என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poultry"

    • வாரந்தோறும் சனிக்கிழமை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர்.
    • அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார்.

    வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று வரும் அழைப்பை நம்பி தினமும் பலர் ஏமாறுகின்றனர். ஆனால் சத்தீஸ்கரில் விவசாயிக்கு கடன் தருகிறேன் என கூறி வங்கி மேனேஜரே ஏமாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள மஸ்தூரி நகரில் வங்கி மேனேஜர், விவசாயியிடம் ரூ.12 லட்சம் கடன் தருவதாக கூறி விவசாயியிடம் உள்ள மொத்தம் 900 கோழிகளையும் வாங்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார் வங்கி மேனேஜர்.

     

    பாதிக்கப்பட்ட விவசாயி ரூப்சந்த் மன்ஹர், மஸ்தூரியில் நாட்டுக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி கடனுக்காக [ஸ்டேட் பேங் ஆஃப் இந்தியா] வங்கியை அணுகினார். அவருக்கு கடன் தருவதாக உறுதியளித்த வங்கி மேனேஜர் முன்கூட்டியே 10% கமிஷன் கேட்டுள்ளார். இதை நம்பிய மன்ஹர் பணத்தை ஏற்பாடு செய்து மேனேஜருக்கு கொடுத்தார்.

    ஆனாலும் ஆசை அடங்காத மேனேஜர், கோழிக் கறி மீது தனக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்தி, வாரந்தோறும் சனிக்கிழமை மன்ஹரை தவறாமல் நாட்டு கோழி கொண்டுவரச் சொல்லி சமைத்து சாப்பிட்டுள்ளார் மேனேஜர். கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மன்ஹர் இதுவரை மொத்தம் ரூ.39,000 மதிப்புள்ள 900 கோழிகளை மேனேஜருக்கு கொடுத்துள்ளார்.

     

    இருந்தும் வங்கி மேலாளர் கடன் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மன்ஹர் சம்பவத்தின் விவரங்களையும், தான் சப்ளை செய்த கோழிகளுக்கான பில்களையும் போலீசிடம் சமர்ப்பித்து புகார் அளித்தார்.

    தனக்கு நீதி கிடைக்காவிட்டால் வங்கியின் முன் தீக்குளிக்கப் போவதாகக் கூறி, மன்ஹர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து வங்கி மேனேஜர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோழிப்பண்ணை நடத்தி வரும் விவசாயிகளுக்கு கடும் நிதி இழப்பு.
    • பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி கேட் என்ற நியூ கேஸில் புதிய வகை வைரஸ் நோய் கோழிகளை தாக்கி வருகிறது.

    இதன் காரணமாக உத்திரஜாவரம் மற்றும் பெரவலி மண்டலங்களில் கடந்த 2 நாட்களில் 12 லட்சம் கோழிகள் உயிரிழந்து உள்ளன. இதனால் கோழிப்பண்ணை நடத்தி வரும் விவசாயிகள் கடும் நிதி இழப்புக்கு ஆளாக்கி உள்ளனர்.

    கோழிகளின் திடீர் இறப்புகளுக்கு பறவை காய்ச்சல் காரணமாக என கண்டறிவதற்காக இறந்த கோழிகளின் மாதிரிகளை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிலையத்திற்கு மாதிரிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

    இன்னும் 2, 3 நாட்களில் கோழிகள் இறப்பிற்கான காரணம் குறித்த பரிசோதனை முடிவுகள் வெளிவரும் என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் நிபுணர் குழுக்களை அமைத்து கோழி பண்ணைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தனுகு, விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் கோழி பண்ணை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நோய் பரவலுக்கு காரணம் இறந்த கோழிகளை பண்ணை உரிமையாளர்கள் முறையாக அப்புறப்படுத்தாமல் அங்குள்ள கால்வாய்கள் சாலை ஓரங்களில் பேசப்படுவதால் அதிக அளவில் நோய் தொற்று ஏற்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆந்திராவில் தொடர்ந்து பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளின் இறப்பு அதிகரித்து வருவதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

    • மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
    • இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் புரட்டாசி மாதம், மற்றும் மகாளலய அமாவாசையை முன்னிட்டு நாட்டுக்கோழி, இறைச்சி மற்றும் மீன்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

    பரமத்தி வேலூர் மோகனூர் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழிசந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம் நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    சந்தைக்கு வீட்டில் வளர்க்கும் சிறுவிடை, பெருவிடை, கீரி, கடகநாத், அசில், மயில் காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    நாட்டுக் கோழிகளுக்கு இப் பகுதியில் நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்வர். தரமான நாட்டு கோழிகள் கடந்த மாதங்களில் கிலோ ஒன்று ரூ.450 முதல் ரூ.550 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும் விற்பனையானது.

