என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Policy"

    • உலர் பழங்களை ஆர்டர் செய்தபோதும், பாலிசி எடுத்து தருவதாக கூறியும் ரூ.2½ லட்சம் சுருட்டல்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் வயதான முதியவர்களை குறி வைத்து ஆன்லைன் வாயிலாக 2 பேரிடம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜெ.எல்.என். சர்மா என்பவரிடம் குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசியவர் தனியார் வங்கி யின் இன்சூரன்ஸ் நிறுவனத் தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். நீங்கள் செலுத்தும் பாலிசி தொகை 45 நாட்களில் திருப்பி தரப்படும் என்று அவர் ஆசை காட்டியுள்ளார்.

    இதனை நம்பி சர்மா, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். பின்னர் மறுநாள் மனைவியின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 லட்சம் பணத்தை அனுப்பி வைத்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அப்படி எதுவும் நாங்கள் பேசவில்லையே? ஏன் பணத்தை அனுப்பினீர்கள்? என்று கேட்டுள்ளனர்.

    இதன்பிறகே சர்மா தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு போலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோன்று ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 70 வயதான ஜெயஸ்ரீ என்பவர் ஆன்லைனில் உலர் பழங்களை ஆர்டர் செய்துள்ளார்.

    ஆனால் ஆர்டர் செய்ய முடியாமல் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ பயன்படுத்தி வந்த கிரெடிட் கார்டில் இருந்து 6 முறை தலா ரூ.10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரும் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்க பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி போலீசார் கூறும்போது, "அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினால் அவர்களிடம் எச்சரிக்கையோடு பேச வேண்டும். இல்லையென்றால் இதுபோன்று இழப்புகளை சந்திக்க நேரிடும்" என்று எச்சரித்துள்ளனர்.

    • ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.
    • தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்ரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் விஜய் அமர்ந்திருக்க கட்சியினர் உரையாற்றி வருகின்றனர். அதன்படி மேடையில் உரையாற்றிவரும் கட்சி  பிரமுகர்கள் தவெகவின் கொள்கைகளை எடுத்துரைத்து வருகிறார்.

    அதன்படி, வள்ளுவர் கூறிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே கட்சியின் முதல் கொள்கை .

    மதம் சாதி இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது.

    மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்.

    மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து மக்காளுக்கான ஜனநாயகத்தை மீட்போம்.

    எல்லா நிலைகளிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் சமம்.

    மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின் சுயாட்சி உரிமை.

    தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை தாவெக பின்பற்றும்.

    போதையில்லா தமிழகம் என்பதே நமது கொள்கை. மக்களுக்கான ஜனநாயக நிலைநாட்டுவோம்.

    நிர்வாகத்தில் அரசியல் தலையீடு எந்த விதத்திலும் இருக்கக்கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழலற்ற நிர்வாகத்துக்கு உறுதி அளிக்கிறோம்.

    கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களுக்கு வழிகாட்டு நடைமுறைகள் உருவாக்கப்படும்.

    மதுரையில் தலைமை செயலக கிளை உருவாக்கப்படும்

    வர்ணாசிர கோட்பாடுகள் எந்த வகையிலும் முழுமையாக எதிர்க்கப்படும்.

    தமிழ் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தமிழநாட்டுக்கு எப்போதும். ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழியிலேயே கல்வி கற்க உறுதி வழங்கப்படும்.

    கல்வியை மாநில பட்டியலில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படும்.

