என் மலர்
நீங்கள் தேடியது "pond"
- இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனால் வேறு எந்த வழியிலாவது தண்ணீர் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் முழுமை யாக நிரப்ப வேண்டும்.
- இல்லையெனில் உடன்குடி பகுதியில் விவசாயம் முழுமையாக அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதிக்கு உட்பட்ட தாங்கை குளம், சடையனேரி குளம், தருவைகுளம், கருமேணிஆறு புதிதாக நிலத்தடி நீர் பிடிப்பு ஏற்படு வதற்காக அய்யனார்குளம், மாநாட்டுக்குளம், பரமன் குறிச்சிகுளம், வெள்ளா ளன்விளை குளம், நரிகுளம் உட்பட ஏராளமான புதிய நீர்பிடிப்புகுளங்கள் மற்றும் தண்ணீர்வரும் கால்வாய்கள் இன்று வரை வறண்ட நிலையில் இருக்கிறது.
ஊரெல்லாம் கொட்டி தீர்க்கும் மழை உடன்குடியை தொடர்ந்து ஒரங்கட்டுகிறது. இந்த ஆண்டும் பருவமழை பொய்த்து போனால் வேறு எந்த வழியிலாவது தண்ணீர் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் முழுமை யாக நிரப்ப வேண்டும்.
இல்லையெனில் உடன்குடி பகுதியில் விவசா யம் முழுமையாக அழிந்து விடும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் குடிதண்ணீரும் இருக்காது என்று வேதனை யுடன் கூறுகின்றனர்.
இதுசம்பந்தமாக விவசாய சங்க பிரதிநிதிகள் பலரிடம் கையொப்பம் வாங்கி பரமன்குறிச்சி பிர்லா போஸ் மூலம் முதல்-அமைச்சர் மற்றும் சம்பந்த ப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
- பச்சையாறு அணையில் இருந்து 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் பூலாங்குளமும், மேலவடகரையில் பம்பன்குளமும் உள்ளன. இந்த குளங்களின் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த குளங்களுக்கு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் சென்றது. ஆனால் பச்சையாறு அணை கட்டப்பட்ட போது கால்வாய் அணைக்குள் சென்று விட்டது. அதன் பின்பு பச்சையாறு அணையில் இருந்து மடத்துக் கால்வாய் மூலம் 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குளங்களுக்கு தண்ணீர் வரும் மடத்துக் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதையடுத்து 2 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் பெய்து வரும் கனமழையினால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் பம்பன்குளமும், பூலாங்குளமும் இன்னும் நிரம்பவில்லை. பராமரிப்பு இல்லாததால், மடத்து கால்வாயில் வரும் தண்ணீர் தடைபட்டு குளங்களுக்கு வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குளங்கள் நிரம்பாததால் குளங்கள் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மடத்து கால்வாயை பராமரித்து, 2 குளங்களுக்கும் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது.
- தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள், மற்றும் ஆறு உள்ளது. இவைகளுக்கு இந்த ஆண்டு எப்படியாவது தண்ணீர் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் விவசாயிகள் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர். தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள அடைப்புகளை விவசாயிகள் தண்ணீருக்குள்இறங்கி அப்புறப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு பருவ மழை சரியாக பெய்யவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரவில்லை. இந்த ஆண்டு பருவமழை வரும். குளம்- குட்டைகள் முழுமையாக நிரம்பி விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு விவசாய அமைப்புகள் தண்ணீர் வரும் கால்வாய் மற்றும் குளம்- குட்டைகளை சொந்த செலவில் சீரமைத்து வருகின்றனர்.
இது பற்றி விவசாயி ஒருவர் கூறுகையில், அரசு சீரமைப்பதாக சொல்லி குளம், குட்டைகளில் உள்ள மணலை அள்ளி எடுத்துசென்று விடுவார்கள். நாங்கள் குளம், குட்டைகளில் உள்ள மணலை எடுத்து கரையோரமாக வைத்து கரைகளை பலப்படுத்துகிறோம். எல்லாமே அரசுசெய்யும் என்று காத்திருந்தால் காலதாமதம் ஆகிவிடும். அதனால் நாங்கள் இப் பணியை செய்து வருகிறோம் என்று கூறினார்.
- சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
- 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.
இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.
இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- தூத்துக்குடியில் குளத்தில் குளிக்க சென்ற குழந்தைகள் உயிரிழப்பு.
- உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்.
தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி அருகே உள்ள நீராவி குளத்தில் மூழ்கி சந்தியா, கிருஷ்ணவேணி மற்றும் செல்வன் என மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் மூவரும் உறவினருடன் குளத்தில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தை கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்த முதல்வர், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்த வழங்க உத்தரவிட்டுள்ளார்.
- குளத்தில் இருந்த நபர் நெல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.
- களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்.
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் நீண்ட நேரமாக ஒரு ஆணின் உடல் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் அவர் இறந்து விட்டதாக சந்தேகப்பட்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அப்பகுதிக்கு வந்த காவலர் அந்த ஆணின் உடலை குளத்தில் இருந்து இழுக்கும் பொழுது அந்த ஆண் உயிருடன் எழுந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குளத்தில் இருந்த நபர் நெல்லூரில் உள்ள காவாலி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.