    புரட்டாசி மாதத்தை முன்னிட்டும், மகாளய அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு குறைந்த அளவிலே விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் நாட்டுகோழிகள் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ரூ.200 முதல் ரூ.300 வரையிலும் விற்பனையானது. வாத்துக்கோழி ஒன்று ரூ.280 முதல் 300 வரையிலும் விற்பனையானது. இதனால் நாட்டுக்கோழி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் மீன் சந்தையில், ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளும் வெளிச்சோடி காணப்பட்டது.

    தெரு நாய்கள் கடித்து குதறிய 20 கோழிகளுடன் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகம் முன்பு விவசாயி தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். தற்போது நிலத்தடி நீர் இல்லாததால் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊத்தங்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்து குதறியது.மேலும் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை அந்த நாய்கள் கடித்தது. 

    இது குறித்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள்  ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும்பொது மக்களை கடித்து குதறிய நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    இன்று காலை சுமார் 4 மணியளவில் ஆனந்த் வளர்த்துள்ள கோழிகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 20 கோழிகள் இறந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆனந்த் இன்று காலை ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பு இறந்த கோழிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கர்நாடகா அரசு போக்குவரத்து பஸ்சில் கோழிக்கு அரை கட்டணம் வசூலித்த கண்டக்டரிடம் விவசாயி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    பெங்களூர்:

    பஸ்களில் பயணிகளுடன் கோழிகள், ஆடுகள், நாய்கள் போன்றவை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. ஆனால் கர்நாடக மாநில அரசு பஸ்களில் அவை பயணம் செய்ய அனுமதிப்பதுடன் அவற்றுக்கு டிக்கெட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

    கர்நாடக மாநிலம் சிகாபலாபுரா மாவட்டத்தில் உள்ள பெட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். விவசாயி ஆன இவர் கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு காலை 7.10 மணியளவில் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார்.

    அப்போது தன்னுடன் 2 கோழிகளை எடுத்து சென்றார். அவற்றை தலா 150 ரூபாய்க்கு வாங்கி இருந்தார். பஸ்சில் அவரிடம் கண்டக்டர் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.

    அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை கொடுத்தார். கவுரிபிதானூரில் இருந்து பெட்டனஹள்ளிக்கு செல்ல ரூ.26 டிக்கெட் கட்டணம். எனவே கண்டக்டர் மீதம் ரூ.24 தருவார் என அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் 2 ரூபாய் மட்டுமே வழங்கினார்.

    இதனால் ஒன்றும் புரியாத அவர் இது குறித்து கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு அவர் தலா அரை டிக்கெட் வீதம் ரூ.24 வசூலித்து இருப்பதாக கூறினார். அவரது பதில் புரியாத விவசாயி ஸ்ரீனிவாஸ் நான் மட்டும்தானே பயணம் செய்கிறேன்.

    என்னுடன் குழந்தைகள் யாரும் பயணம் செய்யவில்லையே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கண்டக்டர், கோழிகளுக்கு தலா அரை டிக்கெட் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீனிவாஸ் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ்சில் 6 முதல் 12 வயது வரை பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அரை டிக் கெட்கட்டணம் வசூலிக்கப்படும்.

    அவர்கள் 23 முதல் 30 கிலோ எடை இருப்பார்கள். ஆனால் கோழி தலா 2½ கிலோ எடை மட்டுமே உள்ளது. அவற்றை நான் இருக்கையில் அமர வைக்கவில்லை. அப்படியிருக்க 30 நிமிட நேர பயண தூரத்துக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா? என ஆதங்கப்பட்டார்.

    ஆனால் கர்நாடக அரசு பஸ் நிர்வாகம் கோழி, நாய், ஆடு போன்ற வீட்டு வளர்ப்பு பறவைகள் மற்றும் பிராணிகளுக்கு அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவல் கர்நாடக அரசு பஸ் இணைய தளத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதில் முயல்கள், நாய்கள், பூனைகள், பறவைகள் மற்றும் கூண்டுகளில் அடைத்து பஸ்களில் எடுத்து வரும் வளர்ப்பு பிராணிகளுக்கு தலா அரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    அது குறித்து கவுரி பிதானூர் அரசு பஸ் டெப்போ மேலாளர் ஏ.யூ. ‌ஷரிப்பீடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் போக்குவரத்து கழக சட்டப்படிதான் விவசாயி ஸ்ரீனிவாசிடம் கோழிகளுக்கு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
    ×