் ஒட்டும் அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. தலையில் ஆறு இடங்களில் வெட்டியுள்ளனர். மண்டைஓடு வரை படுகாயம் பட்டுள்ளது. முதுகிலும் பல இடங்களில் வெட்டுக் காயம் உள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    சாதிய வன்கொடுமைகளை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இதற்கென காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்கிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    என திருமாவளவன் கூறியுள்ளார்.

    கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் அரிசி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை

    கோவை அருகே உள்ள மதுக்கரையை அடுத்த வேலாந்தவளம் தம்பாகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் அரிசி குடோன் நடத்தி வந்தவர் ராமநாதன் (வயது 37).

    இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம். வியாபாரத்துக்காக வேலாந்தவளம் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் அரிசி குடோனுக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு ராமநாதன் புறப்பட்டுச் சென்றார்.

    குடோனுக்கு சென்ற ராமநாதன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராமநாதன் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதியினர் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்து ராமநாதனின் மனைவி ராஜேஸ்வரியும் அங்கு வந்தார். அவர் கொல்லப்பட்டு பிணமாக கிடந்த கணவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    போலீசார் ராமநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் ராமநாதனை கொன்றவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க விசாரணையை முடுக்கி விட்டனர்.

    அரிசி வியாபாரம் செய்து வந்த ராமநாதனுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழில் போட்டியில் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

    தொடர்ந்து நேற்று ராமநாதன் குடோனுக்கு வந்த பின் அவரை சந்திக்க யாரெல்லாம் வந்தனர் என்பது பற்றி அந்த பகுதியினரிடம் விசாரித்தனர். அப்போது ராமநாதனின் பெரியப்பா மகனும், தம்பி முறை உடையவருமான முருகன் (35) என்பவர் வந்து சென்றது தெரியவந்தது.

    மதுரையைச் சேர்ந்த முருகன், திடீரென குடோனுக்கு வந்து ராமநாதனை சந்தித்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால் முருகனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர் தான் சகோதரர் என்றும் பாராமல் ராமநாதனை வெட்டிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முருகனின் மனைவியுடன் ராமநாதனுக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த முருகனும், உறவினர்களும் ராமநாதனை கண்டித்துள்ளனர். தம்பி மனைவியுடனான தொடர்பை துண்டிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் ராமநாதன், தம்பி மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாமல் தொடர்ந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், மதுரையில் இருந்து கோவைக்கு வந்து திட்டமிட்டு ராமநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இந்த தகவல்களை முருகன், போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராமநாதன் கொலையில் முருகனை தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ஆத்தூர் அருகே உப்பள தொழிலாளி கொலையில் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன் வடலி வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகராஜ் ( வயது 45), உப்பளத்தொழிலாளி.

    இவர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் சென்றார். அப்போது ஆரையூர் கல்வெட்டி பகுதியில் ஒரு கும்பல் சண்முகராஜை வழி மறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தலைவன் வடலிக்கு செல்லும் வழியில் கல்லூரி மாணவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    இந்நிலையில் சண்முகராஜ் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் கொலைக்கு பழிக்குப்பழியாக சண்முகராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில் உள்ள நகை கடை ஒன்றில் காவலாளியாக இருந்தவரிடம் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை வடபழனி முருகன் கோவில் அருகில் உள்ள நகை கடை ஒன்றில் காவலாளியாக இருப்பவர் சேகர்.

    65 வயதான இவர் நேற்று நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் சேகரிடம் நேரம் கேட்டுள்ளார். 

    பின்னர் திடீரென அவரது கையில் இருந்த செல்போனை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.
    • டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோயம்பேட்டைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை கொலை செய்து ஆம்னி வேனில் உடலை கடத்திச் சென்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரிய வந்தது. ஏட்டு செந்தில்குமாரின் காதலியான கவிதாவுக்கும், கொலையுண்ட ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இந்த மோதலே கொலையில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து ஏட்டு செந்தில் குமாரையும் ஐசக் உள்பட 4 ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வநதனர். போலீஸ் பிடி இறுகியதால் ஏட்டு செந்தில்குமாரும், ரவுடி ஐசக்கும் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

    மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம், 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வருகிற 16-ந்தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ஏட்டு செந்தில் குமாரும், ரவுடி ஐசக்கும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். செங்கல்பட்டு கோர்ட்டில் வருகிற 16-ந்தேதி ஏட்டு செந்தில்குமாரும், ஐசக்கும் ஆஜர்படுத்தப்படும் போது படாளம் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு அளிக்க உள்ளனர்.

    டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்கும் போது, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரையும் கொலை நடந்த வீடு, உடல் எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த கொலை வழக்கில் ஐசக்கின் கூட்டாளிகளான எட்வின், மகி, கார்த்தி ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 3 ரேையும் பிடிக்க போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.

    இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

    ×