போலீசாரிடம் பேசிய அந்த நபர், "நான் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிரானைட் குவாரியில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சம்பளம் கொடுத்தாலும், என் உழைப்பை அவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவ்வளவு வெயிலில் ஒருவரால் எப்படி நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியும். களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்" என்று தெரிவித்தார்.
- அன்சூர் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளியங்காடு ஊராட்சியில் அன்சூர் குளம் உள்ளது. இந்தக் குளம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கு பில்லூர் அணை மற்றும் வெள்ளியங்காடு- மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வரும் மழை நீர் வருகிறது. குளத்தின் மூலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விளைநிலங்களுக்கு நிலத்தடி நீர் வெகுவாக கிடைக்கிறது.
இதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீன் குஞ்சுகளை விட்டு அதனை வளர்த்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசு சார்பில் இக்குளத்தை பராமரித்து இங்கே டீசல் படகு விடுவதாக தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு டீசல் படகு குளத்தில் விட்டால் இதிலுள்ள மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து பராமரித்து வரும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
மேலும் டீசல் படகினால் மீன் குஞ்சுகள் இறக்கும் சூழ்நிலை உருவாகும். இதனால் இதனை நம்பியுள்ள 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக உரிய ஆய்வு நடத்தி குளத்தில் உள்ள மீன் குஞ்சுகள் இறக்காமல் டீசல் படகுகளை இக்குளத்தில் பயன்படுத்தாமல் துடுப்பு மூலம் பயன்படுத்தும் படகை உபயோகிக்க வேண்டும். மேலும் இதன் மூலம் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேட்டுப்பாளையம் மீனவர் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனர் மீன் நடராஜ் கூறியதாவது:-
இக்குளத்தில் 3 தலைமுறைகளுக்கு மேலாக மீனவர்கள் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து அதனை பிடித்து விற்பனை செய்து வருகிறோம் இக்குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இக்குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் தடைபடாமல் தொடர்ந்து குளத்தில் மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தில் டீசல் படகுக்கு மாற்றாக துடுப்புப் படகை பயன்படுத்த அரசு ஆலோசனை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது59). கூலி தொழிலாளி.
- பரமசிவன் நேற்று காலை குளித்துவிட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள துப்பார்பட்டியை சேர்ந்தவர் பரமசிவன் (வயது59). கூலி தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கு மகன் மற்றும் மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் பரமசிவன் நேற்று காலை குளித்துவிட்டு வருவதாக அப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது குளத்து தண்ணீரில் பரமசிவன் மிதந்தபடி இறந்து கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீ சார் வழக்குப் பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது.
- வரகுணராமபுரம் கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது.
சங்கரன்கோவில்:
153-வது மகாத்மா காந்தி பிறந்த நாள் முன்னிட்டு சங்கரன்கோவில் அருகே பனை விதை நடும் விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் அழகாபுரி ஊராட்சி உட்பட்ட வரகுணராமபுரம் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அழகாபுரி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் கலந்து கொண்டார். நிகழ்வு ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் மதுரிதா செய்திருந்தாார். சமூக ஆர்வலர் மா.சந்திரசேகரன் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது.
- விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள குறுக்குபாளையம் என்ற இடத்தில் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழைக்காலங்களில் வெள்ளகோவிலில் இருந்து வரும் மழை நீர் மூலனூர் ரோடு, சின்னக்கரை வழியாக குறுக்குபாளையத்தில் உள்ள குளத்திற்கு வந்து சேரும்.இந்த குளத்தில் தண்ணீர் நிற்பதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீர் குழாய் நீர் நிலை உயரும். தற்போது குளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கின்றது.
இந்தநிலையில் குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீன்கள் இறந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சாயத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.
- குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் தாலுகா சிவலார்குளம் பஞ்சா யத்தில் திருவேங்கடப்பேரி குளம் உள்ளது.
மண் எடுக்க அனுமதி
இந்த குளத்தில் 360 யூனிட் கரம்பை மண் எடுப்பதற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் சிற்றாறு வடிநில உப கோட்ட செயற்பொறியாளர் முன்னிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த ஒருவருக்கு அனுமதி வழங்கி உள்ளார்.
அதன்படி கடந்த 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கரம்பை மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அனுமதி காலம் முடிந்த பின்னரும் அந்த குளத்தில் மண் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
தாசில்தார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் தாசில்தார் பரிமளம் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அவர்களுடைய அனுமதி சீட்டை வாங்கி பார்த்தபோது அதில் 12-ந் தேதி முதல் நாளை மறுநாள்(16-ந்தேதி) வரை கூடுதலாக 5 நாட்கள் கரம்பை மண் எடுப்பதற்கு அனுமதி இருந்தது.
எனினும் அந்த அனுமதி சீட்டு போலியானதா என்று தாசில்தார் சந்தேகம் அடைந்து விசாரித்து வருகிறார். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி செயற்பொறியாளர் கையொப்பமிட்டு போலியாக அனுமதி சீட்டு தயாரித்து அங்கு கரம்பை மண் எடுப்பதாகவும் தாசில்தாரிடம் சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர்.
இதையடுத்து அந்த அனுமதி சீட்டுகளை பறிமுதல் செய்து கலெக்டரின் அனுமதி இன்றி வழங்கப்பட்டதா என்று தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார்.