    பெண்களுக்கு சட்டமன்றம் கல்விப் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

    மாநிலம் முழுவதும் காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்

    தகவல் தொழிலநுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

    மாவட்டந்தோறும் பன்னோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

    ஆக்கிரமிப்பில் உள்ள சதுப்பு, விவசாய நிலங்கள் மீட்கப்படும்

    பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்

    அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி உடைகள் அணிய உத்தரவிடப்படும்

    மணல் கொள்ளை கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும்

    மாசு கட்டுப்பாடு வாரியம் தற்போது செயலிழந்து கிடப்பதால் அது சீரமைக்கப்படும்

    அழிந்து வரும் வன உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பு அதிகரிக்கப்படும்

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

    போதைபொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டுவரப்படும்

    தமிழகம் முழுவதும் நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படும் 

    • நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.
    • ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் முதலில் கட்சிப் பிரமுகர்கள் கொள்கைகளை விளக்கியதைத் தொடர்ந்து விஜய் உரையாற்றிவருகிறார்.

    நான் மற்றும் நன்றாக இருப்பது சுயநலம். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

    கேள்விகளின் விளைவாக எழுந்ததே எனது அரசியல் முடிவு. அரசியலில் நமது நிலைப்பாடு என்ன என்பது உறுதியானால் எதிரிகள் தெரிவார்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எதிரிகள் உறுதியாகிவிட்டனர். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமல்ல ஊழல் அரசியலும் நமது எதிரிதான்.

     

    பிளவுவாத எதிரிகள் நமது கண்ணுக்குத் தெரிவார்கள். அவர்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள். எதிரிகளைத் தீர்மானித்து விட்டால் மட்டும் போதாது.

    மகத்தான அரசியல் என்றால் மக்களுக்கான அரசியல் தான். திட்டங்கள் அறிவித்து செயல்படுத்துவது என்பதை தேர்தல் முடிவுகள் போல் செயல்படுத்த வேண்டும். 

    இது பணத்திற்காகக் கூடிய கூட்டமல்ல. ஏ டீம், பீ டீம் என்று கூறுவதைக் கண்டு பயப்பட போவதில்லை. எங்களுக்கு யாரும் எந்த சாயமும் பூச முடியாது. நல்லது நடக்காதா என்று மக்கள் காத்திருக்கின்றனர் 2026 இல் போரை அறிவித்ததும் தவெக சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள். 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் வாக்களிக்பார்கள் என்று பேசியிருக்கிறார்.

    கலாச்சாரம் ஆகியவற்றை அரசியலில் பாஜக முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலையில் விஜய் பேச்சு பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததாக பார்ப்படுகிறது. மேலும் பெரியாரை நமது கொள்கைத் தலைவராக முன்னிருத்தும்போது பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு சிலர் வருவார்கள் என்று தனது பேச்சின் தொடக்கத்தில் விஜய்  குறிப்பிட்டார் 

    சமீப காலமாக  திருவள்ளுவர்  ஆகிய தமிழர் அடையாளங்களின் மீது காவி சாயம் பூசப்படுவதை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் இதை பார்க்க வேண்டி உள்ளது.  ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்பது தவெக அரசியல் கொள்கைகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நமது கலாச்சாரத்தையும் மொழியையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை.
    • காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது.

    ஒரு பிரதேசத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை தகர்த்து  அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியுள்ளார்.

    சமீபத்தில் நடந்த 98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளம் நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெகதீப் தன்கர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்ரியா சுலே எம்.பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெகதீப் தன்கர், ஒரு நாடு அதன் கலாச்சார செல்வம் மற்றும் அதன் கலாச்சார நெறிமுறைகளால் வரையறுக்கப்படுகிறது, இந்த விஷயத்தில் இந்தியா தனித்துவமானது, ஏனெனில் உலகில் எந்த நாடும் நம்மை ஒப்பிட முடியாது.

    நமது கலாச்சாரத்தையும் மொழிகளையும் வளர்ப்பது மூதாதையர்களின் ஆணை. அதுவே நமது வரையறுக்கப்பட்ட கடமை. இலக்கியத்தைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கை கொடுப்பதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    கடந்த காலங்களில் நிகழ்ந்த படையெடுப்புகளைக் குறிப்பிட்டு பேசிய ஜகதீப், ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான சிறந்த வழி, அதை உடல் ரீதியாக முறியடிப்பது அல்ல. மாறாக அதன் கலாச்சாரத்தை தகர்த்து முறியடித்து அதன் மொழியை அழிப்பதாகும்.

    அவர்கள் நம் மொழி, நம் கலாச்சாரம், நம் மத இடங்களை கைப்பற்ற மிகவும் அடக்குமுறை கொண்ட கொடூரமானவர்களாக இருந்தனர்.

    காட்டுமிராண்டித்தனம் மற்றும் பழிவாங்கும் தன்மை உச்சத்தில் இருந்தது. நம்மை காயப்படுத்த, அவர்கள் நம் மத இடத்திற்கு மேலாக தங்கள் இடத்தை உருவாக்கினர். நம் மொழிகளை மட்டுப்படுத்தினர். நம் மொழி செழிக்கவில்லை என்றால், நம் வரலாறும் செழிக்காது என்று தெரிவித்தார். 

     

    • இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கையை கண்டித்து இன்று காலை தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன், மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்பாட்டத்தால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    திருவாரூர்:

    நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ராஜஸ்தான் மற்றும் சட்டீஷ்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் வழங்கப்படுவது போல் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கணேசன், மாவட்டச்செயலாளர் ரெ.ஈவேரா ஆகியோர் கவன ஈர்ப்பு உரையாற்றினர். இதில் மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நட.ஜெயசீலன், அமிர்தராஜ், ஜெயந்தி, மகளிர் வலையமைப்பு அமைப்பாளர் கல்யாணி, அமைப்புச் செயலாளர் கிருபாராணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் வடுகநாதன் நன்றி கூறினார்.

    • 5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.
    • தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) எல்ஐசி முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முகவர்க ளின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட கோரியும், எல்ஐசியை தனியார் மையமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை கோட்ட பொருளாளர் திருவாரூர் கருணாநிதி பேசுகையில் எல் ஐ சி முகவர்கள் இல்லாத நிலையை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையும், மத்திய அரசும் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    பிஎஸ்என்எல் இந்திய விமான கட்டுப்பாடு உள்ளிட்ட நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி வருகி ன்றனர்.இதேபோல் எல்ஐசி தனியார் மையமாக ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

    எல்ஐசி தொடங்கப்பட்ட பொழுது 1956ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கமிஷன் தொகையை தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது.

    5 கோடி ரூபாயில் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே உள்ளது.

    இந்த வளர்ச்சி முகவர்களால் ஏற்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில் எல்ஐசிஐ தனியார் மையமாக முயற்சித்த போது பல்வேறு போராட்டத்தில் இந்த சங்கம் ஈடுபட்டு எல்ஐசி யும் அதனால் பொது மக்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளையும் தக்க வைத்துள்ளோம்.

    ஆனால் தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப கமிஷன் உயர்த்த வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கை.

    புதிய பாலிசிகளுக்கு 20% கமிஷன் வழங்க வேண்டும், புதுப்பித்தலுக்கு ஐந்து சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும்.

    ஆனால் ஐ ஆர் ஏ டி ஐ சொல்வதைக் கேட்டு எல்ஐசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.

    குறிப்பாக பொதுமக்களின் உறுதி அளிக்கப்பட்ட உரிமம் தொகை வழங்கக்கூடாது என்பதில் முயற்சி செய்து வருகின்றனர்.

    எல்ஐசி முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் 5 லட்சம் முகவர்கள் இன்று பணி இழந்து சென்றுள்ளனர்.

    அனைத்து முகவர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என்றால் எல்ஐசி என்ற ஒரு நிறுவனம் இல்லாத நிலை ஏற்படும் என்றார்.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோட்ட துணைத் தலைவர் முனுசாமி, மாவட்ட செயலாளர் பழனிவேல் பொருளாளர் கார்த்திகேயன், பொறு ப்பாளர்கள் சரவணன் அன்புமணி ஜவகர் சீனிவாசன் ஆறுமுகம் கலாதேவி மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் கபிலன் பரமேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

    ×